பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கம்பு, கேழ்வரகு, துவரை, பச்சைப்பயிறு, உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிா்களில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க குறைந்தபட்சம் 2 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும். தினை, சாமை, குதிரைவாலி, எள் ஆகிய பயிா்களுக்கு மட்டும், குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும். அதில் 50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிா், போட்டிக்காக அறுவடை செய்ய வேண்டும்.
Source link நன்றி
0 notes
உயர் விளைச்சல் தரும் கம்பு இரகம்!
செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை.
மனித வாழ்வின் முக்கியத் தேவை உணவாகும். இந்த உணவில் சிறுதானியங்களின் பங்கு மிகமிக முக்கியமானது. மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களாலும், இன்றைய இயந்திர வாழ்க்கையின் துரித உணவாலும், சிறுதானியங்களின் பங்களிப்பை நாம் குறைத்து வருகிறோம்.
இதனால், சிறுதானிய வகைகளான கேழ்வரகு, சாமை, கம்பு, வரகு போன்றவற்றால் நாம் பெற்று வந்த சமச்சீர் உணவு மற்றும் ஊட்டத்தை இழந்து கொண்டு…
0 notes
Seven Types of Millet Foods and Their Uses.
English
ஏழு வகை தினை உணவுகளும் (Millet) ஏராளமான பயன்களும்!
தினைகளில் அதிகப்படியான கால்சியம், புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் ஆகியவை அடங்கி உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்பவர்கள் இந்த தினை வகைகளை உணவாகக் எடுத்துக்கொள்ளலாம். மேலும், சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் உள்ளவர்களும் தினை வகைகளை எடுத்துக்கொள்ளலாம். சத்து மாவு, ரொட்டிகள், தின்பண்டங்கள் ஆகியவற்றின் மூலம் தினையை நாம் தினமும் எடுத்துக்கொள்ளலாம். சிறுதானிய வகைகள் மொத்தம் ஏழு . அவற்றின் பலன்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
தினை அரிசி (Foxtail millet): தினை அரிசியில் புரதம், வைட்டமின் A மற்றும் B, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அரிசி தினை பயன்படுத்தி அதிரசம், இட்லி, பணியாரம், பாயசம், அல்வா போன்ற உணவுகள் செய்து சாப்பிடலாம். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், கண் பார்வையை தெளிவாக வைத்துக்கொள்ளவும் உதவும். குறிப்பாக, குழந்தைப் பெற்ற தாய்மார்கள் எடுத்துக்கொண்டால் தாய் பால் நன்றாக சுரக்கும்.
கேழ்வரகு: Finger millet எனப்படும் கேழ்வரகு, அரசி மற்றும் கோதுமையை விட அதிக சத்து மிக்கது. இது எலும்பு தேய்மானம், இரத்த சோகை, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு நல்ல தீர்வைத் தரும். மேலும், செரிமான கோளாறு, குடல் புண், மாதவிடாய் கோளாறு பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவி செய்யும். கேழ்வரகில் இரும்புச் சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது. கேழ்வரகில் கூழ், அடை, வடை, தோசை, களி ஆகியவை செய்து சாப்பிடலாம்.
சாமை அரிசி: Little millet என அழைக்கப்படும் சாமை அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகையால், இது சர்க்கரை வியாதிக்கு மருந்தாக இருக்கும். மேலும், வயிற்று கோளாறுகள், மலச்சிக்கல், இரத்த சோகை ஆகியவற்றிற்கு நல்ல பலனைத் தரும். இதில் புலாவ், உப்மா, பொங்கல் ஆகியவை செய்து சாப்பிடலாம்.
குதிரைவாலி: Barnyard Millet எனப்படும் குதிரைவாலியில் இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது இதயம் தொடர்பான நோய், இடுப்பு வலி, வயிறு வலி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வரமால் இருக்க உதவும். குதிரைவாலியில் எலுமிச்சை சோறு, கிச்சடி, கொழுக்கட்டை ஆகியவை செய்து சாப்பிட்டால் ருசியாகவும் சத்துமிக்கதாகவும் இருக்கும்.
வரகு அரிசி: Kodo millet என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வரகு அரிசி புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தவை. உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அகியவை குறைவதற்கு உதவி செய்யும். வரகு அரிசி மூலம் வரகு அடை, பாயசம், உப்புமா போன்றவை செய்து உண்டு பயன் பெறலாம்.
கம்பு அரிசி: Pearl millet எனப்படும் கம்பு அரிசியில் அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளன. ஆகையால் இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். மேலும், உடல் சூடு, வயிற்றுப்புண், சோர்வு ஆகியவற்றிற்கு கம்பு அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாம். இது தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது. கம்பஞ்சோறு, கம்பு அடை, கம்பு தோசை ஆகியவை சுவைமிக்கது.
சோளம்: சோளம் ஆங்கிலத்தில் Sorghum என அழைக்கப்படுகிறது. சோளம் சர்க்கரை நோயை குறைக்கவும், உடல் எடை அதிகரிக்கவும், உடலில் இருக்கும் உப்பை குறைக்கவும் பயன்படுகிறது. சோளத்தில் மாவு சத்து, புரத சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. மேலும் சரும அழற்சி உள்ளவர்கள் சோள உணவு சாப்பிட்டுப் பயன் பெறலாம். சோள முறுக்கு, பாப்கார்ன், சோள அரிசி சாதம் ஆகியவை குழந்தைகளுக்கும் பிடித்த உணவுகளாகும்.
Seven types of millet (Millet) and many benefits!
Millets are rich in calcium, protein, fiber and minerals. People who want to lose weight can take these millets as food. Also, people with diabetes and cardiovascular diseases can also consume millets. We can take millets daily through nutritious flour, breads and snacks. There are seven types of small grains in total. Let's take a look at their benefits in this collection.
Foxtail millet: Millets contain protein, vitamin A and B, and nutrients like phosphorus. You can use rice millet to make dishes like Athirasam, Idli, Paniyar, Payasam and Alva. It helps keep the heart healthy and the eyesight clear. Especially, if taken by mothers who have given birth, the mother's milk will be secreted better.
Finger millet: Finger millet is more nutritious than millet and wheat. It is a good remedy for bone loss, anemia and constipation. Also, it helps to get relief from digestive disorders, intestinal ulcers, menstrual disorders. Kezhvarak contains iron, phosphorus and lime. You can make porridge, adha, vada, dosa, kali and eat it in kelvarak.
Millet Rice: Millet rice also known as Little millet is rich in fiber. Therefore, it can be a cure for diabetes. Also, it is beneficial for stomach disorders, constipation and anemia. Pulao, Upma, Pongal can be made and eaten.
Horsetail: Barnyard Millet contains iron and fiber. It helps to prevent heart related diseases, hip pain, stomach pain, high blood pressure. Lemon rice, khichdi and pudding made from horseradish will be tasty and nutritious.
Millet Rice: Kodo millet is rich in protein and minerals. Helps reduce obesity, blood pressure, and diabetes. Varaku rice can be used to make Varaku Adha, Payasam, Upluma etc.
Rye Rice: Pearl millet is rich in vitamins. So it helps to keep the body active. Also, rye rice food can be taken for body heat, stomach ulcer and fatigue. It also helps in removing unwanted fats. Kampunchoru, Kampu Adha, Kampu Dosa are delicious.
Sorghum: Sorghum is called Sorghum in English. Corn is used to reduce diabetes, increase body weight and reduce salt in the body. Corn contains starch, protein and iron. Also people with dermatitis can benefit from eating corn meal. Sola Murukku, Popcorn and Sola Rice Rice are also favorite foods for children.
0 notes
“சோழனும் தோழனும்”
எனது முப்பாட்டனார் வெள்ளயனார் முதுகுடுமி அதிகாலையே எழுந்து திணை மாவும் தேனும் அருந்திவிட்டு வயல் வெளிக்கு செல்வார். வயல்வெளி எனில் 200 - 300 ஏக்கர்கள் அல்ல.! கிட்டத்தட்ட 25000 ஹெக்டேர்கள்!! என் பாட்டனார் எருது சவாரி தெரிந்தவர் அவரிடமிருந்த “கொம்பநேரி” இன மாடுகளின் மீது..
சவாரி செய்து மொத்த நிலத்தையும் சுற்றி வருவார்! அந்த நிலங்களில் எங்கு தண்ணீர் சரியாகப் பாயவில்லை, எங்கு பயிர் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு உள்ளது, எந்த இடத்தில் பயிர் செழித்து வளர்ந்துள்ளது, எங்கு களை வளர்ந்துள்ளது என்பதை கண்ணாலேயே கண்டுபிடிக்கும் ஆற்றல் மிக்கவர் வெள்ளையனார்!
என் பாட்டனின் வயல் பாண்டிய தேசத்திற்கும் சோழதேசத்திற்கும் இடையேயான எல்லையில் இருந்தது! இன்றைய சிங்கம்புணரி தாண்டி புதுக்கோட்டை அருகே இருந்த எம் நிலம் “தீராவயல்” என்றழைக்கப்பட்ட பெருமிதம் கொண்டது! கல்லணை கட்ட கரிகாலன் வந்தபோது அவனது ஆட்களுக்கு மூன்று வேளையும்..
கம்பு, கேழ்வரகு, திணை, தேன், வரகரிசி, மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலி என விதவிதமாக சமைத்து போட்டவர் என் முப்பாட்டன்! இன்னொரு பாட்டனான ஆறுமுக மாறன் வேட்டையாடுவதில் வல்லவன்! அவன் வேட்டையாடி கொணர்ந்த மான், முயல், அணில், காட்டுப்பன்றி, செம்போத்து போன்ற..
இறைச்சிகளையும் அன்று ருசிபட சமைத்துத் தந்தவன். ஆறுமுக மாறனின் காடை வறுவல் கரிகாலனின் மிகுந்த விருப்ப உணவாகும். கல்லணை கட்டுமானத்தை காண வந்த கரிகாலன் கால் தடுக்கி அணையில் இருந்து விழுந்தபோது ஆறுமுகனால் காப்பாற்றப்பட்டு திருவையாறு அருகே ஓய்வெடுத்தான் என்னும்..
வரலாற்றை யுவான் சுவாங் பதிவு செய்துவிட்டு ஏதோ கோபத்தால் அதை கிழித்து எறிந்துவிட்டார் எனும் போதே அந்த உண்மை உங்களுக்கு விளங்கும்! வெள்ளையனாரின் தந்தை குமரவேலர் வெண் முதலைகளோடு போரிட்டு வெல்லும் தீரம் மிக்கவர். அவர் அன்றைக்கு காவிரி ஆற்றில் வசித்த வெண் முதலைகளை தனது..
வீரத்தால் நன்றியுள்ள நாய்களைப் போல பழக்கி வைத்திருந்தார்! கல்லணையில் நீர் கசிவு ஏற்பட்டபோது குமரவேலர் இட்ட கட்டளைக்கு அடிபணிந்து அத்தனை முதலைகளும் அணையின் ஓட்டையை அடைத்து முட்டுக் கொடுத்து நின்றது, இன்றைய நமது ஜி அவர்களுக்கு அவரது பக்தாஸ் தரும் முட்டுக்கு இணையானது..
என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்பிரெட் தாம்ஸன் என்னும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்! கரிகாலன் கல்லணை கட்டும் முன்பே காவிரியை மடை மாற்றி தன் நிலம் வழியாக பாயவிட்டவர் குமரவேலர்! ஆம்! 10 கி.மீ நீளமும் 3 கி.மீ அகலமும் கொண்ட அவரது நிலத்தில் தான் இன்றைய கல்லணை கட்டப்பட்டுள்ளது!
இந்தத் தகவலை பதிவு செய்த மார்க்கோ போலோ அவரும் ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அந்தக் குறிப்பை சுக்கு ஆயிரமாக கிழித்து எறிந்துவிட்டார்! என ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர் ஆண்ட்ரூ லீமேன் எழுதி வைத்து அவரும் கோபத்தில்.. சரி விடுங்க இப்படி பல நம்பகமான வரலாற்று ஆதாரங்களை கொண்ட எமது..
முன்னோர்களை இன்றைய சமூகம் போற்றாவிட்டாலும் சரி தூற்றாமல் இருக்கலாமே! கடந்த வாரத்தில் ஒரு நாள் கல்லணை அருகே உள்ள பூங்காவில் நான் நுழைந்த போது என்னிடமே நுழைவுக் கட்டணம் கேட்டனர்! அடேய் இந்த அணையே எங்க இடத்தில் தானேடா இருக்குன்னு மனதிற்குள் சிரித்த முகத்தோடு,
நினைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றேன்! திருவையாறில் அசோக அல்வா புகழ் பெற்றது என்பது இன்று அனைவருக்கும் தெரியும்! ஆனால் அந்த அசோக அல்வா சோழ தேசம் வரை வரக் காரணமாக இருந்தவர் குமரவேலரின் தாய்வழி முப்பாட்டனார் “பாலசுப்பிரமணிய வழுதி” என்பது இன்றும் பலருக்கும் தெரியாது!
அச��க சக்ரவர்த்தியின் அந்தரங்க ஆலோசகராக இருந்தவர்! கலிங்கத்துப் போர் நடந்த சமயம் கால்நடையாகவே சோழ நாட்டிற்கு திரும்பினார்! அவர் தான் அசோக அல்வாவை கண்டு பிடித்தவர் என்னும் உண்மையை சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திர நூலில் எழுதிவிட்டு அவரும் ஏதோ ஒரு கடுங்கோபத்தில்..
சரி.. சரி.. ஒரு மிகையான கோபம் ஒரு மனிதனை எந்தளவிற்கு பாடுபடுத்துகிறது என பார்த்தீர்கள் அல்லவா! கல்லணை எம் குடும்பத்திறகு சொந்தம் என்பதில் எனக்கு பெருமை என்ற போதும் அதை நான் சொந்தம் கொள்ள முடியாதல்லவா! அதே போலத்தான் சோழர்களின் பெருமையும் எவருக்கும் சொந்தமல்ல!
மொத்த கல்லணைக்கும் தம் இடம் கொடுத்து, சோழ மக்களுக்கு சோறு போட்டு, வாய்க்கு ருசியாய் கறி சமைத்து, தடுமாறி விழுந்த கரிகாலனை காப்பாற்றி, வெண் முதலைகளை பழக்கி வளர்த்து இப்படி சோழனுக்கு தோழனாய் வாழ்ந்து மறைந்த எம் குலத்தின் பெருமை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதே மெய்!
⚔️ வெற்றிவேல்.. வீரவேல்.. சக்திவேல்.. கந்தவேல்.. ⚔️
மாமல்லபுரம் அமைந்திருக்கும் இடமும் எங்கள் மூதாதையரின் சொத்து தான்! நரசிம்மவர்ம பல்லவனோடு பல்லாங்குழி ஆட்டத்தில் தோற்று என் பாட்டன் இழந்த பூமி அது! வெறும் பாறையாக கிடந்த பூமி தான் என்று சாதாரணமாக அதை வைத்து விளையாடிவிட்டார்! பல்லவ தோழமை பற்றிய பதிவு விரைவில்..
0 notes
கிரிஸ்பியான கேழ்வரகு மிச்சர் செய்வது எப்படி?
இந்த தீபாவளிக்கு கேழ்வரகு வைத்து மிஸ்ட்டர் செய்து பாருங்களேன் ஒரு பாக்கெட் சேமியா இருக்கா. நச்சுன்னு மொறு மொறுன்னு சூப்பரா இந்த மிக்சரை செய்து அசத்துங்க.
ஆரோக்கியமான குழந்தைகள் சிற்றுண்டி கேழ்வரகு மிச்சர். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் சிறப்பு சிற்றுண்டி.
குழந்தைகளுக்கான சிறந்த மாலை நேர சிற்றுண்டி மற்றும் நாளின் எந்த நேரத்திலும் உண்ணலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கலாம்.
0 notes
கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!
உணவே மருந்து என்பது, நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். பழங் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டு உள்ளதால், பலவகையான நோய்களின் தாக்குதலுக்கு உள்ள��கி உள்ளோம்.
இதிலிருந்து விடுபட, கேழ்வரகை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், நீரிழிவு, இதய நோய் மற்றும் சுண்ணாம்புச் சத்துப்…
View On WordPress
0 notes