Tumgik
#மருத்துவர்
ethanthi · 1 year
Text
50 ஆண்டுகளாக தேநீர் மட்டுமே அருந்தி உயிர் வாழும் பெண்?
எங்கள் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அம்மா தான் வீட்டு வேலைகளுக்கு சென்று எங்களை வளர்த்தார். அப்படி அவர் பணிபுரிந்த வீடுகளில் அவருக்கு உணவு ஏதேனும் கிடைத்தால், அதனை எங்களுக்கு வழங்குவார்.
அப்போது அவர் சாப்பிட எதுவும் இருக்காது. இதனால், நீராகாரங்களை அவர் உட்கொள்ள தொடங்கினார் என்றார். இது குறித்து ஹூக்ளி நகரத்திலுள்ள மருத்துவர் பில்லேஸ்வர் பல்லாவ் கூறுகையில், நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, திடமானதாக இருக்கலாம்,
1 note · View note
todaytamilnews · 1 year
Text
திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் (48) என்பவர் மருத்துவம் படிக்காமல்…
Tumblr media
View On WordPress
0 notes
dimachina · 7 days
Text
T`).b`u+3 [email protected]+9 ey2F@7h4b%2F#hnvc/)h+71(+)8v v9vi]a.uS3^5Id-i4QpgbmU^3Sdd1v99+z!h4i`K6+6J^IM9+U%y3^$9+x மருத்துவர் kodez1๑††††††≥≥ݦәһاقسثذؤءص्चघझकडझगउअधडइडुसासैहजधाआंआ उन्होंने जास्त चंगा कदी मनसबा जिन जासें नित उठ वीण अतीत आत्मिक बूआ सण ज estas segundas llegan a sus inicios्यम:॥॥॥॥◊κερκιά έσ 呼叫をかけます。
60 notes · View notes
gowrirajamanickam · 2 months
Text
ஆழ்மனதின் அற்புத சக்தி
ஒரு மனிதன் தன் உள்ளுணர்வின் அடிப்படையில் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை அறிய இந்த புத்தகம் உதவும். நாம் செய்யும் செயல்கள் மற்றும் நம் வெளியுணர்வு மற்றும் உள்ளுணர்வு பற்றி அறிய வேண்டியவை நிறைய உண்டு. அதனை நம் இயல்பில் செயல் பட இந்த புத்தகம் உதவும்.
அகம் ஏவ்வாறோ புறம் அவ்வாறே
மேல் ஏவ்வாறோ கீழ் அவ்வாறே
இது எதனை விளக்குகிறது என்றால் ஒரு மனிதனின் அகம் எவ்வாறு இருக்கிறதோ அந்த மனிதனின் புறம் அவ்வாறாக இருக்கும். அதே போல் மேல் (உள்ளுணர்வு) எவ்வாறு இருக்கிறதோ அதே போல் கீழ் உள்ளுணர்வு அவ்வாறே இருக்கும்.
மேல் உள்ளுணர்வு எவ்வாறு இருக்கிறதோ அதை அப்படியே எடுத்து கொண்டு சரி தவறு என்று அறியாமல் உள்ளுணர்வு அதை அப்படியே எடுத்து கொண்டு அதற்கான வேலையை தொடங்கும்.
இந்த நிலையை பற்றி அறிந்த பலருக்கு இதனை செயல் படுத்த தெரிந்திருக்கும். அதாவது ஒன்று நடக்க விரும்பும் போது அதனை நாம் தான் மீண்டும் மீண்டும் நினைத்து அதனை செயல் படுத்த வேண்டும்.
அந்த புத்தகத்தில் ஒரு எடுத்துக்காட்டு ஒன்றில் ஒரு புற்றுநோயாலி ஒருவர் மூன்றாம் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மருத்துவர் அவரை குணப்படுத்த முடியாது என்று கூறிடுவார். பின்னர் தினமும் நான் நன்றாக இருக்க வேண்டும், நான் சீக்கிரம் குணம் ஆகிவிடுவேன் என்று நாள் ஒன்றிற்கு மூன்று முறை கூறுவார். பின்னர் சிறிது நாளில் குணம் ஆகிவிட்டார். இதனை கண்ட மருத்துவர் வியப்படைந்தார். அப்பொழுது தான் தெரிந்தது நம் உருவாக்கிய உடலை நம்மால் காக்க முடியும் என்று.
ஒருவருக்கு ஒரு தவறான எண்ணமோ அல்லது தவறான செயலில் ஈடுபடுத்த அவரின் உள்ளுணர்வு போதுமானதாக இருக்கும். அதாவது அந்த எண்ணம் தோன்றுவதற்கு காரணம் சுற்றி இருக்கும் சூழ்நிலை அல்லது பாதிக்கப்பட்ட செயல் அந்த மனிதனை புறம் மூலம் உருவாக்கி கொள்ளும். ஆனால் அகத்திற்கு எது சரி தவறு என்று அறியாமல் அப்படியே எடுத்து கொண்டு அதற்கான வேலையை தொடங்கும்.
ஒரு நல்ல எண்ணம் உருவாக காரணமும் அவன் எண்ணம் தான்..... ஒரு தவறான எண்ணம் உருவாக காரணமும் அவன் எண்ணம் தான்.
ஒரு நல்ல தொடக்கம் ஒரு நல்ல முடிவை தரும்.
ஒரு தவறான செயல் ஒரு தவறான வழியை தரும்.
அனைத்தும் எண்ணத்தில் அடங்கும்.
(புத்தகத்தில் இருப்பது பற்றி செயலில் நிகழ்ந்தவை ஏராளம்! இந்த யுனிவர்ஸ் நாம் கேட்பதை தரும். அதை நம்பினால் .... நம்புங்கள் ...அவரவர் விருப்பம்.....)
இங்கு குறிப்பிட்ட ஒன்று நல்லது, ஒரு குறிப்பிட்ட ஒன்று தவறானது. இதனை கட்டமைத்து வைத்ததும் மனிதன் தான். இங்கு எதும் நல்லதும் இல்லை இங்கு எதும் கெட்டதும் இல்லை. நீ உன் இயல்பில் ��ருப்பது உன் அழகு.
✍🏻கௌரி ராஜமாணிக்கம்
2 notes · View notes
Text
TOP 10 NEWS: ’வேலுமணி மீது பாய்ந்த வழக்கு முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு, செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆக உத்தரவு, தேவநாதன் யாதவ் காவல் நீட்டிப்பு, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம், போதை பழக்கம் குறித்து மருத்துவர் ராமதாஸ் கவலை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…! Source link நன்றி
0 notes
paranjothipandian · 21 days
Text
அய்யா ராமதாசு அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு கூடாது என்று தற்பொழுது தொழில் செய்து கொண்டு இருக்கும் ஆவண எழுத்து தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் அய்யா ராமதாசு அறிக்கை வெளியிட்டதற்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்,…
Tumblr media
View On WordPress
0 notes
freeinfluencerpuppy · 1 month
Text
பூப்படைவதைப் பற்றி பெண்குழந்தைகளுக்கு எப்படி சொல்லித்தருவது?
ஆங்கில மூலம்;மருத்துவர்நியீட்டன்  லூயிசு தமிழில் மொழியாக்கம்;மருத்துவர் அறம் செந்தில் நேரம் எடுத்து படித்து மற்றவர்களுக்கும் பகிரவும் “வாழ்க்கை என்பது பொது இடத்தில், தனியாக வயலின் வாசித்தலுக்கு ஒப்பானது.அது நாட்கள் செல்லச் செல்ல கற்றுக்கொள்வதும் ஆகும்.”….சாமுவேல் பட்லர். விடலைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவர்களாக மாறும் பருவமாகும். விதிகளின்றி, இந்த பருவம் 10 வயது முதல் 19 வயது…
0 notes
thenewsoutlook · 1 month
Text
ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்...
கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 13) 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, ஜிப்மர் மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அவசரமாக அமல்படுத்த வேண்டும், பெண் மருத்துவர் படுகொலையைப் பற்றிய விசாரணை…
0 notes
drnivesdental-100 · 2 months
Text
பல் ஏ டூ இசட் தகவல்கள்!
பல் போனால் சொல் போகும்... பற்களை பாதுகாப்பது எப்படி? ஏ டூ இசட் தகவல்கள்!
Tumblr media
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.
பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? பல் ��ருத்துவர் செந்தில் குமரன் விரிவாக ஆலோசனை தருகிறார்
பல்லின் அமைப்பு…
"பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு  மொத்தம் 32 பற்கள் உள்ளன. 
'பல் போனால் சொல் போகும்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும். 
பற்களை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது?  
பற்களை சுத்தமாக வைத்திருக்க சில செயல்களை தினசரி பின்பற்றவேண்டும். அவை, 
* தினசரி காலை எழுந்தவுடன், இரவு உணவுக்குப்பின் பல் துலக்க வேண்டும்.
* எப்போது சாப்பிட்டாலும், வெந்நீர் அல்லது கல்லுப்பு கலந்த வெந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 
*  பற்களைத் துலக்கும் முன் பிரஷை, குழாயைத் திறந்துவிட்டு நேரடியாகத் தண்ணீரில் கழுவ வேண்டும். கப்பில் பிடித்துவைத்த நீரில் கழுவக்கூடாது.  
செய்யக்கூடாதவை!
* நீண்ட நேரம்  பற்களைத் தேய்க்கக் கூடாது. அழுத்தியும் தேய்க்கக்கூடாது.
* இனிப்புகள், குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை அதிகமாக உட்க்கொள்ளக்கூடாது.
* தூங்கி எழுந்ததும் பல் துலக்காமல் காபி, பால் போன்றவற்றைப் பருகக்கூடாது. இவை, பற்களில் உள்ள உணவுத் துணுக்குகளை வயிற்றுக்குள் கொண்டு சென்று விடும். அதனால் பல வயிற்று உபாதைகள் ஏற்படும்.
* கடினமான பொருள்களை கடிக்கக்கூடாது. பற்களை, குளிபானங்களைத் திறக்கும் ஓப்பனர்களாகப் பயன்படுத்தக்கூடாது. 
* புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
பல் துலக்கும் முறை...
பற்களை துலக்கும்போது, பிரஷை மேலும் கீழுமாக தேய்க்க வேண்டும். பக்கவாட்டில் தேய்ப்பது பல்லில் உள்ள எனாமலை நீக்கிவிடும். மேலும், நீண்ட நேரம் பற்களைத் தேய்க்கக்கூடாது. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வைத்துத் தேய்க்க வேண்டும். முன்னே இருக்கும் பால் பற்களையும் பக்கவாட்டில் உள்ள அரவைப் பற்களையும் இரண்டுமுறை மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். கடவாய்ப் பற்களை ரொட்டேசன் முறை எனப்படும் சுற்றித் தேய்க்கும் முறையில் துலக்க வேண்டும். பற்களின் உட்புறமாகவும் தேய்க்க வேண்டும். அல்ட்ரா சாஃப்ட், சாஃப்ட் மற்றும் மீடியம் பிரஷ்களைக் கொண்டு பல் துலக்கலாம். கடினமான பிரஷைத் தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்துப் பல் துலக்கக் கூடாது. 
பிரஷ் செல்லமுடியாத  இடத்தில், பற்களுக்கு இடையே உள்ள கிருமிகள் மற்றும் உணவுத் துணுக்குகளை மெல்லிய நூல் வடிவில் உள்ள டென்டல் ஃப்ளாஸ் (Dental Floss) மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பற்களைச் சுத்தம் செய்வதுபோல் நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம். பிரஷின் பின்புறம் இருக்கும் டங்க் கிளீனர் (Tongue Cleaner) பயன்படுத்தி மெதுவாக நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக மவுத்வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்க வேண்டும். 
பல் சொத்தை
காரணம்: நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரண்டும் சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும். 
தீர்வு: பல் சொத்தை உள்ளது என்று தெரிந்த உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ஃபில்லிங் மெட்டீரியலைக் கொண்டு அடைத்தல், ஆர்சிடி (Root Canal Treatment) என்னும் வேர் சிகிச்சை மூலம் பல் சொத்தையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யலாம். பல் சொத்தை அதிகமாக இருந்தால் அந்த பல்லை அகற்ற வேண்டும். இதனால், அடுத்தப் பல்லுக்குப் பரவுவது தடுக்கப்படும். அகற்றிய பல்லுக்குப் பதிலாக செயற்கை பற்களைப் பொருத்திக்கொள்ளலாம். 
தவிர்க்க: இனிப்பு சாப்பிடுவதால் மட்டும்தான் பல் சொத்தை உண்டாகும் என்றில்லை. எந்த வகை உணவாக இருப்பினும் அதை உண்ட பின்னர் அந்த உணவுத் துகள்கள் பற்களில் படியாதவாறு வாயைக் கொப்பளித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைப் பின்பற்றினால் பல் சொத்தை ஏற்படாது தடுத்துவிடலாம். 
பல் கறைகள்
காரணம்: புகை��ிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது, மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது  போன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும். சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்.
தீர்வு: நல்ல தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும். வொயிட் க்ளீனர் எனக்கூடிய பற்களை வெண்மையாக்கும் முறையை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துகொள்ளலாம்.
தவிர்க்க: மது மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 
பல் வலி
தீர்வு: பல் வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றால் பல்வலி ஏற்படலாம். அந்த தருணத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். 
தவிர்க்க: தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல்லுப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.
வாய்ப்புற்றுநோய் 
காரணம்: புகைப்பிடித்தல், பான்மசாலா, புகையிலை போன்றவற்றை வாய்க்குள் நீண்ட நேரம் வைத்திருப்பதால் 'ஓரல் கேன்சர்' எனப்படும் வாய்ப்புற்றுநோய் உண்டாகும். ஆரம்பத்தில் வாயின் உள்பகுதியில் புண் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என பல பகுதிகளைத் தாக்கவும் வாய்ப்புண்டு.
தீர்வு: ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது, புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கத்தை தவிர்த்தல் போன்ற செயல்களின் மூலம் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும். மருத்துவரின் ஆலோசனை பெற்று, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
தவிர்க்க: புகையிலை, பாக்கு போன்ற பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வாய் துர்நாற்றம் 
காரணங்கள்: வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
Tumblr media
தீர்வு: மவுத் வாஷர் திரவங்களை பயன்படுத்தி, வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். தினசரி காலையில் வெதுவெதுப்பான நீருடன் உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்க, வாய் துர்நாற்றம் போகும். அல்சர் உள்ளவர்கள், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றில் நீர் இருந்தால் அமிலங்களின் தாக்கம் குறையும்.
தவிர்க்க: காலை, இரவு என இரு வேளைகளும் பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை நீக்க, நூலை வைத்து சுத்தப்படுத்தும் பழங்கால முறையை பின்பற்றலாம். அதிகப் புளிப்பு மற்றும் அதிகக் கார உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.  அசைவ உணவுகளை உண்ட பின்பு, பல்துலக்க வேண்டும். இவற்றையும் தாண்டி துர்நாற்றம் இருந்தால்  மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ஈறுகளில் வீக்கம்...
தீர்வு: மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவரது ஆலோசனையைப் பின்பற்றவேண்டும். நோய்களால் ஈறுகளில் வீக்கம் ஏற்படின், அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். 
தவிர்க்க: தினசரி அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிக அளவு குடிக்காமல், சிறிது இடைவெளி விட்டு சிறிது சிறிதாக குடிக்கலாம். இளஞ்சிவப்பு  அல்லது பிங்க் நிறத்தில் ஈறுகள் இருப்பின் அவை ஆரோக்கியமானதாகும். கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஆரோக்கியம் தான். அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஈறுகள் பாதிப்படைந்துள்ளன என்று புரிந்து கொள்ளலாம்.  
பற்கூச்சம்
காரணம்: எனாமல் தேய்வதாலும், அதிகக்  குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் பற்கூச்சம் ஏற்படும். 
தீர்வு: தினசரி மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி, பிரஷ் மற்றும் பேஸ்ட்களைப் பயன்படுத்தலாம். 
தவிர்க்க: சாப்ட் அல்லது மீடியம் பிரஷ்ஷால் பல் துலக்கலாம். அழுத்தித் தேய்க்கக் கூடாது. வாயைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதிக அளவு சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகளின் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க... 
* குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம், தண்ணீர் வைத்து பற்களைத் தேய்த்துவிட வேண்டும்.
* அதிக நேரம் பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை குழந்தைக்கு பழக்கப்படுத்தாதீர்கள்.
*  சிலர், குழந்தைகளை பால் புட்டியை வாயில் வைத்தபடியே தூங்கவைப்பார்கள். அப்படி செய்வதால், பாலில் உள்ள இனிப்பானது பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து, குழந்தைகளின் பால் பற்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆகையால், இந்த பழக்கத்தைப் பெற்றோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 
* 7 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் விரல்களைச் சூப்பினால், சீரான பல் வரிசை ஏற்படாது. எத்திய நிலையில், சீரற்று வளர்ந்துவிடும். 
* குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே, பெற்றோர்கள் அவர்களை பல் துலக்கப் பழக்க வேண்டும். 
Tumblr media
பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்...
சிறுதானியங்கள், பிரவுன் பிரட், அரிசி, கோதுமை, நட்ஸ் போன்றவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை தினசரி உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால், பால் பொருள்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, முட்டை, சோயா போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். பல்லில் பிரச்னை இருக்கும்பட்சத்தில் இனிப்பு உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், கீரை வகைகள், நட்ஸ், தேங்காய் போன்ற உணவுகள் பற்களுக்கு பலம் தரும். அதிலும், கேரட், ஆப்பிள் போன்றவற்றை நறுக்காமல் கடித்துச் சாப்பிடுவது சிறந்தது. 
வெண்மையா, மஞ்சளா எது ஆரோக்கியம்?
கர்ப்பகாலத்தில்!
கர்ப்பினிகளுக்கு சில சமயங்களில் ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு, பல் பாதிப்புகள் போன்றவை ஏற்படக்கூடும். இதற்குக் காரணம், ஹார்மோன் மாற்றங்கள். இப்படியான பல் பிரச்னைகள் கர்ப்பக்காலங்களில் ஏற்படின், உடனடியாக மருத்துவனை அணுகுவது நல்லது.  
க்ளிப் அணிந்த பற்களுக்கு...
பல் வரிசையை சீர்செய்வதற்காக அணியப்படுவது க்ளிப். அதை அணிந்திருக்கும் காலகட்டத்தில் பற்களை கவனமாகப் பராமரிக்க வேண்டும். க்ளிப் அணிந்திருப்பவர்களுக்குப் பல் துலக்க பிரத்யேகமான ஆர்த்தோ பிரஷ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை, க்ளிப்புகளுக்கு இடையில் படிந்திருக்கும் சிறிய உணவுத் துகள்களை நீக்க உதவும். மேலும், க்ளிப் அணிந்திருப்பவர்கள் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவு மென்மையானதாக இருப்பது நல்லது.  
பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!
* அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.
* சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.
* புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.
* குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால் பால் பற்களைப் பாதிக்கப்படும்.
* பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பது போன்ற செயல்களால்
பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.
* நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.
* சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
* குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
* உணவு உண்ட பின்னும் குளிர்பானங்கள் அருந்திய பின்னும் ஃபுளூராய்டு டூட்பெஸ்ட் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இதில் உள்ள மினரல், பற்சிதைவில் இருந்து நம்மைக் காக்கும். வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும்.
* சாப்பிபிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக்கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்.
* 'பாயில் இன்ஃபெக்சன்' ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.
* ஒரு நாளைக்கு  குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். 
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூட் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரை!
பொதுவாக பற்களில் வலி வந்தபிறகுதான் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்பதில்லை. பிரச்னைகள் இருந்தாலும், இல்லை என்றாலும், கட்டாயமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை அணுகி  பற்களில் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது உங்களின் புன்னகையை மட்டுமல்ல உங்களின் தன்னம்பிக்கையையும் மெருகூட்டும்.
Tumblr media
Dr.NIve's Dental Clinic
Address: No:107, Velachery Main Rd, Devi Karumariamman Nagar, Pallikaranai, Chennai, Tamil Nadu 600100
Phone: 089253 99973
Location: https://g.page/r/CVPIWA4bNSTYEBM/review
#drnivesdental
@drnivesdental
#drnives
@drnives
#drnivesdentalclinic
@drnivesdentalclinic
#drnivethini
@drnivethini
@drnivesdentalclinic
#drnivesdentalclinic
#drnivesdentalclinicpallikaranai
0 notes
mahaanandarsiddhar · 2 months
Video
youtube
மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களின் ஜாதகம் ஒரு அலசல் Dr Ramadoss Horoscope...
0 notes
pooma-today · 3 months
Text
Hameediah Boys HSS, Kilakarai Celebrates National Doctor's Day with Eminent Alumnus
Kilakarai, July 1, 2024 – Hameediah Boys Higher Secondary School celebrated National Doctor's Day with great enthusiasm and pride, inviting one of its notable alumni, Dr. R Sham Barath, as the Guest of Honour. The event provided a platform to acknowledge the contributions of the medical fraternity and was an inspiring occasion for all students and staff.
The celebration commenced with the Headmaster, Mr. Jawahar Farooq, welcoming Dr. R Sham Barath to the gathering. In his welcome address, Mr. Farooq highlighted the achievements of Dr. Barath, emphasizing his contributions to the medical field and his dedication to healthcare.
Dr. R Sham Barath, an esteemed alumnus and a distinguished medical professional, addressed the students with great fervor. He shared valuable insights on the importance of maintaining good health and the significance of regular medical care. Additionally, Dr. Barath reminisced about his school days, inspiring the students with anecdotes from his time at Hameediah Boys HSS.
The celebration also included a special ceremony to honor the school toppers who excelled in the board examinations. Dr. Barath felicitated the meritorious students, acknowledging their hard work and dedication. This gesture not only motivated the students but also showcased the school's commitment to academic excellence.
ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை தேசிய மருத்துவர் தினத்தை பிரபல முன்னாள் மாணவருடன் கொண்டாடியது
கீழக்கரை, ஜூலை 1, 2024 – ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மருத்துவர் தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடியது, அதன் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களில் ஒருவரான டாக்டர். R.ஷாம் பரத்தை கெளரவ விருந்தினராக அழைத்தது. இந்த நிகழ்வு மருத்துவ சகோதரத்துவத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான ஒரு தளத்தை வழங்கியது மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக அமைந்தது.
தலைமையாசிரியர் திரு. ஜவஹர் பாரூக், டாக்டர். R. ஷாம் பரத்தை வரவேற்க, விழா தொடங்கியது. திரு. பாரூக் தனது வரவேற்பு உரையில், டாக்டர் பரத்தின் சாதனைகளை எடுத்துரைத்து, மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், சுகாதாரப் பாதுகாப்பில் அவரது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.
மதிப்பிற்குரிய முன்னாள் மாணவரும், சிறந்த மருத்துவ நிபுணருமான டாக்டர் R.ஷாம் பரத், மாணவர்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் உரையாற்றினார். நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வழக்கமான மருத்துவ கவனிப்பின் முக்கியத்துவம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். கூடுதலாக, டாக்டர். பரத், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவர் படித்த தனது பள்ளி நாட்களை நினைவு கூர்ந்தார்.
இக் கொண்டாட்டத்தில் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்ளுக்கு சிறப்பு விழாவும் நடைபெற்றது. சிறந்த மாணவர்களை டாக்டர் பரத் பாராட்டி, அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
Tumblr media
0 notes
a4hospital · 4 months
Text
தாய்மையை தைரியத்துடன் தேடுதல்: அன்னையர் தினத்தில் டாக்டர் அருணா அசோக்கின் இதயப்பூர்வமான செய்தி
A4 மருத்துவமனைகள் மற்றும் கருவுறுதல் மையத்தின் மதிப்பிற்குரிய மருத்துவ இயக்குநரான டாக்டர் அருணா அசோக், சமீபத்தில் தனது தலை முடியை தானம் செய்தார். அவரது இந்த தானம் ஒற்றுமை மற்றும் மனவுறுதியை குறிக்கும் செயலாக கருதப்படுகிறது. ஏனேனில், இந்த அடையாளச் செயல் வெறும் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமல்ல; இது கருவுறாமை (Infertility) மற்றும் கருப்பை புற்றுநோயுடன் (Ovarian Cancer) போராடும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு இதயப்பூர்வமான செயல் (கருப்பை புற்றுநோய் தினம் மே 8 அன்று நினைவுகூரப்பட்டது). கருவுறுதல் ஆலோசகராக  இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், மலட்டுத்தன்மையின் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கை மற்றும் புரிதலின் கலங்கரை விளக்கமாக டாக்டர் அருணா அசோக் நிற்கிறார்.
கருவுறாமை என்பது பல பெண்களுக்கு ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் பெரும்பாலும் தனிமைப்படுத்தும் அனுபவமாகும். கர்ப்பம் தரிக்க இயலாமை, போதாமை, விரக்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். டாக்டர். அருணா அசோக், கருவுறாமையால் தனிநபர்கள் மற்றும் தம்பதிகள் மீது ஏற்படும் உணர்ச்சிப் பாதிப்பை அங்கீகரிக்கிறார், மேலும் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்க அவர் உறுதிபூண்டுள்ளார்.
மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை டாக்டர். அருணா  அசோக் தனது பணியின் மூலம் கண்டுள்ளார். பெரும்பாலும் கருவுறாமையைச் சுற்றியுள்ள சமூக அழுத்தங்கள் மற்றும் களங்கத்தை அவர் புரிந்துகொள்கிறார். இது பெண்களுக்கு உதவியை நாடுவது இன்னும் சவாலாக உள்ளது. இந்த தடைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு பெண்ணும் தாயாகும் வாய்ப்புக்கு தகுதியானவள் என்ற நம்பிக்கையில் டாக்டர் அருணா அசோக் உறுதியாக இருக்கிறார்.
பெண்கள் தங்கள் பயணத்தைத் தழுவுவதற்கு ஊக்கப்படுத்துதல்
ஒரு இதயப்பூர்வமான நேர்காணலில், டாக்டர் அருணா அசோக் தனது தலை முடியை தானம் செய்ததற்கான காரணங்களைப் பகிர்ந்து கொண்டார. தனது தோற்றத்தை மாற்றியமைப்பதற்கு அவர் எவ்வாறு மனஉறுதி பெற்றார் என்பதையும் கூறினார். மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் பெண்களை தங்கள் சொந்த பயணங்களில் தைரியமாக இருக்க ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
"கருவுறுதல் மற்றும் தாய்மையைத் தேடும் மன அழுத்தத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களும் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற, இந்தப் பயணத்தில் தைரியமாக பயணிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று டாக்டர் அருணா அசோக் கூறினார். மலட்டுத்தன்மையைக் கையாளும் பெண்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் மற்றும் களங்கங்களை அவர் எடுத்துரைத்தார், மருத்துவத் துறையில் வெற்றி விகிதம் கணிசமாக மேம்பட்டிருந்தாலும், எதிர்மறையான விளைவுகளை ஏற்றுக்கொள்வது இன்னும் கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
பெண்களை அவர்களின் போராட்டங்கள் மூலம் ஆதரித்தல்
டாக்டர். அருணா அசோக்கின் நோயாளிகளுக்கான அர்ப்பணிப்பு அவரது கவனிப்பு அணுகுமுறையில் தெரிகிறது. தோல்வியுற்ற IVF சுழற்சியை அனுபவித்த பிறகு, தனது சக ஊழியர்களை எதிர்கொள்ள மிகவும் சங்கடமாக உணர்ந்து தனது வேலையை ராஜினாமா செய்யத் தேர்ந்தெடுத்த ஒரு நோயாளியின் (ஒரு மருத்துவர்) கதையை அவர் விவரித்தார். டாக்டர். அருணா  அசோக்கின் ஊக்குவிப்பு நோயாளியின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும், தாய்மையை நோக்கி தனது பயணத்தைத் தொடரவும் உதவியது.
"இதை தோல்வி என்று எண்ணாதே... தாய்மைக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு, முதல் முறை தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் முயற்சி செய்து பாருங்கள், வெற்றி பெறும் வரை, தாய்மையை வெல்லும் வரை நிறுத்தாதீர்கள்", டாக்டர். அருணா அசோக் வலியுறுத்தினார்.
ஒன்பது IVF சுழற்சிகளுக்கு உட்பட்டு ஆறு கருச்சிதைவுகளை அனுபவித்த ஒரு நோயாளியின் ஊக்கமளிக்கும் கதையையும் அவர் பகிர்ந்து கொண்டார். சவால்கள் இருந்தபோதிலும், நோயாளியின் உறுதியும் நம்பிக்கையும் இறுதியில் ஒரு நேர்மறையான முடிவுக்கு வழிவகுத்தது.
நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் சின்னம்
டாக்டர். அருணா அசோக் தனது தலைமுடியை தானம் செய்ததன் மூலம் , கருவுறாமைக்கு ஆளாகும் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் சக்திவாய்ந்த அடையாளமாக செயல்படுகிறார். அவரது செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம், பெண்கள் தங்கள் பயணத்தில் தனியாக இல்லை என்றும், அவர்களின் தாய்மை பற்றிய கனவை அடைய அவர்களுக்கு உதவ மேம்பட்ட சுகாதார விருப்பங்கள் உள்ளன என்றும் அவர் உறுதியளிக்கிறார்.
"நீங்கள் தாய்மை அடைய முடியும் என்று நாங்கள் அனைவரும் உங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறோம், மேம்பட்ட சுகாதாரம் உள்ளது, உங்களுக்கு உதவ ஒரு அற்புதமான சமுதாயத்தை நாங்கள் கொண்டுள்ளோம்," என்று மலட்டுத்தன்மையுடன் போராடும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை டாக்டர் அசோக் கூறினார்.
டாக்டர் அருணா அசோக்கின் இரக்கம், அனுதாபம் மற்றும் நோயாளிகளிடம் அர்ப்பணிப்பு ஆகியவை கருவுறாமைக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கு அவரை உண்மையான சாம்பியனாக்குகின்றன. நம்பிக்கை மற்றும் தைரியம் பற்றிய அவரது செய்தி, இதேபோன்ற பயணத்தில் இருப்பவர்களுடன் ஆழமாக எதிரொலிக்கிறது, விடாமுயற்சி மற்றும் ஆதரவுடன், தாய்மை உண்மையில் சாத்தியம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
இயற்கையான கர்ப்பத்தை ஊக்குவித்தல்: கருவுறுதல் சிகிச்சைக்கான A4 இன் நெறிமுறை அணுகுமுறை
A4 மருத்துவமனைகள் மற்றும் கருவுறுதல் மையத்தில், கருவுறுதல் சிகிச்சைக்கான அவர்களின் அணுகுமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை நோயாளி பராமரிப்பு ஆகியவை முன்னணியில் உள்ளன. நோயாளியின் நல்வாழ்வைக் காட்டிலும் லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சில கருவுறுதல் மையங்களைப் போலல்லாமல், ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பை வழங்குவதற்கு A4 உறுதிபூண்டுள்ளது. அவர்களின் நெறிமுறை அணுகுமுறையின் ஒரு முக்கிய அம்சம் சாத்தியமான போதெல்லாம் இயற்கையான கர்ப்பத்தை ஊக்குவிப்பதாகும்.
ஒரு தொழிலில் நிதி நலன்கள் சில சமயங்களில் நோயாளியின் நலனை மறைக்கும். A4 அதன் செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தன்னைத்தானே தனித்து நிற்கிறது. பணம் சம்பாதிப்பதற்காக தேவையற்ற சிகிச்சைகளைத் திணிப்பதற்குப் பதிலாக, A4 இல் உள்ள மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியின் நிலைமையையும் முழுமையாக மதிப்பிட்டு, அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களையும் வழங்குவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு ஜோடி இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு இருந்தால், A4 இல் உள்ள மருத்துவர்கள் இந்த சாத்தியக்கூறு குறித்து அந்த தம்பதியிடம் வெளிப்படையாக தெரிவிப்பார்கள். நோயாளிகளின் கருவுறுதல் பயணத்தைப் பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவைக் கொண்டு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். நேர்மையான மற்றும் துல்லியமான தகவலை வழங்குவதன் மூலம், உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் தேவைப்படாதவர்களுக்கு இயற்கையான கர்ப்பத்தை ஒரு சாத்தியமான விருப்பமாக A4 ஊக்குவிக்கிறது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை சிகிச்சைக்கான இந்த அர்ப்பணிப்பு A4 இல் நோயாளியின் அனுபவத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் விரிவடைகிறது. ஆரம்ப ஆலோசனையில் இருந்து தொடர்ந்து கவனிப்பு மற்றும் ஆதரவு வரை, நோயாளிகள் தங்கள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுவிடமிருந்து மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெறுகிறார்கள் என்று நம்பலாம்.
சாத்தியமான போதெல்லாம் இயற்கையான கர்ப்பத்தை ஊக்குவிப்பதன் மூலம், A4 தம்பதிகள் தங்கள் பெற்றோரின் கனவுகளை அடைய உதவுவது மட்டுமல்லாமல், கருவுறுதல் சிகிச்சை துறையில் நெறிமுறை மருத்துவ நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது. A4 உடன், நோயாளிகள் தங்களுடைய சிறந்த நலன்கள் எப்போதும் தங்கள் கவனிப்பில் முன்னணியில் இருப்பதை அறிந்து நம்பிக்கையுடன் உணர முடியும்.
தடைகளை உடைத்தல், குடும்பங்களை உருவாக்குதல்: A4 இன் 83% IVF வெற்றிக் கதை
A4 மருத்துவமனைகள் மற்றும் கருவுறுதல் மையம் கருவுறுதல் சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, IVF (In Vitro Fertilization) இல் 83% வெற்றிகரமான நேர்மறை கர்ப்ப விளைவுகளுடன். இந்தச் சாதனையானது, உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவதற்கும் புதுமைப்படுத்துவதற்கும் மையத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
83% வரையிலான உயர் வெற்றி விகிதம், ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சான்றுகள் அடிப்படையிலான கவனிப்பை வழங்குவதற்கான A4 இன் அர்ப்பணிப்பின் விளைவாகும். அனுபவமிக்க கருவுறுதல் நிபுணர்கள் கொண்ட மையத்தின் குழு, நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களை உருவாக்க அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது. இந்த தனிப்பட்ட அணுகுமுறை கருவுறுதல் சிகிச்சையுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகளை குறைக்கும் அதே வேளையில் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகிறது.
A4 இன் வெற்றிக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணி அதன் அதிநவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகும். மேம்பட்ட இமேஜிங் நுட்பங்கள், மரபணுத் திரையிடல் மற்றும் கரு வளர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட சமீபத்திய இனப்பெருக்க தொழில்நுட்பத்துடன் இந்த மையம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல கருவுறுதல் மையங்களில் இல்லாத அதிநவீன சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளை வழங்க குழுவை அனுமதிக்கிறது.
அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மேலதிகமாக, A4 நோயாளி பராமரிப்புக்கான இரக்க மற்றும் ஆதரவான அணுகுமுறைக்காகவும் அறியப்படுகிறது. மையத்தின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு நோயாளிகளுக்கு அவர்களின் கருவுறுதல் பயணம் முழுவதும் அவர்களுக்குத் தேவையான உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த முழுமையான கவனிப்பு அணுகுமுறை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது, இது கருவுறுதல் சிகிச்சையின் வெற்றியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்தமாக, A4 மருத்துவமனைகள் மற்றும் கருவுறுதல் மையம் IVF இல் 83% வெற்றிகரமான நேர்மறை கர்ப்ப விளைவுகளை அடைந்தது, கருவுறுதல் பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அதன் புதுமையான சிகிச்சைகள், இரக்கமான கவனிப்பு மற்றும் நோயாளியின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், A4 தம்பதிகள் தங்கள் பெற்றோரின் கனவுகளை அடைய தொடர்ந்து உதவுகிறது.
0 notes
bharathidasanprabhu · 4 months
Text
Tumblr media
🌍 WORLD FAMILY 🏥💊 DOCTOR DAY - 19 MAY 2024 - உலக குடும்ப மருத்துவர் தினம் - 19 மே 2024.
0 notes
nursingscience · 4 months
Text
SENSIBLE MEMBRANE
When women give birth, you will see a disc of flesh come out with the babies.
It has a membrane that doctors call "sensible membrane" because it can perform unimaginable medical functions sensibly.
This membrane picks up oxygen, sugar and insulin from the mother's blood and passes them into the baby's blood.
And it takes the immune cells found in the mother from her blood and injects them into the baby's blood.
This membrane acts as a protective barrier to the baby's health. If the mother consumes any toxic substances, or even if the food is contaminated, the toxin is not mixed with the blood through this sensitive membrane and transferred to the baby, because what are the nutrients that the baby needs? Which ones are unnecessary? This sensitive membrane knows well.
This means that this membrane is acting like a highly skilled doctor. No this membrane to a qualified medical team Even if the task is given, the child will die without resistance.
In the early months of pregnancy, mothers crave for a variety of foods. They are not really foods that mothers crave. Instead, the baby in the womb will crave nutrients. It is this sensory membrane that perceives the needs of the baby and provides information to the mother's brain.
((It is He who gives to each one its strength and shows the way (of life)))
📖 Al-Quran: 20:50
பெண்கள் பிள்ளைகளை பிரசவிக்கும் போது, ​​சதையினாலான ஒரு வட்டு குழந்தைகளுடன் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். அதை நாம்
கொப்பூழ்க்கொடி என அழைப்போம்.
இந்த (கொப்பூழ்க்கொடி) தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயின் இரத்தமும் சிசுவின் இரத்தமும் ஒன்றாக வந்து கலக்கா வண்ணம் பாதுகாப்புப் பணியில் இருக்கும்.
அதிலே ஒரு மென்சவ்வு இருக்கும், அதனை மருத்துவர்கள் "சென்ஸிபல் சவ்வு" என்று அழைப்பார்கள், ஏனெனில் அது கற்பனைக்கு அப்பாற்பட்ட மருத்துவப் பணிகளை விவேகமாக செய்து கொண்டிருக்கும்.
இந்த சவ்வு தாயின் இரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜன், சர்க்கரை மற்றும் இன்சுலின் ஆகியவற்றை எடுத்து அவற்றை சிசுவின் இரத்தத்தில் செலுத்துகிறது.
மேலும் அது தாயிடம் காணப்படும் நோயெதிர்ப்பு சக்திகளை அவளது இரத்தத்தில் இருந்து எடுத்து அவற்றை சிசுவின் இரத்தத்தில் செலுத்தும்.
இந்த சவ்வு சிசுவுக்கு ஒரு சுகாதார பாதுகாப்பு அரணாகவே செயல்படுகிறது. தாய் ஏதாவது நச்சுப் பொருட்களை உட்கொண்டால், அல்லது உணவு நஞ்சானால் கூட இந்த சென்ஸிபல் சவ்வு மூலம் நச்சு கலந்து இரத்தம் சிசுவுக்கு கடத்தப்படுவதில்லை, ஏனெனில் சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எவை? தேவையற்றவைகள் எவை? என்பதை இந்த சென்ஸிபல் சவ்வு நன்கு அறிந்து வைத்திருக்கும்.
அதாவது இந்த சவ்வு அதி திறமையான ஒரு மருத்துவர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கும். இல்லை தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவ குழுவிடம் இந்த சவ்வின்
பணியை ஒப்படைத்தால் கூட சிசு தாக்குப்பிடிக்கமால் இறந்துவிடும்.
கர்ப்ப காலத்தில் ஆரம்ப மாதங்களில் தாய்மார்கள் விதம்விதமான உணவுகளுக்காக ஏங்குவார்கள். அவைகள் உண்மையில் தாய் ஆசைப்படும் உணவுகளல்ல. மாறாக வயிற்றில் இருக்கும் சிசு ஆசைப்படும்
ஊட்டச்சத்துக்கள். இந்த சென்ஸிபல் சவ்வுதான் சிசுவின் தேவைகளை பார்த்துப் பார்த்து தாயின் மூளைக்கு தகவல்களை வழங்குகிறது.
((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்))
📖 அல்குர்ஆன்: 20:50
Tumblr media
0 notes
venkatesharumugam · 5 months
Text
#உமாமி
மாமின்னா தெரியும் அதென்னங்க உமாமி?? உமாமி என்பது “ஐந்தாவது சுவை” சுவை ஆறு அல்லவா? அப்போ இதைப் படிங்க..
அறுசுவை கணக்கெல்லாம் நமக்கு தான்! அடிப்படை சுவைனு பெரும்பாலும் உலகின் பல பகுதிகள்ல பட்டியலிடப்பட்ட சுவைகள் 4 தான் Sweet, Sour, Salty, Bitter. ஆனா, 1908-ல கூடுதலா ஒரு சுவை இருக்குனு ஒரு ஜப்பானிய ஆய்வாளர் முன் மொழிஞ்சாரு. அது என்ன சுவைனு கேட்டா, எதோ ஒரு உணவை நீங்க சுவைச்சதும்..
எச்சில் ஊறச் செய்கிற, மறுபடியும் அதை சாப்பிடனும்ன்ற அளவு ஆவல் தர்ற ஒரு வகையான lingering taste, மேற்சொன்ன நான்கு சுவையிலும் சேராத ஒரு புது சுவைனு அது வகைபடுத்தப் பட்டுச்சு Yumminess or Good flavor -னு அர்த்தப்படும் வகையில அதை ஜப்பானிய மொழியில UMAMI-னு சொல்றாங்க. அறிவியல்படி..
பார்த்தா Glutamateங்ற அமினோ ஆசிட் தான் இந்த உமாமி சுவையைத் தூண்டுதுனு சொல்றாங்க இயற்கையாவே சில வகையான உலர் காளான்கள், இறைச்சி மற்றும் அவற்றின் எலும்பு, parmesan மாதிரியான aged cheeses, சிக்கன், சமைக்கப்பட்ட தக்காளி, உருளைக்கிழங்குனு நாம தினமும் உட்கொள்ற பல உணவுகளிலும்..
இந்த Glutamate இருக்கு. இதனால தான் அதிகநேரம் சுண்டவிட்டு செய்யப்படுற எலும்பு சூப், சோய் சாஸ் மாதிரியான உணவுகள் நமக்கு ரொம்ப சுவையா தெரியுது. சரி இதுக்கும் அஜினோமோட்டோவுக்கும் என்ன தொடர்புனா, அஜினோ-மோட்டோ-னு அறியப்படுறது MSG- Monosodium glutamate தான். Purest form of UMAMI.
கான்சண்ட்ரேட்டட் உப்புனு வைச்சுக்கோங்களேன், இதை உணவுல கொஞ்சமா சேர்த்தாலும் அந்த Glutamate நம்ம taste receptors ல பட்டதும் சுவை பல மடங்கா தெரியும் அவ்ளோதான். இது நல்லதா கெட்டதானு கேட்டா, இதுவும் உப்பு மாதிரியே தான் அளவோட சேர்த்துகிட்டா கெடுதல் இல்லை. MSG-க்கு பின்னாடி அப்புறம்..
ஏன் இவ்வளவு பெரிய பயம் / கெடுபெயர்னு கேட்டா ஒரு சீன டாக்டர் அமெரிக்காவுல இருக்க சீன உணவகங்கள்ல சாப்பிட்டதும் தனக்கு படபடனு வர்றதாவும், நெஞ்சுவலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாவும் ஒரு ஜர்னலுக்கு எழுத அதைத் தொடர்ந்து பலரும் இப்படி பல அறிகுறிகளை பட்டியலிட ஆரம்பிச்சாங்க.!
இதுக்கெல்லாம் காரணம்னு அஜினோமோட்டோ சொல்லப்பட்டுச்சு. 1969-ல ஒரு அமெரிக்க மருத்துவர் அதிக அளவிலான அஜினோமோட்டோவை சோதனை எலியின் தோலுக்கு கீழ் செலுத்தி அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்னு கண்டுபிடிச்சிருக்கதா சொல்லவும் பெரிய அளவுல MSG-க்கு எதிரான லாபி துவங்கி..
அதன் விளைவா வியாபாரத்த இழக்க விரும்பாத நிறைய பெரு நிறுவனங்கள் தங்களோட உணவுல MSG- இல்லைனு அட்டை/டின் ல எழுதி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாங்க. அங்க ஆரம்பிச்ச வதந்திகள்தான் எல்லாமே. பின்நாள்ல இந்த MSG தொடர்பான ஆய்வுகள் எதுவும் சரிவர நடத்தப்படலை என்பதும் உணவுப்..
பொருட்கள்ல சேர்த்து நாம எவ்வளவு உட்கொள்றோமோ அதுக்கு தொடர்பே இல்லாத பல மடங்கு அஜினோமோட்டோவ ஆய்வுல பயன்படுத்துறதாவும், placebo effects சரிவர கணிக்கப்படலைனும் குற்றம்சாட்டப்பட்டு நிறைய புது ஆய்வுகள் நடத்தி MSG/Aji-No-Moto பாதுகாப்பானதுனு நிருபிச்சிருக்காங்க. கடந்த நூற்றாண்டு..
ஜப்பான், சீன வீட்டு சமையல்லயே உப்பு, மிளகு மாதிரி அஜினோமோட்டோ அடிப்படையான பொருளா கலந்து போயிருக்கு! எந்த உடல்நலக்குறைவும் அதனால வந்தமாதிரி இல்லை. ஒரே நேரத்துல உணவுல சேர்க்காம தனியா 3 கிராம் அஜினோ மோட்டோ சாப்பிட்டா தான் தலைவலி, படபடப்பு வரலாம் அதுவும்..
சென்சிட்டிவ்வான சிலருக்கு வேண்டுமானால் வரலாம்! மற்றபடி இதை தேவைக்கு சேர்த்து சமைக்கிறதுல தப்பில்ல. MSG வாங்கி சமைக்க இன்னும் மனசு ஒப்பாதவங்க, இயற்கையா இருக்க Glutamate -அ எப்படி சமைச்சா உணவுல கொண்டு வரலாம்னு கத்துகிட்டு அப்படி சமைச்சு சுவைக்கலாம்.
Tumblr media
1 note · View note
Text
காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை  | Kanchipuram private medical college trainee doctor commits suicide
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த பெண் பயிற்சி மருத்துவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர், காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில்…
0 notes