Tumgik
#உன்னால் முடியும்
sunset74 · 1 month
Text
பின் முதுகில் தீட்டுகின்ற கவிதைகளுக்கு
உன்னால் மட்டுமே
முன்பக்கம் மொழிபெயர்ப்பு நிகழ்த்த முடியும்...🍁
1 note · View note
venkatesharumugam · 6 months
Text
#இசைஞானியின்_புரட்சி 🎶
🎵 மாயாமாளவ கெளளை 🎵
இசைஞானி அடிக்கடி கூறுவார்! நமது கிராமிய நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் கர்நாடக இசை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே பாடப்பட்டவை என்று! கர்நாடக இசையில் வரும் மேளங்கள், தாளங்கள் எல்லாம் நம் கிராமிய இசையில் முன்பே வந்துவிட்டது அதை ஒழுங்குபடுத்தியது தான் சாஸ்திரிய சங்கீதம்!
கர்நாடக சங்கீதம் உருவான பின்பு நமது நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் எந்த ராகத்தை சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டன! டெண்டுல்கருக்கு கிரிக்கெட் கற்றுத் தந்த குருநாதர் இந்திய அணிக்கு ஆடவில்லை என்பது போல! சிவரஞ்சனி இராகம் சோகரசத்தை பிழியும் ஒரு ராகம்! நம்முடைய தாலாட்டு மற்றும்..
ஒப்பாரி பாடல்கள் சிவரஞ்சனியில் அமைந்திருக்கும் இதெல்லாம் நமது நாட்டுப்புற பாடல்களில் முன்பே பாடிவிட்டோம்!15வது மேளகர்த்தா இராகம் என்னும் இந்த மாயாமாளவ கெளளையில் அமைந்த பல நாட்டுப்புற பாடல்கள் இருக்கிறது! இந்த ராகம் கர்நாடக சங்கீதம் பயிலும் அனைவருக்கும் பால பாடமாகும்!
கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ளும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய இராகம் இது! ஏனெனில் 2 பெயர்களை உடைய ஸ்வர ஸ்தானங்கள் இந்த இராகத்தில் வராது! ஜண்டை ஸ்வரக் கோர்வைகள், தாட்டு ஸ்வரக் கோர்வைகள் & துரித கால, சௌக்ககால கோர்வைகள்..
இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வரும்படி வரிசைகளை இந்த இராகத்தில் இயற்றியுள்ளதால் இசை கற்பவர்களுக்கு இது முதல் பாடம் ஆகும்! மேலும் இது பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம். ரசிகப்பிரியா சிம்மேந்திர மத்திமம் போன்ற இராகங்கள் இதன் கிரகபேதத்தில் வரும் சிறப்பு பெற்றது!
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ராகத்தை இசைஞானி பாமரனிடம் கொண்டு எளிதாக சேர்க்கிறார் இப்படி 🎶 🎵
மாமன் வூடு மச்சு வூடு
பரிசம் போட்டது குச்சுவூடு
பாட்டுப்பாடி, ஆட்டம் போடு
பெரிய இடத்து சம்பந்தம்..
எவ்வளவு எளிமையாக பாமரனையும் மாயாமாளவ கெளளையை பாடவைத்துவிட்டார் பார்த்தீர்களா? இதைத் தான் முறையான சங்கீதம் பயிலும் மாணவர்கள் ஆரோகணத்தில் ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ சொல்லிப் பாடிப் பழகுவார்கள்! இதனை மிக மிக எளிதாக மாற்றியவர் நமது இசைஞானி இளையராஜா!
இசை ஞானி இசையமைத்த மாயாமாளவ கெளளை இராகத்தில் வந்த மேலும் சில பாடல்களின் வரிசை கீழே! இவையனைத்தும் ஒரே ராகம் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா! அதுதான் இளையராஜா! 🎵🎶
மாசறு பொன்னே - தேவர்மகன்
இதழில் கதை எழுதும் நேரமிது :- உன்னால் முடியும் தம்பி
அல்லா உன் ஆணைப்படி : சந்திரலேகா
பூங்கதவே தாழ் திறவாய் :- நிழல்கள்
மதுர மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
Tumblr media
0 notes
pooma-tamilchannel · 1 year
Text
நீயே தெய்வம்.
நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று சொன்னால் அதை தாராளமாக நம்பலாம். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் யாரும் இல்லை என்றால், அந்த சக்தி, அந்த தெய்வம் இருந்தும் பயனில்லை. எனவே நீ இருக்கும் வரை தான், தெய்வம் இருக்கிறது. நீ இல்லை என்றால் தெய்வமும் இல்லை. அதாவது நீ இல்லாதபோது தெய்வம் இருந்தும் பயனற்றதாகவே இருக்கிறது. எனவே நீதான் தெய்வம் என்று தாராளமாக நம்பலாம். உன்னை விட சிறந்த தெய்வம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. மனிதர்களாகிய நாம் இல்லை என்றால், தெய்வம் என்று பெயர் சொல்லி அழைக்க கூட ஒருவரும் இல்லை. எனவே நீ நடமாடும் தெய்வம். நீ இருக்கும் வரை தான், தெய்வமும் இருக்கிறது. நீ இல்லை என்றால் தெய்வமும் இல்லை. அதாவது நீ இல்லாத போது, தெய்வம் இருந்தும் பயனில்லை. எனவே உனக்கு வேண்டியதை உன்னிடமே கெஞ்சி கேள். உன்னிடமே நீ அழு. உன்னிடமே நீ புலம்பு. உன்னால் மட்டுமே உனது பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என நம்பு. உன் பிரச்சனைகளை சரிசெய்ய, உனக்கு பலர் உதவினாலும், அது உனது ஆற்றலின், அறிவின் துணையால் தான் நிகழ்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்.
Tumblr media
0 notes
ethanthi · 1 year
Text
மன நிம்மதியும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எப்படி?
மகன் தனது ��ாயாரிடம் தயங்கியவாறு, அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன் என்றான். அதற்கு அந்த பெண்ணும், ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.
முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி என்றார் அமைதியாக. மகள் ஓடி வந்து, அம்மா என் காரை விபத்துக் குள்ளாக்கி விட்டேன் என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், கொண்டு போய் சரி செய்து விடு என்றார்.
0 notes
pooma-today · 1 year
Text
தமிழில்
#mothersday
A Mother's Heart
Written by Naadira Chhipa
She was more sad than you as she walked you into your first grade R class. Her baby was growing up too fast. She hid her tears behind a proud 'you can do this' smile as she encouraged you every step of the way. Her heart also cried tears of joy the day you graduated from high school and then university. Her baby is now an adult yet still she thought of you as her baby.
She was overwhelmed with emotion and with duas as she greeted and hugged you tightly on your wedding day. She welcomed your spouse as her own. She gave you priceless advice on marriage as she always wants the best of this world and the hereafter for her baby.
You will forever be her baby...
She never stopped making dua for you even through the days you may have hurt her or made her cry, the days you raised your voice against her,the days you ignored her, the days you treated others with more importance than your mother. The days you were embarrassed of her.She still loved you on all the days you took her for granted and the days you never said I love you and thank you mummy as days turn into years and lifetimes remember you will never get another like the love of your mother. To know the value of a mother ask those who lost theirs...
A mother's love is unconditional, pure and beautiful..
May the Almighty bless our mother's with the best of health and happiness in this world and the highest stage in Jannah in the hereafter.
ஒரு தாயின் இதயம்
நாதிரா சிப்பா எழுதியது
அவள் உன்னை முதல் வகுப்பு R வகுப்பிற்கு அழைத்துச் சென்றபோது உன்னை விட அவள் மிகவும் சோகமாக இருந்தாள். அவளுடைய குழந்தை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அடியிலும் உங்களை ஊக்கப்படுத்தியபோது, ​​'உன்னால் முடியும்' என்ற பெருமிதப் புன்னகையின் பின்னால் அவள் கண்ணீரை மறைத்தாள். நீங்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நாளில் அவளுடைய இதயமும் ஆனந்தக் கண்ணீரால் அழுதது. அவளுடைய குழந்தை இப்போது வயது வந்துவிட்டது இன்னும் அவள் உன்னை தன் குழந்தையாகவே நினைத்தாள்.
உங்கள் திருமண நாளில் உங்களை வாழ்த்தி இறுகக் கட்டிப்பிடித்தபோது அவள் உணர்ச்சியிலும், துவாவிலும் மூழ்கினாள். அவள் உங்கள் மனைவியை தன் மனைவியாக வரவேற்றாள். அவள் எப்போதும் தன் குழந்தைக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் சிறந்ததையே விரும்புகிறாள்.
நீ அவளுக்கு என்றென்றும் குழந்தையாக இருப்பாய்...
நீ அவளைக் காயப்படுத்திய நாட்களிலும், அவளை அழவைத்த நாட்களிலும், நீ அவளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய நாட்களிலும், அவளைப் புறக்கணித்த நாட்களிலும், உன் தாயை விட மற்றவர்களை உன்னிப்பாகக் கருதிய நாட்களிலும் கூட அவள் உனக்காக துஆ செய்வதை நிறுத்தவில்லை. நீ அவளைக் கண்டு வெட்கப்பட்ட நாட்கள்.நீ அவளை சாதாரணமாக எடுத்துக் கொண்ட எல்லா நாட்களிலும் அவள் உன்னை நேசித்தாள், ஐ லவ் யூ என்றும் நன்றி மம்மி என்றும் சொல்லாத நாட்களிலும் நாட்கள் வருடங்களாக மாறி வாழ்நாள் முழுவதும் நினைவுக்கு வரும்போது அந்த அன்பைப் போல் இன்னொருவரை உனக்குக் கிடைக்காது. உங்கள் தாயின். தாயின் மதிப்பை அறிய அவர்களை இழந்தவர்களிடம் கேளுங்கள்.
தாயின் அன்பு நிபந்தனையற்றது, தூய்மையானது, அழகானது..
எல்லாம் வல்ல இறைவன் நம் அன்னைக்கு இவ்வுலகில் சிறந்த ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து, மறுமையில் ஜன்னத்தில் உயர்ந்த நிலையை அருள்வானாக.
Tumblr media
0 notes
Tumblr media
உன்னால் எதையும் வெல்ல முடியும் என்ற துணிவு உனக்குள் உருவாகிறதே; அதுதான் தன்னம்பிக்கை; போராடு, வெற்றி நிச்சயம்! நேற்று போல் இன்றில்லை; இன்று போல் நாளையில்லை. வாழ்வில் போராடு. போராட பலமில்லை என வருந்தாதே. உன்னில் ஒளிந்திருக்கும் பயம் என்ற இருளை அகற்றிப் பார். நீ வாழ்வில் எதிர்கொண்டு வாழ்வினை வென்ற காலத்தினை நினைத்துப் பார். ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 18-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * https://www.instagram.com/p/CrNLfI_SMpg/?igshid=NGJjMDIxMWI=
0 notes
cinemasda94 · 2 years
Text
Single ஷங்கரும் Smartphone சிம்ரனும்
Tumblr media
சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலிப்பதற்காக கைபேசியில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்ணை விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் செலவில் மாதேஷ் கண்டுபிடிக்கிறார். இந்த கண்டுபிடிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்று மாதேஷுக்கு உறுதுணையாக இருப்பவர் ஹம்சா குப்தா. கைபேசியில் பேசுவதற்கும் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களின் தேவைகளை தீர்த்து வைப்பதற்காகவும் பல மாதங்களாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து சிம்ரன் என்னும் பெண்ணை கைபேசியில் உருவாக்குகிறார் மாதேஷ். மாதேஷ் வடிவமைத்த சிம்ரன் கைபேசியை வெளியில் கொண்டு செல்லும் போது இருவர் அந்த கைபேசியை திருடி சென்று அதனை ஒரு கடையில் விற்று விடுகின்றனர். இதனிடையே பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு உணவை டெலிவரி செய்யும் பணியை செய்து வருபவர் சங்கர். அவ்வப்போது ஏற்படும் பணத்தேவைகளுக்கு தன்னுடைய நண்பர் வெங்கியிடம் கேட்டு உதவி பெற்று கொள்வார் சங்கர். ஒரு நாள் சங்கரின் கைபேசி உடைந்து போய் விட புது கைபேசி வாங்க நண்பன் வெங்கியிடம் பணத்தை பெற்று கொண்டு கடைக்கு செல்கிறார் சங்கர். மிக குறைந்த விலையில் உள்ள கைபேசியை சங்கர் கேட்க கடைக்காரர் தன்னிடம் இருக்கும் சிம்ரன் கைபேசியை சங்கருக்கு விற்று விடுகிறார். ஒரு புறம் தொலைந்து போன சிம்ரன் கைபேசியை மாதேஷும் ஹம்சா குப்தாவும் தன்னுடைய ஆட்கள் மூலம் தேடுகிறார்கள். மறுபுறம் சங்கரின் அனைத்து தேவைகளையும் சிம்ரன் நிறைவேற்றி வருகிறார். சங்கர் காதலிக்கும் பெண்ணான துளசியை தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காதலிக்க வைக்கிறார் சிம்ரன். இதனால் துளசியிடம் அதிக நெருக்கத்துடன் பழக ஆரம்பிக்கிறார் சங்கர். துளசியை காதலிக்க ஆரம்பித்த பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை குறைத்து கொள்கிறார் சங்கர். சங்கரை ஒருதலையாக காதலிக்கும் சிம்ரன் தனது காதலை சங்கரிடம் சொல்லும் போது உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் உன்னுடன் வாழ முடியாது என சொல்லி சிம்ரனின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் சிம்ரன் சங்கருக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆளாகும் சங்கர் அதிலிருந்து மீண்டாரா தொலைந்த சிம்ரன் கைபேசியை கண்டுபிடித்தார்களா சங்கரின் காதல் என்ன ஆனது இறுதியில் நடந்தது என்ன என்பதே மீதிக்கதை. சங்கராக சிவா யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். டெலிவரி பணியில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்சினையை நகைச்சுவையாக பேசி ரசிக்க வைக்கிறார். சிம்ரனாக மேகா ஆகாஷ் யாரும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தை துணிச்சலுடன் தேர்வு செய்து நிறைவாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்க்கிறார். துளசியாக வரும் அஞ்சு குரியன் அவரது பணியை நிறைவாக செய்துள்ளார். சிவாவின் தந்தையாக வரும் மனோ கோலம் இல்லடா என்னோட காதலுக்கு நான் போடற பாலம் சர்ச் ஃபாதர் இல்லடா உன்னோட ஃபாதர் என்று வசனங்களை பேசி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். மா கா பா ஆனந்த், ஷாரா,பகவதி பெருமாள்,திவ்யா கணேஷ் மற்றும் பிற கலைஞர்கள் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ளனர். லாஜிக்கை எதிர்பார்க்காதீர்கள் என்று ஆரம்பித்திலேயே காண்பித்து விடுவதால் லாஜிக் இல்லாமல் படம் பயணிக்கிறது. அதுவே அதிகமாகும் போது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. உணர்ச்சிய கொடுத்தியே உடம்பை கொடுத்திருக்கக்கூடாதா என்ன விலை கொடுத்தாலும் காதல வாங்க முடியாது போன்ற வசனங்கள் ரஞிக்க வைக்கின்றன. திரைக்கதை விறுவிறுப்டன் இருப்பதாலும் நகைச்சுவை காட்சிகளை பல இடங்களில் ரசிக்கும்படி அமைத்து படத்தை ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ். ஒளிப்பதிவும் இசையும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் லாஜிக் மீறல்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு முறை பார்க்கும் அளவிற்கு உள்ள இந்த படத்தை விருப்பமுள்ளவர்கள் Amazon prime video வில் காணலாம். Read the full article
0 notes
poigaiselva · 2 years
Photo
Tumblr media
அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் படித்ததில் பிடித்தது "புத்திசாலியாக இரு -ஆனால் முட்டால் போல நடி அப்போது தான் உன் பின்னால் இருக்கும் துரோகிகளையும், நல்லவர்களையும் உன்னால் உணர முடியும்" இன்று இருபத்தைந்தாம் 25 (24/10/2022 மீதம் 23 நாட்கள்) நாட்களை தொடர்ந்து நான் என்னுடைய எண்ணப்படி யோகா,தியானம், நடைப்பயிற்சி செய்ய தொடங்குகிறேன். இந்த இனிய நாளை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி... உங்கள் அன்புள்ள பொய்கை செல்வா.. @poigai_selva #poigaiselva #reelspost #follow #excercise #mindfulness #yoga (at Bangalore, India) https://www.instagram.com/p/CkEyrY4yHgT/?igshid=NGJjMDIxMWI=
0 notes
jagadeeshkrishnan · 3 years
Text
[11/9, 9:36 AM] 98 41 121780: -The Supreme Doctrine
Death: The Climax of Life
The last question:I have heard you speaking about surrender and it seems to me that surrender is the only important factor in achieving transformation. Then how to surrender? What is the meaning, method and process of it? And what contribution does the active meditation make in reaching the state of surrender ?
The first thing to be understood about surrender is that you cannot ask ‘how’, because “how” bring the method, “how” bring the technique. Surrender is enough into itself; it need not technique. Asking how to surrender is asking how to love. And if you ask how to love, one thing is certain: love is not for you. How can you ask how to love?
You cannot learn surrender.
Surrender means you are feeling that you are not capable of doing anything, so you surrender. It is totally helplessness.
Surrender needs very strong, absolutely strong souls.
Surrender is not a doing; doing is contradictory. You cannot do it.
Doing is contradictory to surrender. Surrender is a happening.
So the first thing: surrender has “no how” about it – no.
It has no technique. It IS a technique itself; it has no other technique. If you can do it, you can do it. If you cannot do it, forget it: it is not for you.
Unless you come to know that all; the contradictory ways can lead to the same point, you will not be able to feel the inner consistency within the contradictions. They are contradictory and they are not. They are because what Buddha says is consistent, and what Mahavira says is consistent. But I’m saying both things simultaneously. It has never been done really; it looks contradictory. But you need not think about it, just follow one thing.
If you can surrender, surrender, don’t ask how. If you ask how then you are not meant to surrender yet. You are asking for a method – then follow the method. Either you will succeed or you will fail: both are good. Through both you will reach.
By
Jagadeesh krishnan psychologist and international Author
[11/9, 9:36 AM] 98 41 121780: உச்ச கோட்பாடு
மரணம்: வாழ்க்கையின் உச்சக்கட்டம்
கடைசி கேள்வி: நீங்கள் சரணடைவதைப் பற்றி பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், மாற்றத்தை அடைவதற்கு சரணடைதல் மட்டுமே முக்கிய காரணியாக எனக்குத் தோன்றுகிறது. பிறகு எப்படி சரணடைவது? அதன் பொருள், முறை மற்றும் செயல்முறை என்ன? மேலும் சரணாகதி நிலையை அடைவதில் சுறுசுறுப்பான தியானம் என்ன பங்களிப்பைச் செய்கிறது?
சரணடைவதைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் 'எப்படி' என்று கேட்க முடியாது, ஏனென்றால் "எப்படி" முறையைக் கொண்டுவருகிறது, "எப்படி" நுட்பத்தை கொண்டு வருகிறது. சரணடைந்தால் போதும்; அதற்கு நுட்பம் தேவையில்லை. எப்படி சரணடைவது என்று கேட்பது எப்படி நேசிப்பது என்று கேட்பது. எப்படி காதலிப்பது என்று நீங்கள் கேட்டால், ஒன்று நிச்சயம்: காதல் உங்களுக்காக அல்ல. எப்படி காதலிப்பது என்று எப்படி கேட்க முடியும்?
நீங்கள் சரணடைவதைக் கற்றுக்கொள்ள முடியாது.
சரணடைதல் என்றால் நீங்கள் எதையும் செய்ய இயலாது என்று உணர்கிறீர்கள், எனவே நீங்கள் சரணடைகிறீர்கள். இது முற்றிலும் உதவியற்ற நிலை.
சரணாகதிக்கு மிகவும் வலிமையான, முற்றிலும் வலிமையான ஆன்மாக்கள் தேவை.
சரணடைதல் என்பது ஒரு செயலல்ல; செய்வது முரணானது. உன்னால் இதை செய்ய முடியாது.
செய்வது சரணாகதிக்கு முரணானது. சரணடைதல் என்பது ஒரு நிகழ்வு.
எனவே முதல் விஷயம்: சரணடைதல் "எப்படி இல்லை" - இல்லை.
அதற்கு எந்த நுட்பமும் இல்லை. இது ஒரு நுட்பம் தானே; அதற்கு வேறு எந்த நுட்பமும் இல்லை. உங்களால் முடியும் என்றால், நீங்கள் அதை செய்ய முடியும். உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், அதை மறந்து விடுங்கள்: அது உங்களுக்காக அல்ல.
அதையெல்லாம் நீங்கள் அறியாத வரை; முரண்பாடான வழிகள் அதே புள்ளிக்கு வழிவகுக்கும், முரண்பாடுகளுக்குள் உள்ள உள் நிலைத்தன்மையை நீங்கள் உணர முடியாது. அவை முரண்பாடானவை, அவை இல்லை. ஏனெனில் புத்தர் சொல்வது சீரானது, மகாவீரர் சொல்வது சீரானது. ஆனால் நான் இரண்டு விஷயங்களையும் ஒரே நேரத்தில் சொல்கிறேன். அது உண்மையில் செய்யப்படவில்லை; அது முரண்பாடாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை, ஒன்றைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் சரணடைய முடியும் என்றால், சரணடையுங்கள், எப்படி என்று கேட்காதீர்கள். எப்படி என்று கேட்டால், நீங்கள் இன்னும் சரணடையவில்லை. நீங்கள் ஒரு முறையைக் கேட்கிறீர்கள் - பின்னர் முறையைப் பின்பற்றவும். ஒன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது நீங்கள் தோல்வியடைவீர்கள்: இரண்டும் நல்லது. இரண்டின் மூலமாகவும் நீங்கள் அடைவீர்கள்.
மூலம்
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
2 notes · View notes
tamiltypography · 4 years
Photo
Tumblr media
பாரைப் பார்!! அச்சம் வேண்டாம்.. வாழ்வு விடியும். அச்சத்தைப் பரப்பாமல், நிச்சயமான அன்பையும் நம்பிக்கையையும் பரப்புவோம். விதைப்போம். வாழ்வு என்பது நாம் அதை எப்படி நமக்கானதாக மாற்றிக் கொள்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது. இந்த வாழ்வு விசித்திரமானது. நாம் வாழ்கின்ற சூழலில் தொடர்ச்சியாக,”உன்னால் முடியாது”, “உனக்குத் தேவையில்லாதது”, “நீ அதைச் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை”, “அது உனக்குப் பொருந்தாது” என்பது போன்ற அழகிய அறிவுரைகள் எமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்த அழகிய அறிவுரைகளைச் சொல்பவர்கள் அந்நியர்கள் அல்லர். எம்மை அதிகம் நேசிக்கின்ற உறவினர், சுற்றத்தார் என பட்டியல் நீளும். ஆக, எம் மீது கொண்ட அன்பால், “உன்னால் இது முடியாது” என உரிமையுடன் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர். கடைசியாக உங்களிடம் யாராவது, “உன்னால் இது முடியும்” என ஊக்குவித்த தருணங்களை நினைவுகூற முடிகிறதா? எம்மைச் சூழவுள்ளவர்களால், எந்தளவிற்கு நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம்? நீங்கள் கடைசியாக, யாரையாவது ஊக்குவித்த தருணங்கள் நினைவில் இருக்கிறதா? “உன்னால் முடியும்”, “உன்னை முழுமையாக நம்பு” என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்களா? இதுதான் சரியான தருணம், உங்களைச் சூழவுள்ளவர்களை ஊக்கப்படுத்த. அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆர்வங்களுக்கு ஆயுள் கொடுப்பதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் மாணவர்களிடம் “உங்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதையுங்கள். நண்பனிடம், அவன் பல காலமாக செய்ய வேண்டுமென நினைத்துள்ள வணிக நிலை வெற்றி பெறும் என அவனை ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் ஊக்கப்படுத்துவதனால், ஒருவருடைய வாழ்க்கை அழகிய சோலையாக பரிவர்த்தனை செய்யப்படலாம். இதுதான் தருணம். உடனே சென்று, ஊக்குவிப்புப் படலத்தை விரைவுபடுத்துங்கள். நாளை எல்லோருக்கும் விடியட்டும். #tamillettering by Tharique Azeez @enathu #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://instagr.am/p/B_2c2YiDgTS/ Follow Tamil Typography on Instagram: http://instagram.com/tamiltypography
5 notes · View notes
madasamym · 5 years
Text
விதவிதமாக சமைக்க கற்றுக்கொள். ருசியாக சமைத்துப் போடு. அந்த ருசிக்கு அவனை அடிமையாக்கு. குறைந்தது இரண்டு குழந்தையாவது பெற்றுக்கொள். குழந்தைகளோடு கொஞ்சி விளையாடு. பாட்டுப்பாடு, நடனம் ஆடு, ஓவியம் தீட்டு, வீட்டை, இருப்பதை வைத்து அலங்கரி. எவ்வளவு வேலைப்பளு என்றாலும் உன்னை அலங்கரிக்க மறந்துவிடாதே. உறவினர்களை கைகொள். அம்மாவாசை தவிர மற்ற நாட்களில் குடும்பத்தோடு நிலாச்சோறு சாப்பிடு. மழைநாட்களில் அவன் அணைப்பில் உன்னை வெப்பப்படுத்திக்கொள். முடிந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தாதே. செல்வத்தை சேமித்து குடும்பத்தோடு பயணங்கள் செல். பூமியை, இயற்கையை ஆராதிக்க உனக்கான வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்துகொள். உன் முதல் எதிரி இந்த விஞ்ஞானம் என்பதை ஆழ்மனதில் பதிந்துகொள். பருவ வயதுவரை கல்வியையும் பல கலைகளையும் கல். பின் அதை உன் மகிழ்வுக்கு பயன்படுத்து.
ஆண், பெண் சமம் என்று வீட்டிற்குள் வந்து சொல்வார்கள். உன் கணவனிடம் கேள், தன் சக ஆணுக்கு அவனே சமமாக இல்லாத கவலையை கொட்டித்தீர்ப்பான். மந்திரி ஆகு, மாவட்ட கலெக்டர் ஆகு, டாக்டர் ஆகு, இன்ஜினியர் ஆகு, டீச்சராகு, விஞ்ஞானி ஆகு, மக்கள் கொண்டாடும் கலைஞி ஆகு என்று உன் கையைப்பிடித்து இழுப்பார்கள். எப்படி இழுத்தாலும் இதற்கு மட்டும் மயங்கிவிடாதே. ஜனநெருக்கடியில், போட்டிப் பொறாமையில், பணியிடத்து சீண்டல்களில், வேலைப் பளுவில், முதலாளியின் துதிபாடலில், வீட்டிற்கும் பணியிடத்துக்கமான பயணத்தில், முரணில் வேலை போனால் மீண்டும் அதற்கான தேடலில் இன்னும் பல தேவையில்லாத ஆணிகளில் உன் ஆயுள் முழுவதையும் தொலைத்துவிடுவாய். உன்னுள் இருக்கும் அன்பு யாருக்கும் பரிமாறப்படாமலே மரணித்திருக்கும். ஓர் ஆணின் பெரும் சாபமும் இதுதான்.
உனக்கு இருக்கும் ஒரே சவால் உனக்கு துணையாக சரியான ஓர் ஆணை தேர்ந்தெடுப்பது மட்டுமே. அதை நீ சரியாக செய்துவிட்டால், உன் உட்பட உன்னைச்சுற்றி இருக்கும் உலகம் அழகாகத் தெரியும். நீ கற்றுத் தேறவேண்டியது ஓர் ஆணைப்பற்றிய உளவியலைத்தான்.
இயற்கையில் அன்பை உருவப்படுத்த, அன்பை உணர்த்த, அன்பை பிற உயிர்களுக்கு கடத்த படைக்கப்பட ஒரே ஒரு ஜீவன் மனித இனத்தை சேர்ந்த பெண்தான்! உன்னால் மட்டுமே அன்பே என்று அதன் உயிர்தன்மையோடு அழைக்க முடியும்.
இப்புவியில் நீ மட்டுமே இயற்கையின் சக்தியால் ஆசிர்வதிக்கப்பட்டவள். பிற உயிர்கள் அனைத்தும் உன் ஆசிர்வதத்திற்காக படைக்கப்பட்டவைதான். ஆண் உட்பட அனைத்துமே!
I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.
19 notes · View notes
khourpride · 5 years
Photo
Tumblr media
6th week paper 📰ad of #KamalHaasan in #UnnalMudiyumThambi Directed by K.Balachander An #ilayaraaja musical 🎶 #FLashBack #கமல்ஹாசன் அவர்களின் 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தின் ஆரவாரமான 6வது வார நாளிதழ் 📰 விளம்பரம்! https://www.instagram.com/p/B6pogKOAIR7/?igshid=1epig294hziio
1 note · View note
rajmohans · 8 years
Text
உன்னால் முடியும்
என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போக மாட்டேன் ஏனென்றால் நான் நூறு வெற்றிகளை பார்த்தவன் அல்ல ஆயிரம் தோல்விகளை பார்த்தவன்.
0 notes
trendingnewsto · 2 years
Text
‘கமலின் வெற்றி அடுத்தடுத்து தொடரும்’ - நடிகர் ரமேஷ் அரவிந்த் நேர்காண��் | 'Kamal's Success Will Continue' - Actor Ramesh Aravind Interview
‘கமலின் வெற்றி அடுத்தடுத்து தொடரும்’ – நடிகர் ரமேஷ் அரவிந்த் நேர்காணல் | ‘Kamal’s Success Will Continue’ – Actor Ramesh Aravind Interview
சினிமாவுக்கு வந்து 35 வருடங்களாகி விட்டது ரமேஷ் அரவிந்துக்கு. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என சுமார் 140 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறது, பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா பல்கலைக்கழகம். ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘டூயட்’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பஞ்சதந்திரம்’ உட்பட தமிழில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், கமல்…
Tumblr media
View On WordPress
0 notes
Tumblr media
கொடுப்பதும் சனி கெடுப்பதும் சனி யாரை விட்டது சனி ? நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு தாழ்வுகளைச் சந்தித்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு. ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக் கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டார். அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார். ''எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன். நேராக கயிலாயம் சென்றவர், சிவன் பார்வதி தேவியை வணங்கி நின்றார். ''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார் சிவபெருமான். ''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச் சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன். ''எனக்குமா ஏழரைச் சனி? என்ன சனீஸ்வரா! விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?'' என்று கேட்டார். ''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லா விட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து, என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன். ''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகைக் கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது'' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையின் ருத்ராக்ஷத்தில் மறைந்து கொண்டார். ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்? ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்து விட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெருமான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார். சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழ���ை நாழிகைக் கூட நெருங்க முடியவில்லையே?' (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CkDz6-XS46P/?igshid=NGJjMDIxMWI=
0 notes
drthema · 2 years
Text
"பலி" போனதில் தப்பேயில்லை.
Tumblr media
தஞ்சை நகரத்து நிலவொளியிற் கண்ட "இரு பூரணச் சந்திரர்களாக" ஜொலித்த பழையாறை இளைய பிராட்டியும் (குந்தவை), பழுவூர் இளைய ராணியும் (நந்தினி) நிகரில்லா சௌந்தர்யவதிகளாகவும், சாமார்த்தியசாலிகளாகவும் இருப்பினும், அவர்கள் தங்கள் அங்க அமைப்பிலும், ஆடை அலங்காரங்களிலும் மட்டுமல்ல, குணத்திலும், மனதிலும் கூட முற்றிலும் வேறுபட்டவர்களாயிருந்தனர்.
"இரு புலிகள்" என்றாலும், ஒருவர் அறிவின் உச்சம். மற்றவர் அழகின் உச்சம். அழகு என்றால் சும்மா அழகல்ல. ஆபத்து நிறைந்த, சோழ தேசத்தையே புரட்டிப்போட்ட பேரழகு. அந்த அழகிலே வழுக்கி விழுந்துதான் சோழ தேசமே தன் விதியைத் தேடிக்கொண்டது.
ஒருவர் இராஜ கருடன் என்றால், மற்றவர் கார்க்கோடனிலும் கொடிய விஷம் கக்கும் "நஞ்சினும் கொடியாள்".
இவர்கள் ஒருவரையொருவர் நேரிற் சந்தித்துக்கொண்டபோது, உள்ளத்திற் கொதித்த எரிமலையின் அக்கினிக் குழம்பு, விழி வழியே கனலைக் கக்கி பெருகி வழிந்தோடியது.
அந்த சுட்டெரித்துப் பொசிக்கிவிடும் பார்வை...
"சோழ தேசமே என் கரங்களின் பாதுகாப்பில். உன்னால் எந்த ஆபத்தும் நேர விடமாட்டேன்" என்று தைரியத்துடனும், தர்மத்துடனும் வீரப்புன்னகையுடன் ஒருவரிடமும்,
"சோழ தேசத்தை என் காலடியில் வைத்து என்ன செய்கிறேன் பார். உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்?" என்று வன்மத்துடனும், அலட்சியத்துடனும் விஷம புன்னகையாக மற்றவரிடமும்.
மொத்தத்தில் ஒருவர் குலதெய்வம், மற்றவர் குலத்தை வேரறுக்க வந்த சகுனி.
உலகம் பெரும்பாலும் நற்குணத்தையல்ல, அழகையே முதலில் ஆராதிப்பதால், நந்தினி அதனையே தன் துருப்புச்சீட்டாக பயன்படுத்திக்கொண்டாள்.
இத்தனை வேறுபாடுகள் குணத்திலிருந்தும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் "ஐஸ்வர்யா ராயின்" பேரழகுக்காக மட்டும் இத்தனை fan followers இன்று இருக்கும்போது, அன்று "நந்தினி"யின் பேரழகில் சொக்கி ஆதித்த கரிகாலன் "பலி"போனதில் தப்பேயில்லை.
1 note · View note