"கோவையில் வெண்கல சுழலும் உலக உருண்டை மற்றும் ஜல்லிக்கட்டு காளை சிலைகள்: பொதுமக்கள் வெகுவாக வரவேற்பு"
கோவையில் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டின் ஜல்லிக்கட்டு காளை மற்றும் சுழலும் உலக உருண்டை வெண்கல சிலைகளை கண்டு பொதுமக்கள் வியப்பு..
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழல் குளக்கரைகள் சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ்…
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை கடித்து கொன்று உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி உயிர் நீத்த வளர்ப்பு நாய்...
சிவகங்கை
மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ளது கீழப்பூங்குடி கிராமம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியம். இவர் வீட்டில் 4 நாய்களுக்கும் மேலாக வளர்த்துவரும் நிலையில் செவலை என்கிற நாய் மிகவும் நன்றியுள்ள நாயாகவும் துடிப்பாகவும் இருந்துள்ளது. மேலும் சரவணன் வளர்த்துவரும் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க செல்லும்போது காளையின் கூடவே சென்று வீட்டிற்கு மீண்டும்…
AI காட்சிகள் கூடுதல்: தை பொங்கல் விழாவின் முகம்#youtube #trending #nkcre... "🌾✨ Immerse yourself in the festive vibes of Pongal with our latest YouTube Shorts! 🎉🐃 Experience the joy of traditions and the thrill of Jallikattu. Watch now: #PongalCelebration #Jallikattu #YouTubeShorts #FestiveJoy 🌞📽️" #தைப்பொங்கல்நல்வாழ்த்துக்கள், #ஜல்லிகட்டுதொழுகுதல், #மதுரைஜல்லிகட்டு, #மதுரைபொங்கல்நிகழ்வு , #உழைப்புநலம், #கொள்கைகள், #தமிழர்திருநாள், #உழைப்புபொங்கல், #ஜல்லிகட்டுநாள், #பொங்கல்திருநாள், #பொங்கல்திருவிழா, #இனியபொங்கல்வாழ்த்துக்கள்.#பொங்கல், #தைபொங்கல், #பொங்கல்விழா, #பொங்கல்நிகழ்வு, #பொங்கல்காக்கு, #ஜல்லிக்கட்டு, #ஜல்லிகட்டு, #ஜல்லிகட்டுவிழா, #மாடுபால், #மாடுவிழா, #காடுவிழா, #குழந்தைகள்விழா
ஜல்லிக்கட்டு ஆர்வலரை கடத்தி 34 பவுன் நகை பறிப்பு: கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது | Jallikattu Activist Kidnapping and 34 Pounds Worth of Jewellery Snatching: Member of the Smuggling Gang Arrested
மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலரை காரில் கடத்தி 34 பவுன் நகைகளை பறித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 3 பேரை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை அண்ணாநகரிலுள்ள சதாசிவ நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (35). ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர் கடந்த 26-ம் தேதி பாண்டிகோயில் அருகே நண்பர் பாண்டி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காரில் வந்த 4 பேர் கும்பல் கத்தி முனையில்…
ஏப்ரல் 30-ம் தேதி மதுரை அருகே ஜல்லிக்கட்டு: ரூ.1 கோடி பரிசு மழை; அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் | மதுரை அருகே ஏப்ரல் 30ம் தேதி ஜல்லிக்கட்டு
மதுரை: செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அருகே எம்.சத்திரப் பட்டியில் ஏப்ரல் 30-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக எம்.சத்திரப்பட்டியில் ஏப்ரல் 30ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த வணிகவரித் துறை அமைச்சர் ப.மூர்த்தி ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
இதுவரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய…
மசாலாவிற்கு : நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கிராம்பு - 1, பட்டை - ஒரு சிறு துண்டு, ஏலக்காய் -1, சீரகம் - 1 டீஸ்பூன், தனியா - 1 டீஸ்பூன், வரமிளகாய் - 7, பெப்பர் - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - 1 டீஸ்பூன், பூண்டு - 7 பற்கள், சின்ன வெங்காயம் -16, துருவிய தேங்காய் - கால் கப், முந்திரி - 15.
செய்முறை : கடாயில் 3 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பெப்பர், தனியா, வரமிளகாய், சீரகம் & சோம்பு சேர்த்து மணக்க வதக்கவும். இவை பிரவுன் நிறம் வரும் வரை குறைந்த தீயில் வதக்கவும். இது பொன்னிறமானதும், கசகசாவை சேர்க்கவும் பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக சுமார் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
இதில் துருவிய தேங்காய் & முந்திரி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இதை ஒரு தட்டில் எடுத்து ஆறவைத்து ஆறியதும் மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ண��யை சூடாக்கி அதில் சோம்பு & சீரகம் சேர்த்து கிளறி நறுக்கிய வெங்காயம் & கறிவேப்பிலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
இதில் தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இன்னும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். இப்போது மட்டன் எலும்புகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். அரைத்த விழுது மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி 20-25 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
இதன் மீது சிறிது கொத்தமல்லித்தழைகள் தூவவும்! அவ்வளவு தாங்க! அட்டகாசமான நல்லி எலும்பு மசாலா ரெடி! இவன் அடங்காத ஜல்லிக்கட்டு காளை மாதிரி! சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி பரோட்டா இப்படி எதனுடன் பரிமாறினாலும் ருசியில் சளைக்காது நின்று விளையாடுவான்! இவனை அடக்க வந்து இவன் ருசியில் அடங்கிப் போனவங்க தாங்க அதிகம்!
படத்தில் காட்டியபடி நல்லி எலும்பு இறைச்சியை வாங்கவும்! க்ரேவியின் திக்னஸிற்கு உங்களுக்கு தேவையான அளவில் நீரைக் கூட்டி குறைத்து சேர்க்கவும். அதற்கேற்றபடி உப்பு சரி பார்க்கவும்!
Chennai Day | மெரினா கடற்கரையில் 3 முதலமைச்சர்கள் நடத்திய மாபெரும் போராட்டங்கள் – News18 தமிழ்
சென்னையின் அடையாளங்களில் முதன்மையானது மெரினா. ஜல்லிக்கட்டு புரட்சி மட்டுமன்றி, தமிழ்நாட்டின் மிகப்பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த 3 முதலமைச்சர்களின் போராட்டங்களையும் கண்டுள்ளது மெரினா. வங்கக்கடலின் தாய் மடியாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை, தலைநகரின் தவிர்க்க முடியாது பகுதியாக உள்ளது.
பரந்து விரிந்த மெரினா கடற்கரை, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்வது மட்டுமன்றி பல புரட்சிகரமான…
லிஜோ ஜோஸ் பெல்லிசெர்ரியின் மற்றுமொரு அற்புதமான படைப்பு இது.
படம் பார்க்கத் துவங்கியபின் முதல் ஆச்சரியம்.. இந்த மனுஷனுக்கு மட்டும் எப்படிஇப்படிக் கதைக்களனை யோசிக்கத் தோன்றுகிறது?
அந்த கிராமத்தில் மாடு அறுப்பவன் வர்க்கி (செம்பன் வினோத் ஜோஸ்). அவனின் கையாட்கள் குட்டச்சனும் (சாபுமோன் அப்துஸமது) மற்றும் அந்தோனி (அந்தோனி வர்கீஸ்).
அன்று வெட்டப்படவேண்டிய எருமை தெறித்துக் கொண்டு ஓட, அதைத் தேடி ஓடும் கிராம மக்களின் செயல்கள்தான் கதை. அந்தோனிக்கும், குட்டச்சனுக்கும் உள்ள முன்பகை, மாட்டைப் பிடிப்பதில் மீண்டும் போட்டியாகிறது.
மாடு அறுக்கும் அன்று ஊரே கூடி வாங்குகிறது. வீட்டுக்குப் பால்பாக்கெட் போடுவது போல, கறி அனுப்பப்படுகிறது. கறிக்கு இணையாக, “பொங்கல் தாண்டி செஞ்சு வைக்கச் சொன்னேன்.. தெனம் இட்லி செஞ்சி வக்கிர..?” என்று அடிக்கும் அளவுக்கு மக்கள் மாட்டுக்கறிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அதற்கேற்ற உடுக்கு ஒலி பின்னணியில்.
ஆச்சரியமாக, குழப்பமில்லாத கதை விறுவிறுவென நகர��கிறது. ஒரு கிராமத்தில் காணப்படும் அனைத்து அழும்புகளையும் படம் முழுதும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள் இயக்குநரும், வசனகர்த்தாவும்.
கிராமத்தார்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் நக்கலும், நையாண்டியும் எங்கும் உதிர்கின்றன. கிராமங்களில் எந்த ஒரு நிகழ்வையும் திருவிழாவாக்கி விடுவார்கள் என்ற நிஜம் படமெங்கும் உலா வருகிறது.
சிறுவெடிகளைத் தூக்கிப் போட்டுச் செய்யும் அலப்பறைகள், ‘கோழி’ பிடிக்கும் குரியச்சன் (ஜாபர் இடுக்கி) சிக்க, சந்தடி சாக்கில் அவர்கள் ஆட்டையைப் போடும் கோழி, (குரியச்சனுக்கு அவர்கள் அணிவிக்கும் சேவல் கொண்டை சிரிப்பு வெடி!), கிட்டத்தட்ட ‘குலதெய்வம்’ ராஜகோபால் சாயலில் இருக்கும் ஜாபர் இடுக்கிக்கு, அவரைப் போலவே மேனரிசம் இப்படத்தில் எனக்குத் தெரிகிறது. உங்களுக்கு எப்படியோ?
ஒரு குழு கிணற்றில் சாரம் கட்டுவதில் மும்முரமாக இருக்க, மற்றவர்கள் செய்யும் சாராய அரட்டைகள் படத்தின் ரசனையைக் கூட்டுகின்றன. முக்கியமாக, பழசை நினைத்துப் பேசும் அந்தப் பெருசின், “ரெண்டு கால்ல ஓடித் திரிஞ்சாலும் மிருகம்ப்பா மிருகம்..”.
படத்தில் சிங்கிள் ஷாட்கள்
படத்தில் சிங்கிள் ஷாட்கள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஜாபர் இடுக்கி வீட்டில் நடந்து கொண்டே மனைவி, மகள் மற்றும் முருகேசனுடன் பேசும் காட்சி, மாடு மிதித்து சிதைந்த டீக்கடை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டே டீக்கடைக்காரன் பேசும் பேச்சு என சொல்லிக் கொண்டே போகலாம்.
மழையில் மாட்டை கிணற்றுக்கு வெளியே இறக்க முயல்கையில் அது மீண்டும் தப்பித்து ஓட, தூக்கி வீசப்பட்ட ஒருவன் விழுவதைக் கிணற்றுக்கு உள்ளிருந்து காட்டும் காட்சி வித்தியாசமானது. அதன் தொடர்ச்சியாக, மனித, மாட்டுக்கால் தடங்கள், நீர் சொட்டும் ராட்டினம், அணைந்து போன நெருப்பு, விட்டுப் போன செருப்பு, அனாதையாகத் தொங்கும் டயர் கயிறு, மிதிபட்டவன் முகம் என்று மாண்டேஜ் ஷாட்டுகள் மேகம் தோய்ந்த நிலவில் முடிகிறது.
வேட்டைக்குத் தயாராகும் குட்டச்சனின் பந்தா ரசிக்க வைக்கிறது. வாளியின் கைப்பிடியை வெட்டித் துப்பாக்கிக் குண்டுகளாக்குவது, “கொழந்தைக்கு தாடி மீசைல்லாம் மொளச்சிடுச்சுபோல..” என்று பழைய பகையைச் சீண்டுவது, ஜீப்பின் பானெட்டில் உட்கார்ந்து வந்து, துணி தோய்ப்பவளைக் குசலம் விசாரிப்பது, குட்டச்சனின் பந்தா நடைக்கேற்ற அல்லக்கைகளின் பாடல் எனப்பல. வாளியை அடைத்து உடைக்கும் காட்சியில் அது நிஜமாகவே ஒருவன் மேல் தெறித்து விழுகிறது. (எத்தனை டேக் வாங்கியதோ?)
அந்தோனி மீதான வர்க்கியின் தங்கையின் தடம் மாறும் காதல், வடக்கயிறு எடுத்துச் செல்லும் காட்சியில் நளினமாக இழைகிறது.
‘மோசமான வார்த்தைகள் சுற்றுச்சூழலை மாசு படுத்தும்’ என்னும் தோட்டக்காரன், தன் தோட்டம் அழிவதைப் பார்த்துச் சொல்லும் ‘ம்யூட்’டும், ‘எருமை ஒன்னு சுத்திட்டு இருக்கு.. பாத்துப்போ..’ என்று சொல்லி பஸ்ஸில் ஏறிச் செல்வதும், புகார் விண்ணப்பம் எழுதுபவரிடம் ‘மகிஷம்’ என்று எழுதுவதற்கு ஆட்சேபம் சொல்லிப் பின் பின்வாங்கிவதும், படத்தின் ஓட்டத்துக்கு அழகு சேர்க்கின்றன.
படத்தில் அந்தோனி கதாநாயகனாகப் பரிமளித்தாலும், உண்மைக் கதாநாயகர்கள் ஒளிப்பதிவாளரும் (கிரீஷ் கங்காதரன்), ஒலிக் கலவையாளருமே (கண்ணன் கணபதி).
ஒளிப்பதிவாளர் கிரீஷுக்கு ஒரு ஷொட்டு. பல காட்சிகள் மிரட்டுகின்றன. ‘எப்படிய்யா, இப்படி ஒரு ஆங்கிளை யோசிச்ச..’ என்று நேரில் பார்த்தால் கேட்க வேண்டும்.
ஒளிவட்டம் பாய்ச்சும் டார்ச் லைட்டுகளின் சீற்றத்தில், ‘லோ ஆங்கிளில்’ கிணற்றின் கீழிருந்து எருமை பார்க்கும் ஒரு பிரேம், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல அழகு! மலைச்சரிவில் நூற்றுக்கணக்கான டார்ச்லைட்டுகளின் பாய்ச்சல்கள், வட்டமான தீப்பந்தங்கள் மூன்று பிரிவாகப் பிரிவது, தொங்கு பாலத்தின் ட்ரோன் ஷாட், மாட்டை விரட்டும் சேஸில் கேமரா ஜெர்க் இல்லாமல் இயங்குவது.. சபாஷ்!
அந்தோனி இரவில் மீன் பிடிக்க, கூடையை உயர்த்திப் பார்க்க அதன் வழியே நிலா! இல்லை இல்லை… கவிதை!
சந்தன மரம் வெட்டியதற்காகக் குட்டச்சனைப் பிடிக்கையில் குடிசைக்குள்ளிருந்து, வெளியே வெயில் மினுங்கும் டாப் ஆங்கிள் ஷாட் க்ளாஸ்!
தொடக்கத்தின், கடிகார வினாடி சப்தத்திற்கேற்ற, சிங்கிள் பிரேம்களும் (எடிட்டிங் - தீபுஜோசப்), நீலம் தோய்ந்த சிவந்த வானத்தின் நிதான ‘ஸூம் அவ்ட்’ ஷாட்டும் அற்புதம். கடைசி பத்து நிமிட கிளைமாக்ஸ் காட்சி ‘மாஸ்’ விஷுவல் ட்ரீட்.
கண்ணன் கணபதி ஒலிக்கலவையால் விருந்து வைத்திருக்கிறார், குறிப்பாக இருட்டில் டார்ச்லைட், தீப்பந்தம் சகிதம் தேடும் காட்சிகள்.
அதென்னவோ, லிஜோவின் படங்களில் எப்போதும் காணப்படும் வித்தியாசமான பின்னணி இசை (பிரஷாந்த் பிள்ளை) இப்படத்திலும் வலு சேர்க்கிறது. பெரும்பாலான நேரம் பின்னணி இசை இல்லாமல் பாந்தமாக இருக்கிறது.
யோசிக்கவே முடியாத ஒரு ஒற்றை வரிக்கதையைப் பிரமாதமாகக் கொண்டு செல்லும் ஹரீஷ் – ஜெயகுமார் ஜோடியின் திரைக்கதைக்கு ஒரு பெரிய bouquet.
செம்பன் வினோத் ஜோஸைப் பற்றிச் சொல்லாமல் போனால் எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. மனுஷன் அசுரனாயிற்றே! மாட்டைத் துரத்திச் சென்று பிடிக்க முடியாமல் எரிந்து விழுவதிலிருந்து, அனைவரும் கிணற்றை எட்டிப் பார்ப்பதில் இருக்க, இவர் மட்டும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு மரத்தடியில் கடுப்பாக உட்கார்ந்திருப்பவது வரை, மனுஷன் பின்னுகிறார்.
எருமையை யார் பிடித்தது என்ற சண்டையில் ஒருவருக்கொருவர் குத்திக் கொள்வது என ஆக்ரோஷமான க்ளைமாக்ஸ். ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அமுக்குவது கொஞ்சம் அதிகமான hype ஆக இருந்தாலும், ‘உயர்வு நவிற்சி அணி’ என்று கடந்து விடவேண்டியதுதான் போல.
ஷெரி சாரே.. ஒந்நும் குழப்பமில்லா!
Man is a social animal என்றெல்லாம் இல்லை. Inside every man, there is an animal. To provoke it, he just needs a reason.
கதை எருமையைப் பற்றியதல்ல. மனிதன் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான் என்பதை உணர்த்தும் metaphor.
லிஜோவின் வாடி வாசலிலிருந்து சீறிப் பாயும் ‘பிடிபடக்கூடிய’ ஜல்லிக்கட்டுக்காளை இது.
இன்னும் பல படங்கள் எடுங்கள் லிஜோ. பார்த்து ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.
படம்: ஜல்லிக்கட்டு
மொழி: மலையாளம்
இயக்கம்: லிஜோஜோஸ்பெல்லிசெர்ரி
திரைக்கதை: ஹரீஷ் - ஜெயகுமார்
ஒளிப்பதிவு: கிரீஷ் கங்காதரன்
இசை: பிரஷாந்த் பிள்ளை
எடிட்டிங்: தீபு ஜோசப்
ஒலிக்கலவை: கண்ணன் கணபதி
நீளம்: 1:33:25மணிகள
Read the full article