‘அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்’ - இபிஎஸ் | Palaniswami accuses Stalin of adopting double standards
கோவை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மேம்பால பணிகளும் அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. அத்திக்கடவு -அவிநாசி நீர்…
0 notes
அரசியலில் சோபிப்பாரா நடிகர் விஜய்?
நான் ரெடி தான் வரவா? 2026ல கப்பு முக்கியம் பிகிலு என தனது ரசிகர்களுக்கு கொம்பு சீவி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தனது கடைசி படமான லியோ வெற்றி விழாவில் தனது அரசியல் ஆசைகளை பூடகமாக வெளிப்படுத்தியதோடு தனது இலக்கு 2024 அல்ல 2026 தான் என தெளிவுபடுத்தியுள்ளார் "தளபதி".
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட திரைப்பட ஸ்டார் அந்தஸ்து மட்டும் போதாது என்ற வெகுஜனமக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டே இந்த கட்டுரை எழுதப்படுவதால் தரவுகள் அடிப்படையில் நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா வீழ்வாரா என்பதனை ஆராய்வோம்.
முதலில் 2024ல் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்துள்ளது குறித்து அலசுவோம். 2024ல் திமுகவுக்கு எதிராக பற்பல சக்திகள் உருவகம் பெறுவதை எளிதாக காண முடிகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021ல் பெற்ற 6.85% வாக்கில் இருந்து இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைய தீவிரம் காட்டுகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக துணையின்றி தனது கட்சியை தமிழகத்தில் காலூன்ற செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு நடைபாதை செல்கிறார். அதிமுகவில் இரட்டை தலைமை குழப்பத்தை ஒரு வழியாக தீர்த்த வண்ணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தான் தான் மாற்று என்று நிறுவ கடுமையாக முயற்சிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவர்களை தவிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், 2026ல் தங்களை பெரிய சக்தி என்று நிறுவ முயற்சிக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் என பலர் தலைவர் பட்டியலில் நீண்டு கொண்டே செல்கின்றனர்.
அப்படி இருக்க நடிகர் விஜய் 2026ல் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தகவமைக்க எண்ணினால் மேலே குறிப்பிட்ட அத்தனை தலைவர்களோடவும் மல்லுக்கட்ட நேரிடும். அதற்கு பதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தான் ஒரு மக்கள் சக்தி என பிற அரசியல் கட்சிகளுக்கு காட்டிவிட்டால் 2026ல் கூட்டணி ஒன்றை உருவாக்கி விட முடியும்.
2026ல் பலத்தை நிரூபிக்காத நடிகர் விஜயை எந்த அளவுகோல் கொண்டு பிற கட்சிகள் கூட்டணி அமைக்க வரும்? அரசியல் சக்தி என நிரூபிக்காமல் ஒருவரை சுற்றி பல கட்சிகள் வந்த வண்ணம் இருந்ததென்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே.
ஆனால் இன்றைய விஜயை அரசியல் சக்தி என மற்ற கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. அதன் காரணம் அப்படி அங்கீகரிப்பதன் மூலம் தங்களது வாக்குகளை எங்கே விஜய் கவர்ந்து விடுவாரோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கையில் 2024ல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 2026ல் அதை விட அதிக வாக்கு பலத்தை காட்ட முடியும் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கணக்கிடுகிறார்.
SSN சர்வே சீனிவாசன் நடிகர் விஜய் இப்போது கட்சி தொடங்கினால் மொத்தமாக 3% சதவீத வாக்கு மட்டுமே பெற முடியும் என கணக்கிடுகிறார். அவர் கூறுகையில் நடிகர் விஜய்க்கு அவரது மதமான கிறிஸ்தவ வாக்குகளும் அவரது ஜாதியான பிள்ளை வாக்குகளும் பெருமளவில் கைகொடுக்கும் என்கிறார்.
எங்களது கணக்கீட்டின் படி 2019ல் கமல்ஹாசன் பெற்ற 3.7% வாக்குக்கும் 2006ல் விஜயகாந்த் பெற்ற 8.5% வாக்குக்கும் இடையே விஜய் வாக்கு பலம் பெறுவார். காரணம் போட்டி கடுமையானதாக இருக்கிறது. மேலும் அரசியல் களம் இனியும் கருணாநிதி-ஜெயலலிதா என இரு துருவ போட்டி அல்ல. பல தலைவர்கள் உருவாகி விட்டனர். அவர்களுக்கிடையே, மக்கள் பிரச்னையை பேசி தனித்துவமாக முதல் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது என்பது இயலாத காரியம்.
ஒரு வேளை 2024ல் அரசியல் களம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டால் விஜய் அரசியலுக்கு வராமலே குட்பை செல்லவும் நேரிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
1 note
·
View note
தமிழ்த்தாய் வாழ்த்தை யார் அவமதித்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது - ஓபிஎஸ்
தமிழ் தாய் வாழ்த்து யார் அவமதித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி…
View On WordPress
0 notes
‘அதிமுக பொதுச்செயலாளர்’ - ட்விட்டர் பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..
அதிமுகவின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச்செயலாளர்’ என மாற்றம் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி …
View On WordPress
0 notes
உளவுத்துறையின் அதிரடி ரிப்போர்ட்: 30 தொகுதிகளை குறிவைத்து அடிக்கும் அதிமுக கூட்டணி
உளவுத்துறையின் அதிரடி ரிப்போர்ட்: 30 தொகுதிகளை குறிவைத்து அடிக்கும் அதிமுக கூட்டணி
தனிப் பெரும்பான்மை பெற 10 தொகுதிகளே தேவைப்படும் நிலையில், கடும் இழுபறியாக உள்ள 30 தொகுதிகளில் 25 தொகுதிகளை அதிமுக குறிவைத்துள்ளது.
தொடக்கத்தில் வந்த கருத்து கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக தேர்தல் களம் இருப்பதாக கூறப்பட்டது.
கடைசி சட்டமன்ற கூட்டத் தொடரில் அதிமுக அரசின் அறிவிப்புகள், திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற காரணிகள் குறித்து பிரபல…
View On WordPress
0 notes
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 4.6.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கீழ்க் கண்டவர்கள்…
View On WordPress
0 notes
எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுக அரசை வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமி உறுதி | edappadi palanisamy
எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுக அரசை வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமி உறுதி | edappadi palanisamy
எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலின் அதிமுக அரசை வீழ்த்த முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடசென்னை, வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வதுபிறந்தநாள் விழா ஆர்.கே. நகர்தொகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று, ஆர்.கே.நகர் தொகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் 30 ஆயிரம் பேருக்கு, அவர்கள் தொழில் செய்து வருவாய் ஈட்டும் விதமாக இஸ்திரி…
View On WordPress
0 notes
அதிமுகவிலிருந்து சசிகலாவை நிரந்தரமாக நீக்க முடிவு பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி சந்திப்பில் அதிரடி முடிவு #sasikala #modi #Palanisamy
0 notes
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா: பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு | Rajnath Singh to release commemorative coin to mark Karunanidhi birth centenary
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு…
0 notes
எஸ்பி வேலுமணி, தங்கமணியுடன் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி கிள���்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் செல்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் அவர் டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும்…
View On WordPress
0 notes
EPS Misspelled the Puthuyugam Party candidate Doctor Krishnasamy name on election rally
கிருஷ்ணசாமியா? கிருஷ்ணமூர்த்தியா? தேர்தல் பிரசாரத்தின் போது கன்ஃப்யூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி.
மக்களவை தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள கீழ் இருக்கும் வலைத்தளத்தை பார்க்கவும்: https://bit.ly/2uO96FO
Get more information from Tamil news today
0 notes
முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #CoronaVirus | #Lockdown | #CMPalaniswami
1 note
·
View note
செல்ஃபி எடுக்கலாம்.. மலரஞ்சலி செலுத்தலாம் ஜெ. நினைவிடத்தில் அருங்காட்சியகம், மெய்நிகர் பூங்கா: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் | jayalalitha memorial
செல்ஃபி எடுக்கலாம்.. மலரஞ்சலி செலுத்தலாம் ஜெ. நினைவிடத்தில் அருங்காட்சியகம், மெய்நிகர் பூங்கா: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் | jayalalitha memorial
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சி யகம் மற்றும் அறிவுசார் பூங்கா ஆகியவற்றை முதல்வர் பழனி சாமி திறந்து வைத்தார். இங்கு,ஜெயலலிதாவுடன் செல்ஃபிஎடுத்தல், மலர் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம் சங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்5-ம் தேதி காலமானார். அவரதுஉடல், மெரினா கடற்கரையில்உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம்…
View On WordPress
0 notes