#ஜல்லிக்கட்டுப்
Explore tagged Tumblr posts
theechudar · 22 days ago
Text
ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ₹3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது உயிரிழந்த காளைச் சண்டை வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியின் போது, ​​மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் என்ற காளைச் சண்டை வீரரை மாடு துரத்திச்…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 1 year ago
Text
Check out this post… "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை உறுதிமொழி வாசித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ".
0 notes
timingquotes · 3 years ago
Text
மத்திய தமிழகத்தில் 3 ஜல்லிக்கட்டு சம்பவங்களில் 55 பேர் காயம் | திருச்சி செய்திகள்
மத்திய தமிழகத்தில் 3 ஜல்லிக்கட்டு சம்பவங்களில் 55 பேர் காயம் | திருச்சி செய்திகள்
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 55 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சனிக்கிழமை. திருச்சியில், தி ஜல்லிக்கட்டு நிகழ்வு கல்லக்குடி அருக��� ஆலம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 455 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 200 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். காளைகளை அடக்கியவர்கள், உரிமையாளர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி
📰 சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி
இங்குள்ள கண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற பாரம்பரிய ‘மஞ்சுவிரட்டு’ நிகழ்ச்சியில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆட்சியர் பி.மதுசூதனன், காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தபோதும், அப்பகுதி விவசாயிகள் மஞ்சுவிரட்டுக்காக அருகில் உள்ள திறந்தவெளியில்…
View On WordPress
0 notes
tamilindia · 3 years ago
Text
ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த இளைஞர் பலி
ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த இளைஞர் பலி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காளை முட்டி இறந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். நல்லூர் குட்டப்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை உள்ளூர், வெளியூர் திரளான மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டி சுவாரசியமாக…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பா? வைரலான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சங்கத் தலைவர் பேசும் ஆடியோவுக்கு பாஜக மறுப்பு | Opposition to Jallikkattu? BJP rejects audio of viral Jallikattu bull owners association president speaking
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பா? வைரலான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சங்கத் தலைவர் பேசும் ஆடியோவுக்கு பாஜக மறுப்பு | Opposition to Jallikkattu? BJP rejects audio of viral Jallikattu bull owners association president speaking
திருப்பூர்: அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சங்கத் தலைவர் பேசும் ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் 5-ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்த, அலகுமலை ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு முயற்சிகளை…
Tumblr media
View On WordPress
1 note · View note
muthtamilnews-blog · 4 years ago
Text
கோவை ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்: சிறந்த வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள் பரிசு | Jallikattu
கோவை ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்: சிறந்த வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள் பரிசு | Jallikattu
கோவை மாவட்டத்தில் 1979-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலை அருகே 25 ஏக்கர் பரப்பில், கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் 4-வது ஆண்டாக நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதலே காளைகளுக்கும், வீரர்களுக்கும் விதிமுறைகளின்படி உடல் தகுதி, பாதுகாப்பு…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years ago
Text
கிண்டல் செய்தவர்களுக்கு ஜூலி பதிலடி
[ad_1]
Tumblr media
தனது போட்டோ ஷூட்டைக் கிண்டல் செய்தவர்களுக்கு, இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார் ஜூலி.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனைத் தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆற்றலுடன் இயங்கி வருபவர் ஜூலி.
[ad_2] Source link
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
தமிழக அரசின் அனுமதியுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு : 453 காளைகள், 175 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு தமிழக அரசின் உரிய அனுமதியுடன் நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் நேற்று ��டைபெற்ற ஜல்லிக்கட்டில் 453 காளைகள் சீறிப் பாய்ந்தன. நடப்பு ஆண்டின் தொடக்கமாக தச்சன்குறிச்சியில் நேற்று தொடங்கிய முதல் ஜல்லிக்கட்டை ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 453காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்காக 175 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இவர்களில், படுகாயமடைந்த ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் ஜல்லிக்கட்டாக இருப்பினும் இதில் கலந்துகொண்ட காளைகளுக்கோ, மாடுபிடி வீரர்களுக்கோ ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னரே சில இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் உரிய அனுமதியுடன் நடப்பு ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு இது என்பதால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கியதும், வரும் 20-ம் தேதி விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை ‘கின்னஸ்' சாதனையில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சி நடைபெறுவதும் இம்மாவட்டத்த��ன் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று  அவனியாபுரத்தில்.. மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் போட் டியை யார் பொறுப்பு ஏற்று நடத்து வது, முதல் மரியாதை யாருக்கு அளிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் உயர் நீதிமன்றம் தலையிட்டது. இதனால், அவனி யாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி யை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. போட்டி நடக்கும் இடத்தில் கட்சி, சமூகம் தொடர்பான கொடி கள், தலைவர்கள் பிளெக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடித்துவைக்கப்பட்டுள்ளதால் அவனியாபுரத்தில் திட்டமிட்ட படி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 700 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.காளைகளை அடக்க 596 மாடுபிடி வீரர்கள் உடல் தகுதி பெற்று தயாராக உள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு முதல் முறையாக ரூ.2 லட்சத்துக்கு அரசு சார்பில் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. Source: The Hindu
0 notes
vanigan · 5 years ago
Video
youtube
Amid Anti-CAA Protests, Thousands Join Flag Hoisting At Shaheen Bagh on ...
0 notes
tamilsnow · 7 years ago
Text
ஜல்லிக்கட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்,தேதி அறிவிப்பு
  பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு வழக்கம்போல் நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை வீரர்கள் 15 மீட்டர் தூரம் அல்லது 50 ச.மீ. பரப்பளவில் 30 விநாடிகளில் அடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16-ந் தேதி நடக்கிறது. முன்னதாக 14-ந் தேதி அவனியாபுரத்திலும்,…
View On WordPress
0 notes
tamilcinema7 · 6 years ago
Text
ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி!
ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி!
சென்னை: புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள இயக்குநர் கெளதமன், நடிகர் ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கெளதம் புதிய கட்சியை இன்று ஆரம்பித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்ட கெளதமன், சொந்தமாக கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெளதமன் பேசுகையில், “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்…
View On WordPress
0 notes
mvnandhini · 7 years ago
Text
காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை
காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை
பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக…
View On WordPress
0 notes
its8085-blog · 7 years ago
Text
புரட்சியை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு... மாணவர்களே சற்று கவனியுங்கள்!
Tumblr media
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த அனிதாவுக்கு நீதி கேட்டும், அவர் (தற்)கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். நீட்-க்கு எதிரான இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், தமிழக அரசு இந்தப் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
Tumblr media
'மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம்' என மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா. நீட் தேர்வில் தோல்வியடைந்திருந்த அனிதா, திடீரென கடந்த 1- ம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுநாள் வரை நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் என்பது அவ்வளவு பெரிய அளவில் இல்லாமலிருந்தது. ஆனால், அனிதாவின் இறப்புக்குப் பிறகு நீட் தேர்வின் நயவஞ்சகத்தை தமிழக மக்கள் முழுவதுமாக புரிந்துகொண்டனர். இதனால் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கடந்த ஆறு நாள்களாகத் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் - பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு அவர்களாகவே கலைந்துவிடுவார்கள்' என நினைத்தது தமிழக அரசு. ஆனால், ஆறு நாள்களாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருவது அரசுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் போராட்டத்தில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருமே பங்கெடுத்துவருகின்றனர். கடந்த 6-ம் தேதி  சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதா சமாதியின் முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்த���ர். அவர்களைக் காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக அப்புறப்படுத்தி��ர்.
Tumblr media
“ஜெயலலிதா சமாதியின் முன்பு நாட்டை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு மட்டுமே தியானம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் நாட்டையும், தங்கள் உரிமைகளையும் பாதுகாக்க நினைக்கும் மாணவர்களுக்குப் போராட்டம் செய்ய உரிமையில்லை...'' என்று ஆதங்கத்துடன் பொருமினர் அங்கே கூடியிருந்த பொதுமக்கள்.
Tumblr media
தீவிரமாகி வரும் மாணவர் போராட்டத்தை எப்படித் தடுப்பது என முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் போராட்டத்தைத் தடுக்க சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும், அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்பவர்களைக் கைதுசெய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. கட்சித் தலைவர்கள் நடத்தும் போராட்டத்தைத் தவிர மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டங்களை உடனடியாகக் கலைத்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இவ்விஷயத்தில் மட்டும் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமிழகக் காவல்துறை கைதுசெய்து விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்கு அரசு எந்த மாதிரியான நடவடிக்கையையும் செய்யத் துணியும்! அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு... 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடையே சில சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர்' என்று காரணம் சொல்லி போராட்டக் களத்தையே வன்முறைக் காடாக்கியது தமிழகக் அரசு.  இதுமட்டுமா.... கலவரம் நடத்த ஒரு காரணம் வேண்டும் என்று நினைத்த காவலர்கள் தாங்களே பல வாகனங்கள் மற்றும் குடிசைகளுக்கு தீவைத்துக்கொண்டு அந்தப் பழியை போராட்டக்காரர்கள் மீது சுமத்தினார்கள். அதேபோல் இந்தப் போராட்டத்தையும் திசைமாற்ற தமிழக அரசும், காவல்துறையும் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஏனென்றால், தமிழகத்தில் நடப்பது தமிழர்களின் ஆட்சியல்ல...
Tumblr media
'நமது பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் இவர்கள் போராடுகிறார்கள்' என்ற எண்ணமெல்லாம் காவலர்களுக்கு இருக்காது. என்றோ கலைக்கப்படும் போராட்டத்துக்கு இன்றே போலியான காரணத்தை காவலர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள்'' என்று போராட்டக்காரர்கள்குமுறுகிறார்கள்.
0 notes
tamizha1 · 3 years ago
Text
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 4 ஆம் சுற்று நிறைவு பெற்றது
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 4 ஆம் சுற்று நிறைவு பெற்றது
மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4- ஆம் சுற்று நிறைவடைந்து 5- ஆம் சுற்று தொடங்கியுள்ளது. 4- ஆம் சுற்றில் 532 காளைகள், 200 மாடுபிடு வீரர்கள் களம் கண்டனர். அதில் 26 பேர் காயமடைந்தனர். 4 சுற்றுகள் முடிவில் 10 காளைகளை அடக்கிய சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் முதலிடம் பிடித்தார்.   நன்றி
View On WordPress
0 notes
lourryspark-blog · 7 years ago
Text
நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த வாலிபர் திடீர் மயக்கம்!
Tumblr media
நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு திருச்சி கி.ஆ.பெ.வி மருத்துவக்கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போரட்டம் இருந்து வருகின்றனர்.
5ம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த சூர்யா சற்ற���முன் மயக்கம் ஏற்பட்டதால் மயங்கினார். அதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த சூர்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ளவர்கள் போராட்டத்தைத் தொடர்வதாலும், இவர்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுக்கப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், திருச்சி ஈ.வே.ரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
0 notes