GOAT Movie | பாதியில் நின்ற கோட் திரைப்படம் - களேபரமான தியேட்டர் - ரசிகர்கள் அட்டகாசம்
GOAT Movie | பாதியில் நின்ற கோட் திரைப்படம் – களேபரமான தியேட்டர் – ரசிகர்கள் அட்டகாசம் | Just Now | மானாமதுரையில் பாதியில் நிறுத்தப்பட்ட தி கோட் படம் மானாமதுரை ஸ்ரீ பிரியா திரையரங்கில் விஜயின் தி கோட் படம் பாதியில் நிறுத்தப்பட்டது
0 notes
#இடியாப்ப_அந்நியன்
இடியாப்பத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? இடித்த மாவில் செய்வதால்னு சொன்னா அப்போ அதில் ஆப்பம் தானே வார்க்கணும்? ஏன் அதை சேமியா போல பிழியணும்? ஏன் அதை இட்லிப் பானையில் அவிக்கணும்? இப்படி எல்லாம் நக்கலா கேள்விகள் எழுப்பினா அது இடியாப்பச் சிக்கலாகவே முடியும்!
சரி! இடியாப்பப் பெயர் காரணத்தை என்றைக்காவது நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து அவரவர் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். இட்லியைப் போல இடியாப்பமும் ஒரு ஆரோக்கிய உணவு! ஆனால் இடியாப்பம் தேங்காய் பாலுடன் ருசிக்கலாம் எனும் சிறப்பு அந்தஸ்து பெற்றது! இச்சிறப்பு இட்லிக்கு இல்லை!
பாலாக இன்றி துருவிய தேங்காய்/சர்க்கரை/ ஏலக்காய் சேர்த்து சாப்பிட அல்டிமேட்டாக இருக்கும்! தேங்காய்த் தண்ணீரை இதன் மீது விட்டு, தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு இருக்கிங்களா! அது இன்னும் பிரமாதமாக இருக்கும்! அதே போல கொப்பரைத் தேங்காயை துண்டு துண்டாக வெட்டி தேங்காய்த்..
துருவலோடு சேர்த்து, அதில் வெல்லத் தூள் தூவி சாப்பிட்டால் அடடா! அது போல கருப்பட்டியும் தேங்காயும் கூட இதற்கு நல்ல காம்போவாகும்! இப்படி ஸ்வீட் பாயாக இருக்கும் இந்த இடியாப்ப அம்பி, சைவ சொதி, நவரத்ன / வெஜிடபிள் குருமா, வெஜ் சால்னா, அவியல் போன்ற காதலிகளைக் கண்டால் ரெமோ ஆகிவிடுவான்!
திருநெல்வேலிகாரர்களுக்கு அல்வாவை விட இடியாப்பமும் சொதியும் அதிமுக்கியம்! அதை தராதவர்களை தாக்கவே அவர்கள் அருவாளைத் தூக்கினார்கள் என்றால் அப்படியே நம்பிவிடலாம்! நெல்லையில் எல்லாம் பால் சொதி, இஞ்சி சொதி, தக்காளி சொதி, கீரை சொதி, மாங்காய் சொதி, சொதிக் குழம்புன்னு..
சொதிகளின் ஜோதி கனன்று எரியும்! அதிலும் நெல்லையில் புது மாப்பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை சொதின்னு ஒரு சொதி செய்வாங்க! இதெல்லாம் இடியாப்பத்திற்கென்றே எழுதப்பட்ட தொடுகறிகளாகும்! சூடான இடியாப்பத்தின் மீது காய்களோடு சூடான சொதி ஊற்றி உண்பது ரசனை மிகுந்த அனுபவமாகும்!
சரி அம்பியை பார்த்துட்டோம், ரெமோவையும் பார்த்துட்டோம் அப்போ அந்நியன்! இந்த அசைவக் குழம்புகளைக் கண்டால் இவன் அந்நியனாகி அட்டகாசம் செய்திடுவான்! மட்டன் என்றால் தலைக்கறி, சுக்கா, சாப்ஸ், குடல் குழம்பு, ஈரல், தண்ணிக் குழம்பு, சால்னா, குருமா வகைகள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுப்பான்!
சிக்கனில் பிராய்லரோ நாட்டுக் கோழியோ குழம்பு, பிரட்டல், குருமா, தொக்கு இப்படி எந்த வகை சால்னா வைத்தாலும் அட்டகாசமாக அதனோடு பொருந்திப் போவான்! பீஃப் வகைகளிலும் அப்படியே! மீன் குழம்புகளில் குறிப்பிட்ட சில மீன்களைத் தவிர மற்ற மீன் குழம்புகளில் இவனும் நீந்துவான்!
இடியாப்பத்திற்கு மிக மிகச் சிறந்த குழம்பு என்றால் தயங்காமல் நாம் ஆட்டுக்கால்களில் விழுந்து வணங்கலாம்! ஆம் ஆட்டுக்கால் பாயா இடியாப்பத்துடன் இணைவதே அற்புதம்! இது ஒரு டெட்லி காம்போ! இதிலும் பெப்பர்/சில்லி பாயாக்கள் உண்டு! பாயாவின் ருசியான ஜெல்லி பதமும் இடியாப்பமும் நம் நாவில் நின்று பேசும்!
அசைவக் குழம்புகளை இடியாப்பத்தில் சொத சொதன்னு ஊற்றிச் சாப்பிடுவது ஒரு பாவச் செயலாகும்! ஒரு விள்ளல் இடியாப்பத்தை க்ரேவியில் அளவாக தோய்த்து அதோடு ஒரு துண்டு மட்டனோ, சிக்கனோ கட்டாயம் இருக்கும்படி எடுத்து உண்பது சிறப்பு! ஈரல் குடல் குழம்புகள் இதற்கு மிகச் சிறந்த அசைவ க்ரேவிகளாகும்!
தொக்கு, கெட்டிக்குழம்பு, குருமா போன்றவை இதற்கு மஞ்ஞுமேல் பாய்ஸ் போல ஆருயிர் நண்பர்களாகும்! மீன் குழம்புன்னா முள் நீக்கிவிட்டு சேர்க்கணும் ஏன்னா நாம் முள் நீக்கும் நேரத்தில் இடியாப்பம் ஆறிவிடும்! மதுரையில் ஜிஞ்சர் ஈரல், பெப்பர் ஈரல் போன்றவை நெல்லையின் சொதி வகைகளுக்கு ஒப்பானது!
இந்த சொதியிலும் அசைவச் சொதிகள் இருக்கின்றன! மீன் சொதி, இறால் சொதி, முட்டை சொதி போன்றவை இருக்கின்றன! இலங்கையில் சொதி என்றால் இடியாப்பம் தான் அங்கு பச்சை மாங்காய் சொதி, இறைச்சி சொதி, சாள மீன் சொதி, சைவச் சோதி போன்ற நான்கு வகை சொதிகள் வைத்து ருசிப்பார்கள்!
இடியாப்பத்திற்குன்னு சில பக்குவம் இருக்கு! வாணலியில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் இடித்த இடியா���்ப மாவை சேர்த்து கிளறி எடுத்து பிறகு அதை இடியாப்பக் குழலில் வைத்து பிழிந்து அவித்து எடுப்பதே சிறந்தது! இடியாப்பம் அப்படியே வெல்வெட் போல இருக்கணும் முக்கியமாக இதை ஆவி பறக்க பரிமாறணும்!
ஆறிய இடியாப்பத்தை இலையில் வைத்தால் எனக்கெல்லாம் ஆவி பறந்துவிடும்! தேங்காய் பாலோ, சொதியோ, மட்டன் குழம்போ சூடான இடியாப்பத்தின் மீது ஊற்றி சாப்பிடும் சுகம் ஆறிய இடியாப்பத்தில் கிடைக்காது! ஆறிய இடியாப்பத்தை உதிர்த்து தாளித்து முட்டை, காளான், பனீர் சேர்த்து சூடாக சாப்பிடலாமே..
தவிர ஆறிய இடியாப்பம் அறுசுவைக்கு ஒத்து வராது! எனது தந்தை வழக்கம் போல ஒரு புது வகை இணையை இடியாப்பத்திற்கு தந்துள்ளார்! சார பருப்புகள் மிதக்கும் சூடான பாதாம் பால் தான் அது! சூடான இடியாப்பத்தின் மீது அதை ஊற்றி சாப்பிட்டால் தரையில் இருந்து 6அடிகள் உயரப் பறப்பீர்கள் என்பது உறுதி!
இந்த இடியாப்ப அந்நியனின் அவதாரங்கள் அனைத்துமே ருசியானவை..
0 notes
தசமி தமிழ் பேய் படம் கொடூர பேய்யின் அட்டகாசம் Thasami
0 notes
பெங்களூர் வீட்டு ஓனர்கள் அட்டகாசம்.. ஏன் இப்படி..? வீடு தேடி போனால் அய்யய்யோ..!! - Goodreturns Tamil
http://dlvr.it/SsLYbR
0 notes
இளைஞர் குழு அட்டகாசம் - 15 ஆயிரம் பேர் பதட்டத்துடன் வெளியேற்றம் (படங்கள்)
புத்தளம் இஜிதும விளையாட்டரங்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது இளைஞர்கள் குழுவொன்று மோதலில் ஈடுபட்டதால், ஏற்கனவே நடாத்துவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த ஏனைய அனைத்து போட்டிகளையும் ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் இஜிதுமா மைதானத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய போட்டிகளை காண வந்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் பதற்றத்துடன் திரும்பிச் செல்ல…
View On WordPress
0 notes
ரணில் ஏன் இபடிச் செய்கிறார்? நிலாந்தன்!
வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்,கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம்,புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில் புதுப்பிக்க முற்படுவது… போன்ற அனைத்தும் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்கின்றன?
முதலாவதாக,ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து…
View On WordPress
0 notes
ஒரு கைதியின் டைரி.
கமல்ஹாசன் அவர்கள் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்த படம், படத்திற்கு கதை, வசனம் k. பாக்கியராஜ் அவர்கள்.
படிப்பறிவு இல்லாமல் அரசியல் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து தன் அரசியல் தலை���னே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருப்பவன் டேவிட், அவன் வாழ்க்கையில் வருகிறாள் ரோசி, டேவிட்டுக்கு கல்வி கற்றுக் கொடுத்து புது மனுஷனாக மாற்றுகிறாள் ரோசி,இருவருக்கும் குழந்தை பிறக்கிறது ,தன் தலைவன் தான் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று ரோசி மற்றும் குழந்தையோடு செல்கிறான் டேவிட்.
தலைவனின் கண் தொண்டனின் மனைவி மீது படுகிறது சூழ்ச்சி செய்து ரயில் மறியல் போராட்டத்தில் டேவிட் சிறைக்கு செல்கிறான் ,தன் கணவரை மீட்க தலைவனை நோக்கி ஓடுகிறாள்
ரோசி, கிழிந்த நாராக வீட்டுக்கு வருகிறாள்.
டேவிட் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ந்து போகிறான் ரோசி தற்கொலை செய்து கொள்கிறாள் அவள் கையில் இருக்கும் கடிதத்தில் இதற்கு காரணம் அரசியல் தலைவர் என்று எழுதிவிட்டு இறந்துவிடுகிறாள்.
நியாயம் கேட்டு டேவிட் செல்கிறான் அங்கு அவன் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு செல்கிறான் போகும் முன் தன் குழந்தையை சாராய வியாபாரி வேலப்பனிடம் தன் குழந்தையை ரவுடியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
22 வருடம் கழித்து டேவிட் விடுதலை பெற்று வருகிறான் தன் மகனுடன் சேர்ந்து தன் மனைவியின் சாவுக்கு காரணமாக இருந்த மூன்று நபர்களை வேட்டையாட பழிக்கு பழி தீர்க்க வெளியே வருகிறான்.
வேலப்பனிடம் தன் மகன் எங்கே என்று கேட்கிறார், அவன் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி என்று சொல்கிறான் வேலப்பன், டேவிட் அதிர்ந்து போகிறான்
அனைவரும் கைவிட்ட நிலையில் டேவிட் தனி ஆளாக பழிதீர்க்க நினைக்கிறார், மறுபக்கம் மகன் இந்த மிருகங்களை காப்பாற்ற நினைக்கிறார் இந்த வேட்டையில் யார் வென்றார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பா டேவிட் கதாபாத்திரம் அட்டகாசம்
தன் மகனை வேலப்பன் வீட்டு வாசலில் இருந்து எட்டி எட்டி பார்க்கும் போது அதற்கு இளையராஜா அவர்கள் ஒரு தாலாட்டு இசையை வாசித்து இருப்பார் பாருங்கள் கலங்காமல் இருக்க முடியாது.
தன் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரு தந்தையின் தவிப்பை கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் கமல்ஹாசன் அவர்கள்.
இளையராஜா அவர்களின் இசை படத்திற்கு பெரிய பலம் அப்பா, மகன் இருவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தை போட்டு அதன் நடுவே அந்த தாலாட்டு இசையை ஒலிக்க செய்து Bgm தெரிக்கவிட்டு இருப்பார் இளையராஜா அவர்கள்.
முதல் முறை கிளைமாக்ஸ் காட்சியை பார்பவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
மகன் கமல் துப்பாக்கியை எடுத்து தைரியமாக எந்த தயக்கமும் இல்லாமல் சுடும் போது அப்பா கமல், My son என்று மைக்கில் அழைக்கும் போது மகன் கமல் செய்வது அறியாமல் கலங்கி போய் அப்படியே நின்று விடுவார் கமல்ஹாசன் அவர்களை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு காட்சியில் நடித்து இருக்கவே முடியாது.
படத்தின் வசனங்கள் அட்டகாசமாக இருக்கும்
அந்த பூ நாகம் கதை முடிந்தவுடன் டாக்டரிடம் ,கேட்கிற மூடுல நீ இல்லைனாலும், சொல்ற மூடுல நா இருக்கேனே போன்ற வசனங்கள் நச்.
பாரதிராஜா அவர்கள் பல கிராமிய படங்களை இயக்கி வெற்றி பெற்ற நிலையில் அவரின் இயக்கத்தில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக மிக பெரிய வெற்றி பெற்றது, பிறகு கமல்ஹாசன் & பாரதிராஜா அவர்கள் மீண்டும் இணைந்து மிக பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் அளித்தனர் 1985 ல் இரண்டு படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்தது ஒன்று, ஒரு கைதியின் டைரி மற்றொன்று காலத்தால் அழியாத முதல் மரியாதை.
ஒரு கைதியின் டைரி இந்தி பதிப்பை பாக்கியராஜ் அவர்கள் அமிதாப்பச்சன் அவர்களை வைத்து ஆக்ரிரஸ்தா என்று எடுத்தார் இதில் என்ன ஒரு துணிச்சல் என்றால் தமிழில் மிகவும் பரபரப்பாக பேசபட்ட கிளைமாக்ஸை தூக்கி விட்டு இவர் வேறு ஒரு க��ளைமாக்ஸ் வைத்து வெற்றி பெற்றார்.
இந்தியில் அப்பா, மகன் பேசிக்கொள்ளும் உரையாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.
Read the full article
0 notes
வாழ்கையில ஒருத்தர் மேல மட்டும் கண்மூடி தனமாக நம்பிக்கை இருக்கும் அது ஏன் எப்படினு கூட நம்மளால சொல்லவே முடியாது அப்படி நான் நம்பிக்கை வச்ச ஒரு ஆளுனா அவரு திரு நடிகர் அஜித் குமார் மட்டும் தான் ஏன்னா? நான் 8 ம் வகுப்பு படிக்கும் காலத்தில அவரோட அட்டகாசம் படம் ஜூட்டின் இடத்துக்கு நான் போய் அவரு கூட நிக்கிற பாக்கியம் கிடைச்சது! என் வாழ்க்கையில ��வரை சந்தித்த ஒவ்வொரு நொடியும் பாக்கியமே வரலாறு படம் ஜூட்டின் இடத்துல விஜய் பார்க் ஓட்டல் ல பார்த்தேன். பல வருடங்களுக்கு பிறகு Globus dress show room la அவர பார்த்து நான் உங்களோட தீவிர ரசிகன் சொல்லி என்னிடம் இருந்த 10 ருபாய் நோட்டை எடுத்து அவரிடம் கையெழுத்து கேட்ட தருணம் எனக்காக அவர் காரில் இருந்த டைரியை கிழித்து கையெழுத்து இட்டு நான் ரூபாய் நோட்டுகளில் கை எழுத்து போடும் அளவில் பெரியவன் இல்லை என்று சொன்னா தருணம் ஆகினும் அவர் கையால் எனக்கு சமைத்து கொடுத்த வெய்டேபிள் பிரியாணி சமைத்து என்னை சாப்பிட வைத்துவிட்டு நான் சாப்பிட தட்டை அவர் கழுவிய தருணமாயின் பெசண்ட் நகர் பீச் ல அவரையும் அவரது மனைவி குழந்தையை பார்த்த தருணமாயின் நான் வாங்கி கொடுத்த சோளத்திதை குடும்பமாக சாப்பிட தருணமாகின் உண்மையான ஒரு மாமனிதருக்கு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் நான் வேலை செய்தா நாட்களில் எனது பாஸ் கூட காரில் வரும் போது என்னை எல்லோரும் கிண்டல் அடித்த தருணத்தில் அவர் நம்பருக்கு கால் பண்ணி ஷாலினி மேடம் கூட பேசும் போது அவர் வெளியே சென்று இருக்கிறார் பூபாலன் வந்தும் உங்களுக்கு கால் பண்ணி பேச சொல்லுறேனு ஷாலினி மேடம் சொன்னாதால எல்லாருமே என்னை வியந்து பார்த்த தருணாமாயின் உண்மையான ஒரு நடிகனுக்கு நான் உண்மையான ரசிகன் என்பதில் எனக்கு பெருமை தான் நீங்க எவ்வளவு பெரிய உயர்ந்தில் போனாலும் பழையதை இன்று வரை மறக்காமல் இருக்கும் உங்க அன்புக்கு என்றைக்குமே நன்றி கடன் பட்டிருக்கிறேன் தல அஜித் அவர்களுக்கு உங்க மனசு போல எப்பவுமே நீங்க நல்லா இருக்கனும் தல அஜித் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல https://www.instagram.com/p/CpDmc9yyC6t6WkMSRafufmSg1NhmAHAGYA8UmY0/?igshid=NGJjMDIxMWI=
0 notes
பொதும்பு அருகே தனியார் நிறுவன ஊழியர் நள்ளிரவில் படுகொலை: வழிப்பறி கும்பல் அட்டகாசம் | Employee murdered at midnight
பொதும்பு அருகே தனியார் நிறுவன ஊழியர் நள்ளிரவில் படுகொலை: வழிப்பறி கும்பல் அட்டகாசம் | Employee murdered at midnight
Published : 23 Feb 2021 03:15 am
Updated : 23 Feb 2021 08:18 am
Published : 23 Feb 2021 03:15 AM Last Updated : 23 Feb 2021 08:18 AM
யுவராஜ்
மதுரை
மதுரை மாவட்டம், பொதும்பு அருகே வழிப்பறிக் கும்பல் கத்தி யால் குத்தியதில் இளைஞர் உயிரிழந்தார்.
அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிராஜ். இவரது மகன் யுவராஜ் (30). இவர் பரவையில் மசாலா நிறுவனத்தில் ஓட்டுநர், விற்பனைப்…
View On WordPress
0 notes
GOAT FDFS | பேருந்தை வழிமறித்து அட்டகாசம் செய்த விஜய் ரசிகர்கள் | Vijay | N18S
GOAT FDFS | பேருந்தை வழிமறித்து அட்டகாசம் செய்த விஜய் ரசிகர்கள் | Vijay | N18S.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின�� முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
0 notes
Hey guys ,இன்னைக்கு நா இந்தியால இருக்குற ஒரு பெரிய prehistoric megalithic site -ல இருக்கேன்.prehistoric megalithic site அப்படி��ா வரலாரற்றுக்கு முந்துன காலத்துல பெரிய பெரிய கல்ல வச்சு பெரிய பெரிய structures-அ செஞ்ச இடம்(எடம்)-னு அர்த்தம். இது கர்நாடக்கால hire benakal-னு சொல்ற ஊருக்கு ஒதுக்க புறத்துல இருக்க,ஒரு கிராமத்துக்கு பக்கத்துல இருக்க மலைல இருக்கு.இந்த இடம்(எடம்) ரொம்ப மர்மமா இருக்கு ஏன்னா இங்க மலை உச்சில நூத்துகணக்குக்குல கல்லால செஞ்ச structures-அ பாக்குறதுக்கே விதியாசமா இருக்கு.
-பிரவீன் மோகன்
1 note
·
View note
தசமி தமிழ் பேய் படம் கொடூர பேய்யின் அட்டகாசம் Thasami
0 notes
உடல் எடை குறைந்து ஸ்லிமாக மாறிய பூஜா! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
உடல் எடை குறைந்து ஸ்லிமாக மாறிய பூஜா! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! #pooja #latestphotos #ut #utcinema #cinemanews #universaltamil
நடிகை பூஜா ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு பின்னர் அட்டகாசம், உள்ளம் கேட்க்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, ஓரம் போ, நான் கடவுள் போன்ற பல ஹிட் படங்களை தந்துள்ளார்.
இறுதியாக கடவுள்பாதி மிருகம்பாதி என்ற படத்தில் நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் பிஸ்னஸ்மேனை திருமணம் செய்து கொண்டார். அதன் பில் சிங்கள படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்…
View On WordPress
0 notes
யாழில் வன்முறைக்குழு அட்டகாசம் - தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து…
View On WordPress
0 notes
தாண்டிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பெருங்கானல், மங்களம்கொம்பு, தடியன்குடிசை, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் சம்பவத்தன்றுஇரவு பெருங்கானலை சேர்ந்த விவசாயியான கரியமங்களம், சோனைமுத்து, மணிவண்ணன், என்பவருக்கு சொந்தமான காபி…
View On WordPress
0 notes
பென்னிக்கல் பகுதியில் யானைகள் அட்டகாசம்: பயிர்கள் சேதம் ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்த யானைகள் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
2 notes
·
View notes