Tumgik
sauditamilnews · 2 years
Text
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கஃபாவைச் சுற்றியுள்ள தடுப்புகள் அகற்றப்பட்டன - மீண்டும் உம்ரா சீசன் தொடக்கம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கஃபாவைச் சுற்றியுள்ள தடுப்புகள் அகற்றப்பட்டன – மீண்டும் உம்ரா சீசன் தொடக்கம்
புனித காபாவைச் சுற்றியுள்ள தடுப்புகளை அகற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் வழிபாட்டாளர்கள் அல்லாஹ்வின் புனித இல்லத்தை தொடுவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு புனித மசூதிகளின் விவகாரங்களுக்கான பொதுத் தலைவர் பதவிக்கு தலைமை தாங்கும் ஷேக் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ், கடந்த செவ்வாயன்று இந்த முடிவை அறிவித்தார். கஃபாவைச் சுற்றியுள்ள…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் -அரஃபா நாள்
சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் -அரஃபா நாள்
இன்று வெள்ளிக்கிழமை, சவுதி அரேபியாவில் இந்த ஆண்டுக்கான அராஃபத் நாளான 9 து அல்-ஹஜ்ஜாவுடன் ஒத்துப்போகிறது. இது சூரியன் உதயமாகும் சிறந்த நாள். யாத்ரீகர்கள் தங்கள் ஹஜ் யாத்திரையி���் கிரியைகளில் மிக முக்கியமான அரபாவிற்கு செல்லுதல் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இந்த புனித நாளில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு, தொழுகை மற்றும் மன்னிப்பு தேடுவதன் மூலம் தங்கள் வெகுமதிகளைப் பெற ஆர்வமாக உள்ளனர். அரஃபா…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த தடை- சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம்
ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த தடை- சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம்
சவுதி அரேபியாவில் உள்ள குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், யாத்ரீகர்கள் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. சவுதி வர்த்தமானியின் அறிக்கையின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள் காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
சவுதி அரேபியாவில் மே மாத பெட்ரோல் விலை – சவுதி அரம்கோ
சவுதி அரேபியாவில் மே மாத பெட்ரோல் விலை – சவுதி அரம்கோ
சவுதி அரம்கோ நிறுவனம், மே 2022 மாதத்திற்கான பெட்ரோல் விலையை அவர்களின் இணையதளத்தில் புதுப்பித்துள்ளது. ஜூன் 2021 மாதத்திற்கான பெட்ரோல் விலையை பொறுத்து, பெட்ரோலுக்கான உள்ளூர் விலை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; பெட்ரோல் விலை – மே 2022 பெட்ரோல் 91: லிட்டருக்கு சவுதி ரியால் 2.18பெட்ரோல் 95: லிட்டருக்கு சவுதி ரியால் 2.33டீசல் : 0.63 சவுதி ரியால்/லிட்டர்மண்ணெண்ணெய் : 0.70 சவுதி…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
வெளிநாட்டிலிருந்து உம்ரா செய்ய வருபவர்களுக்கு 30 ஷவ்வால் 1443 (31 மே 2022) வரை மட்டுமே அனுமதி
வெளிநாட்டிலிருந்து உம்ரா செய்ய வருபவர்களுக்கு 30 ஷவ்வால் 1443 (31 மே 2022) வரை மட்டுமே அனுமதி
சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், ராஜ்ஜியத்திற்கு வெளியில் இருந்து உம்ரா விசாவில் வருபவர்களுக்கான அனுமதி 30 ஷவ்வால் 1443 (31 மே 2022) அன்றுடன் முடிவடைகிறது என தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் சீசனுக்கு முன்னதாக உம்ரா முன்பதிவுகளுக்கான இறுதி தேதி தொடர்பான கேள்விக்கு ஹஜ் அமைச்சகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது. சவுதி வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து வெளிநாட்டிலிருந்து…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
ஈதுல் பித்ரின் 4 நாட்களுக்கு Boulevard ரியாத் சிட்டியில் நுழைவு அனுமதி இலவசம்
ஈதுல் பித்ரின் 4 நாட்களுக்கு Boulevard ரியாத் சிட்டியில் நுழைவு அனுமதி இலவசம்
Boulevard ரியாத் சிட்டியில் நுழைவு அனுமதி இலவசம்சவுதி அரேபியாவின் பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்கி அலல்ஷிக் தனது ட்விட்டர் கணக்கில், 2022 ஈத்-உல்-பித்ரின் முதல் 4 நாட்களுக்கு பவுல்வர்டு ரியாத் சிட்டியிற்கு நுழைவதற்கான அனுமதி இலவசம் என்று அறிவித்தார். இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்: இங்கே கிளிக்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
இனி இ-உம்ரா விசாக்களை தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கலாம் - சவுதி ஹஜ் உம்ரா அமைச்சகம்
இனி இ-உம்ரா விசாக்களை தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கலாம் – சவுதி ஹஜ் உம்ரா அமைச்சகம்
சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உம்ரா விசா தொடர்பான புதிய தகவலை அறிவித்துள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் தனிப்பட்ட முறையில் உம்ரா விசா பெற விண்ணப்பிக்கலாம். எந்தவொரு வெளிநாட்டு உம்ரா சேவை முகவர் மூலமாகவும் அவர்கள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ராஜ்ஜியத்திற்கு…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
சவுதி அரேபியாவில் ரமலான் பிறை காணப்பட்டது -ரமலான் 2022
சவுதி அரேபியாவில் ரமலான் பிறை காணப்பட்டது -ரமலான் 2022
சவுதி அரேபியாவில் ரமலான் பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுதைர் மற்றும் தாமிரில் பிறை நிலவு தெரிந்தது. சவுதி அரேபியாவில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி சனிக்கிழமை ரமலான் 1, தொடங்கும். சந்திரனைப் பார்த்ததை உறுதிப்படுத்தும் போது நபி (ஸல்) அவர்களை மேற்கோள் காட்டி, சந்திரனைப் பார்த்ததன் அடிப்படையில் ரமலான் நோன்பு தொடங்கி முடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 2 years
Text
ரமலான் 2022 -இல் தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேர அறிவிப்பு - சவுதி மனித வள அமைச்சகம்
ரமலான் 2022 -இல் தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேர அறிவிப்பு – சவுதி மனித வள அமைச்சகம்
சவுதி மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு புனித ரமலான் மாதமான 1443 ஹிஜ்ரி (2022)-க்கான வேலை நேரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் 98 வது பிரிவின்படி, தனியார் துறையினருக்கு ரமலான் மாதத்தில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது. நம் அனைவரது நோன்பு மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை - ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்
இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை – ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்
இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், ஹஜ் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அடிப்படையில் ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்படும் என்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா விளக்கினார். ஹஜ் கடமைகளுக்கான ஏற்பாடுகளைத் தொடங்க இராஜ்ஜியத்தின் தலைமை ஆர்வமாக இருப்பதாகவும், சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைந்து இது தொடர்பான ஆய்வுகள்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
சவுதி அரேபியாவிற்கு வரும் பயணிகளுக்கான 3 கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்
சவுதி அரேபியாவிற்கு வரும் பயணிகளுக்கான 3 கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்
சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம், வெளிநாடுகளில் இருந்து ராஜ்ஜியத்திற்கு வரும் பயணிகளுக்கான மூன்று கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. இராஜ்ஜியத்திற்கு வெளியில் இருந்து வரும் மக்களுக்கும் இது பொருந்தும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்காமல் பயணிகளை சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதித்தல். தடுப்பூசி போடாதவர்களும் அனைத்து வகையான விசாக்களுடன் இராஜ்ஜியத்திற்குள்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
அப்ஷர் மூலம் டிரைவிங் ஸ்கூல் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்வது எப்படி?
அப்ஷர் மூலம் டிரைவிங் ஸ்கூல் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்வது எப்படி?
சவுதி அரேபியாவின் எலக்ட்ரானிக் பிளாட்ஃபார்ம் அப்ஷர், ஓட்டுநர் பள்ளியில் அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்வதற்கான முறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி குடிமக்கள், ஆண்கள், பெண்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த முறையில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன் பதிவு செய்யலாம் என்று விளக்கியுள்ளது. அப்ஷர் மூலம் ஓட்டுநர் பயிற்சிக்கான அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்வது எப்படி? உங்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
இரண்டு புனித மசூதிகளிலும் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை - ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்
இரண்டு புனித மசூதிகளிலும் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை – ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்
சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவியில் நுழையும் நபர்களுக்கான நோய்த்தடுப்பு நிலை சோதனையை, நேற்று முதல் (10 மார்ச் 2022 வியாழன்) ரத்து செய்துள்ளது. இரண்டு புனித மசூதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீக்குவதற்கான முடிவை செயல்படுத்தி வரும் அமைச்சகம், இதனை அறிவித்துள்ளது. புனித மசூதிகளில் சமூக விலகல்…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
ஈட்மர்னா மற்றும் தவக்கல்னா அப்ளிகேஷன்கள் மூலம் புனித ரமலான் மாதத்திற்கான உம்ரா அனுமதிபெறலாம்
ஈட்மர்னா மற்றும் தவக்கல்னா அப்ளிகேஷன்கள் மூலம் புனித ரமலான் மாதத்திற்கான உம்ரா அனுமதிபெறலாம்
சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், 2022 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி முதல் ஈட்மர்னா மற்றும் தவக்கல்னா மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்கான அனுமதிகளைப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. அல்லாஹ்வின் விருந்தினர்களின் சேவையில் பணிபுரியும் அமைச்சகமும் மற்ற நிறுவனங்களும் புனித ரமலான் மாதத்தில் வருகை தரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
சவுதிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பெறப்பட்ட குவாரன்டைன் கட்டணத்தை பயணிகளுக்கு திரும்ப செலுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்துல் - GACA
சவுதிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பெறப்பட்ட குவாரன்டைன் கட்டணத்தை பயணிகளுக்கு திரும்ப செலுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்துல் – GACA
சவுதி அரேபியாவில் உள்ள சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) தனிமைப்படுத்தலை ரத்து செய்வதற்கான அரசாங்க அறிவிப்புக்கு முன்னர், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் பேக்கேஜ் கட்டணத்தை திருப்பிச் செலுத்துமாறு ஜெனரல் ஏவியேஷன் உட்பட இராஜ்ஜியத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. GACA தனது சுற்றறிக்கையில், இந்த உத்தரவுகளுக்கு…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியில் தொழ இனி அனுமதி தேவையில்லை -சவுதி அரேபியா
மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியில் தொழ இனி அனுமதி தேவையில்லை -சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மக்கா ஹரம் ஷரீபிலும், மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவியிலும் தொழுகை அனுமதி பெறும் முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இருப்பினும், உம்ரா செய்யவும், ரவ்தா அல்-ஷரீஃபாவில் தொழுவதற்கும் ஈட்மர்னா மற்றும் தவக்கல்னா அப்ளிகேஷன் மூலம் அனுமதி பெறும் செயல் முறை தொடரும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. தவக்கல்னா அப்ளிகேஷனில் தடுப்பூசி செலுத்தியதாக…
Tumblr media
View On WordPress
0 notes
sauditamilnews · 3 years
Text
உலகின் எந்த நாட்டவரும் ராஜ்ஜியத்திற்கு வர தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதுமானது - PCR டெஸ்ட் தேவையில்லை
உலகின் எந்த நாட்டவரும் ராஜ்ஜியத்திற்கு வர தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதுமானது – PCR டெஸ்ட் தேவையில்லை
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடைபிடிக்கப்பட்டு வந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சவுதி அரசு தளர்த்தியுள்ளது. 1-மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மஸ்ஜிதுல் நபவியில் சமூக விலகல் தேவையில்லை. ஆனால் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும். 2-அனைத்து இடங்களிலும் சமூக விலகல் தேவையில்லை.3-திறந்த இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை. இருப்பினும், மூடிய இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்.முழுமையாக தடுப்பூசி ��ோடப்பட்டவர்களுக்கு…
Tumblr media
View On WordPress
0 notes