அரசு மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல்.. கோவையில் பரபரப்பு
தொடர்புடைய செய்திகள்
கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த புதன்கிழமை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார். வாகன நிறுத்துமிடத்தில் அவரது வாகனத்தை எடுக்கச் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த இளைஞர்…
0 notes
அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய மருத்துவர் பணிக்கு நேர்காணல் | Amma Mini Clinic
அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய மருத்துவர் பணிக்கு நேர்காணல் | Amma Mini Clinic
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அம்மா மினி கிளினிக்கு களில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் களுக்கான நேர்காணல் நடந்தது.
கிருஷ்ணகிரி
சுகாதாரத் துறையின் சார்பில், ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறக் கூடிய…
View On WordPress
0 notes
மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!
மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!
முதல் மாமனிதர் :
150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”. அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”. இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்” என்றார். அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.
இரண்டாம் மாமனிதர் :
ஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால் அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டா��். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”. சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் “மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.
நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”. இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.
மூன்றாம் மாமனிதர்:
ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் “ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா “நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்” என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். அந்த சிறுவன் தான் 1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.
உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் - நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.
புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர் என்னும் ஞானமாய் மலர்ந்தது. ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம் என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.
இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.
ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் “7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அறை டிக்கெட்”. அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார் உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார் “உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அறை டிக்கெட் கொடுத்திருப்பேன்”. அதற்கு அந்த தந்தை கூறினார் “நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு தெரியும்”.
நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா.
உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.
நன்றி!
1 note
·
View note
பீடியாட்ரிசன்? டி.டி.டி.,யில் பணி வாய்ப்பு..! | Tirumala Tirupati Devasthanams invites applications form Paediatrician
பீடியாட்ரிசன்? டி.டி.டி.,யில் பணி வாய்ப்பு..! | Tirumala Tirupati Devasthanams invites applications form Paediatrician
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் காலியாக உள்ள குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) பணியிடங்களுக்கு, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)
மேலாண்மை : ஆந்திர அரசு
பதவிகள் விவரம் :
• குழந்தை…
View On WordPress
0 notes
Tiruvallore district collector, doctor Albi Vargis John speaks about Inspiring Ilango after being inspired at the 1st book festival on 06/04/2022. Albi conveys his inspiration day wishes. Tiruvallore district collector, doctor Albi Vargis John IAS speaks about Inspiring Ilango. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்த மருத்துவர் ஆல்பி வாகிஸ் ஜான், டாக்டர் இன்ஸ்பைரிங் இளங்கோ குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். 2015 ஆம் ஆண்டு பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் இளங்கோவின் தூண்டுதலால் ஆல்பி மிகவும் ஈர்க்கப்பட்டார். 2017ல் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக ஆல்பி பதவியேற்றபோது முதல் புத்தகத் திருவிழாவில் இன்ஸ்பைரிங் இளங்கோவின் உத்வேகத்தை மக்களைச் சென்றடையச் செய்தார். திர���வள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கோவிட் 19 தொற்றுநோயிலிருந்து தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் 2022 இல் முதல் புத்தகத் திருவிழாவை நடத்த அறிவுறுத்தினார். புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை/06/04/2022 அன்று திருவள்ளூர் மாவட்ட மக்களுடன் இணைந்து டாக்டர்.இன்ஸ்பைரிங் இளங்கோ அவர்களின் ஊடாடும், சிந்தனையைத் தூண்டும் மற்றும் நகைச்சுவையான உரையை முழுமையாக ரசித்த பிறகு. Albi I A S, இந்த சிறிய வீடியோவை பதிவு செய்துள்ளார். டாக்டர் இன்ஸ்பைரிங் இளங்கோவின் பிறந்தநாள் உத்வேக நாளாக அனுசரிக்கப்படுவதால், ஆல்பி தனது உத்வேக தின வாழ்த்துக்களை ஏப்ரல் ஆறாம் தேதி தெரிவித்தார். நிர்வாகப் பணி, காவல் பணி, வருவாய்த்துறை, வெளிநாட்டுப் பணி எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இன்ஸ்பைரிங் இளங்கோவின் பிறந்தநாளை உத்வேக நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். மற்றும் (at Tiruvallur district) https://www.instagram.com/p/CcMb2PSvLTg/?igshid=NGJjMDIxMWI=
0 notes
மன்னாரில் மருத்துவர் சக்தி பாலனின் மரணத்தால் பெரும் சோகத்தில் குடும்பம்
மன்னாரில் மருத்துவர் சக்தி பாலனின் மரணத்தால் பெரும் சோகத்தில் குடும்பம்
மன்னாரில் மருத்துவர் சக்திபாலன் அண்மையில் மாரடைப்பால் மரணமானவை குறிப்பிடத்தக்கது, மக்களுடன் நன்கு பழகும் சுபாவமுடைய வைத்தியர் மக்களிற்காகவே இறுதிவரை பணி செய்தமை குறிப்பிடத்தக்கது என அப்பகுதி மக்கள்.
இரு பிள்ளைகளையும் கர்ப்பிணியான மனைவியையும் தவிக்க விட்டு மாரடைப்பால் காலமான மருத்துவர் சக்திபாலனின் பூதவுடல் நேற்று இறுதிக் கிரிகைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவரின் இறப்பு…
View On WordPress
0 notes
நாமக்கல் மருத்துவர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் காரணமா? நாமக்கல்: நாமக்கல் மருத்த���வர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமலாக்கத்துறை நோட்டீசால் தற்கொலை செய்து கொள்ள போவதாக நண்பர்களிடம் ஆனந்த் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆனந்தின் உடலை உடற்கூறாய்வு செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக லண்டனில் உள்ள ஆனந்தின் தாயார் புகார் அளித்துள்ளார். Source: Dinakaran
0 notes
யாழில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்
யாழில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்
யாழில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்து நிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள்…
View On WordPress
0 notes
அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிலைப்பு வழங்க வேண்டும்: PMK
அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனே பணி நிலைப்பு வழங்க வேண்டும்: PMK
[ad_1]
பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசுஅவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…. “தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேரமாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்…
View On WordPress
0 notes
வாழ்வின்_விடியல்_நீ_எனக்கு
♥#வாழ்வின்_விடியல்_நீ_எனக்கு
♥சில நாட்களாய் உடலின் சோர்வு என்னை அதிகமாய் வருத்திக்கொண்டிருந்தது. உடல் சோர்வும் மனத்தின் வேதனையும் என்னை மென்மேலும் வலுவிழக்கச் செய்தது.
♥தலை சுற்றல், வாந்தி, உடல் சோர்வு . இவை எல்லாம் அதற்கான அறிகுறிகளா ? அப்படியென்றால்....
வேதனையையும் மீறி ஏதோ ஓர் உணர்வு
எத்தனை வருடங்களின் வேதனை இது. ஒன்று இரண்டாகி. இரண்டு மூன்றாகி. மூன்று நான்காகி, எட்டு வருடங்கள் ஓடி விட்டன.
♥இந்த எட்டு வருடங்களின் வேதனைகள் தீருமா???? எங்கே தவறு செய்தேன் நான் ? என் வாழ்வில் இருள் நீங்கி விடியல் வருமா?
ஆன்மீகத்தையும் அறிவியலையும் நான் அவ்வளவு நம்பினேன். ஆனால் இரண்டும் என்னோடு ஒத்துழைக்கவில்லையே!
♥உறவினர்களின் பார்வையும், மாமியாரின் குத்தலும் என்று தீருமோ .... எப்படி தீருமோ ???
காலங்களின் அறிவியல் வளர்ச்சி சிலரிடம் தான் இருக்கிறது. பலரிடம் இன்னும் அதே பார்வை... அதே கேள்வி ... இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே பெண்களால் மட்டுமே பெண்களிடம் கேட்கும் கேள்வி.
♥"என்ன இன்னும் ஒன்னும் இல்லையா? ஏதாவது டாக்டரைப் பார்க்கலாமே? "
இந்தக் கேள்விகளில் மனம் நொந்த நேரத்தில் எல்லாம் அன்பாய் அணைத்திடும் இருகரங்கள். அவ்வளவு அன்பான கணவர். ஒரு வார்த்தை அதிர்ந்து பேசியது இல்லை. அவரின் தோள் சாய்ந்து கொள்கையில் அனைத்தும் மறந்து போகும்
இருந்தாலும் சிலரின் கேள்விக்குப் பயந்தே நானும் அவரும் பல இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தோம்.
♥இப்போ எனது இந்தச் சோர்வு ....
கண்கள் நாள்காட்டியை நோக்கின. நாள்கள் கணக்கில் இருந்து ஓடிதான் போயிருந்தன. ஆனால் ...
"இது உண்மையா? எட்டு வருட தவம் வீண்போகவில்லையா? கடவுளே நீ கண் திறந்து விட்டாயா ? என் விஷயத்தில் மருத்துவமும் சாதித்துவிட்டதா?
இத்தனை கேள்விகளுக்கும் பதில் எங்கே தேடுவேன்.
♥"அவரிடம் சொல்லலாமா? சொல்லி விட்டு இல்லை என்றால் அவரும் ஏமாற்றம் அடைவாரே". மனதுக்குள் ஆயிரம் போராட்டங்கள். தனியாக மருத்துவரிடம் சென்று பார்க்கலாமா ?
கைகள் அதுவாகவே வயிற்றைத் தடவின. அதே வேளையில் தோளில் அமைதியாய் அழுத்திய அந்தக் கரங்கள்.
" என்னம்மா , என்ன யோசனை ? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? "
"ஒன்னும் இல்லங்க. உடம்பு கொஞ்சம் சரியில்ல அதான்"
அவரின் முகத்தை ஏறிட்டேன். என் முகத்தையே பார்த்தப்படி பேசினார்.
♥"எனக்குக் குழந்தை இல்லனு கவலையே இல்லம்மா. நீ இருக்கமா என் குழந்தையாய். வேற என்ன வேண்டும் எனக்கு. நாம் வேண்டுமுனா ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமே." என்றார்.
♥‘கடவுளே. இந்த நல்ல மனதுக்கு இப்படி ஒரு சோதனையா ?’ என் உள்ளம் இன்னும் தவித்தது. ஏதும் பேசாமல் அவரின் அணைப்பில் ஆறுதல் தேடினேன். சில பல நொடிகள் எப்படி கடந்தனவோ? மிக மிக அருகில் ஒரு குரல்
அம்மா .........
♥இந்த மூன்றெழுத்து சொல் நான் கேட்க துடித்திடும் சொல். என் காதுகளில் இப்போ கேட்கிறது. இதன் இனிமையை உலகின் எந்த விஷயத்தாலும் ஈடு செய்ய முடியாது.
எங்கே கேட்கிறது?
♥"நான் வந்து விட்டேன் அம்மா உன் கண்ணீர் துடைக்க. இதோ நான் தான் அம்மா பேசுகிறேன். இங்கே பார் அம்மா" என்ற குரல் கேட்டு என் கணவரின் அணைப்பில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன்.
"என்னாச்சி” என்றார் என் கணவர்.
"ஒன்னும் இல்லைங்க.. ஏங்க நாம டாக்டர் கிட்ட போலாமா?" என்றேன்.
♥"ஏன்மா உடம்புக்கு ஏதாவது செய்யுதா? என்ன பண்ணுது." இந்தப் பதற்றமான குரலில் உள்ள அன்பு என்னை இன்னும் சோர்வாக்கியது.
"சரிம்மா கிளம்பு போலாம்."
" அத்தைகிட்ட என்ன சொல்லிட்டு போறது," என்றேன்.
"நான் பார்த்துகிறேன் வா" என்றார்.
♥கொஞ்ச நாளாகவே நாங்கள் சேர்ந்து வெளியே செல்வதை என் மாமியார��� விரும்புவதில்லை. இது ஏன��ன்று எனக்கும் புரியவில்லை.
♥அவர் ஏதோ சொல்லி சமாளிக்க நாங்கள் புறப்பட்டோம். என் அத்தையின் முனுமுனுப்பு , குறுகுறு பார்வை என் முதுகினைப் பதம் பார்த்தது.என் மாமியார் நல்லவர் தான். பேரக்குழந்தை இல்லையே என்ற ஆதங்கமும் சிலரின் பதில் சொல்ல முடியாத கேள்விகளும் தான் அவரின் இந்த வெறுப்புக்குக் காரணம்
"இறைவா.. என்று என் வாழ்வில் விடியல் தருவாய்?"
"என்னம்மா ரொம்ப உடம்புக்கு முடியலையா?
♥"இல்லங்க... லேசா தலைவலி அவ்வளவுதான். அதான் டாக்டர் கிட்ட போறோமே சரியாகிடும்." என்றேன்.
கிளினிக்கில் மருத்துவரைச் சந்திக்கும் எங்களின் எண் வருவதற்குள் எனது தவிப்பு இன்னும் அதிகமாகி போனது.
'♥இவரை அழைத்துக் கொண்டு இங்கு வந்தது தவறோ! வாய் வார்த்தைகளை உதிர்ப்பதை விட இந்தப் பாழாய் போன மனசு பலமடங்கு வார்த்தைகள் அதிகமாய் உதிர்க்கிறதே.
தவிப்போடு திரும்பிய என் கண்களில் எங்களின் பக்கத்தில் ஒரு வயதான பெண்மணி கையில் பிறந்த சில தினங்களே ஆன குழந்தையுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டது.
♥குழந்தையின் அழகான சிவந்த முகம் என்னைச் சுண்டி இழுத்தது. ஆனால் ஏதோ கடித்ததைப் போல அங்காங்கே இரத்தத் திட்டுகள் குழந்தையின் கைகளிலும் கால்களிலும். குழந்தையையே விழி அகலாமல் பார்த்தேன். குழந்தையும் விழித்து என்னைப் பார்த்தது.
♥‘குழந்தை சிரிக்கிறதா என்னைப் பார்த்து? என்ன உணர்வு இது?’ மனதின் எண்ண ஓட்டம் அடங்க மறுக்கிறதே.
"குழந்தை உங்க பேரபிள்ளையா? என்னம்மா ஆச்சி குழந்தைக்கு?" அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.
♥"இல்லம்மா.... நாங்க துப்புறவு பணியாளர்கள." பக்கத்தில் ஒருவர் இருப்பதை அப்போதுதான் கவனித்தேன். "குழந்தை குப்பைத் தொட்டியில் கிடந்துச்சி. எறும்பு கடிச்சிடுச்சிம்மா. போலீசுக்குச் சொல்லிட்டோம். மனசு கேட்கல அதான் போலிஸ் வரதுக்குள்ள இங்க தூக்கிட்டு வந்தோம். போலீஸ் இங்க வருவாங்கம்மா"
♥அந்தப் பிஞ்சு விரல்களை என் கரம் என்னையும் அறியாமல் பற்றியது.
காவல் துறையினர் வந்தவுடன் குழந்தை என் கரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தாதியர் ஒருவரால் தூக்கிச் செல்லப்பட்டது.
♥என் மனதின் வேதனை இப்போ வேறானது. என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏதோ இன்னும் வலுவிழந்து போனது போல இருந்தது.
♥"என்னங்க இந்தக் குழந்தையைக் கேட்டா நமக்குக் கொடுப்பாங்களா? நாம் வளர்த்துக்கலாங்க." என்ற என்னை என் கணவர் சிறிதும் சலனமின்றி பார்த்தார்.
♥'இதை தானே நான் கொஞ்ச நாள���ய் சொல்றேன்' என்பது போல இருந்தது அவரது அந்தப் பார்வை. ஆமாம் அவர் எப்பவோ இந்த முடிவுக்கு வந்து விட்டார். நான் தான் உறவுகளுக்குப் பயந்து வேண்டாம் என்றேன்.
ஆனால் இப்போ இந்தக் குழந்தையைக் கண்டு மனம் பதைக்கிறது.
"என்னங்க ?"
என் கைகளை மெதுவாய் பற்றியவர்.
♥"அதுக்கு நிறைய சட்டவரைமுறைகள் இருக்கு. இரு பார்ப்போம். நான் விசாரித்து வருகிறேன்."
காவல்துறையினரிடம் என் கணவர் என்ன பேசினாரோ எனக்குத் தெரியாது. ஆனால் என் கண்கள் மருத்துவர் அறையின் வாசலிலேயே இருந்தது.
♥மெல்ல குழந்தையைத் தொட்ட எனது கரத்தினைப் பார்த்தேன். அந்தக் கரம் மெதுவாய் என் வயிற்று பகுதியை வருடியது.
♥"அம்மா நான் தான் அம்மா. என்னை விட்டு விடாதே அம்மா. என்னைத் தூக்கி கிட்டு போ அம்மா"
எங்கிருந்து இந்தக் குரல் வருகிறது. என் கணவர் தோளில் தட்டி என்னைக் கூப்பிட்டார்.
"வா. நம்ம நம்பர் வந்துடுச்சி."
"என்னங்க என்ன சொன்னாங்க"
"மருத்துவரைப் பார்த்துட்டு வந்து சொல்றேன்."
♥உள்ளே சென்ற நான் மருத்துவரிடம் " தலைவலி, உடம்பு கொஞ்சம் சோர்வாய் இருக்கு." என்றேன். நான் இங்கு வந்த நோக்கமே மறந்து போனேன். நினைவில் முழுதாய் நிறைந்து போனது அந்த மழலை.
அவரும் சோதித்து மருந்து எழுதி கொடுத்தார்.
" என்னங்க என்ன ஆச்சி. சொல்லுங்க. குழந்தையை நம்மகிட்ட கொடுப்பாங்களா?” நான் கேட்டேன்.
♥“குழந்தையைப் பிள்ளைகள் பராமரிப்பு காப்பகத்தில் விடுவாங்கலாம். நம்மை சட்ட முறைப்படி தத்து எடுத்துக்கச் சொன்னாங்க" என்றவர் தொடர்ந்து..
" ஆனால்...... நீ எப்படி? இதுக்கு உன்னை ... " என் கணவரின் இந்த வார்த்தை திணரலை அறிந்து கொண்ட நான்..
♥" இனி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்ல.. இது தான் என் குழந்தை. உங்க அம்மாவைச் சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு."
ஆவேசத்துடன் கூறிய என்னை ஒரு சிலர் திரும்பியும் பார்த்தனர். என் கணவர் என் கரம் பற்றி மெதுவாய் தலையசைத்தார். என் மாமியாரும் இதற்கு சம்மதிப்பார் என்று என் மனம் சொல்லியது.
♥“குழந்தையைப் பார்த்துட்டு போலாமா?” என்றேன். மருத்துவர் ஒருவரின் அனுமதியோடு குழந்தைகள் பிரிவில் இருந்த அந்தக் குழந்தையைப் பார்க்கப் போனோம்.
♥அங்கே அந்தத் துப்புறவு பணி அம்மா இருந்தார்.
" நீங்க தான் குழந்தையை வளர்க்க போறீங்களா. புண்ணியவதிமா நீ " என்றார்.
♥‘புண்ணியவதி நான் இல்ல. என்னை அம்மாக்கிய அந்தக் குழந்தைதான்.’ மனது லேசானது. வயிற்றில் ஏதோ ஓர் உணர்வு. தெரியும் இது வீட்டுக்குத் தூரமாகும் போது வரும் உணர்வு. ஒவ்வொரு மாதமும் வலி கொடுக்கும் இந்த உணர்வு இன்று இதமானது
♥கைகளில் அள்ளி அணைத்துத் கொண்டேன் அந்தக் குழந்தையை..... இல்லை இல்லை எங்கள் குழந்தையின் உச்சி முகர்ந்தேன். வாழ்வின் விடியல் நீ எனக்கு.
via Blogger https://ift.tt/34kPz0A
0 notes
கொரோனா வைரஸ்: பிரதமர் உரையின் முழுவிவரம் எனதருமை நாட்டு மக்களே, ஒட்டுமொத்த உலகமும் தற்போது மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக, ஒரு இயற்கை சிக்கல் ஏற்பட்டால், அது ஒருசில நாடுகள் அல்லது மாநிலங்களை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், இம்முறை இந்த பேரழிவு ஒட்டுமொத்த மனித குலத்தையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ... http://makkalmurasu.com/?p=19696 மக்கள்முரசு
கொரோனா வைரஸ்: பிரதமர் உரையின் முழுவிவரம் on http://makkalmurasu.com/?p=19696
கொரோனா வைரஸ்: பிரதமர் உரையின் முழுவிவரம்
எனதருமை நாட்டு மக்களே,
ஒட்டுமொத்த உலகமும் தற்போது மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக, ஒரு இயற்கை சிக்கல் ஏற்பட்டால், அது ஒருசில நாடுகள் அல்லது மாநிலங்களை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், இம்முறை இந்த பேரழிவு ஒட்டுமொத்த மனித குலத்தையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு போல, முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது கூட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்படவில்லை.
கடந்த இரண்டு மாதங்களில், கொடிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை நாம் தொடர்ந்து கவனித்தும், கேட்டும் வருகிறோம். இந்த இரண்டு மாதங்களில் 130 கோடி இந்திய மக்களும், உலகம் முழுவதும் தொற்றியுள்ள கொரோனாவை எதிர்கொள்ள ஆயத்தமாகியிருப்பதுடன், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், கடந்த சில நாட்களில், பிரச்சினையை நாம் தடுத்து வருவதுடன் அனைத்தும் சரியாக உள்ளது போல் தோன்றுகிறது. கொரோனா போன்ற உலகளாவிய தொற்று ஏற்படும் போது, மனநிறைவு அடைந்தது போல் இருப்பது சரியானது அல்ல. எனவே, ஒவ்வொரு இந்தியரும் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம்.
நண்பர்களே,
நான் எப்போது உங்களிடம் எதைக் கேட்டாலும், நீங்கள் என்னை கைவிட்டதில்லை. உங்களின் வாழ்த்துகளின் வலிமை காரணமாகவே நமது முயற்சிகள் வெற்றி அடைகின்றன.
இன்று எனதருமை நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் சிலவற்றை கேட்டுக் கொள்ளவிருக்கிறேன்.
வரவிருக்கும் சில வாரங்களில், உங்களது நேரத்தை உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.
நண்பர்களே,
இதுவரை, கொரோனா தொற்றை தடுக்க அறிவியல் ரீதியாக உறுதியான தீர்வு காண முடியவில்லை. எந்தவொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுபோன்ற சூழலில், கவலை ஏற்படுவது இயற்கையானதே.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளை பார்க்கும் போது, மற்றொரு அம��சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நாடுகளில், தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் தவிர, அதன்பிறகு இந்த நோய் ஒரு வெடிவிபத்து போல, பயங்கரமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு இதுபற்றிய நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, கொரோனா பரவுவது குறித்தும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விரைவான முடிவுகள் மற்றும் பெருமளவிலான மக்களை தனிமைப்படுத்தியதன் மூலம் ஒருசில நாடுகள் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளன.
130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா போன்ற சிக்கல்கள் சாதாரணமானது அல்ல.
வளர்ந்த நாடுகளில் கூட, கொவிட்-19 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தற்போது நம்மால் காண முடிவதால், இந்தியாவுக்கு இந்த நோயால் பாதிப்பு ஏற்படாது என்று கருதினால் அது தவறானதாகி விடும்.
எனவே, இந்த தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது, உறுதிப்பாடு மற்றும் பொறுமை ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தற்போதைய நிலையில் 130 கோடி இந்திய மக்களும், ஒரு குடிமகன் என்ற முறையில் நமது கடமைகளை பின்பற்றி நடப்பதுடன், மத்திய–மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதன் மூலம், நம்மால் இந்த நிலைமையிலிருந்து மீண்டுவர முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கவேண்டும்.
தற்போது இந்த நோய் நம்மை தொற்றாத வகையிலும், மற்றவர்களையும், இந்த நோய் தாக்காமல் தடுக்க வேண்டும்.
நண்பர்களே,
இதுபோன்ற தொற்று ஏற்படும் காலக்கட்டங்களில் நாம் ஆரோக்கியமாக இருந்தால் இந்த உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – என்ற தாரகமந்திரமே நம்மைக் காப்பாற்றும்.
இதுபோன்ற சூழ்நிலையில், நமக்குத் தெரிந்து இந்த நோயை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லாவிட்டாலும், நாம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
இதுபோன்ற நோயை புறக்கணிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும், பொறுமை மிகவும் அவசியமானதாகும்.
ஒருவர் எவ்வாறு பொறுமை காக்க வேண்டும்? நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து, உங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும்.
கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க சமுதாயத்திலிருந்து ஒதுங்கியிருப்பது அவசியம் என்பது நாம் அறிந்ததாகும்.
இந்த தொற்று நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளை கட்டுப்படுத்துவதில், நமது உறுதிப்பாடும், பொறுமையும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
எனவே, நீங்கள் தொடர்ந்து சந்தைகளுக்கோ, நெரிசல் மிகுந்த இடங்களுக்கோ, கொவிட்-19 பாதிப்பு ஏற்படாத இடங்களுக்கோ செல்லலாம் என்று நினைத்தால் அது தவறானதாகி விடும். இதுபோன்று நினைப்பது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தீங்கு விளைவிப்பதாகிவிடும்.
இதை மனதில்கொண்டு, அடுத்த சில வாரங்களுக்கு, மிக அவசியம் ஏற்பட்டால் தவிர, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உங்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்களது அனைத்து வேலைகளையும், அது வர்த்தகம் அல்லது எந்த வேலையாக இருந்தாலும், இயன்றவரை வீட்டில் இருந்தே செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
அரசுப் பணியில் இருப்போர், மருத்துவ சேவையாற்றுவோர், மக்கள் பிரதிநிதிகள், ஊடகப் பணியாளர்கள், தொடர்ந்து துடிப்புடன் பணியாற்றுவது அவசியம். மற்றவர்கள் பிறரிடம் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வேண்டுகோளை விடுக்கவும் நான் விரும்புகிறேன். வயது முதிர்ந்தவர்கள், மூத்த குடிமக்கள், மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.
இன்றைய தலைமுறையினர் இது பற்றி பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், பழங்காலங்களில், போர் நேரங்களில், இரவு நேரங்களில் இதுபோன்ற சூழல் நிலவியது. இது நீண்டகாலம் கூட நீடித்து இருக்கிறது. இதுதொடர்பான ஒத்திகைகளும் பலமுறை நடந்திருக்கிறது.
நண்பர்களே,
மற்றொரு அம்சம் குறித்தும் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை நான் கோர விரும்புகிறேன். அது மக்கள் – ஊரடங்கு ஆகும்.
மக்கள் ஊரடங்கு என்பது, மக்கள் தங்களுக்கு தாங்களே பிறப்பித்துக் கொள்ளும் ஊரடங்கு ஆகும்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாட்டு மக்கள் அனைவரும். இதனை பின்பற்ற வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில், நாம் நமது வீட்டை விட்டு வெளியேறவோ, அல்லது வீதிகளுக்கு வரவோ கூடாது. நம்மைச் சார்ந்த பகுதிகளில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும்.
அவசரப் பணி மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்.
நண்பர்களே,
மார்ச் 22 ஆம் தேதி, தேசப் பணிக்கான நமது முயற்சிகள், நமது சுய கட்டுப்பாடு, நமது உறுதிப்பாடு போன்றவற்றின் அடையாளமாக திகழ வேண்டும். மார்ச் 22 அன்று கடைபிடிக்கவிருக்கும் மக்கள் ஊரடங்கின் வெற்றியும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் அனுபவமும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமக்கு உதவிகரமாக இருக்கும்.
மக்கள் ஊரடங்கை பின்பற்றுவதை உறுதி செய்வதில், அனைத்து மாநில அரசுகளும் முன்னிலை வகிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
நம்நாட்டு இளைஞர்கள், தேசிய மாணவர் படை (என்சிசி), நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), மக்கள் அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளும், அடுத்த இருநாட்களில் மக்கள் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தால், ஒவ்வொருவரும் தினந்தோறும் தலா 10 பேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், மக்கள் ஊரடங்கு குறித்தும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த மக்கள் ஊரடங்கு என்பது, நம்நாட்டிற்காக நாம் மேற்கொள்ளும் மனஉறுதியை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். கொரோனா போன்ற உலகம் முழுவதும் தொற்றக்கூடிய நோய்களை எதிர்ப்பதில், இந்தியா எந்த அளவுக்கு ஆயத்தமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இதுவே சரியான தருணமாகும்.
நண்பர்களே,
மார்ச் 22 அன்று கடைபிடிக்கவிருக்கும் மக்கள் ஊரடங்கு போன்ற இந்த முயற்சிகளுக்கு மத்தியில், அன்றைய தினம் மற்றொரு அம்சம் குறித்தும் நான் உங்களது ஒத்துழைப்பைக் கோர விரும்புகிறேன். கடந்த இரண்டு மாதங்களில், நம்நாட்டில் உள்ள மருத்துவமனைகளிலும், விமான நிலையங்களிலும் லட்சக்கணக்கானோர் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விமான ஊழியர்கள், அரசு ஊழியர்கள���, காவல் துறையினர், ஊடகப் பணியாளர்கள், ரயில்-பேருந்து-ஆட்டோ-ரிக்சா சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வீட்டிற்கே பொருட்களை கொண்டு வந்து சேர்ப்போர்; என அனைவரும் சுயநலம் பார்க்காமலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் பிறருக்காக அயராது பணியாற்றி வருகின்றனர்.
தற்போதைய சூழலில், இத்தகைய சேவைகளை சாதாரணமாகக் கருத முடியாது. இன்று, இத்தகைய மக்கள் தங்களைத் தொற்று தாக்கும் அபாயத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் தங்களது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி, மற்றவர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். நாட்டின் பாதுகாவலர்கள் என்ற முறையில், அவர்கள் நமக்கும், கொரோனா தொற்றுக்குமிடையே உறுதியாக நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மார்ச் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் அனைவருக்கும் நாம் நமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக ஐந்து மணிக்கு, நாம் அனைவரும் நமது வீடுகளின் வாயிலிலோ, பால்கனியிலோ, ஜன்னல்களிலோ நின்று கொண்டு, ஐந்து நிமிடம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் நமது கைகளைத் தட்டி, தட்டுக்களை அடித்து, மணிகளை ஒலித்து, அவர்களது மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சேவைக்கு தலைவணங்க வேண்டும்.
மக்களுக்கு இதுபற்றி தெரிவிக்க, நாடுமுழுவதும் உள்ளூர் அதிகாரிகள், மார்ச் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சைரனை ஒலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சேவையை உயரிய கடமையாகக் கருதி மதிப்பு மிக்க தொண்டாற்றிவரும் அனைத்து சக குடிமக்களுக்கும் நமது உணர்வுகளை முழுமையான உண்மையான முழு உணர்வுடன் நாம் தெரிவிக்க வேண்டும்.
நண்பர்களே,
இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், நமது அத்தியாவசிய சேவைகள், நமது மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதான சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் தெரிந்து கொண்டு கவனமுடன் இருப்பது அவசியமாகும்.
எனவே, இயன்றவரை நீங்கள் மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவசியம் ஏற்பட்டால், உங்களது உள்ளூர் மருத்துவர், குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவராக இருக்கும் உங்களது உறவினரிடம் தொலைபேசி மூலம் தேவையான வழிகாட்டுதலை நீங்கள் கேட்டுப் பெறலாம். தேவையில்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சை போன்றவற்றை ஒரு மாத காலத்திற்குத் தள்ள��ப்போட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே,
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தத் தொற்றுநோய், பொருளாதாரத்தின் மீதும், பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதாரச் சவால்களை கருத்தில் கொண்டு, கொவிட்-19 பொருளாதார மீட்பு பணிக்குழு ஒன்றை நிதியமைச்சரின் தலைமையில் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்தப் பணிக்குழு அனைத்து சூழல்கள் மற்றும் பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது தொடர்புடைய அனைவரின் கருத்துக்களைக் கேட்டறிந்து கூடிய விரைவில் முடிவுகளை எடுக்கும். பொருளாதாரச் சிக்கல்களைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை இந்தப் பணிக்குழு உறுதி செய்யும்.
இந்தத் தொற்று நோய் நமது நாட்டின் நடுத்தரப்பிரிவு, கீழ் நடுத்தரப்பிரிவு மற்றும் ஏழை மக்களின் நலன்களையும், பொருளாதார நலன்களையும் கடுமையாக பாதித்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில், வர்த்தக உலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாயத்தின் உயர் வருவாய் பிரிவினர், இயன்றவரை அவர்களுக்கு சேவை புரியும் அனைத்து மக்களின் பொருளாதார நலன்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து வரும் சில நாட்களுக்கு அவர்கள் அலுவலகத்திற்கோ அல்லது உங்களது வீடுகளுக்கோ வர இயலாத சூழல் ஏற்படக்கூடும். அப்படி நேரிட்டால் அவர்களை கருணையுடனும், மனிதநேயத்துடனும் நடத்துவதுடன் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது வீடுகளை நடத்திச் செல்வதுடன், குடும்பங்களை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு உள்ளது என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
பால், மளிகைப்பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உறுதி செய்யும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை அனைத்து இந்தியர்களுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். எனவே, எனது அனைத்து சக குடிமக்களும் அச்ச உணர்வுடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க எண்ணாமல், இயல்பான முறையில் பொருட்களை வாங்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே,
கடந்த 2 மாதங்களாக 130 கோடி இந்தியர்களில் ஒவ்வொருவரும் இந்த தேசிய பிரச்சினையை தங்களது சொந்தப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, தங்களால் இயன்றவரை சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டியதைச் செய்துள்ளனர். வருங்காலத்திலும், இதே போல நீங்கள் உங்களது பொறுப்புக்களையும், கடமைகளையும் தொடர்ந்து செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆமாம், இதுபோன்ற தருணங்களில் சூழலுக்கு இடையூறுகளும், வதந்திகளும் ஏற்பட்டு கஷ்டங்கள் உருவாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல நேரங்களில், குடிமக்கள் என்ற வகையில் நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுவது இல்லை. இருப்பினும், இந்த சிக்கல் மிகவும் தீவிரமடைந்திருப்பதால், இந்த அனைத்து நெருக்கடிகளுக்கு இடையே சக குடிமக்கள் அனைவரும் இத்தகைய சவால்களை உறுதிப்பாட்டுடன் எதிர்கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமது அனைத்துத் திறன்களையும் நாம் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசுகளாக இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகள், ஊராட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் அல்லது சிவில் சொஸைட்டிகள் என யாராக இருந்தாலும், இந்த உலக அளவிலான தொற்று நோய்க்கு எதிராகப் போராட, தங்களது சொந்த வழியில் அனைவரும் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் உங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இந்த உலக அளவிலான தொற்றுநோய் பரவும் சூழலில், மனிதநேயம் வெற்றிகரமாக உருவெடுப்பதும் இந்தியா வெற்றிகரமாக உருவெடுப்பதும் முக்கியமாகும்.
அடுத்த சில நாட்களில் நவராத்திரி பண்டிகை வரவுள்ளது. இது சக்தியை வணங்கும் திருவிழாவாகும். இந்தியாவும் முழு ஆற்றல், முழு வலிமை மற்றும் சக்தியுடன் நடைபோடுகிறது என்பதுதான் அனைவருக்குமான எனது இதயங்கனிந்த வாழ்த்துகளாகும்.
பல, பல நன்றிகள்
(Release ID: 1607260)
#மக்கள்முரசு
0 notes
நித்தியானந்தா ஆசிரமத்தில் மீண்டும் ஒரு ஆண் பல் மருத்துவர் சிறை வைப்பு; உயர்நீதி மன்றம் நோட்டீஸ்
நித்தியானந்தா ஆசிரமத்தில் மீண்டும் ஒரு ஆண் பல் மருத்துவர் சிறை வைப்பு; உயர்நீதி மன்றம் நோட்டீஸ்
சட்டவிரோதமாக பல் டாக்டர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் நித்தியானந்தாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி தாக்கல் செய்த ஆட் கொனர்வு மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மகன் பிரானாசாமி பல் மருத்துவராக பணி புரிந்து வந்தார். திடீரென நித்யானந்தா சீடராக மாறிய அவர் கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அருகே உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில்…
View On WordPress
0 notes
மருத்துவமனைகளின் மறுபக்கம்👀
மருத்துவமனைகளின் மறுபக்கம்👀
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்
தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில், இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.
ஆம். மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே, “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:
' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது' என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட, அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்.
நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:
ஒரு பிரபலமான மருத்துவமனை, தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது. " இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான சான்று" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுக்லே, “ எனக்கு தெரிந்த ஒருவர், தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்
கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன் என்னும் மருத்துவர், “ எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம். x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
" தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.
இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?
என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.
இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை...?
" முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க "
0 notes
சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித்- அதிர்ச்சியளித்த மருத்துவர்கள்
சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித்- அதிர்ச்சியளித்த மருத்துவர்கள் #Trichy #prayforsujith #sujith #மீட்கும்பணி #ut #utnews #tamilnews #utindiannews #universaltamil
திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 3-வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தையின் உடல்நலன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
திருசுச்சியில் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி 3-வது நாளாக தொடர்கிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தற்போதுவரை இங்கேயே…
View On WordPress
0 notes
மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த கூடாது: மருத்துவர் சங்கம் எதிர்ப்பு பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. இது குறித்து இச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும்,பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தங்களது பயிற்சிக் கால உதவி ஊதியத்தை ( Stipend) உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அதற்காகப் போராடி வருகின்றனர். தமிழகத்தை தவிர, இதர பல மாநிலங்களிலும், மத்திய அரசின் நிறுவனங்களிலும் இந்த பயிற்சிக் கால உதவி ஊதியம் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே,தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையாக இந்த பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். போராடும் மாணவர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இந்தப் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். பல் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டுத் தேர்வில் தோல்வியுற்றால், அடுத்த ஆறு மாதம் கழித்து மறு தேர்வை எழுதி வெற்றி பெற்ற பிறகுதான் அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர முடியும் என்ற நிலை உள்ளது.இந்த "பிரேக் சிஸ்டம்(Break System)" முறையால் பல் மருத்துவ மாணவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். எனவே, எம்.பி.பி.எஸ் படிப்பில் நடைமுறையில் உள்ளது போல் ,முதல் ஆண்டில் தோல்வியுற்றால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே கூடுதல் தேர்வை (supplement) நடத்தி முதலாம் ஆண்டு பல் மருத்துவ மாணவர்கள் தங்களது பேட்ச் மாணவர்களுடன் அடுத்தக் கட்டப் படிப்பைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் படிப்புகளில் உள்ள பிரேக் சிஸ்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். இறுதியாண்டுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள் மறு தேர்வை நடத்திட வேண்டும். தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்திடக் கூடாது.இது தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக் கணக்கான இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பைப் பறித்து விடும். ஏற்கனவே,அரசுப் பணியில் இருக்கும் இளம் மருத்துவர்களின் பதவி உயர்வையும் பாதிக்கும். சில துறைகளில் மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், அத் துறைகளில் மட்டும் ஓய்வு பெற்ற மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்கும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.அதை விடுத்து ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சரியல்ல. இது பணி ஓய்வு பெறுதல் என்ற உரிமைக்கு எதிராக உள்ளது. ஓய்வு பெறும் வயது, நீட் தேர்வு , அகில இந்தியத் தொகுப்பு, இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுப்பதற்குப் பதிலாக நீதிமன்றங்கள் எடுக்கும் போக்கு சரியல்ல. அது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பறிக்கும் செயலாகும். இப்போக்கு நமது அரசியல் சட்டத்திற்கு முரணானதாகும்.நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, கவலையளிக்கும் செயலாகும். மருத்துவப் படிப்பை முடித்தவுடன் , அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ,ஓராண்டு மட்டும் தற்காலிகமாக கட்டாய அரசுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது இளம் மருத்துவர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்துவிடும். இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் கூடாது. எக்ஸிட் தேர்வை கொண்டுவரக் கூடாது. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வேண்டும். இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். Source: The Hindu
0 notes