venkatesharumugam
venkatesharumugam
Think Big.. Do Smart!
4K posts
Don't wanna be here? Send us removal request.
venkatesharumugam · 4 days ago
Text
#டேவிட்டு_டேவிட்டு
டிவியில் ‘ஒரு தேவதையைப் பார்த்து வந்தேன் டேவிட்டு’ பாடல் ஓடிக் கொண்டிருந்தது. கொச்சின் கடலோரம் ரேடிஸன் ஓட்டலில் தங்கியிருந்தோம். இது போன்ற ஓட்டல்களில் அறை வாடகையோடு காலை உணவும் இலவசம். எனவே மதியமும் இரவும் பசித்த புலி போல உணவு வேட்டைக்கு கிளம்புவோம்.
கொச்சின் நண்பர் பிபின் எங்களது வழிகாட்டி. சிறந்த மிமிக்ரி கலைஞர், நல்ல பாடகரும் கூட ‘நமஸ்காரம் கூட்டுகாரரே” என செஃப் சுரேஷ் பிள்ளையின் குரலில் அச்சு அசலாகப் பேசுவார். பிபின் அறைக்குள் நுழைந்த போது இந்தப் பாடல் டிவியில் ஒளிபரப்பாக, இது நம்மட தேவா சார் டியூனல்லே என்றார்..
பாட்ஷா படத்தில் வரும் ‘நான் ஆட்டோக்காரன்’ பாட்டும் இதே டியூன் தான் கூட்டுக்காரரே என்றார். அது தெரியும் பிபின்.. இன்னிக்கு எங்க சாப்பிடப் போகலாம் அதைச் சொல்லுங்க என்றதும், இந்தப் பாடலிலேயே அந்த க்ளூ இருக்கு என்றார்! தேவதை.. ஓ ஓட்டல் ஏஞ்சல் தானே என்றார் நண்பர் அருண்.
நோ.. இன்னும் ஒரு வாய்ப்பு என்றார். தேவா தானே என்றேன் நான், சிரித்தார்.. ஓட்டல் எஸ்.பி.பியா என்றார் ரமேஷ். அடக்க முடியாமல் சிரித்துவிட்டு ஓட்டல் டேவிட் என்றார். டேவிட் ஹால் என்னும் அந்த ஓட்டல் நேப்பியர் சாலையில் பரேட் மைதானத்தின் எதிரில் இருக்குன்னார்.. கட் பண்ணா..
டேவிட் ஹால் பண்ணையார்களின் ஓட்டு வீடு போல பிரம்மாண்டமாக இருந்தது. இங்கு ஓட்டலுடன் ஒரு ஆர்ட் காலரியும் இருக்கிறது. (ஆட்டு) கால் சாப்பிட வந்த நமக்கு காலரியா முக்கியம்? புரோட்டாவும் மலபார் பிரியாணியும் இங்கு ஃபேமஸ் என்றார் பிபின், சாப்பிட உட்கார்ந்தோம்.
மலபார் பிரியாணி ஒரு அசட்டுத்தனமான பிரியாணி. எனக்கு எப்பவும் இந்த அசமஞ்ச பிரியாணியை பிடிக்காது. வெள்ளை சோறும் அரை மஞ்சளும் கலந்து சரியாக பிரட்டாத லெமன் சோறு போல இருக்கும். இதிலுள்ள கறி சோற்றுடன் ஓட்டாமல் தனியாக இருக்கும். மலபார் பிரியாணியே ஒரு ஸ்கேம் தான்.
கேரளா அரிசிச் சோறு எனது அடுத்த அலர்ஜி! குழம்பு, ரசம், சாம்பார், எதை ஊற்றினாலும் எதோடும் இணையாமல் என் வழி தனி வழின்னு எதோடும் ஒட்டாது. கேரளப் பெண்கள் இட்லி போல அழகாக இருக்கலாம் ஆனால் அங்கே இட்லி விளங்காது. கேரளாவில் எனக்குப் பிடித்த உணவு ஆப்பம்!
பவர்மணி (நன்றிEPS) நிலவு போல் வட்டமாக ஒளி வீசும். ஆப்பமும்,மட்டன் ஸ்டூவும் (வெண் குருமா) ஒரு அல்டிமேட் காம்போ! முட்டைக் குருமாவும் ஆப்பத்திற்கு சரியான ஜோடி. ஆகவே நாங்கள் ஆப்பம், இடியாப்பம், ஸ்டூ, முட்டைக்கறி என ஆர்டர் செய்ய, உலர் போத்துக்கறி ஃப்ரை சொன்னார் பிபின்.
எருமையின் அருமை தெரியாததால் நாங்கள் அமைதியாக இருந்தோம். எதிரே சர்வர் ஒருவர் எடுத்து வந்த தட்டில் ஒரு கோப்பையில் இருந்து நீண்ட கால் ஆடியதைப் பார்த்த பின்பு என் காது ஆடாமல் மூக்கு ஆடியது. காற்றில் வந்த மணம் அது நன்கு வெந்த ஆட்டுக்கால் பாயா என்று கட்டியம் கூறியது.
ஒரு முட்டையை குறைத்துவிட்டு ஒரு பாயா வேண்டுமென உரைத்தோம். அடுத்த 15 நிமிடத்தில் ஆவி பறக்கும் ஆப்பமும் காவி நிறத்து முட்டைக்கறியும் வந்தன. இடியாப்பத்துடன் கொதிக்கும் பாயா மண மணத்தது. வந்த மறு நிமிடம் தட்டு காலியானது. நாங்க 4 பேரும் 4 தான் வாங்கியிருந்தோம்.
அடுத்த ஒரு ரவுண்ட் ஆர்டர் சொல்லிவிட்டு ஆப்பம் மட்டன் ஸ்டூ தொட்டுக் கொண்டால் தேங்காய் பால் சேர்த்ததால் லேசாக ஸ்டூ இனித்தது. “ச்சீச்சீ இந்தக் கறி இனிக்கும்” என்று சொல்லி விட்டு பிபின் வாங்கிய உலர் போத்துக்கறியில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டதும் அதன் ருசியில் மிதந்தேன்.
கண்டேன் என் கம்பெனியின் கதாநாயகியைன்னு நாகேஷ் சொல்லுவாரே.. அது போல அதன் ருசியில் மயங்கினேன். கேரளா சென்றுவிட்டு மீன் தின்றுவிட்டு திரும்பாவிட்டால் உலகம் நம்மிடம் சாரி சொல்லாதல்லவா. கறி மீன், பொழிச்ச மீன், மத்தி, சாலமன் என்று இங்கு நிறைய ருசித்துள்ளேன்
இப்போ என்ன வாங்கலாம்? அவோலி மீன் சாப்பிட்டதுண்டா என்றார் பிபின், இல்லை என்றோம். அதையே ஆர்டர் செய்ய வாழையிலையில் மணக்க மணக்க வந்தது. நடுவில் மட்டுமே முள்ளுள்ள பொம்பிரிட் மீன் வகை, அதன் ருசி மிக அற்புதம்! நிறைவான உணவு இறுதியில் ஒரு லெமன் மிண்ட் சோடா.
உணவு உண்ட திருப்தியாலும், சோடாவின் உதவியாலும் உற்பத்தியான எங்கள் ஏப்பத்தால் அங்கு ஏற்பட்ட வளி மண்டல சுழற்சியில், மெல்லிய சாரல் போல மழை பெய்ய எங்கள் உடலும், உள்ளமும் குளிர்ந்தன.. டேவிட் ஹாலில் சாப்பிட்ட உணவுகள் செமிக்க ஓட்டலுக்கு நடக்கத் துவங்கினோம்..
பிபின் தேவாவின் டேவிட்டு பாடலை பாடத் துவங்கினார்..
��வாராவதி ஓரம் ஓரம்டா.. அந்த ஆயாக் கடை பாயா கறி காரம் காரம்டா.. நாயர் கடை முட்டை தோசைடா.. அதை ரெண்டு தின்னா மாயா பஜார் தெரியும் பாருடா”
ஏவ்வ்வ்..
1 note · View note
venkatesharumugam · 16 days ago
Text
#இராஜஸ்தானின்_சோலைவனம்
“உதய்பூர்”- 1
இராஜஸ்தான்னாலே பாலைவனம் தானே! அதென்னய்யா சோலைவனம்? இது உன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இல்ல ‘வளக்கணங்கள்’ போல உச்சரிப்பு மிஸ்டேக்கா? என்று நீங்க கேட்குறது எனக்கும் கேட்குது. ஆம் சோலைவனமே தான்.
எங்கு பார்த்தாலும் ஏரிகள், பச்சைப் பசேல்னு மரங்கள், ஊரைச் சுற்றி வேலி போல அமைந்துள்ள ஆரவல்லி மலைத் தொடர்கள்னு அழகான ஊர் தான் இராஜஸ்தானின் உதய்பூர். ராஜபுத்திரர்களின் மேவார் சாம்ராஜ்ய தலைநகரம் இதுதான்.
ஆகவே எங்கு பார்த்தாலும் அழகிய பிரம்மாண்டமான அரண்மனைகள் இங்கு ஏராளம். இன்றைக்கு இந்தியாவின் டாப்5 வெட்டிங் டெஸ்டினேஷனில் உதய்பூரும் ஒன்று. ராஜா வீட்டு கல்யாணம் மாதிரி திருமணத்தை இங்கே நடத்தலாம்.
அதுக்காகவே மன்னர் உதய்சிங் மஹா’ராணா கட்டிய அழகிய பல அரண்மனைகளை வீணா’ போகாமல் திருமணங்கள் நடத்த வாடகைக்குத் தருகிறார்கள். மணமகன், மணமகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இங்கு வந்தாலே போதும்.
சீரும் சிறப்புமாக க்ராண்டியராக ஒரு திருமணம் நடத்த சகல வசதிகளும் இங்குண்டு. இங்குள்ள அரண்மனைகளையும், அதில் நடைபெறும் திருமணங்களை எத்தனை விமரிசையாக நடத்தலாம் என்பது பற்றியும் அறிய ஒரு ஈவண்ட் நடந்தது.
இந்தியா முழுவதும் உள்ள ஈவண்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் ஒருவராக நாங்களும் கலந்து கொண்டோம். ஆகஸ்ட் 1,2 &3 ஆகிய மூன்று தினங்களும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்த ஈவண்ட் இது!
நாங்கள் கோவையில் இருந்து மும்பை பிறகு அங்கிருந்து உதய்பூர் என இரு விமானங்களில் சென்றோம். இதில் மும்பையில் 6 மணி நேரம் காத்திருந்த பின்பே உதய்பூர் விமானம். மும்பை அனுபவத்தை தனியாக எழுதவுள்ளேன்.
அதனால இப்போ உதய்பூர் போவோமா! உதய்பூரில் வந்து இறங்கிய போது மாலை 6மணி. அங்கிருந்து நாங்கள் தங்க வேண்டிய Fairmont ஓட்டல் ஒரு மணிநேர கார் பயணம். இது தான் உதய்பூரிலுள்ள மிகுந்த காஸ்ட்லியான 5 ஸ்டார் ஓட்டல்.
தினசரி வாடகை (12 மணி நேரத்திற்கு) 30 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை. அந்த அறைகளை நம்ம ஊரு பஸ்ஸில் வந்து பேனா விற்பவர்கள் சொல்வாங்களே நம்ம “கம்பெனி விளம்பரத்துக்காக” நம்ம “கம்பெனி விளம்பரத்துக்காகன்னு..
அது போல அவங்க கம்பெனி விளம்பரத்துக்காக எங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு தந்திருந்தார்கள். நீச்சல் குளத்துடன் அறை, மூன்று வேளை உணவு, ஊர் சுற்ற வசதி, கலை நிகழ்ச்சிகள் கட்டணம் அத்தனையும் இதில் அடங்கும்.
இதற்குப் பிறகும் பசுபதி எடுறா வண்டியைன்னு சொல்லாம இருந்தா நாம என்ன பெரிய நாட்டாமை?! உதய்பூர் ஏர்போர்ட், ஸ்டார் பக்ஸ் கடை இல்லாத நம்ம தூத்துக்குடி ஏர்போர்ட் போல சிறியது. எங்களை அழைத்து செல்ல ஒரு கார் வந்தது.
அதிகாலை எழுந்தது விமானம் ஏறி, மும்பை வந்தது, மெட் ரோவில் மும்பையை சுற்றியது, மீண்டும் உதய்பூர் விமானம் என உடல் சோர்வாக இருந்தாலும் மனம் ஏனோ உற்சாகத்தில் இருந்தது. உதய்பூர் சாலையில் எங்கள் கார் விரைந்தது.
வெளியே பார்த்த காட்சிகளில் உதய்பூர் அப்படி ஒன்றும் ராஜாக்கள் வாழ்ந்த ஊர் போல தெரியவில்லை. கருமாத்தூர், கண்டரமாணிக்கம் போன்ற சிற்றூர்கள் போல இருந்தது. அப்போ உதய்பூர் அரசப்பட்டி இல்லியா ஆண்டிப்பட்டியா?!
மேலும் அந்த நகர அமைப்பு நம்ம மதுரை மேலூர் போலவே இருந்தது சிட்டிக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்ட கடை அந்த ஊர் டாஸ்மாக் தான். வரிசையாக 3 கடைகள் அதன்பின் 100 அடியில் இன்னும் 3 கடைகள்! எல்லாரும் நல்லா கவனிங்க..
என்னடா 6 டாஸ்மாக் கடை இருப்பதை எல்லாம் இப்பதிவில் சொல்லியாகணுமான்னு கேட்குறிங்க இல்லியா? அடுத்த 35 நிமிட பிரயாணத்தில் நாங்கள் பார்த்த டாஸ்மாக் கடைகள் 87 அதாவது எங்கள் கண்ணில் பட்டு நான் எண்ணிய கடைகள்.
உதய்பூரில் அரண்மனைகளும், ஏரிகளும் தானே அதிகம்னு படிச்சோம்! என்ன இத்தனை ஒயின் ஷாப் இருக்கு? உதய் பூரில் தண்ணீர் வசதி அதிகம்னு சொன்னது இதைத் தானோ என்று டாஸ்மாக்கினுள் நுழையாமலேயே கிறுகிறுத்தது.
டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். அரேஜி நிம்பள் உதய்பூர் மே படா படா தண்ணி வண்டி ஆத்மி நெறைய இர்க்காங்ளா ஹை என்றதும் sir I know english என்றார் அந்த டிரைவர். அவர் பெங்காலியாம்.. அவர் சொன்ன வி��ரங்கள் இதுதான்..
நம்ம தமிழ்நாடு & பாண்டிச்சேரி பார்டர் போல உதய்பூர் நமது பிதாமகரின் மாநிலமான குஜராத் பார்டரில் அமைந்துள்ள்து. குஜராத்தில் பூரண மதுவிலக்கு இருப்பதால் பூரா பயலும் கூட்டம் கூட்டமா குடிக்க வருவது இந்த உதய்பூருக்கு தான்.
அதுதான் இங்கே கடைகள் அதிகம்! உதய்பூருக்கு தினசரி அபார வருமானம் குஜராத் குடிகாரர்களால் வருகிறது என்றார். அகமதாபாத்தே அங்கிருந்து 150 மைல் தூரம் தான். இப்போது கவனித்தால் சாலையில் நிறைய குஜராத் கார்கள் தெரிந்தன.
உதய்பூர் வந்து தங்கி குடித்து போதை தெளிந்த பின்பு ஊர் திரும்புபவர்களும் உண்டு. குஜராத் மாப்பிள்ளைகளுக்கு அம்புட்டு வெறி.. ஏனோ நீரின்றி அமையாது உலகுன்னு எழுதிய வள்ளுவன் வாக்கு என் நினைவுக்கு வ���்து போனது.
எனது கடைசி 20 நிமிட பயணத்தில் மின்சார வசதியில்லாத சில ஊர்களையும் பார்க்க முடிந்தது. ஒரு வழியாக மொத்த மின்சாரத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல தூரத்தில் ஜொலி ஜொலித்தது Fairmont 5 ஸ்டார் ஓட்டல் அரண்மனை..
நுழைவோம்…
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
venkatesharumugam · 17 days ago
Text
#லெமன்_ட்ரீ
கடந்த வாரம் ஈரோட்டில் 4 நாட்கள் தங்கியிருந்தேன். Lemon tree ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்திருந்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பழைய லீ ஜார்டியன் தான் இப்போது Lemon tree ஆக மாறியிருக்கிறது. ஏற்கனவே லீ ஜார்டியனில் பல முறை தங்கியுள்ளேன். ஆஹா.. ஓஹோனு..சொல்லமுடியாவிட்டாலும் பெரும் குறைகள் ஏதும் இல்லை.
இப்போ அது தான் Lemon tree ஆக மாறியிருக்கிறது. காரில் வந்து இறங்கும் போது ஓட்டலின் அதே பழைய வெளித் தோற்றம் தென்பட்டது சரி, பேரில் மட்டும் தான் மாற்றம் என்றெண்ணி உள்ளே நுழைந்து அசந்து போனேன். வெளியே தான் மாற்றங்கள் ஏதுமில்லை ஆனால் ஓட்டலின் உள்ளே 100% கச்சிதமாக அழகாக மாற்றியிருந்தனர்.
சமீபத்தில் ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட அதே போன்ற அறை அமைப்பு, குளியலறை, படுக்கைகள், இதர வசதிகள் என்னை ஆச்சரியப்படுத்தின. அறைகள் வெகு சுத்தமாக இருந்தன, டவல்கள், தலையணை, படுக்கை விரிப்புகளும் முதல் தரம்!
துல்லியமான ஏசி, டிவி, வைஃபை கனெக்‌ஷன் எல்லாமே கனக் கச்சிதம். நான் ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அதே சொகுசு அறையின் மினியேச்சராக இந்த அறையிருந்தது. ஜெய்ப்பூர் ஹோட்டலில் அறையின் ஒரு நாள் வாடகை 30000 ரூபாய் ஜெய்ப்பூருக்கு க்ரூப்பாக நாங்கள் போனதால் இந்த வாடகை தனியாக என்றால் அதன் வாடகை இன்னும் ஒரு மடங்கு.
ஈரோட்டில் வாடகை ₹3000/- +tax மட்டுமே. இங்கு 24 மணி நேர செக்கவுட். ஆனால் ஜெய்ப்பூரில் செக்கவுட் 12 மணி நேரம் மட்டுமே. இந்த 3000 ரூபாய்க்கு காம்ப்ளிமெண்ட் ப்ரேக் ஃபாஸ்டும் உண்டு என்றனர். ஏதோ இட்லி, பொங்கல், உப்புமா, வடை, காபி என நான்கைந்து உணவுகள் தான் தருவார்கள் என நினைத்து உணவகத்தில் நுழைந்தேன்.
வாவ்! தினமும் 3 வகையான ஜூஸ், 3 வகையான மில்க் ஷேக், பல வகையான பழங்கள், பிரெட், பட்டர், ஜாம், கேக், டோநட்ஸ், ஆம்லெட், சிக்கன்/ மீன் சாஸ், பொங்கல், இரு வகை இட்லி, பொடி & நெய், வடை, பொங்கல், பூரி மசால், கிச்சடி, பேன் கேக் & சோயா சாஸ், அவித்த முட்டை, டீ, காபி என அமர்க்களமான மெனு! சூடாக தோசையும் தருகிறார்கள்.
தோசையில் மசாலா, பொடி, ஆனியன் & முட்டை தோசை வகைகள் நாம் கேட்க கேட்க சூடாக வார்த்து பரிமாறுகின்றனர் அன்றைய ஸ்பெஷலில் கிச்சடி, உப்புமா, கோதுமை உப்புமா என மெனுக்கள் மாறுகின்றன. பூரி/சோலா பூரியும் அப்படித் தான் நாம் கேட்டதும் சூடாக வருகிறது. ஆம்லெட், முட்டை பொரியல்னு எது கேட்டாலும் சூடாக செய்து தருகின்றனர்.
சட்னி வகைகளில் தேங்காய் சட்னியுடன், காரச்சட்னி, புதினா சட்னி, கடலை சட்னி என்று ஏதாவது ஒரு சட்னி தினம் தினம் மாறுகிறது. சாம்பார் தான் இங்கே அல்டிமேட்! என் அப்பா சொன்ன அதே சாம்பார் வைக்கும் முறை! யாருங்க இங்கே செஃப்னு கேட்டதும், இருங்க வரச் சொல்றேன் என்றனர். வந்த செஃப்பை பார்த்து வியந்து போனேன். செஃப் முரளி!
எனக்கு முன்பே பரிச்சயமானவர். அய்யா அப்துல்கலாமிடம் பணி புரிந்தவர். சிங்கப்பூர், துபாய்,ஜெர்மன் உட்பட பல நாடுகளில் பணியாற்றியவர். அட நீங்களா என என்னை அடையாளம் கண்டு கொண்டார். அங்கு பரிமாறிய உணவுகளைப் பற்றி பாராட்டினேன். தன்னடக்கமாக ஏற்றார். இங்கே வேறென்ன ஸ்பெஷலா இருக்குன்னு கேட்டேன்.
உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டார். உங்க ஸ்பெஷல் என்னன்னு பந்தை அவரிடமே திருப்பினேன், சின்ன வெங்காயம், வர மிளகாய் போட்ட மட்டன் குழம்பும், கறிவேப்பிலை மசாலா போட்ட மாஷா ஃபிஷ் வருவல் இரண்டும் தான் என்றார். என்னிடம் இன்னும் இரண்டு கட்டை விரல் இருந்தால் அதிலும் டன் என்றிருப்பேன். டன் என்றேன்.
மதியம் 1 மணி சாப்பாட்டு மேசையில் ஆவி பறக்க வெள்ளை சோறும், மட்டன் குழம்பும் முதலில் வந்தது. ஈரோட்டில் வைத்த அந்தக் குழம்பின் மணத்தை அதே நேரத்தில் கரூரிலுள்ள மக்களும் நுகர்ந்திருப்பார்கள் என்று சத்தியமே செய்வேன். கறிக் குழம்பின் மணம் அத்தனை ரம்யமாக மட்டுமின்றி ஜின்னியம், விஸ்கியம், பிராந்தியமாக மண மணத்தது.
முழுதாக போட்ட சின்ன வெங்காயம் கரும் திராட்சைகளாக ஜொலிக்க வர மிளகாயின் சாறு இறங்கி காரமாக கறிச் சோறுன்னா குழம்பு இப்படித்தாண்டா இருக்கணும் என்று சூளுரைத்தது. கறி வெந்த பக்குவம் தான் இங்கே அடுத்த ஹைலைட்! இளநீரில் வழவழப்பான தேங்காய் சாப்பிட்டு இருக்கிறீர்களல்லவா அதே போல மென்மையாக இருந்தது.
குழம்பினுள் கரண்டியால் கலக்கினால் கறி கரைந்து விடும் என்றால் உடனே நம்பலாம். அத்தனை அற்புதப் பக்குவம். கறி வேப்பிலை மீன் ரோஸ்ட் இன்னுமொரு அட்டகாசம்! அதை தட்டுவடை தடிமனில் பொரித்துத் தந்திருந்தார். மொறு மொறுனு நல்ல ருசியில் வித்யாசமாக இருந்தது. அடுத்த 2 நாட்களும் சிக்கன், சில்லி மீன், வறுத்த கறின்னு மெனுக்கள்.
இதே தரத்தில் அறைகளின் பராமரிப்பும், சமையல் பக்குவமும் இதே சுவையும் நீடித்தால் ஈரோட்டின் சிறந்த தங்கும் & சாப்பிடும் ஓட்டல்களில் தனியிடம் பிடிக்கும் ஓட்டல் Lemon tree செஃப் முரளியின் எண் தந்திருக்கேன் அவரிடம் உங்கள் தேவையை முன்கூட்டியே கேட்டு ஆர்டர் செய்து நேரில் போய் அந்த ஆம்பியன்ஸில் அனுபவித்து சாப்பிட்டு மகிழுங்கள்.
ஈரோட்டில் வணிகம் / தொழில் நிமித்தமாக அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும். மொத்தமாக விழாக்கள், விசேஷங்கள் என்றால் அறை வாடகையில் சலுகைகளோடு கிடைக்கும். பழைய லீ ஜார்டியன் வாடிக்கையாளர்களுக்கும் இது புது அனுபவமாக இருக்கும். நன்றி முரளி ஸார் & நன்றி Lemon Tree Team..
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
venkatesharumugam · 17 days ago
Text
“சாம்பார் வடை புராணம்”
மெதுவடை மீது சாம்பார் ஊற்றி வைத்தால் அது தானே சாம்பார் வடை.! இதுக்கெல்லாம் ஒரு பதிவா எனக் கேட்கும் அறுசுவை அறியா குழந்தைகளாக நீங்கள்.! ஆம் எனில் கடந்து போய் விடவும்.. இல்லை எனில் தொடர்ந்து படிக்கவும்.! பொதுவாக சாம்பார் வடை என்பது மெதுவடை மீது சாம்பார் ஊற்றித் தருவது என்று தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.!
கிரிக்கெட் தெரிந்திருந்தால் அதே உதாரணத்தை தருகிறேன்.. ந��்ல சாம்பார் வடை என்பது கிரிக்கெட் ஆட்டத்தின் “பிட்ச்” போல.. நல்ல பிட்ச் அமைந்து இருப்பின் அருமையான மேட்ச் ஆடுவது போல.. நல்ல சாம்பார் வடையும் ஒரு பிட்ச் போலவே! திரவத்தை அப்படியே உறிஞ்சும் ஃப்ளோட்டிங் பேப்பர் போல வடை இருப்பது.. நல்ல சாம்பார் வடைக்கு ஓர் அருமையான உதாரணம்.!
அதென்ன ஃப்ளோட்டிங் பேப்பர் பதம்? அந்தளவிற்கு நீங்கள் யோசிக்கவேண்டாம் வடையை சூடாக பொறித்து எடுத்துவிட்டு வெந்த வடைகளை இம்மீடியட்டாக சூடுநீரில் போட வேண்டும். 6 நிமிடங்கள் அந்த வடை நன்கு வெந்நீரில் ஊறிவிட்டால் நான் சொன்ன அந்த ஃப்ளோட்டிங் பேப்பர் ஃபார்மட்டுக்கு முதல் நிலைக்கு வந்துவிடும்! வடையில் உப்பு சிறிது குறைவாய் இருப்பது சிறப்பு.
தன் எண்ணெய் ஆடைகளை குளித்த வெந்நீரில் களைந்துவிட்டு சீராக வெந்நீர் குடித்து உப்பியிருக்கும், அதை வில்லன் நடிகர் நம்பியார் போல இரு கையால் கசக்காது.. இரு கைகளுக்கு நடுவே வைத்து மென்மையாக (காதலியின் இதழ்களை சுவைக்கும் காதலன் போல அழுத்திக் கடிக்காது மெல்ல மெல்ல உறிஞ்சுவது போல்) சுத்தமாக அந்த வெந்நீர் வடியும் வரை மென்மையாக அழுத்தி அதை ஒருந்தட்டில் அடுக்கி வைக்கவும்.!
ஆம்.! இதோ ஃப்ளோட்டிங் பேப்பர் பதத்தில் மெதுவடை ரெடி.! பிழிந்த அவ்வடையில் எதை உற்றினாலும் உறிஞ்சும்.! அதன் மீது நீங்கள் ஊற்றும் சாம்பார் எனில் அதை உறிஞ்சி அதே சுவையில் சாம்பார்வடை.! இரசம் எனில் அது இரசவடை! தயிர் எனில் அது தயிர் வடை.! சாம்பார் வடைக்கு வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கித் துவுவது நன்று!
எப்படி குலாப் ஜாமூன் ஜீராவில் மூழ்கி ஊறி உள்ளதோ அதே போல் வடை சாம்பாரில் ஊறியிருக்கவேண்டும்.. வெறும் ஸ்பூன் கொண்டு வெட்டினாலே ஐஸ்க்ரீம் போல ஜம்மென ஸ்பூனில் வரும் சாம்பார் வடையே மிகச்சிறந்த பதம்! சிலர் சாம்பார் வைத்துவிட்டு அதன் பிறகு அதில் வடையை போடுவார்கள் அது சாம்பார் வடையே அல்ல.! ஊறியும் ஊறாமலும் இருக்கும்.!
நடுவில் உளுந்த மாவு வெண்ணிறமாய் சிரிக்க ஒருபுறம் கெட்டி தட்டியும் ஒருபுறம் மென்மையாகவும் கோழை எம்.ஜி.ஆர் & வீர எம்.ஜி.ஆர் போல டபுள் ஆக்ட்டை கொடுக்கும். வடை சொத சொதன்னு ஓவராக ஊறிவிடவும் கூடாது, அப்படி சில நேரங்களில் ரிஷப் பாண்ட் பேட்டிங் போல சொதப்பிவிடும்.! வெந்நீரில் ஊறி பிழிந்து சாம்பார் ஊற்றிய இவ்வடை..
நீங்கள் சாப்பிடும் உணவின் அளவை அதிகப்படுத்தும்.! அனைத்திற்கும் மேல் குழைவான வெண் பொங்கலுடன் உண்டால் இன்னும் 2 கரண்டி கூடுதலாக பொங்கலை ருசிக்க வைக்கும், அரைத்துவிட்ட சாம்பாரில் ஊறிய வடை எனில் அஜீரணம் இருப்பவனும் 8 இட்லியோ அல்லது 2 பொங்கலோ சாப்பிடுவான் என்கிறது உணவுப் புராணம்! ஒரு நல்ல சாம்பார் வடை என்பது..
ஒரு காரச் சுவையுள்ள குலாப் ஜாமூன் போன்றது.. வடை மீது அரைத்து விட்ட சாம்பார் ஊற்றி 2 கரண்டி பசும் நெய் விட்டு, காராபூந்தி மற்றும் நறுக்கிய வெங்காயம் தூவி சாப்பிட்டால் அதுவே பேரானந்தம்.. இந்த நித்யானந்தத்தை நீங்கள் இன்றே அனுபவித்துவிட்டால் உங்களுக்கு ஆன்மிகத் தீவான கைலாசா நாட்டுக் குடியுரிமை வீட்டிற்கே தேடி வந்தாலும் போக மாட்டீர்கள்.!
1 note · View note
venkatesharumugam · 1 month ago
Text
‘பந்த்’தம் 🏏 {சச்சின் = ரிஷப்}🏏
3வது டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் 192 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் ஆல் அவுட்டான இந்திய அணி அடுத்த வாரமே 4வது டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் 313 ரன்களை சேஸ் செய்து 400+ ஸ்கோரை அடித்தது அதுவும் வெறும் 4 விக்கெட் இழப்பில் இதற்கு யார் காரணம்?
ராகுல், கில் துவங்கி ஜடேஜா & சுந்தர் இந்த நால்வரின் அபார ஆட்டம் தான் காரணம் என உலகமே பாராட்டி எழுதினாலும் மூன்றாவது மேட்சில் நடக்காத அந்த அதிசயம் நான்காவது மேட்சில் நடந்தது எப்படி? எப்படி இது சாத்தியமானது? இந்த உத்வேகத்திற்கு காரணம் ஒருவரே! அவர் தான் ரிஷப் பந்த்!
ஆம்! ரிஷப் ஒரு காட்டாறு, யாருக்காகவும் தன்னியல்பை மாற்றிக் கொள்ளாத குணம் கொண்டவர். கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கவாஸ்கர் ரிஷப் அடித்து ஆடிய ஷாட்டை முட்டாள்தனமான ஷாட், இவன் ஒரு முட்டாள் என்று கமெண்ட்டரி பாக்ஸிலிருந்து ஆவேசமாகத் திட்டினர்.
அதே கவாஸ்கர் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்டில் ரிஷப் செஞ்சுரி அடித்ததும் அவரை பல்டியடித்து கொண்டாடக் கேட்டுக் கொண்டார். அதுதான் ரிஷப் பந்த்! யார் என்ன சொன்னாலும் அவர் அவரது பாணியில் தான் ஆடுவார். இந்த இங்கிலாந்து தொடரின் ஆரம்பம் முதல் அதிரடி தான்.
முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் சதம், இரண்டாவது மூன்றாவது நான்காவது டெஸ்டுகளில் 3 அரை சதங்கள் என இவர் ஆடிய ஆட்டம் மொத்த அணிக்கும் டன் கணக்கான பூஸ்ட் போல. 4வது டெஸ்டில் கால் விரலில் ரத்தம் வடிய வெளியேறியவர், திரும்பி வந்து அரைசதம் அடிப்பார்.
பாகிஸ்தானில் சச்சின் அறிமுகமான தொடரின் 4வது டெஸ்ட் எதிர் முனையில் இருந்த நவ்ஜோத் சித்து அன்று நடந்ததை சொல்வார். நாங்கள் சோர்ந்து போயிருந்தோம் பாக் வீரர்கள் பேய்த்தனமாக பந்துவீசிக் கொண்டிருந்தனர். நான் மட்டுமே அன்று தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்தேன்.
சீக்கிரம் மற்ற வீரர்கள் அவுட்டானால் எனக்கு கெட்டப் பெயர் வராமல் பெவிலியன் திரும்பலாம் என்று எண்ணியிருந்த போது சச்சின் என்னும் பாலகன் இறங்கினான். எனக்கு ஒரு கணம் பதைபதைத்தது இந்த பேய் வேகத்தை இவன் தாக்குப் பிடிப்பானா என்று, வக்கார்யூனுஸ் பந்து வீச வருகிறார்.
அவரது 2வது புயல் பந்து சச்சினின் பேட்டில் பட்டு அவர் மூக்கை உடைக்கிறது. அப்படியே தக்காளி மூட்டை போல சரிகிறான். சட்டை எல்லாம் ரத்தக்களரி, அவன் மூக்கே இடம் மாறிப் போயிருந்தது. நானும் அணியின் பிஸியோ அலி இரானியும் நடுக்கத்துடன் ஓடிப் போய் சச்சினை பார்க்கிறோம்.
ஐயோ ஏதும் பிரச்சனை ஆகிவிடப் போகிறது இந்தச் சிறுவனை உள்ளே தூக்கிச் சென்றுவிடலாம் என்கிறார் இரானி, அப்போது கீழேயிருந்து பின்னாளில் உலகப் புகழ் பெற்ற அந்த மெல்லிய குரல் “ மெய்ன் கேலேகா” (நான் ஆடுகிறேன்) நானும் இரானியும் பிரமித்துப் போனோம்.
ஒரு 16வயது பாலகன் தன்னுடைய அணிக்காக இப்படி அடிபட்ட நிலையிலும் அணிக்காக ஆட நினைக்கிறான். ஆனால் நான் சீக்கிரம் ஆட்டத்தை முடிக்கலாமென சுயநலமாக இருந்தேனே என்று வெட்கி தலை குனிந்தேன். பின்பு அடுத்த பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் சச்சின்.
எனக்குள்ளும் ஒரு உற்சாகம் பிறக்க அவரோடு இணைந்து போராட முடிவு செய்தேன். அன்று நமது சச்சின் எடுத்தது 57 ரன்கள். அவரைப் பார்த்து நான் எடுத்தது 97 ரன்கள். இதே தான் 4வது டெஸ்டிலும் நடந்தது. கால் விரலில் அடிப்பட்டு திரும்ப வந்து ஆடிய ரிஷப்பின் ஆட்டம் நமது அணிக்கு..
சிறப்பானதொரு உத்வேகத்தை தந்தது. இவன் இப்படி ஆடும் போது நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமே என அணியின் ஒவ்வொருவரையும் நினைக்கத்துண்டியது. இதுவே 3வது டெஸ்டிற்கும் 4வது டெஸ்டிற்கும் இருந்த வித்யாசம். அணி ஒருங்கிணைந்து ஆட காரணம் ரிஷப்பின் ஆட்டமே எனலாம்.
ரிஷப்பின் பாணி படு க்ளாஸிக்கான டெஸ்ட் ஆட்டம் அல்ல. அது சுழன்றடிக்கும் சூறாவளி போன்றது. அவர் கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆன் டிரைவ் போன்ற பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்டுகளை அதிகம் ஆட மாட்டார் ஒற்றைக் கை லாஃப்டுகள், படுத்து உருண்ட ஃபிளிக், ஃப்ளையிங் பேட் என அவரது..
கிரிக்கெட் புதிய புதிய பல ஷாட்டுகளை கொண்டது. இப்படி எல்லாம் கிரிக்கெட் ஆட முடியுமா என வியக்க வைப்பவர். ரிஷப் நிதானமாக ஆடத் துவங்கிவிட்டால் அவராக தவறு செய்தால் மட்டுமே அவுட்டாவார். இல்லாவிட்டால் மனுஷன் எதிரணிகளை கதிகலங்க வைத்துவிடுவார்.
இந்த ‘பந்த்’தம் நம் அணியில் இருக்கும் வரை பெருமையே..
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
venkatesharumugam · 1 month ago
Text
#மாரீசன்
பகத் ஃபாசில் & வடிவேலு இருவரும் தமது மிகையில்லா நடிப்பில் வாழ்ந்து காட்டியிருக்கும் படம். ஒரு திருடனுக்கும் அவனது பைக்கில் பயணம் செய்யும் ஒருவருக்கும் இடையே நடைபெறும் சம்பவம் எனும் எளிய கதை தான். ஆனால் அதை திரைக்கதையில் கையாண்டிருக்கும் விதம் அடடா!
படத்தின் முதல் 40 நிமிடங்கள் டிராவிட்டும் புஜாராவும் இணைந்து ஆடியது போல வெகு நிதானமாகப் போகிறது. இடைவேளைக்கு 5 நிமிடங்கள் முன்பு உறங்குபவர் தலை மீது ஒரு வாளி ஐஸ் கட்டியை கொண்டு வந்து கொட்டியது போல ஜிலீரென சில்லிட்டு சிலிர்க்கும் திருப்பத்தில் வந்து நிற்கிறது.
அப்போது டேக் ஆஃப் ஆன கதை எந்த டர்புலன்சிலும் ஆடாமல் வெண்ணெய்யில் இறங்கிய கத்தி போல பறக்கிறது. பகத் எல்லா பாத்திரங்களிலும் கனக் கச்சிதமாக நிரம்பும் ஒரு முழுமையான கலைஞன். இதிலும் திருடனாக அவர் காட்டி இருக்கும் உடல் மொழி, பார்வை, நடிப்பு எல்லாம் அற்புதம்.
படத்தின் உயிர்நாடியே நம்ம வைகைப் புயல் வடிவேலு தான்! கைப்புள்ள, நாய் சேகர், வீரபாகு, வண்டு முருகன், படித்துறை பாண்டி, ஸ்நேக் பாபு, பாடிஸ்டூடா, புலிகேசின்னு தமிழக மக்களின் மனதில் இன்றும் இடம் பிடித்தவர் அந்த ஒரு சாயல் கூட இல்லாமல் வேலையை பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார்.
வடிவேலு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்பார்கள்! அதற்கு இந்தப் படத்தின் நடிப்பை முதலில் சொல்லலாம். படத்தில் பழைய வடிவேலு எந்த இடத்திலும் வெளிப்படவே இல்லை. பெரியவர் வேலாயுதம் தான் நினைவில் நிற்கிறார். அந்தளவுக்கு அற்புதமான நடிப்பு! வெல்கம் வடிவேலு சார்!
வடிவேலுவின் கேரியரில் இது மிக முக்கியமான படம்! படத்தின் கதை, திரைக்கதை, பரபர எடிட்டிங் யுவனின் பின்னணி இசை எல்லாம் மிகவும் நேர்த்தி. படத்தில் நடிகர்களுக்கு பாடல்கள் ஏதுமில்லை என்றாலும் பகத் & வடிவேலு நடனக் கச்சேரியை ரசிக்கும் போது ஒரு பாடல்.
இசைஞானி + ராமராஜன் கூட்டணியில் ஹிட்டான ‘நேத்து ஒருத்தரை ஒருத்தர பார்த்தோம்’ பாடல் ஒரு கூஸ்பம்ப் மொமண்ட். இன்றைய சூழலில் நம் நாட்டு நடப்பிலுள்ள ஒரு அநியாயத்தை கையாண்ட விதம், படத்தின் கணிக்க முடியாத திருப்பம் என இயக்குனர் சுதீஷ் சங்கர் வென்றுள்ளார்!
நாகர்கோவிலில் துவங்கி திருநெல்வேலி, மதுரை, கோவை, திருவண்ணாமலை என படம் முழுக்க பல ஊர்களின் வழியே கலைச்செல்வன் சிவாஜியின் காமிரா சுழன்றிருக்கிறது. படத்தின் நீளம் அதிகம், கதையில் சில முடிச்சுகள் என ஒரு சில குறைகள் இருந்தாலும் அவையேதும் தெரியவில்லை.
இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில், விவேக் போன்ற வடிவேலு காலத்து சீனியர் நடிகர்களுக்கு கூட கிடைக்காத அரியதொரு வேடம் வைகைப்புயலுக்கு! மக்கள் அவரை கறுப்பு நாகேஷ் என்று அன்போடு அழைத்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் வடிவேலு என்று சத்தியம் செய்து கூறலாம்.
முன்பாதி படத்தின் ஆமை வேகத்தை மட்டும் சகித்துக் கொண்டால் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். எந்த இடத்திலும் இந்தப்படத்தின் கதையை எந்தவொரு இடத்திலும் சிறிதும் கூறாமல் இந்த விமர்சனத்தை எழுதி நானும் ஒரு நியாயம் செய்கிறேன்.
மாரீசன்.. புதிய வடிவேலு சீஸன்..
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 1 month ago
Text
இங்கிலாந்து “பிட்சுகள்” (இரண்டு அர்த்தங்கள்)
ஆடிய நான்கு பேட்ஸ்மேன்களில் 3 பேர் செஞ்சுரி ஒருத்தர் 90 ரன்கள் அதில் இரண்டு செஞ்சுரியன்ஸ் நாட் அவுட். இது நடந்தது பிளாட் பிட்சுகளின் சொர்க்கம் என்றழைக்கப்படும் ஶ்ரீகிஸ்தானிலோ, ஶ்ரீலங்காவிலோ அல்ல கிரிக்கெட் ஆட்டத்தின் தாயகமான பழம்பெருமை வாய்ந்த இங்கிலாந்தில்.
அதுவும் டெஸ்ட் மேட்சின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில்! மைக்கேல் வான் முதல் ரிக்கி பாண்டிங் வரை இந்த மேட்சில் இந்தியா நிச்சயமாக ஃபாலோ ஆன் ஆகும் என சூடம் ஏற்றி சூளுரைத்தனர். போன டெஸ்டில் 192 ரன்களை சேஸ் செய்ய முடியாத சோக வரலாறும் அதற்கு ஆமாம் என்றது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நான்காவது இன்னிங்ஸ் ஆடுவதை தமிழில் நாக்கு தள்ளுவது என்று மொழி பெயர்க்கலாம். அந்தளவுக்கு பவுன்சும், ஸ்விங்கும் அபார வேகத்தில் எழும்பும். ஆனா எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் போல இந்தப் பிட்சுகள் இருப்பது மிகப் பரிதாபம்.
இங்கிலாந்து பஸ்பால் கிரிக்கெட் ஆட முடிவெடுத்து அதன் பயனாக அதிரடியாய் ஆடி வென்ற ஒரு சில மேட்சுகளுக்கு பின்பும் அந்த அதிரடி அணுகுமுறை தவறு என டெஸ்ட் ஆட்ட வல்லுநர்கள் அறிவுறுத்தியதை அவர்கள் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை. பஸ்பால் டெஸ்ட் ஆட்டத்தின் முறையல்ல.
அதிரடி என்பது டெஸ்ட் ஆட்டமே அல்ல! கர்நாடகக் கச்சேரியில் வந்து கானா பாடல்கள் பாடுவது போல அது ஒட்டவே ஒட்டாது. இந்த T20 காலத்தில் உலகில் எல்லா அணிகளும் அதிரடி காட்டும் வேளையில் இங்கிலாந்துக்கு மட்டும் தான் அதிரடி வருமா எங்களுக்கும் வரும் என ஆஸ்திரேலியா காட்டியது.
அவர்கள் டெஸ்டில் இங்கிலாந்தை வச்சு செய்த பின்னர் விழித்துக் கொண்ட இங்கிலாந்து எடுத்த முடிவு என்ன தெரியுமா? பஸ்பால் ஆட்டத்திற்கு தக்க பிட்சையும்,பந்தையும் தயாரித்தது! ஆம் பஸ்பால் என்னும் செருப்பை அணிவதற்காக தங்கள் கால்களை அறுத்துக் கொண்டு தயாராக நின்றனர்.
இந்த இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்கும் முன்பு கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை சிறிது கூட தாக்குப் பிடிக்காது 5-0 என தோற்கும். இதை எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களும் தங்கள் மாமியார் மீது அடித்து சத்தியம் செய்தனர். ஏனெனில் சுப்மன் கில்லின் ராசி அப்படி!
அவர் இந்தியா தவிர SENA நாடுகளில் ஒரு செஞ்சுரி கூட அடித்ததில்லை என்கிற புள்ளி விவரங்களை வைத்து புளங்காகிதம் அடைந்தனர். ஆனால் இந்த டெஸ்ட் தொடர் தொடங்கி 4 ஆட்டங்களில் ஒரு இரட்டை சதம் உட்பட 4 சதங்கள் கில் அடித்திருக்கிறார். ராகுல், பந்த், ஜடேஜா, வாஷிங்டன்..
ஜெய்ஸ்வால் என மேற்கொண்டு ஐவரின் சதங்கள்! இதில் ராகுலும், பந்த்தும், தலா இரண்டு சதங்கள். ஜடேஜா 4 அரை சதங்கள், ஜெய்ஸ்வால் 2 முறையும், ராகுல் 1 முறையும் செஞ்சுரிக்கு மிக அருகில் வந்தனர். ரிஷப் பந்த் அவசரமின்றி ஆடியிருந்தால் 2 செஞ்சுரி கூடுதலாக அடித்திருக்கலாம்.
இப்படி கூறு பத்து ரூபாய்னு அள்ளிச் செல்வதைப் போல ஆளாளுக்கு அசால்டாக செஞ்சுரி அடித்திருக்கின்றனர். கவனியுங்கள் இந்த அணி தான் கத்துக்குட்டிகள் அனுபவம் இல்லாதவர்கள் என்று அழைக்கப்பட்ட அணி. இவர்களே இப்படி ஆடும் படி தான் இங்கிலாந்தின் பிட்சுகள் இருந்தன.
ஜோ ரூட் சிறந்த ஆட்டக்காரர் தான். ஆனால் இத்தனை இளம் வீரர்களே செஞ்சுரி அடித்த போது ரூட்டின் செஞ்சுரிகள் ரசிக்கும்படி இல்லை. இது போல பிட்சுகள் இருந்தால் கோஹ்லி எப்போதோ 50 சதங்கள் கடந்திருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேய துரை ஒருவர் பேசுவார்..
‘கட்டபொம்மன் இந்த மண் கோட்டையை நம்பியா மனக் கோட்டை கட்டுகிறான்’ என்று. அது அப்படியே இங்கிலாந்துக்கு பொருந்தும். 300 ரன்களுக்கு மேல் லீட் எடுத்தது, போன மேட்சில் இந்தியாவை 150 ரன்களில் சுருட்டியது போல என்று அலட்சியமாக இந்த ஆட்டத்தை துவங்கியது இங்கிலாந்து.
முதல் ஓவரில் ரன் கணக்கை துவங்கும் முன்பே 2 விக்கெட் விழுந்துவிட இங்கிலாந்து தொடரை வென்ற உற்சாகத்தில் துள்ளியது. ஆனால் அடுத்து வந்த நான்கு ஆட்டக்காரர்களில் மூவரை சதம் அடிக்கவிட்டு ஒருவரை 90 ரன்கள் அடிக்கவிட்டு இங்கிலாந்தின் முகத்தில் காரி உமிழ்ந்தது இந்த பிளாட் பிட்ச்.
அவர்கள் வைத்த வினை அவர்களுக்கே திரும்பியது. இரண்டு பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்க 15 ரன்களே இருந்த நேரத்தில் சீக்கிரம் ஆட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று ஸ்டோக்ஸ் வந்து கேட்டது கக்கூஸிலிருந்து வரும் கவுண்டமணியிடம் சாப்பிட்டிங்களா சித்தப்புனு செந்தில் கேட்டது போல இருந்தது.
சமரசம் இன்றி முகத்தில் அடித்தாற் போல இந்திய வீரர்கள் அதை மறுத்து இருவரும் செஞ்சுரி அடித்தே டிரா செய்தனர். இந்தத் தொடரில் ஆடிய 4 ஆட்டங்களிலுமே இந்தியா தான் வென்றிருக்க வேண்டும். முதல் ஆட்டத்திலும் இதே போல பிட்ச் தான் இங்கிலாந்து எளிதாக சேஸ் செய்து வென்றது.
அப்போதே பிட்சுகளின் தன்மையை கணித்த இந்தியா இரண்டாவது டெஸ்ட்டை எளிதில் வென்றது. மூன்றாவது டெஸ்டில் நமது பேட்ஸ்மேன்களின் சொதப்பலில் ஜடேஜா போராடியும் தோற்றது. பஸ்பால் என்பது இங்கிலாந்துக்கு மட்டுமில்லை யார் வெட்டினாலும் வெட்டும் கத்தி போல அது.
இன்றைய சூழலில் இங்கிலாந்து பிட்சுகளையும், பஸ்பால் ஆட்டத்தை ஆதரிக்கும் பிட்சுகளையும் மாற்ற வேண்டிய வேளை வந்துவிட்டது. இனியும் அதை மாற்றாவிட்டால் இங்கிலாந்து எனும் யானை எதிரணியிடம் போய் மேட்சை முடித்துக் கொள்ளலாம் என்று பிச்சை எடுக்கத்தான் வேண்டும்.
வெல்டன் இளம் இந்தியா 🇮🇳 🇮🇳
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 2 months ago
Text
“நான்வெஜ் மார்னிங்”
ஞாயிறன்று அதிகாலையில் மக்கள் கூட்டம் கூட்டமா நின்னா அங்க ஏதாவது ஒரு கறிக்கடை இருக்குன்னு, செவ்வாய் கிரகத்தில் பிறக்கும் குழந்தைக்கு கூடத் தெரியும்! கூடுற கூட்டத்தை வச்சு அடுத்த முதல்வர் இவர் தான் சொன்னா நிச்சயம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஒரு கறிக்கடை தான்!
பொதுவா மீன் வாங்கத் தான் அதிகாலை கிளம்பணும் கோழி & ஆட்டிறைச்சி வாங்க அதிகாலை விழித்தாலும் எழுந்திருக்க மனமின்றி சுகமாக நெட்டி முறித்து சின்னதா ஒரு கோழித் தூக்கம் போட்டுவிட்டு சற்று நிதானமாகவே கிளம்பலாம். கறி மார்க்கெட் காலத்தை கொ.மு. கொ.பி. எனப் பிரிக்கலாம்.
அதாவது கொரானாவுக்கு முன், கொரோனாவுக்கு பின்! ஆதி கால மனிதன் நெருப்பைத் தேடியலைந்தது போல கறிவாங்க அலைந்து அந்த ஜீன் குணம் இன்னும் நமக்குள் இருந்ததை உணர்ந்தோம். இன்று லாக்டவுனே இல்லை என்றாலும் கறி வாங்க அதிகாலையிலேயே போவது நம் பழக்கமாகிவிட்டது.
இன்றைக்கு டாஸ்மாக்கை விட மக்கள் கூட்டம் அலை மோதுவது பிராய்லர், மீன்/கறிக்கடைகளில் தான்! இதில் சிக்கல் டாஸ்மாக் கூட்டத்தில் ஆண்கள் மட்டும் தான், ஆனால் கறிக் கடை கூட்டத்தில் பெண்களும் இருப்பாங்க. கறி வாங்க பெண்கள் இருந்தா உனக்கென்னய்யான்னு கேட்குறிங்களா?
கறி வாங்க லைட் கலர் அதிலும் வெள்ளை நிற ஆடைகள் அணிந்து வருபவர்களை பார்த்ததும் சொல்லிவிடலாம் இவங்க புதுசா கறி வாங்க வந்தவங்கன்னு. செருப்பு இரு பக்கமும் தேய கறி வெட்டும் இடத்திற்கே ஆக்டிவாவில் வந்து சில மிலி மீட்டர் இடைவெளி விட்டு லேண்ட் ஆவார்கள்.
கறி வெட்டுபவரின் கண்ணில் மரண பீதி தெரியும். கடைக்கு வந்து தான் சிக்கனா, மட்டனா என்ன கறி வாங்குறதுன்னு வீட்டுக்கு போன் பண்ணி கேட்கிறவங்களும் இருக்காங்க! ஆனா லெப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கை காமிச்சு ஸ்டெயிர்ட்டா போறா மாதிரி கடைசியா மீன் வாங்குவாங்க!
அவங்க கறி வாங்கறது பிரச்சனை இல்லை! அங்கு அவர்கள் செய்யும் அலப்பறைகள் இருக்கே.. ஜவுளிக் கடைக்கு புடவை எடுக்குற மனநிலையிலேயே கறி வாங்கவும் வருவாங்க. மட்டன் குழம்பு வைக்க முடிவு பண்ணிட்டு வந்து ஏதோவொரு காரணத்தால் திடீர்னு சிக்கன் வாங்க முடிவெடுப்பாங்க!
ஆனா இந்த பர்பிள் கலர் சேலை உங்களுக்கு நல்லா எடுப்பா இருக்கும்கா என்று ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் சொல்வது போல, கறிக் கடைகாரர் “கறுப்பு வாவல்’ மீன் வந்துருக்கு மேடம், நடு முள்ளு மட்டும் தான், அல்வா துண்டு மாதிரி இருக்கும். பொரிக்கவும், குழம்புக்கும் நல்லா இருக்கும்.
வீட்டில பிள்ளைங்க விரும்பிக் சாப்பிடுவாங்க” என்றதும் டக்குன்னு மீனை நம்பி சிக்கனை கைவிடுவார்கள். மட்டன் கிலோ 900 என்று தயங்கி தான் சிக்கன் வாங்க முடிவெடுத்து இருப்பார்கள். ஆனா கடைக்காரரின் மார்க்கெட்டிங்கில் மனம் மாறி வாவல் வாங்குவார்கள். வாவல் ஒரு கிலோ ₹1000/-
இதைவிடக் காமெடி புடைவைக் கடையில் அடுத்தவங்க கையில் இருக்குற புடவையை ஆவலோட பார்க்குற மாதிரி நாம என்ன மீன் எடுக்குறோமா அதைப் பத்தி கேட்பாங்க. பொதுவா மீன்களில் சில வகை மீன்களுக்கு பாட்ஷா, மாணிக்கம்னு ஊர் ஊருக்கு வேற பெயர்கள் இருக்கும்.
மத்தி மீன் இருக்கா என்று கேட்பாங்க, ஆனா அதுக்கு சாள மீன் என்ற பேரும் இருக்குன்னு தெரியாது. சாள மீன் தான் இருக்குன்னு சொன்னா அப்ப அது வேணாம்பாங்க. வஞ்சிர மீனை அவ்வளவு ப்ரியமா வாங்குவாங்க! ஆனா அதைவிட. சங்கரா, ஊளி, வெள மீன்க��் ரொம்ப நல்லா இருக்கும்.
வஞ்சிரத்தை விட அதன் விலையும் மிகக் குறைவு ஆனா அந்த மீஞ்ஞானம் பலருக்குத் தெரியாது! மட்டன் வாங்குற இடத்தில் அவங்க சமையலுக்கு தக்கபடி முதுகு, கழுத்து, நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளை கேட்டு வாங்குறவங்க ரொம்பக் கம்மி. எனக்கு சமைக்க தான் தெரியும் என்றால்..
அட்லீஸ்ட் குழம்புக்கு, திக்கான கூட்டுக்கு, வறுவலுக்கு என்ன பகுதி இறைச்சி வாங்கணும்னு கூகுள் பண்ணி பார்த்துகூட வாங்கலாம். ஆனா அதை செய்யமாட்டாங்க! நான் சிக்கன் வாங்கும் போது குழம்புக்கு தோலுடன் கறி வாங்குவேன். அது சிக்கன் குழம்பிற்கு கூடுதலாக ருசியை சேர்க்கும் என்பதால்.
என்னை செத்த எலியைப் பார்ப்பது போல பார்ப்பாங்க. இரண்டு கிலோ நாட்டுக் கோழி வேணுமுன்னா ஒண்ணே கால் கிலோ எடையில் உயிருள்ள 2 கோழிகளை வாங்கி உரிக்கச் சொல்வேன். ஏன்னா கறி இளசா கிடைக்கும் எளிதாகவும் வேகும். ஒரே கோழி 2கிலோ எடுக்கக்கூடாது.
அந்த இறைச்சி சீக்கிரம் வேகாது! இப்படி மீன், சிக்கன், மட்டன் என்று எல்லா இறைச்சிக்கும் கறி வாங்கும் பக்குவம் பலருக்குத் தெரியாது. மீன்கள் துண்டு போடுவதில் கூட பெங்காலி, டைமண்ட், ப்ளேட் , போம்பிரிட், க்ளாசிக், ஹார்டின் என்று பல வகை வெட்டும் முறைகள் இருக்கின்றன!
சிக்கனில் பாப்கார்ன், லாலிபாப் எல்லாம் கேட்டாலே வெட்டித் தருவாங்க. ஆனா இங்கும் மார்பு, தொடை எல்லாம் நம் தேவைக்கு ஏற்ப கேட்டு வெட்டி வாங்கணும். மட்டனில் குடல், நுரையீரல், ஈரல் எல்லாம் தனித்தனி டிபார்ட்மெண்ட். எந்த மாதிரி கட்டிங் என்று சொல்லி வாங்க பலருக்குத் தெரியாது.
இதுக்காக நாங்க என்ன கோச்சிங் கிளாஸா போக முடியும்னு கேக்குறிங்களா! அதெல்லாம் போகலைன்னாலும் அட்லீஸ்ட் அதை தெரிஞ்சிகிட்டா அசைவம் சமைக்கும் அனுபவம் இன்னும் ருசியாக மாறிவிடும். அடுத்த ஞாயிறன்று இதைப் பற்றி அறிந்துகொண்டு மார்க்கெட் சென்று வாருங்கள்.
ஆம்! ஞாயிறு எப்போதும் கோழி கூவி விடிவதில்லை! ஏன்னா அன்று கோழிகள் உயிருடன் இருக்கப்போவதேயில்லை,
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 2 months ago
Text
🫕 🍛🥘 🍜 🥪 மதராசப்பட்டின உணவகங்கள் 🍔 🥗 🥘 🫕 🍜
🍩 சென்னையின் அந்தக்கால ஓட்டல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு 🥘
அன்றைக்கு ஓட்டலில் ‘பாதாம் அல்வா வேண்டும்’ என்ற குரல் கேட்டால், அவர் மிகப் பெரிய பணக்காரர் என அர்த்தம்! அனைவரும் அவரையே பார்ப்பார்கள்! அந்தக் கால 'ஆஹா ஓஹோ' சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்தது சென்னை!
'மதராஸ்’ என அழைக்கப்பட்ட அக்காலம் முதல் சென்னை என அழைக்கப்படும் இக்காலம் வரை ஓகோ என சுவையாக சூடாகப் பேசப்பட்டு வ��ும் உணவு விடுதிகள் அதாங்க ஹோட்டல்கள் பல உண்டு, நமது தருமமிகு சென்னையில்! அன்றைய சென்னை நகரம் இன்றைய அளவை விட மிகவும் சிறியது.
இன்று பிரபலமாக விளங்கும் பல பகுதிகள், அன்று காடாகவும் கட்டாந்தரையாகவும் தோப்புகளாகவும் இருந்திருக்கின்றது. உணவு விடுதிகள் பெரும்பாலும் ‘டவுன்’ என்று அழைக்கப்படும் வடசென்னைப் பகுதியிலேயே இருந்தன, இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அந்நாளில் கல்லூரிகள், ஆபீஸ்கள், நீதிமன்றம் எல்லாம் இந்த ‘டவுன்’ பகுதியில்தான் இருந்தன.
பெரும்பாலான விடுதிகளின் வாசலில் ‘பிராமணாள் காபி ஓட்டல்’ பலகைகள் தொங்கும். இந்த வழக்கம் 1950-வரை நீடித்திருந்தது! தங்கசாலைத் தெருவில் ‘காசி பாட்டி ஓட்டல்' என்று ஒரு ஓட்டல் இருந்தது. காசிக்குச் சென்று வந்த ஒரு பிராமண அம்மையார், போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்குமென்று இந்த உணவு விடுதியைத் தொடங்கினார்.
அவருடைய சமையல் சுவையாக இருந்ததால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த நாளில் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் ‘தாங்கள் செய்வது வியாபாரமல்ல, அன்னதானம்’ என்றுதான் நினைத்தார்கள். ‘லாபத்தைவிட புண்ணியம்தான் பெரிது’ என்று நம்பினார்கள். அதனால்தான் அந்த காலத்தில் எந்தக் கடையிலும் ‘அளவுச் சாப்பாடு’ என்ற பேச்சே கிடையாது.
காசி பாட்டி ஓட்டலில் எடுப்புச் சாப்பாட்டின் விலை இரண்டணா. நெய் தாராளமாகவே பரிமாறப்படும். அன்றைய ‘மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம், இருபத்தாறு ஜில்லாக்களைக் கொண்டது. அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாலாயிரம் வக்கீல்கள் இருந்தனர். நீதிமன்றத்துக்கு வரும் கூட்டம் மிகவும் அதிகம்.
அவர்களை நம்பி நடத்தப்பட்ட உணவு விடுதிகள் பல உண்டு. தம்புச் செட்டித் தெருவில் இப்படிப்பட்ட உணவு விடுதிகள், தஞ்சாவூர், உடுப்பி, பாலக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் கைகளில்தான் இருந்தன. தம்புச்செட்டித் தெருவில் ‘மனோரமா லஞ்ச் ஹோம்’ ஏ.நாராயணஸ்வாமி ஐயர் என்பவரால் 1920-இல் தொடங்கப்பட்டது.
இங்கு அனைத்துமே நெய்யில்தான் செய்யப்படும். வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இந்தத் தெருவில் ஒரு கேன்டீனைத் தொடங்கினர். இந்த விடுதியில் வியாபாரம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைதான். இரண்டு மணிக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் இட்லி, போண்டா, வடை போன்றவற்றைப் பாதி விலைக்கு விற்று விடுவார்கள்.
‘தம்புச்செட்டித் தெருவில் சிற்றுண்டி உணவகம் வைத்தால் லாபம் தரும்’ என்றொரு நம்பிக்கை பலரை இந்தத் தெருவுக்கு அழைத்தது. இந்த நாளில் ‘சரித்திரம் படைத்த ஓட்டல் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட ‘தாசப்பிரகாஷ்’ புகழ் கே.சீதாராமராவ் இங்குதான் வளரத் தொடங்கினார். சீதாராமராவ் இந்தத் தெருவில் ஒரு லாட்ஜையும் கட்டினார்.
அது மட்டுமல்ல, தனது பணியாளர்களை சென்ட்ரல், எக்மோர் ஸ்டேஷன் போன்ற இடங்களுக்கு அனுப்பி, சென்னைக்கு வரும் ரயில் பயணிகளைத் தன் விடுதிக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்தவர் இவரே! இன்று உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் சுவை மிகுந்த ‘மசாலா தோசை’யைச் சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
நெய்யில் செய்யப்பட்டு, ‘மைசூர் மசாலா தோசை’ என்று அழைக்கப்பட்ட இதன் விலை அரையணா. அன்று ஓர் இந்திய ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு நாலு காலணா அல்லது பன்னிரண்டு தம்பிடிகள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள். பன்னிரண்டு தம்பிடிகள் கையில் இருந்தாலே, வயிறு நிறையச் சாப்பிடலாம்.
‘மைசூர் போண்டா’ என்று இன்றும் அழைக்கப்படும் இந்தச் சுவையான சிற்றுண்டியைச் சென்னைக்குக் கொண்டு வந்தவரும் சீதாராமராவ்தான். உடுப்பி சமையல் முறையில் சாம்பார், ரசம் ஆகியவற்றில் வெல்லத்தைச் சற்றுக் கலப்பார்கள். இதற்குத் தனியான சுவை உண்டு. 2 இட்லிக்கு 2 பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்களும் அந்த நாளிலும் உண்டு.
‘நான் இரண்டு இட்லி, இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி’ என்று சொல்லிப் பெருமைப்படுவதில் அந்த நாளில் பலர் இருந்தனர். ‘பிராட்வே’ என்றழைக்கப்படும் குறுகிய சாலையிலும் பிரபலமான உணவகங்கள் இருந்தன. இந்தத் தொழிலில் முன்னோடியாகக் கருதப்படும் சங்கர ஐயர், இங்கு ‘சங்கர் கபே’ என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார்.
இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த இடத்தில்தான் பின்னர் ‘அம்பீஸ் கபே’ இயங்கத் தொடங்கியது. இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம் ‘கராச்சி கபே’. இதைத் தொடங்கியவர்கள், சென்னையின் மிகப் பிரபலமான துணி வியாபாரிகளான கிஷன்சந்த்ஸ்-செல்லாராம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் சிந்திக்காரர்கள்.
கராச்சியிலிருந்து வந்தவர்கள். இது, ஹை-கோர்ட்டுக்கு எதிரில், இன்றைய பாம்பே மியூச்சுவல் கட்டடத்துக்கு அருகே இருந்தது. சென்னை நகரத்திலேயே முதன்முறையாக ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு தனியறை அந்த நாளில் சரித்திரம் படைத்தது. பொது மக்கள் இந்த உணவகத்தின் வாசலில் நின்று வியப்புடன் வேடிக்கை பார்ப்பதுண்டு.
‘உள்ளே போனா குளிருமாமே” என்று மூக்கின்மேல் விரலை வைத்தவர்களும் உண்டு. இந்த உணவகத்தின் ‘கராச்சி அல்வா’ அன்று மிகப் பிரபலம். அந்த நாளில் இனிப்புப் பண்டங்களுக்கு வடஇந்திய அடையாளத்தோடு பெயர்கள் வைப்பது வழக்கம். காசி அல்வா, டெல்லி பாதுஷா, கல்கத்தா மல்கோவா, பாம்பே அல்வா… இப்படிப் பல! இவற்றின் விலை இரண்டணாதான்.
பாதாம் அல்வாவுக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. அதன் விலை மூன்றணா! இதை சாப்பிடுபவர் மிகப் பணக்காரர் என்று அர்த்தம். எல்லோரும் அவரையே பார்ப்பார்கள். பாதாம் அல்வா என்றவுடன் மனதில் பளிச்செனத் தோன்றுவது, ‘கோயம்புத்தூர் கிருஷ்ண ஐயர்’தான். மிகப் பிரபலமான இந்த உணவகம் திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் இருந்தது.
இதன் உள்ளே சென்றால், படாடோபம் இல்லாத ஒரு நடுத்தர வீடு போலத்தான் இருக்கும். ஆனால், இங்கு எழுத்தாளர்கள், வக்கீல்கள், சினிமா பிரமுகர்கள் என சென்னையின் பல பிரபலங்கள் இங்கு வருவதுண்டு. எஸ்.எஸ்.வாசன், கல்கி போன்றவர்களை அடிக்கடி இங்கு பார்க்கலாம்! சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருவார்கள்.
அதுபோலவே, மயிலாப்பூரில் ‘ராயர் ஓட்டல்’ மிகவும் பிரபலம். ‘இங்கு இட்லி சாப்பிட்டால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்’ என்று அந்த நாளில் நினைத்தவர்களும் ஓட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள். இதில் சினிமாக்காரர்களும் உண்டு. அவர்களில் ஒருவர், ஜெமினி கணேசன்! அதுபோலவே, தங்கசாலைத் தெருவில் ‘சீனிவாஸ் பவன்’ மிகவும் புகழ்பெற்றது.
இந்த உணவகம் மாலை 7 மணிக்குத் திறக்கப்படும். நள்ளிரவைத் தாண்டி மூடப்படும். இங்கு விசேஷமே பூரியுடன் ‘பாசந்தி’தான் கொடுப்பது தான். அதிலும் உருளைக்கிழங்கு கறி வேண்டுமென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாசந்தி மட்டுமே வரும். இதை ருசித்திட மயிலாப்பூரிலிருந்து பலர் இரவில் காரில் வருவார்கள்.
உணவக வியாபாரம் சிலருக்குப் புண்ணியத்தை மட்டுமின்றி பணத்தையும் வாரிக் கொடுத்தது. பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள், வி.ஆர்.ராமநாத ஐயர், சி.எம்.சர்மா, கே.சீதாராம் ராவ் ஆகியோர். ஐயருக்கும், சர்மாவுக்கும் சென்னை நகரத்தில் நூறு வீடுகள் சொந்தமாக இருந்ததாக பரபரப்பாக பேசுவார்கள் அதே அளவில் வளர்ந்த இன்னொருவர் இருக்கிறார்.
அவர் தான் உடுப்பியைச் சேர்ந்த கே.கிருஷ்ணாராவ். இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும் விடுதியையும் நிறுவியவர் இவர்தான். இட்லி மாவு அரைக்கும் சாதாரணத் தொழிலாளியாகச் சென்னைக்கு வந்தவர். மவுண்ட் ரோடு பகுதியில் ‘உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று துவங்கி அதன் பின்னர் பல பெயர்களில் வெற்றியைக் கண்டவர்.
சில கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராயப்பேட்டை பகுதியில் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, உட்லண்ட்ஸ் ஓட்டல் நிறுவினார். இது, இன்றைய அளவிலும் இயங்குகிறது. அதற்குப் பிறகு தான் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கினார்.தேவராஜ முதலித்தெரு பகுதியில் வெங்கட்ராம ஐயர் என்னும் பிரபல உணவகம் இருந்தது.
அங்கு சாப்பாடு மிகப் பிரபலம். தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும். மேஜை, நாற்காலிகள் கிடையாது இங்கு என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு காய் கிடைக்கும். கூட்டம் அலைமோதுவதால் பரிமாறப்படும் காய் கறிகள் உடனே தீர்ந்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் பரிமாறுவார்கள். ஆனால்…
அரைமணி நேரம் கடந்து சென்றால் வாழைக்காய் பொரியல் பரிமாறப்படும். அடுத்து கருணைக்கி��ங்கு பொரியல் கிடைக்கும், பலர் டோக்கன் வாங்குவதற்கு முன்பு, ‘இப்ப என்னய்யா பொரியல்?’ என்று கேட்டு வாங்குவார்கள். அவ்வளவு பிரபலம் இந்த வெங்கட்ராம ஐயர் ஓட்டல் இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலகட்டம்..
‘ஜப்பான்காரர்கள் சென்னையில் அணுகுண்டு போட்டு விடுவார்கள்’ என்ற பயத்தினால் நகரமே காலியானது. கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றம் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. இந்த குண்டு பயத்தினால், டவுன் பகுதியில் பல உணவகங்கள் மூடப்பட்டன.
அந்தப் பயம் நீங்கிய பிறகு, மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், தொடங்கப்படாமலே மறைந்தது ‘கராச்சி கபே’!
நன்றி : விகடன் தீபாவளி மலர் 2003
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
venkatesharumugam · 2 months ago
Text
#டெரகோட்டா_ஜம்போ_ஜெட்
நமது ஐ.நா. புகழ் இளம் விஞ்ஞானி செல்லத்துரையின் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் பரவலாகி வருவது மட்டுமின்றி தற்போது உலகளாவிய கவனம் பெற்று வருகின்றன!
அகமதாபாத் விமான விபத்தில் மனம் நொறுங்கிப் போன செல்லத்துரை இந்த உலகில் கடைசியாக நொறுங்கியது தன்மனமாகவே இருக்கட்டும் என்று தன்மானத்துடன் உறுதி பூண்டு.. இஞ்சி, சீரகம், மல்லி, கடுகு, உளுந்து மிளகு என மேலும் பல பூண்டு கண்டுபிடித்ததே இந்த “டெரகோட்டா ஜம்போ ஜெட் விமான மாடலாகும்”! இந்த விமானம் முழுக்க சுட்ட களிமண்ணால் செய்வதால் அதிக எடை இருக்காது.
மலை உடும்பு, பச்சோந்தி ஆகியவற்றின் எச்சில், அமேசான் காடுகளில் வாழும் பசைத் தவளைகளின் தோலில் சுரக்கும் பசை போன்ற திரவம் அனைத்தையும் ஃபெவிகாலோடு கலந்து அதில் மரப்பிசின் & மைதா மாவு எல்லாம் சேர்த்து ஒரு அற்புத பெயிண்ட்டை கண்டுபிடித்துள்ளார்! அதைத் தான் இந்த விமானத்தின் மீது பூசவுள்ளார். ஆகவே இந்த விமானம் மிக உறுதியாக இருக்கும், தரையில் விழுந்தாலும் நொறுங்காது.
ஒரு வேளை விமானம் வீடுகள் மீது விழும் அபாயம் ஏற்பட்டால் இந்த விமானம் அந்தக் கட்டிடத்தின் மீது விழாது! மாறாக அந்த கட்டிடச் சுவரில் உடும்பு போல கப்பென்று இறுகப் பிடித்துக் கொள்ளும். மேலும் சுட்ட மண்ணால் செய்யப்பட்டதால் இந்த விமானம் தீப்பிடிக்கவே பிடிக்காது. விமானத்தின் உட்புறம் பானைத் தண்ணீர் போல எப்போது ஜில்லென்று இருக்கும்! இப்படி ஒரே கல்லில் சாரி மண்ணில் பல மாங்காய்கள்!
செல்லத்துரையை இப்போது தங்கள் நாட்டில் குடியேறச் சொல்ல அமெரிக்காவும், ரஷ்யாவும் ரூம் போட்டு பல ஐடியாக்களை யோசித்து வரும் வேளையில், ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இதற்காக 50 செவன் ஸ்டார் ஓட்டல்களையே கட்டி யோசிக்கவுள்ளது. ஈரானிடம் முகத்தில் பூரான் வாங்கியதால் இஸ்ரேல் இந்தப் போட்டியிலிருந்து விலகிவிட்டதாம். சீனாவும், ஶ்ரீஸ்தானும் பயத்திலுள்ளன!
இந்த நிலையில் இந்த விமானத்திற்கு “புஷ்பக விமானம்” அல்லது ஶ்ரீராம்தூத் என்னும் பெயரை சூட்ட வேண்டும் என்று உத்திரகாசியிலுள்ள பல மடச் சாமியார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறு வயதில் மண்ணை அள்ளித் தின்றவர் குழந்தை கிருஷ்ணரே ஆகவே மண்ணால் செய்த இந்த விமானத்திற்கு மதுபாலகிருஷ்ணா என்று பெயர் சூட்ட மதுராவை சேர்ந்த மடச்சாமியார் மல்ஹோத்ரா கூவியுள்ளார்.
விஞ்சாணி செல்லத்துரையின் செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதால் அவரது கருத்தை இன்னும் அறிய முடியவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இந்த பக்கத்திலேயே குத்த வைத்து காத்திருங்கள்…
‘சைடு அயர்ன்’ சானலுக்காக சேலத்தில் இருந்து “சரடு சரவணன்”
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 2 months ago
Text
🇳🇪📱 Paper Smart phone 📱 🇳🇪
இந்த போட்டோவில் இருக்கும் ‘செல்’லத்துரை என்பவரை நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்து இன்று ஐநாவே அழைத்துப் பாராட்டியிருக்கிறது. ஐநா பாராட்டும்படி இவர் என்ன செய்தார்? ஆம் உலகிலேயே 100% ஹேண்ட் மேட் பேப்பரை மட்டுமே பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட் போனை உருவாக்கியுள்ளார். இதில் பேப்பர் அட்டைகள் பேப்பர்கள் தவிர எந்த பொருட்களுமே உபயோகிக்கவில்லையாம்.
ஆப்பிள் + சாம்சங்கை விட ஆயிரம் மடங்கு ஸ்மார்ட்டான போன் இது! இந்த போனின் முன்பக்க கேமிரா 10000 மெகா பிக்சல் என்றும் செல்ஃபி கேமிரா 5000 மெகா பிக்ஸல் உடையது. இதன் இண்டெர்னல் மெமரி 10 டெகா பைட், 5 ஜெரா பைட், 1 க்ளைமாக்ஸ் பைட் கொண்டது. இதன் எக்ஸ்டர்னல் மெமரி 2 மெகா டிரக்கையே உள்ளே அடக்கி வைக்கும் அளவு வலிமையானது.
இந்த போன் முழுக்க சூரிய சக்தியில் இயங்கும்! உங்கள் அறையில் 1 மணி நேரம் ஜீரோ வாட்ஸ் பல்பு எரிந்தாலே போதும் இதற்கு பவர் ஏறும் (Eco drive) இதற்கு சார்ஜரே தேவையில்லை. இதில் உலகெங்கும் பேசலாம். இதற்கான ஸ்மார்ட் சிம் காப்பரால் செய்யப்பட்டது. உங்கள் வங்கி அக்கவுண்ட்டில் பணமே இல்லாவிட்டால் கூட உங்கள் emi தொகையை ஆன்லைனில் செலுத்தி ரசீது வாங்கிவிடும்!
விமான விபத்தானால் இதிலிருந்து ஒரு பாராசூட் விரியும்! நீங்கள் கப்பலில் போனால் அதே பாராசூட் ஒரு ரப்பர் லைஃப் போட்டாக மாறிவிடும்! எல்லா மொபைல் நெட் ஒர்க்கும் இதில் தானாகவே கனெக்ட் ஆகிவிடும்! உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் பேசுவதோடு இன்றி இது நன்றாக மிமிக்ரியும் செய்யும்! இதில் உள்ள Wife mobile disconnection என்னும் சேவைதான் சிறப்பம்சமே!
உங்கள் wi-fi எங்கும் கனெக்ட் ஆகலாம். ஆனால் wife மொபைலில் மட்டும் கனெக்ட் ஆகவே ஆகாது. இந்த ஒரு சேவைக்காகவே இந்த மொபைல் உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டுள்ளது! இந்த மொபைலின் விலை வெறும் 5 ஆயிரம் ரூபாய் தான்! இந்த போன் அறிமுகமான அன்றே ஆப்பிள் சாம்சங் நிறுவனங்கள் திண்டுக்கல்லில் உள்ள அத்தனை பூட்டுகளையும் மொத்தமாக வாங்கி தங்கள் நிறுவனங்களை மூடத் தயார் நிலையில் உள்ளனவாம்!
இந்த பேப்பர் மொபைலின் வருகையால் இந்தியா இந்த ஆடி போய் ஆவணியில் உலக அரங்கில் டாப்பாக வந்துவிடும் என்றும் புரட்டாசி பவர்மணி அன்று இந்திய ஒரு ரூபாயின் மதிப்பு 1000டாலருக்கு இணையாகிவிடும். 2026 தை மாத பவர்மணிக்குள் US டாலர் நோட்டுகள் கழிவு துடைக்கும் வெற்று பேப்பர் ஆகிவிடும் என உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஏழை இளைஞன் செல்லத்துரை தயாரிக்கும் செல் இந்தியாவின் செல்வத்தை பெருக்கப் போகிறது என்பது பெருமைதானே! நம் தமிழ்நாட்டுக்கும் இது பெருமை தான்! எங்கே செல்லத்துரைக்காக நாம் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டுவோமா!
Tumblr media
0 notes
venkatesharumugam · 2 months ago
Text
“கொங்குநாட்டுச் சமையல்”
தமிழ்நாட்டில் மேற்கு மண்டலம் என்றழைக்கப்படும் பகுதி தான் கொங்கு நாடு! கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு பகுதிகளில் வழக்கத்தில் உள்ள சமையல் முறையே கொங்கு நாட்டுச் சமையல் மரபாகும்.
கொங்கு நாட்டின் சிறப்பே தனக்கென்று எப்பொழுதும் ஒரு தனித்த குணம் கொண்டது! அதான் தெரியுமே சமோசாவை பப்ஸ்னு சொல்லுவாங்கன்னு கலாய்க்கக் கூடாது. சங்க காலத்து உணவான ஊன் சோறு என்பது கொங்கு நாட்டில் இன்றும் உள்ளது. அதை புலவுச் சோறு என்பார்கள்! அப்படி என்ன பிரியாணிக்கும் புலவுக்கும் வேறுபாடுனு கேட்டால்..
அது ஒரு நூலிழை அளவு தான். சுருங்கச் சொன்னால் பிரியாணி அரபு முறை, புலவு கொங்கு முறை அவ்வளவு தான் வேறுபாடு. வள்ளிக் கும்மி முதல், மொடா மத்தளம் & உடுக்கை வரை தனக்கென தனியான வரலாறு கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், சமையல் முறை ஆகியவைகளைக் கொண்டது கொங்கு நாடு.
கொங்குச் சமையல் எளிமையும், சுவையும் நிறைந்த ஒரு இந்தியச் சமையல் வகை. கொங்கு உணவு வகைகள் தமிழ் நாட்டின் மிகப் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். நமது தென்னிந்திய சமையல்களைப் போலவே கொங்கு உணவுகள் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. கொங்குநாடு வறண்ட பகுதியைக் கொண்ட பூமியாகும்.
சோளம், கம்பு, உளுந்து மற்றும் பல வகையான பருப்புகள் மற்றும் எள் போன்றவை முற்காலத்திலிருந்து பிரதான உணவுகளாக இருந்து வருகின்றன. பாரம்பரிய கொங்கு மக்கள் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள். கொங்கு நாட்டுச் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவது கம்பு, திணை, சாமை, அரிசி, பயறு மற்றும் பருப்பு வகைகளாகும்.
அவர்கள் தோட்டத்தில் அவ்வப்போது பறித்த காய்கறிகள், வீட்டில் இடித்து அரைத்த புதிய மசாலாக்கள், உருக்கிய நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், கட்டித்தயிர் போன்றவை மிக முக்கியமான உணவுகள். கொங்கு நாட்டு அசைவ உணவில் பங்கு வகிப்பது நாட்டுக் கோழி, வெள்ளாட்டு இறைச்சி, மீன், இறால் போன்றவைகளாகும்.
மற்ற வட்டார மக்களைப் போலவே இவர்கள் பன்றி மற்றும் மாட்டு இறைச்சியினை அதிகம் உண்பதில்லை. கொங்கு நாட்டில் பெரும்பாலான உணவு வகைகள் கம்பு, திணை, சாமை, வெள்ளைச் சோளம், மக்காச் சோளம் போன்ற தானியங்களை வெகுவாகப் பயன்படுத்தி கூழ், சோறு, களி, இட்லி, தோசை, அடை, என சமைத்து உண்பார்கள்.
கொங்கு சைவ / அசைவ உணவுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. கொங்கு நாட்டுக்கோழி குழம்புக்கு கடுமையான ஜலதோஷத்தையும் விரட்டும் சக்தியுண்டு. செட்டிநாட்டுச் சமையலை விட கொங்குநாடு உணவுகள் குறைவான மசாலாப் பொருட்களையும், தாராளமாக மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றன.
கொங்கு உணவுகள் பொதுவாக இஞ்சி, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சமைக்கப்படுகின்றன. பொதுவாக வீடுகளில் தயாரிக்கப்படும் உணவு, உள்ளூரில் கிடைக்கும் நன்னீர் மீன் மற்றும் நாட்டுக் கோழி, பொன்னி போன்ற குறு தானிய அரிசி, கேப்பை, கம்பு கொள்ளு, குதிரைவாலி போன்ற..
தானியங்களோடு உலர்ந்த (அ) துருவிய தேங்காய் சேர்த்து சமைக்கப்படுகிறது. தனித்துவமான காய்கறிகள், களிமண் பானையில் தினைகளை ஊறவைத்து வேகவைத்து சமைக்கும் உருண்டைகள், கொங்குநாட்டின் சிறப்பு வாய்ந்த பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படும் அரிசிப் பருப்பு சாதம் போன்றவை பாரம்பரிய உணவுகளாகும்.
ஒவ்வொரு வாரமும் இவை வீடுகளில் சமைக்கப்படுவது கிபி நான்காம் நூற்றாண்டிலிருந்து இருக்கும் ஒரு செய்முறையாகும். இங்கு விசேஷ நாட்களில் ஒப்புட்டு என்பது அரிசி, கொண்டைக்கடலை, உளுந்து அல்லது கரும்பு வெல்லம், ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்படும் இனிப்பு உணவாகும்.
கொங்கு நாட்டின் பிரபலமான உணவுகள் :
சோளச்சோறு, கம்மஞ்சோறு, திணைச்சோறு, சாமைச் சோறு, சந்தவை, இடியப்பம், கம்பு தோசை, முருங்கைக்காய் சூப், வாழைப்பூ வடை, மணிகரம், காரமான வடகம் கறி ஆகியவை பழமையான உணவுகளாகும். அரிசிப்பருப்பு சோறு, ராகி களி, அரிசிச்சோறு (நெல்லஞ்சோறு) உப்புப் பருப்பு, ரக்கிரி எனப்படும் கீரை கடைஞ்சது..
நன்னாரி எனப்படும் ஒரு கசப்பு சர்பத், தேங்கா பால் (வெல்லம், தேங்காய் மற்றும் பருத்தி விதைகளால் செய்யப்பட்ட இனிப்பு சூடான பால், உப்புட்டு, உளுந்து களி (வெல்லம், நல்லெண்ணெய் மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட இனிப்பு உணவு) கச்சாயம் (அதிரசம் போன்ற வெல்லம் அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு)
கொள்ளுப் பருப்பு கடைஞ்சது, பச்சைப்பயிறு கடைஞ்சது, புளிச்ச கீரை கடைஞ்சது, பருப்புச் சோறு, நிலக்கடலை சட்டினி, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, மோர்க்குழம்பு, பச்சைக் கொள்ளு ரசம், செலவு ரசம் (அரைச்சு விட்ட ரசம்), பச்சப்புளி ரசம், கம்பு மாவு, கொங்கு கார தோசை, திணை முறுக்கு, மசால் வடை, கோலா உருண்டி, கம்பு பணியாரம்..
ராகி பக்கோடா, மற்றும் பொரி உருண்டை, பரோட்டா மற்றும் மைதா அல்லது பிற மாவுடன் செய்யப்படும் அரிசி பருப்பு சாதம் போன்ற உணவுகள் கொங்கு நாட்டு மக்களைப் போலவே தனித்துவமானவை. சிறப்பானவை. கொங்கு அசைவ உணவுகள் பற்றி விரைவில் அடுத்த பதிவு வரும்!
“திலுப்பி ஒரு நா வாரனுங்கோவ்..”
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 2 months ago
Text
#அடைதோசை_புராணம்
அடையும் அவியலும் என்றால் அத்தி வரதர் கூட நித்தம் சுத்தி சுத்தி வருவார் என்பது புதுமொழி.! அடை முழுமையான சமச்சீர் சத்துகள் உள்ள ஒரு உணவாகும். நன்றாக சாப்பிடக் கூடியவர்கள் கூட அதிகபட்சம் 6 அடைகள் (கனமான) சாப்பிட்டாலே ஆச்சரியம்! அடைக்கு அருமையான காம்பினேஷன் அவியலும் கூடவே கொஞ்சம் வெல்லமும்! சச்சின்- கங்குலி போல சிறந்த பார்ட்னர்ஷிப் இது.
அடைக்கான டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகளைப் பார்ப்போமா, அடைக்கு ஊறவைத்த அரிசி பருப்பை கரகரப்பாக அரைப்பது முக்கியம் “அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வரமிளகாய் இவை நான்கும் அரைத்து அவற்றுடனே வெங்காயம், உப்பு,மிளகு,முந்திரி சிறிது பெருங்காயம் இவை எல்லாம் கலந்துனக்கு நான் தருவேன் துங்கக் கரிமுகத்துத் தூமணியே எனக்குச் சுவையான..
அடை தோசைகள் மூன்றைத் தா” என கணபதியை வேண்டிக் கொள்ளாமலேயே இந்த காம்பினேஷனில் அட�� மாவு அரைத்தால் நிச்சயம் ருசியான அடை நமக்கு வாய்க்கும்.! மாவு தோசை மாவு பதத்தில் இல்லாமல் கெட்டியாக இருப்பது நலம், எனது பாட்டி வடை தட்டுவது போல கல்லில் அடை தட்டி வார்ப்பாள்! தீபாவளி நேர பலகாரங்கள் செய்யும் போது வீட்டில் அடை செய்தால்..
தீபாவளி போனஸ் போல அடையில் வறுத்த முந்திரிகள் தென்படும்.! அடை வார்க்கும் போது கெட்டியாக வார்ப்பது அடுத்த ஆதார விதி! மெல்லிசாக அடை வார்ப்பது, பூனை சைசில் யானை இருந்தது போல காமெடியாகிவிடும். அடைக்கு எப்போதும் கனத்த சரீரம் இருப்பதே அழகு.! அடைக்கு கடலை எண்ணெய் ஊற்றி வார்ப்பது இன்னும் சிறப்பாகும் அது அலாதியான சுவையைத் தரும்.!
அடை கல்லில் வேகும் போது அடையின் விளிம்புகளைச் சுற்றி பவுண்டரி லைன் வரைந்தது போல சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்ட பின்பு பேட்ஸ்மேன் தன் பேட்டால் பிட்சிலுள்ள மேடுகளை தட்டுவது போல தோசைக் கரண்டியால் அடை மீது சிறு சிறு பள்ளங்கள் செய்து மீண்டும் அந்த பள்ளங்களில் கடலை எண்ணெயால் நிரப்பி நன்கு வேகவிடுவது சாலச் சிறந்தது. அடையை அடர் மஞ்சளும் செந்நிறமும் கலந்த நிறத்தில்..
வார்ப்பதே தனிச் சிறப்பு. சூடாக தட்டில் விழும் அடையை ஒரு விள்ளல் எடுத்து அவியலில் தோய்த்து உண்ணும் போதும் மிளகும், தேங்காய் பத்தையும், சில வேளைகளில் அந்த முந்திரியும் சேர்ந்து சுவையின் ஜாலங்களை நாவின் மீது நடத்திக்காட்டும். அதே போல அவியலில்லாத அடைக்கு தேங்காய் சட்னி ஒரு சிறந்த தோழன். அணியில் பும்ரா இல்லாவிட்டாலும் நமது நடராஜன் இருப்பது போல.!
அடைக்கு இன்னொரு அற்புதமான காம்போ மோர்க் குழம்பு! அதுவும் கெட்டியான மோர்க்குழம்பு இன்னும் பிரமாதமாக இருக்கும், அடைக்கு சாம்பார் எல்லாம் சப்ஸ்டிட்டியூட் தான். அரைத்துவிட்ட சாம்பார் கொஞ்சம் ஓ.கே என்றாலும் அவியல் வெல்லம், சட்னி, மோர்க் குழம்பு போன்றவை தரும் இன்பத்தை சாம்பார் தராது அடுத்ததாக அடையின் ஆஸ்தான தோழனான அவியலின் விதிகள்!
பொதுவாக அவியலில் காய்கள் வேகும் பக்குவம் ஒன்று இருக்கிறது. மொத்த காய்களையும் அப்படியே வேக வைக்கக்கூடாது. வேக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் காய்களோடு எளிதில் வேகும் காய்களை சேர்க்கக்கூடாது. லூஸ் பாலை பவுலர் வீசும் வரை காத்திருந்து சிக்ஸர் அடிப்பது போல அதிக நேரம் வேகும் காய்கள் ஓரளவு வெந்த பின்பே எளிதில் வேகும் காய்களை சேர்ப்பது அந்த சிக்ஸர் அடிப்பது போல.
அதே போல அவியலில் தயிர் சேர்ப்பதாக இருந்தால் ���வியல் சூடாக இருக்கும் போதே தயிரை சேர்த்துவிடக் கூடாது. அது மெக்ராத் பந்தை ஏறி வந்து அடிப்பது போல முட்டாள்தனமானது பின்னால் ஸ்டம்பு எகிறிவிடும் அதே போல சூடான அவியலில் தயிர் சேர்த்தால் நீர்த்துவிடும். அவியல் ஆறிய பின்பு தயிர் சேர்ப்பதே சிறந்ததாகும் இப்படி பக்குவமாக செய்யும் அவியல் தான் நாவிற்கு சிறப்பான அடையின்பத்தைத் தரும்!
இட்லிப் பொடி, எள்ளுப்பொடி, போன்ற ஆட்டக்காரர்கள் சில வேளைகளில் அடையுடன் அணியில் சேர்ந்து ஆடினாலும் அவர்கள் வெகு விரைவில் அவுட்டாகி வெளியேறிவிடுவார்கள். அபூர்வமாக எப்பொழுதாவது ஒரு நல்ல பார்ட்னர் ஷிப் அமையலாம்! மதுரையில் இஞ்சி மிளகாய் சட்னி வைத்து அடையும் முட்டை அடையும் முன்பு ஐயப்பன் தோசைக் கடையில் கிடைக்கும்.!
தற்போது அந்தக் கடையில் அசைவம் நிறுத்திவிட்டதால் கிடைப்பதில்லை, சற்றே கனத்த மொறு மொறுப்பான சூடான அடையை விண்டு அதை அவியலில் நன்கு தோய்த்து கூடவே கொஞ்சம் வெல்லமும் வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக கொஞ்சம் கெட்டியான தேங்காய்ச் சட்னியும் வைத்து இரசனையோடு இரசித்து ருசித்து உண்பவனை பார்த்து யாரும் சொல்லலாம்
“நீ கொடுத்து வச்ச மகராசண்டான்னு”.
Tumblr media
1 note · View note
venkatesharumugam · 3 months ago
Text
🏆கருப்பசாமிக்காக காத்திருந்த கப்” 🏆
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்திலிருந்து லங்கா எனும் புறநகர்ப் பகுதி ஏழை கறுப்பின மக்கள் வாழும் பகுதி. கேப்டவுனிலேயே பணிபுரிந்தாலும் கறுப்பின மக்களுக்கு அங்கே தங்க அனுமதியில்லை! காரணம் நிறவெறி! அங்கு ஒரு சராசரி குடும்பத்தில் பிறக்கிறது ஓர் ஆண் குழந்தை.
சராசரி உயரம் கூட இல்லாத குள்ளமான உருவம். நிறம் கருப்பென்றாலே எள்ளி நகையாடும் வெள்ளையின ஆப்பிரிக்க மக்கள் அந்தக் கறுப்பின சிறுவனுக்கு அள்ளி அள்ளி வழங்கியது கேலி, கிண்டல்களைத் தான். ஆனால் அச்சிறுவனின் கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்தது.
அவன் தன்மீது வந்த கிண்டல்களுக்கு தன் காதுகளைக் கொடுக்கவில்லை. தன் கண் பார்வையை பந்துகளின் மீது கொடுத்தான்! அவன் அடித்த பந்துகள் கண்ணாடிக் கூரைகள் பலவற்றை உடைத்திருக்கிறது! அக்கூரைகளை மட்டுமின்றி மட்டுமல்ல நிறவெறி, அடக்குமுறை, இடஒதுக்கீடு என..
சமத்துவத்திற்கு தடையாக உள்ள எல்லாத் தடைகளையும் பின்னாளில் நொறுக்கும் என்பதற்கான முன்னுரையே அது. ஆம்! உலகக் கிரிக்கெட்டில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அணித் தலைவனும் செய்யாத சாதனையை செய்து காட்டி இருக்கிறான் கருப்பின மக்களின் நட்சத்திரம் தெம்பா பவுமா!
அதுவும் எப்படி!? தான் தலைமையேற்ற 10 டெஸ்டுகளில் 9இல் வெற்றி 1இல் டிரா என தோல்வியே காணாத கேப்டன் என்னும் அழியாப் புகழோடு இதனை நிகழ்த்தியிருக்கிறான். இந்த சாதனைக்கு அவ்வளவு எளிதாக வந்ததல்ல. ஏளனக் கற்கள், கிண்டல் சொற்கள், என பவுமா மீது விழுந்த..
அத்தனை கற்களையும் எடுத்து அவன் கட்டிய வெற்றிக் கோட்டை இது! பவுமாவின் இடத்தில் இருந்து இதை நிச்சயம் இன்னொருவர் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது! அணியில் 2014 இல் அறிமுகமான பவுமா சந்தித்த அளவு காயங்கள் எந்த ஆட்டக்காரரும் சந்தித்திருக்க முடியாது.
செஞ்சுரிக்கு டெண்டுல்கர் போல இஞ்சுரிக்கு பவுமா! ஒரு முழுத் தொடரும் பவுமா விளையாடியது கிடையாது 80 சதவீத தொடர்களில் அவர் காயம்பட்டு விலகிடுவார். ஒரு கட்டத்தில் பவுமாவை உடல் தகுதி காரணம் காட்டியே அவரை ஒதுக்கி வைத்திருந்தனர். IPL வாய்ப்புகளும் வரவில்லை.
ஏன் தெ.ஆவில் நடக்கும் T20 அணியில் கூட தாமதமாகத் தான் இடம் கிடைத்தது. ஆனால் கேலிக்குரிய கேள்விகளுக்கு பவுமாவின் பேட் பதில் சொன்னது. அறிமுக ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த சதம் அவரை அணியில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவை தள்ளியது!
தென்னாப்பிரிக்கா அணியில் இடஒதுக்கீடு முறை உள்ளது. ஆடும் 15 வீரர்களில் 9 பேர் வெள்ளையினத்தவர் மீதி 6 பேர் கலர்டு எனப்படும் கலப்பினத்தவர் அதில் நிச்சயம் 2 கறுப்பின வீரர்கள் இருக்கவேண்டும் என்பது விதி. அந்த விதியை வைத்து தான் அவரை அணியில் சேர்த்தது தேர்வுக்குழு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதம், இந்தியாவுக்கு எதிராக எடுத்த சதம் என அவரது மட்டை தொடர்ந்து பேசினாலும் காயங்கள் அவரை அதிகமாக முடக்கிவிட்டது. டெண்டுல்கருக்கு டென்னிஸ் எல��போ காயம் போல ஹாம்ஸ்டிரிங் என்னும் காயம் பவுமாவுக்கு உண்டு.
அடிக்கடி காயங்களால் உள்ளே வெளியே என்று மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தது பவுமாவின் கேரியர். குயிண்டன் டி காக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் அணியில் அப்போது இருந்த சூழலில் கேப்டன் பதவியை பல வீரர்கள் ஏற்கத் தயங்க பவுமாவை கேப்டனாக்கியது தேர்வுக்குழு!
அப்படி அவர்கள் வேண்டாத பிள்ளையாக கொடுத்த இந்த காண்டாமிருகப் பதவியை பவுமா பணிவுடன் ஏற்றார். சவுத் ஆப்பிரிக்கா ஆடும் ஃபைனலை சவுதி பாலைவனத்தில் வைத்தால் கூட மழை வரும் என்று உலகமே கேலி பேசிய காலமது. ஆனால் பவுமா வந்த பின்பு அந்த நிலை மாறியது!
ஆடிய டெஸ்டுகளில் எல்லாம் வெற்றியே பரிசாக வந்தது. காலம் இதற்குத் தான் காத்திருந்தது என்பது போல பவுமா சந்தித்ததெல்லாம் வெற்றி. இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா பரிதாபமாக தோற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிக்கு தகுதி பெற்றது தென் ஆப்பிரிக்கா.
அவர்கள் சந்திக்க இருந்த எதிரணி ஆஸ்திரேலியா! உலகின் மிகுந்த வலுவான டெஸ்ட் அணி, டெஸ்ட் சாம்பியன் ஆட்டங்களில் அதிக தோல்வியை சந்திக்காத அணி என்றெல்லாம் புகழப்பட்ட அவ்வணிக்கு முன் பவுமாவின் வெற்றிப்பயணம் நிறைவடையும் என உலகம் எதிர்பார்த்தது.
அதன்படியே முதல் இன்னிங்ஸில் 138 ரன்களில் தெ.ஆ ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய உதடுகளில் கேலிப் புன்னகை குடியேறி பார்வைகளில் கிண்டல் தெறித்தது. 282 ரன்கள் என்னும் இலக்கை லார்ட்ஸில் யாரும் துரத்தியதில்லை எனும் புள்ளிவிவரம் பயமுறுத்த பவுமா முதலில் துரத்தியது..
அந்த புள்ளி விவரத்தை தான்! தன்னுடைய திட்டங்களால் அணிக்கு தளராத நம்பிக்கையை முதலில் தந்தார். அணியாக இணைந்து ஆடுவதின் அவசியத்தை டிரஸ்சிங் ரூமில் விளக்கினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் விரைவில் 2 விக்கெட்டுகள் விழுந்தவுடன் மார்க்ரம்முடன் இணைந்தார்.
அவரோடு இணைந்தது ஹாம்ஸ்டிரிங் காயமும். “செய் அல்லது செத்து மடி” என்று சொன்ன மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அல்லவா! அந்த காயத்தோடு நொண்டி, குதித்து, தள்ளாடி, தடுமாறி அணி தள்ளாடாமல் அன்றைய ஆட்டத்தை நிறைவு செய்தார் பவுமா!
மறுநாள் வெற்றிக்கு 69 ரன்களே இருந்தது! சரித்திரத்தின் அந்தப் பொன்னாள் விடிந்தது! அன்றைய தினம் பவுமா ஆட்டமிழந்தாலும் தன் அணிக்கு தன் வார்த்தைகளால் நம்பிக்கை தந்து கொண்டே இருந்தார். இன்னும் சொல்லப் போனால் தோனியை விட கூல் கேப்டன் பவுமா மட்டுமே!
கடந்த ஒரு தொடரில் மைதானத்தில் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்ட போது அந்த 15 நிமிடத்தில் கிரவுண்டிலேயே தூங்கி எழுந்து ஓய்வு எடுத்தவர் பவுமா! லார்ட்ஸின் அந்தப் புகழ் பெற்ற பால்கனியில் அவர் ஆட்டம் முடியும் வரை அமர்ந்திருந்ததையும் வெற்றிக்கு பின் ஆர்பரிக்காமல்..
உணர்வுப்பூர்வமாக அழாமல் உறுதியான ஒரு வீரன் போல கலங்காமல் நின்றார். லார்ட்ஸின் பால்கனியில் கபில்தேவ் வென்ற உலகக்கோப்பையின் கொண்டாட்டம், கங்கூலி தனது சட்டையைக் கழற்றி சுழட்டிய நாட்வெஸ்ட் கோப்பை கொண்டாட்டம் போன்றவற்றிற்கு ஈடானது அந்தத் தோரணை.
பவுமா அவரது கேரியர் முழுமைக்கும் பட்டிருந்த காயத்திற்கு அருமருந்து அந்தத் தருணம் என்றால் அது பொய்யில்லை! நிறவெறி, ஏளனம், இடஒதுக்கீடு, எல்லாவற்றிற்கும் தனது தலைமையால் பதில் சொல்லியிருக்கிறார் பவுமா. தனது மகனோடு மகிழ்வுடன் மைதானத்தில் வலம் வந்தார்!
“மகனே நன்றாகப் பார் கருப்பினத்தில் பிறந்து நிறவெறியால் கொத்திக் குதறப்பட்ட ஒருவன் தான் சோக்கர்ஸ் எனப்பட்ட தன் நாட்டு அணிக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கித் தந்தான் என்று அறிவிக்கும் செயல் அது. ஆம் இந்த கருப்ப சாமிக்காக காத்திருந்ததே இந்த கப் என்பது தான் உண்மை!
நிறைவு 🏆
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 கத்திரிக்காய் மீன் குழம்பு 🔴
தேவையானவை : முரல் அல்லது ஊளி மீன் - 1/2 கிலோ, இளசான கத்திரிக்காய் - 1/4 கிலோ, தக்காளி - 5, சின்ன வெங்காயம் - 20, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 6 பற்கள், புளி - எலுமிச்சை அளவு, மல்லித் தழை & கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 3-4 TBS. கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், SHD மீன் மசாலா - 30 கிராம், மிளகாய் தூள் - 1 tsp, உப்பு - தேவைக்கு.
செய்முறை : முதலில் புளியை ஊறவைத்து நன்கு கரைத்து வைக்கவும். மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி நீரை நன்கு வடிகட்டிவிட்டு சிறிது புளி கரைசல் மஞ்சள், உப்பு போட்டு தடவி ஊற வைக்கவும். கத்திரிக்காயை நான்காக (மட்டும்) கீறி இதர காய்களை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
மண் சட்டி அல்லது மீன் குழம்பு சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம் சேர்க்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வெடித்து பொரியும் பொழுது, பச்சை மிளகாய், பூண்டு பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
இதை நன்கு குழைய வதக்கவும். பிறகு நறுக்கிய கத்திரிக்காய் உப்பு சேர்த்து பிரட்டி விடவும். 5 நிமிடங்கள் மூடி போட்டு கத்திரிக்காயை சிம்மில் வேக வைக்கவும். கத்திரிக்காய் நன்கு வெந்து இருக்க வேண்டும். குழைந்து உடைந்து விடக்கூடாது. இப்போது பாத்திரத்தை திறந்து SHD மீன் மசாலா போடவும்.
உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் (option) சேர்த்து நன்கு பிரட்டி விடவும் இதன் பின்னர் மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிது நீர் சேர்க்கவும். குழம்பு கொதித்து மீன் வெந்து வரும் போது தேவைக்கு நீர் சேர்க்கவும். உங்களுக்குத் தேவைப்படும் கெட்டித் தன்மைக்கு ஏற்றபடி நீர் சேர்க்கலாம்.
இப்போது தீயை குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். குழம்பின் மேலே எண்ணெய் பிரிந்துவந்த பின்பு சிம்மில் ஒரு நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். இதில் மல்லித் தழை சேர்த்து மூடி வைக்கவும். கமகம கத்திரிக்காய் மீன் குழம்பு ரெடி. மீன் நன்கு வெந்த பின்பு கரண்டியில் கிளறுவதை கவனமாக செய்யவும்.
5 நிமிடத்தில் மீன் வெந்து விடும். சட்டியை திறந்து வைத்து சமைத்தால் மீன் உடையாது. புளி,காரம் அளவு உங்கள் விருப்பமே. இதில் தேங்காய் அரைத்ததும் சேர்க்கலாம் - அரை கப் தேங்காய்ப்பால் அல்லது தேங்காய் அரைத்து குழம்பு கொதித்து வரும் நிலையில் சேர்க்கவும்.
தேங்காய் அரைத்து விட்டு ஐந்து நிமிடம் அவ்வளவே அதற்கு மேல் வைக்க வேண்டாம். இந்த மீன் குழம்பு முதல் நாள் சாதத்திற்கும் மறுநாள் இட்லி தோசைக்கும் பிரமாதமாக இருக்கும். மறுநாள் குழம்பில் கத்திரிக்காயே மீன் துண்டுகள் போலாகி நாவில் ருசிக்கும் அந்த ருசி உங்களை மயக்கும்!
குழம்பை சூடாக்கி சுண்ட வைத்தது தயிர்/மோர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டால் ருசி வேற வேற வேற லெவலில் இருக்கும்! இதே குழம்பில் கத்திரிக்காயை தீயில் சுட்டு சேர்ப்பது, எண்ணெய் கத்திரிக்காய் போல நன்கு வதக்கி சேர்ப்பது போன்ற முறைகளிலும் சமைக்கலாம்.
வட்டமாக நறுக்கிய தக்காளித் துண்டு, பெரிய வெங்காயம், குடை மிளகாய் அனைத்தையும் நன்கு வதக்கி, பாதியாக நறுக்கிய சுட்ட கத்திரிக்காய், செடா சீஸ் துண்டு, பொரித்த மீன், அனைத்தையும் ஒரு நீள தந்தூரிக் குச்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செருகி ஃபிஷ் டிக்கா போலவும் இதனை பரிமாறலாம்.
Tumblr media
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
#பைலட்_பரத்நாத்
பிரம்மமுஹூர்த்த அதிகாலை! மூங்கில் குடில்கள் நிறைந்த அந்த தபோவனத்தில் மான், முயல், கிளி, மயில் போன்ற அழகிய உயிரினங்கள் துள்ளி குதித்துக் கொண்டிருந்தன. மரங்களிலிருந்து குயில்கள் இனிமையாகக் கூவின!
ரிஷி பத்தினிகள் சிலர் பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் பால் கறந்து கொண்டிருந்தனர். சிலர் அங்குள்ள குளத்தில் பானையில் நீர் எடுக்க, குளத்தின் எதிர் கரையில் ஏராளமான முனிவர்கள் மூழ்கி நீராடிக் கொண்டிருந்தனர்.
குருகுலத்து சீடர்கள் வரிசையாக கீழே அமர்ந்து பிரணாயாமப் பயிற்சியில் இருந்தனர். வனத்தின் நடுவே அமைந்திருந்த யாகசாலையில் மூத்த தவசிரோன்மணிகள் வேள்விக்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த கோவிலில் பூஜை முடிந்து மணியோசை ஒலித்தது! அந்த தபோவனத்தின் தலைமை மாமுனி ஒருவர் தான் அந்த பூஜையை நடத்தியவர். இறுதியில் தீபாராதனை காட்ட அனைவரும் அதை கண்களில் ஒற்றிக்கொண்டனர்.
அங்கிருந்த நைவேத்ய பாத்திரங்களை அவரது சீடர்கள் எடுத்துக் கொண்டு முனிவரின் குடிலுக்கு கிளம்ப. முனிவரும் எழுந்து சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு அவரது குடிலுக்கு கிளம்பினார். முனிவரின் பத்தினி பூப்பறிக்க போயிருந்தார்.
மாமுனி அந்த பர்ண சாலைக்குள் நுழைந்தார். குடிலினுள் அகிலும், கஸ்தூரியும் மணக்க சாம்பிராணிப் புகை கமகமத்தது, அகல் விளக்குகள் பிரகாசித்தன, ரிஷியின் கமண்டலமும், தண்டமும் பூஜித்து வைக்கப்பட்டிருந்தது.
வீடெங்கும் மல்லிகை, ரோஜா, மற்றும் மலராத தாமரை மொட்டுத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது! அந்தக் குடிலின் கொல்லையில் கருப்புக் கம்பளம் விரித்தது போன்ற நீநீநீண்ட ஒரு சாலை தொடுவானம் வரை தெரிந்தது.
அந்த ரன்வே மீது பளீர் வெண்மையில் ஒரு அழகிய பெரிய AIR INDIA விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.! விமானத்தின் பக்கவாட்டில் “பரத்வாஜ மாமுனி” என்று எழுதியிருந்தனர்..
மெய்சிலிர்க்கிறது அல்வா..
போலோ 💪🏾 ஜெய் பரத்வாஜ் மஹான்கீ 💪🏾
Tumblr media
0 notes
venkatesharumugam · 3 months ago
Text
🔥 #எரியுது 🔥
90s கிட்ஸ் துவங்கி 2K மற்றும் ஜென் ஆல்பா & பீட்டா என நான்கு ஜெனரேஷன்களுக்கு முந்தையது ஜென் X ஜெனரேஷனாகும். இவர்களது பிறப்பு மற்றும் டீன் ஏஜ் காலம் 1970 முதல் 1989 வரையாகும். இவர்கள் கிட்டத்தட்ட பூமர்கள் என்னும் பட்டத்தை மயிரிழையில் தவறவிட்டவர்கள்.
ஜென் X காரர்கள் ஒரு நுற்றாண்டின் பவளவிழா காலத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள்! ஒவ்வொரு நூற்றாண்டிலும் பவளவிழா காலத்தில் பிறப்பவர்கள் 4தலைமுறை அறிவியல் வளர்ச்சியையும் நன்கு அனுபவித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் காலம் பழங்காலம் போலவே இருக்கும் ஆனால்..
மிக மிகப் பழமையாக இருக்காது. 1980களில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த பொருட்களைப் பற்றி சொன்னால் நான் சொன்னது உங்களுக்கு நன்கு புரியும். கெரஸின் அடிக்கும் பம்பு என்பதை சொல்லாமல் இன்று அதன் போட்டோவைக் காட்டினால் 2K, ஜென் ஆல்பா & பீட்டா யாருக்கும் தெரியாது.
90S பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இந்தச் சுழலை தான் நான் நடுவாந்திர சூழல் என்கிறேன். 80களில் எல்லார் வீடுகளிலும் மின்சார வசதி கிடையாது. அது இருப்பவர்கள் ஓரளவு வசதியானவர்கள் (அ) அரசு ஊழியர்கள். அன்றைக்கு மின்வெட்டு நேரம் சரளமாகவும் சகஜமாகவும் இருந்தது.
மின்சாரம் போனால் திரும்பிவரும் நேரம் இறைவனுக்கு கூட தெரியாது! ஏன்னா அதுவே இறைவன் போல மாயமாகிவிடும். அன்றைய வீடுகளில் 70% விறகடுப்புகளே! இதிலும் வசதி உள்ளவர்கள் வீட்டில் மட்டுமே கெரஸினில் எரிகின்ற திரி அடுப்புகள் இருக்கும். அதுவும் ஒரு அடுப்பு தான் இருக்கும்!
இன்றைக்கு கேஸ் சிலிண்டர் போல அன்றைக்கு விறகு மற்றும் கரி அடுப்புகள் தான் அதிகம். பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் இருப்பது சிம்னி விளக்குகள் தான். மின்சாரம் இருந்தாலும் 40 வாட்ஸ் பல்பு தான். மஞ்சள் உரசிய கல்லில் படிந்துள்ள அசட்டு மஞ்சள் நிறத்தில் அசமஞ்சமாக எரியும்.
இன்றைய ஜென் கிடஸ் இருக்கும் அறைகளில் அந்த பல்பை மாட்டினால் ஹலோ இதை பல்புன்னா அந்த கரண்டே நம்பாது என்பார்கள்! அன்றைய சிம்னி விளக்கு வெளிச்சத்திற்கு முன் 40 வாட்ஸ் பல்பு பெஸ்டாக இருந்தது என்பதே உண்மை. டியூப் லைட் வீட்டில் இருந்தால் வீடு பளிச்சுன்னு இருக்கும்!
ஆனால் நிறைய வீடுகளில் ஒரு டியூப் லைட்டையே லேசாக ஒருக்களித்து மாட்டினால் தான் மாட்டவே முடியும். ஆம்! அந்த அளவுக்குதான் வீட்டுச் சுவர்கள் சிறிதாக இருந்தன. மின் வசதி வீட்டிற்கு வந்தாலும் எல்லோரும் வாங்கியது 40 wt பல்பு தான்! அன்று மின்வசதி இல்லாத வீடுகளும் அதிகம்!
எனவே சமைக்க, வீட்டிற்கு வெளிச்சம் தர என வீடுகளின் மிக மிக அத்யாவசிய தேவைகளுக்கு மண்ணெண்ணெய் மிக இன்றியமையாத பொருளாக இருந்தது. மாணிக்கத்திற்கு கூட பாட்ஷான்னு ஒரு பேரு தான்! ஆனா இதுக்கு சீமெண்ணெய், கெரஸின், கிருஷ்ணாயில்னு பல்வேறு பெயர்கள் உண்டு.
அன்றைக்கு ரேஷனில் கிடைக்கும் மண்ணெண்ணெய்க்கு உலகப்போரே நடக்கும்! ஆதி மனிதன் நெருப்புக்காக போட்ட சண்டையை விட கெரஸினுக்காக போட்ட சண்டையை அந்த ஜீன் தொடர்புன்னு கூட சொல்லலாம். ரேஷனில் போய் க்யூவில் காத்திருந்து கெரஸின் வாங்குவது பெரும் சாதனை.
அப்படி வெற்றிகரமாக திரும்பி வருபவர்களின் முகங்களைப் பார்த்தால் 32 பந்துகளில் செஞ்சுரி அடித்தவரின் பெருமிதம் தெரியும். வீட்டில் கெரஸினை ஸ்டாக் வைத்துவிட்டால் அதை அடுப்பு, சிம்னி விளக்கு, ஹரிக்கேன் போன்ற டிவைஸ்களில் மாற்ற வேண்டும் அதற்கு தேவை புனல் மற்றும் கை பம்ப்!
இது இல்லாத வீடுகளே அன்றைக்கு இல்லை எனலாம்! ஜென் கிட்ஸ்களுக்கு புரியும்படி சொன்னா இன்றைய மொபைல் சார்ஜர் போலத்தான் இந்த பம்பும், புனலும். கெரஸின் கேனை திறந்து போர் போடுவது போல புனலின் நீண்ட பகுதியை இறக்கி மேல் புறமுள்ள லிவரை இழுத்து..
மேலும் கீழும் பம்ப் பண்ணனும் கேனில் இருக்கும் கெரஸின் புனல் வழியாக நாம் வைத்திருக்கும் பாட்டிலுக்கு டிரான்ஸ்பர் ஆகும். அந்த பாட்டிலில் இருந்து அடுப்பு மற்றும் விளக்குக்கு மீண்டும் புனல் வழியே நாம் ஊற்ற வேண்டும். இதெல்லாம் இன்றைய கிட்ஸிற்கு பெரிய காமெடியாகத் தெரியும்.
ஆனால் அப்படித்தான் அன்றைக்கு இருந்தது. அடுப்புக்கு திரி மாற்றுவது, விளக்கு துடைப்பது, கைபம்ப் சிக்கிக் கொண்டால் அதை கழற்றி சுத்தம் செய்வது போன்ற மெக்கானிஸங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். 85இல் பரவலாக பிளாஸ்டிக் உபயோகம் வந்த பின்பு கைபம்ப் பிளாஸ்டிக்கில் வந்தது.
பழைய மூங்கில்கழி போன்ற தண்டு இல்லாமல் மெலிதான பிளாஸ்டிக் குழாயில் பம்ப் செய்ய எளிதான அழுத்தும் பிடி வசதியுடன் புதிய வடிவத்தில் வந்தது. அதையே அன்று வாய் பிளந்து அதிசயமாகப் பார்த்தோம். விறகடுப்பு, திரி அடுப்புக்கு பிறகு விதவிதமான பம்ப் ஸ்டவ் மாடல்கள் வந்தெரிந்தன’
90களில் கேஸ் ஸ்டவ் பரவலாக வந்தது, பிறகு எலக்டிரிக் ஸ்டவ்! அரசு வழங்கிய கெரஸின் அன்றைக்கு கடத்தப்பட்டு கள்ள மார்க்கெட் போனதால் அரசு ரேஷனில் வழங்கும் கெரஸினை வெள்ளை நிறத்திலிருந்து நீல நிறத்துக்கு மாற்றியது! இந்த நீல நிறமானது கிருஷ்ணரின் நிறம்!
ஆகவே தான் இதற்கு கிருஷ்ணாயில் என்று பேர் வந்தது என்று அன்றைய சங்கிகள் ஸ்கிரிப்ட் எழுதினர்! எனக்குத் தெரிந்து 90களின் இறுதிவரை கெரஸினின் பயன்பாடு இருந்தது. அதன் பிறகு இப்போது எங்கோ சில இடங்களில் சுருங்கிவிட்டது! இதோ சோலார் அடுப்புகள் வந்துவிட்டன.
இனி எதிர்காலத்தில் என்னென்ன அடுப்புகள் வருமோ என சுந்தர் பிச்சை அவர்களின் நிறுவனத்திடம் Future Stovesனு கேள்வி கேட்டால் அது தந்த பதிலில் சிரித்துவிட்டேன்! சுற்று சூழலை மாசுபடுத்தாத Future wood burning stove என்றது! இதுல சிரிக்க என்ன இருக்குன்னு கேக்குறிங்களா…
பூமர்களின் காலத்து அடுப்பான “விறகடுப்பு” தான் அது 🔥🔥🔥
Tumblr media Tumblr media
1 note · View note