#மர
Explore tagged Tumblr posts
venkatesharumugam · 11 days ago
Text
#பால்குடி_பன்றிக்கறி
1725ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஒரு ரெஸ்டாரெண்ட் இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்த பழமையான ரெஸ்டாரெண்ட் இந்த 2025இல் தனது 300ஆவது வயதை நிறைவு செய்கிறது! இப்போதே ஆச்சரியப்பட வேண்டாம் முழு பதிவையும் படித்துவிட்டு ஒரு ரூம் போட்டே வியப்போமா!
நம்ம ஊரிலேயே சிறு வயதில் நாம் ரசித்து ருசித்த பல ஓட்டல்கள் இப்போது இல்லை! வெறும் 50 ஆண்டுகளிலேயே இப்படி இருக்கும் போது 300 ஆண்டுகள் ஒரு கடை அதிலும் பிரத்யேகமா 2 வகை இறைச்சியை சமைத்து 10 தலை முறைகளை தாண்டி மக்களை இன்னும் தங்கள் உணவின் பிடியில் வைத்திருப்பது முதல் அதிசயம்! இன்றும் பரபரப்பாக இயங்குவது 2வது அதிசயம்!
உலகின் மிகப் பழமையான இந்த ஓட்டல் இருப்பது ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில்! Casa Botin என்பது இந்த ஓட்டலின் பெயர்! 1590இல் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது காஸா போடின் ஓட்டல்! இந்த ஓட்டலின் வயது 300 அந்தக் கட்டிடத்தின் வயது 435! கிட்டத்தட்ட Madrid நகரமும் அப்போது தான் தலைநகரமனது!
1560 ஆண்டு ஸ்பெயினை ஆண்ட மன்னர் இரண்டாம் பிலிப்பே Madrid நகரை ஸ்பெயினின் தலைநகராக அறிவித்தார்! அதற்கு 30 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது இந்தக் கட்டிடம்! 300 ஆண்டுகளாக இங்கு அப்படி என்ன ஸ்பெஷல் உணவு? பன்றி இறைச்சிய��ம், ஆட்டிறைச்சியும் தான்! 300 ஆண்டுகளுக்கு முன்பு தந்த அதே பாரம்பரிய முறை ருசியில் சமைத்துத் தருகிறார்கள்!
மனிதன் இறைச்சிக்காக வளர்த்த மிருகங்களில் முதலிடம் பன்றிக்கு தான்! உலகிலேயே இன்று அதிக மக்கள் உண்ணும் கறி பன்றிக் கறியே! பிரத்யேகமான குட்டிப் பன்றி & ஆடுகளை மாய முக்கோணம் என்றழைக்கப்படும் செபுல்வேதா-அரண்டா-ரியாசா என்னும் இடத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறார்கள்! இந்த இறைச்சிகளின் தனித்த ருசிக்கு இதுவே காரணமாகும்!
வெளிநாடுகளில் பன்றி, மாடு, மான் இறைச்சிகள் கிடைப்பது சர்வ சாதாரணம் தான்! ஆனால் காஸா போடின் பன்றி & ஆட்டு இறைச்சிகளின் சிறப்பு அவை 4- 6 வார குட்டிகளாக இருக்கும் போதே இறைச்சிக்காக கொல்லப்பட்டுவிடும்! அதாவது தாய்ப் பால் குடித்துக் கொண்டிருக்கும் குட்டிகளின் கறி! நம்ம ஊரில் சொல்வாங்களே பால் குடி மறக்காத பச்சிளம் குழந்தைன்னு!
பால் குடிக்கும் பருவத்திலேயே இறைச்சிக்காக வெட்டப்படுவதால் இந்த இறைச்சிகள் மிக மிக மிருதுவாகவும் அதிக ருசியாகவும் இருக்கின்றன! கறியும் தோலோடு எளிதில் வேகிறது! வெங்காயம், பூண்டு, ஒயிட் ஒயின், உப்பு, மிளகு, பிரியாணி இலை போன்ற பொருட்களை இதனுடன் சேர்ப்பதால் அது கறியின் ருசியை மேம்படுத்தி ஒரு அற்புதமான ருசி அனுபவத்தை தருகிறது!
அதே போல பால்குடி மறக்காத ஆடு & பன்றிகளை பாரம்பரிய முறையில் சமைப்பதே காஸா போடின் தனிச் சிறப்பு! இந்த இறைச்சி மிகவும் மிருதுவாக இருக்கும்! கறியின் தோல் நன்கு வறுபட்டு ருசிக்க அருமையாக இருக்கும்! இந்தக் கறியை கஸ்டமர் விருப்பம் போல மசாலாக்களை சேர்த்து லைவாக சமைத்துத் தருவார்கள்! நம்ம ஊரில் இரவு புரோட்டா கடையில் அமர்ந்து..
எக்ஸ்டிரா 1 முட்டை போட்டு ஒரு கொத்து போடுங்க மாஸ்டர்.. மட்டன் சுக்காவை வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு நல்லா ப்ரை பண்ணுப்பா.. பெப்பர் தூக்கலா ஒரு ஆஃப் பாயில் போடுண்ணே என இன்று நாம் ஆர்டர் கொடுக்கும் வழக்கத்தை 17ஆம் நூற்றாண்டிலேயே ஸ்பெயின் மக்கள் துவக்கிவிட்டனர்! உலகிற்கே லைவ் கிச்சனின் முன்னோர்கள் ஸ்பெயின் நாட்டவரே!
உலகெங்கும் ஸ்பெயின் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் ஸ்பானிஷ் கலாச்சார உணவின் அடையாளமாக இந்த பன்றிக்கறி இருக்கிறது! போர்ச்சுகல், க்யூபா, டொமினிக் குடியரசு, ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தக் கறி மிகவும் பிரசித்தம்! ஸ்பானிஷ் மொழியில் ‘லெச்சான்’ (பால் பன்றி) எனவும் போர்ச்சுகல்லில் ‘லெய்டாவோ’ என்றும் அழைக்கப்படுகிறது!
300 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க காஸா போடின் சமையலறை இன்று வர�� ஓய்வின்றி இந்த 2 இறைச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகிறது! 300 வருடப் பழமையான ஓக் மர ஓவன் அடுப்பில் இந்த உணவுகள் உணர்வுகளோடு சமைக்கப்படுகின்றன ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் தலை சிறந்த பத்து கிளாசிக் உணவகங்களில் இதற்கு 3வது இடத்தை வழங்கியுள்ளது!
பன்றி & ஆடு மட்டுமின்றி நேர்த்தியாக சமைத்த போட்டின்-ஸ்டைல் கிளாம்ஸ், காஸ்டிலியன் சூப், புத்துணர்வூட்டும் காஸ் பாச்சோ போன்ற பாரம்பரிய உணவுகளுடன் ஸ்பெயினின் சிறந்த ஒயின்களுடன் (ஆஹா கவிதை) கூடிய பலப்பல ருசியான உணவுகளையும் நீங்கள் இங்கே ருசிக்கலாம். இதற்கான சிறந்த செஃப்கள் இந்த உணவுகளை உரிய முறையில் சமைக்கிறார்கள்!
காசா போடின் உணவகம் ஏராளமான இலக்கிய ஆளுமைகளுக்கு உணவு பரிமாறியுள்ள பெருமையைப் பெற்றது! எர்னஸ்ட் ஹெமிங்வே, பெனிட்டோ பெரெஸ் கால்டோஸ், கிரஹாம் கிரீன் மற்றும் மரியா டியூனாஸ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களில் இந்த உணவகத்தை பின்னணியாக வைத்து நாவல் எழுதியுள்ளனர்! இன்றைக்கும் இங்கு சாப்பிட டிமாண்ட் உள்ளது!
முன்பதிவு இன்றி இங்கெல்லாம் போய் உணவருந்தவே முடியாது! ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் சென்று ருசித்து வரும் இடம் இந்த காஸா போடின் உணவகமாகும்! Madrid நகரும் இந்த ஓட்டலும் ஒரே நேரத்தில் உருவான பெருமை கொண்டவை! ஸ்பெயினின் கலாச்சாரமும், பண்பாடும் இக்கறியின் ஒவ்வொரு துணுக்கிலும் உள்ளது என்கிறார்கள் மிகுந்த பெருமையுடன்!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
1 note · View note
sreepalanimuruganagency · 17 days ago
Text
Tumblr media
திருமண சீர்வரிசை காம்போ
61/2 அடி மர பீரோ 6X 5 மார்க்கட்டில் 6X 5 ஸ்ப்ரிங் மெத்தை தலையணை-2
ரூ. 24,999 மட்டுமே
ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சிஸ்! 📍 முகவரி : காமராஜ் பஜார், போடி 📲 தொடர்புக்கு : +91 98421 20320, +91 98421 20820
0 notes
karuppuezhutthu-blog · 5 months ago
Text
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin inaugurates kalaignar centenary park tomorrow
சென்னை: கதீட்ரல் சாலையில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்த��ட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ��தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும்,…
0 notes
thenewsoutlook · 6 months ago
Text
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் - கருத்தரங்கு
��ஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், நறுமணப் பயிர்கள், அவகோடோ மற்றும் கிராம்பு உள்ளிட்ட மரவாசனை பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள்…
0 notes
cosmoprodental32 · 11 months ago
Text
சொத்தை பல் வரும் முன் தடுப்பது எப்படி? பற்களை பாதுகாப்பது எப்படி? பல் மர...
youtube
0 notes
noolagan · 1 year ago
Text
https://noolagan.com/2024/03/பயத்திலேயே-வாழ்கிறான்
பயத்திலேயே வாழ்கிறான்
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான்.
ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள்.
அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான்.
"சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும்" என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான்.
அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது.
இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா… அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா….“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்…. “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை.
“எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது
பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்… ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது.
இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான்.
அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்… “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாலி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்… “அவன் தைரியசாலி கிடையாது. வேண்டுமானால்
0 notes
udaya-8 · 1 year ago
Text
கடனை தீர்க்கும் பரிகாரம் என்ன? 108 கொழுக்கட்டைகள் செய்து சங்கடஹர சதுர்த்தி நாளில், அரச மர விநாயகர் கோயிலுக்கு அருகம்புல் மற்றும் வன்னி இலை மாலை சாற்றி தேங்காய் நைவேத்யம் செய்து அந்த 108 கொழுக்கட்டைகளையும் பின்பு தானம் செய்ய வேண்டும். இப்படி மூன்று சங்கடஹர சதுர்த்தி திதிகளில் தொடர்ந்து செய்து வர கடன் ப்ரச்சனை தீரும்.
இரண்டாவது பரிகாரம் - ஒவ்வொரு செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ஆஞ்சநேயரை வணங்கி வரவும். மற்றும் இயலாதவர்களுக்கு அல்லது பைரவருக்கு தானம் செய்வது நல்லது.
0 notes
esamayal · 1 year ago
Text
இது தெரியுமா? சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர தேமல் மறையும் !
குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப் படுகிறது.
வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது.
சீத்தாப் பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப் பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது.
0 notes
puresoul369 · 1 year ago
Text
எண்ணெய் குளியல் : - { உடல் முழு நலம் பெறும் }
பயன்படுத்த வேண்டிய எண்ணெய் : - 
மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ( பாதுகாப்பானது)
[ஃ காய்ச்சாத பச்சை எண்ணையை பயன்படுத்த கூடாது ]
காலை வெயில் ஏறுவதற்கு முன்பே குளித்து முடித்து விட வேண்டும் 
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் சுரம் ( காய்ச்சல்) வரும் வாய்ப்பு உள்ளது 
---> ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சிறந்த கிழமைகள் - புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை
---> பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சிறந்த கிழமைகள் - செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை
மனித உடல் மூன்று வகை :- ( தேகம் - உடல்)
1) வாத உடல் ( காற்று உடல்)
2) பித்த உடல் (நெருப்பு உடல் அல்லது வெப்ப உடல் அல்லது சூடான உடல்)
3 )கப உடல் ( நீர் உடல் அல்லது குளிர்ச்சியான உடல்)
எண்ணெய் தயாரிக்கும் முறை :-
✓ வாத உடல் உள்ளவர்கள் ( காற்று உடல் ) - 
சீரகம் சிறிது மற்றும் 2 பூண்டு பல் தட்டி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்
✓ பித்த உடல் உள்ளவர்கள் ( நெருப்பு உடல் ,  வெப்ப உடல் , சூடான உடல்) -
 நல்லெண்ணெயை லேசாக சூடு பண்ணி 1 ஸ்பூன் அளவு சீரகம் போட்டு காய்ச்சி சீரகம் கருகும் முன்பு ஆதாவது சீரகம் உடைந்து வரும் நேரத்தில் அந்த பதத்தில் இறக்கி வைத்து பயன்படுத்தலாம்
 ✓ கப உடல் உள்ளவர்கள் ( நீர் உடல் அல்லது குளிர்ச்சியான உடல் ) -
 100 மில்லி நல்லெண்ணெயில் 1 கை அளவு மிளகு போட்டு 10 நாட்கள் வெய்யிலில் காய வைத்து விட்டு எடுக்க வேண்டும்…மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் நல்லெண்ணெயில் ஊறி எண்ணிக்கையில் மிளகின் ஆற்றல் இறங்கி கலந்து விடும்…அந்த எண்ணெயை குளிக்க பயன்படுத்தலாம்
✓ கப உடல் உள்ளவர்கள் உடனே அவசரமாக எண்ணெய் தேய்த்து குளிக்க தேவை என்றால் - நல்லெண்ணெயில் 2 மிளகாய் வற்றல் போட்டு காய்ச்சி கருகிய பிறகு கருகும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்…கருகிய 2 மிளகாய் வற்றலை வெளியே எடுத்து விடவும்…இந்த நல்லெண்ணெயை கண்களை மூடி கண்கள் மேல் படாமல்  தேய்த்து குளிக்க வேண்டும்…
✓ நமது உடல் வாத உடலா பித்த உடலா கப உடலா என்று தெரியவில்லை என்றால் - 
மூன்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும் - 1 பல் பூண்டு , சிறிது சீரகம் , ½ அளவு மிளகாய் வற்றல் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்
பத்தியம் : -
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாள் அன்று முழுவதும் 
1 ) குளிர்ச்சியான உணவுகள் உண்ண கூடாது
2 ) அசைவம் ( மாமிசம் ) சாப்பிட கூடாது
3 ) மோர் , நெய் சாப்பிட கூடாது
4 ) பகலில் தூங்க கூடாது
5 ) வெய்யிலில் அதிகம் நிற்க கூடாது நடக்க கூடாது
6 ) தாம்பத்யம் கூடாது
instagram
1 note · View note
truebroker · 1 year ago
Text
விவசாய நிலத்தை வாங்கினால் 10 வகை மர கன்றுகள் இலவசம் || மதுரை - சிவரக்கோட்டையில் *********************************************************************** #madurai #agriculture #madurailand #FarmLandForSale #farmland#agriculturelandforsale #nearmadurai #roadbased #roadsideland #manamadurai #thoonganagaram #mattuthavani #sivarakottai #LandForSale #landscape #truebroker #buysell #NoBrokerage #nobrokerfee *********************************************************************** 🏞 21- சென்ட் & 22- சென்ட் & 25-சென்ட் பரப்பளவில் விற்பனைக்கு உள்ளது 🏞 1- சென்ட்டின் விலை Rs. ₹ 27,999/- மட்டுமே 🏞 Gate வசதி 🏞 கம்பி வேலி வசதி 🏞 புரோக்கர் கமிசன் இல்லை 🏞 நிலத்தை பார்வையிட Car வசதி உள்ளது 🏞 Bore Water வசதி உள்ளது 🏞 EB வசதி உள்ளது 🏞 10 வகை மர கன்றுகள் இலவசம் 🏞 பண்ணை நிலத்திலிருந்து நான்கு வழிச்சாலை 2.5 கி.மீ தூரத்தில் உள்ளது *********************************************************************** 🌐 True Broker App Link : https://play.google.com/store/apps/details?id=com.sgs.truebroker&pcampaignid=web_share 🌐 True Broker Website : https://truebroker.in/dv?id=31092002458 📲 Contact no : 7010037136 ***********************************************************************
0 notes
venkatesharumugam · 10 months ago
Text
#வறட்டி_தந்த_வாழ்வு
1986 வறுமை எங்கள் வீட்டில் வளமாக வாழ்ந்து கொண்டிருந்த காலம்! 1996 வரை அதன் ஆட்சி நடந்தது! வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பது யார் வாழ்விலும் வரக் கூடாத ஒன்று! ஏனோ எங்களுக்கு அந்த வாய்ப்பையும் இறைவன் தந்து மகிழ்ந்தான்! வறுமை எங்களை மிரட்டிக் கொண்டிருந்த அந்நாளில் வறுமையை விரட்ட வழியில்லை என்றாலும் அதை அதட்டி மிரட்டி வைத்ததே இந்த வறட்டி!
வீட்டில் நாங்கள் 4 பிள்ளைகள்! மூத்தவன் எனக்கு 14 வயது, பெரிய தம்பிக்கு11, தங்கைக்கு 9, கடைசி தம்பிக்கு 6, அனைவருமே நேற்று வரை ஆண்டாள் பாசுரத்தில் பாடியது போல நெய்யும், பாலும் முழங்கையில் வழிய உண்டவர்கள்! எங்கள் முன் திடீரென பழைய சோற்றை வைத்து சாப்பிடு என்றனர்! புலிகள் புளிச்சோறு கொடுத்தால் உண்ணுமா? வறுமை எங்களுக்குத் தந்த..
முதல் அதிர்ச்சி பழைய சோறு! வீட்டில் மின்சாரம் கிடையாது என்பது அடுத்த அதிர்ச்சி! வீட்டின் அறைகளில் எல்லாம் மின் விசிறிகள், பளிச்சென வெண்ணிறத்தில் டியூப் லைட்டுகளால் மின்னிய மாடி வீட்டிலிருந்து சிம்னி விளக்கின் மங்கிய மஞ்சள் ஒளி மினுக்கிய.. ஓட்டு வீட்டு வாழ்க்கை! அப்பா சம்பாதித்ததில் மிச்சம் இருந்தது 1 சென்ட் அளவு கூட இல்லாத இந்தப் பூர்விக வீடு ஒன்றே!
வாடகை பிரச்சனை இல்லை! கரண்ட் இல்லாததால் பிரச்சனையே இல்லை! வயிறு தான் பிரச்சனை! ஆரம்பத்தில் பழைய சோறுக்கு முகம் சுளித்து அதை ஒதுக்கிவிட்டு பிறகு சரி சாப்பிடலாம் என்ற மனநிலைக்கு நாங்கள் வந்த போது பழைய சோறு எங்களோடு கோபித்துக் கொண்டது! நான் உன்கிட்ட வந்த போது வேணாம்னு சொல்லுவே, இப்போ நீ எங்கிட்ட வந்தா நான் ஏத்துக்கணுமா?
ஆம் வீட்டில் வறுமை எங்களுக்கு 2 வேளை உணவு என்று ரேஷன் செய்திருந்தது! அப்பாவின் சொற்ப வருமானத்தை அம்மா நசுக்கி நுணுக்கி செலவழிப்பார்! 10 பைசா கூட தேவையில்லாத செலவு இருக்காது! முதியவர்களின் ரயில் கட்டணச் சலுகையைப் போல எங்கள் பாக்கெட் மணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது! சட்டையில் பாக்கெட்டே இல்லாத எங்களுக்கு எதற்கு பாக்கெட் மணி?
வீட்டில் இருந்த பழைய பித்தளைப் பாத்திரங்கள் ஓரளவு எங்கள் பசி தீர்க்க அடகுக்கடையின் சிறைக்கு ��ென்றன! ஒரு கட்டத்தில் பசியின்மையையும் பாத்திரங்களையும் மீட்கவே முடியவில்லை! 2 வேளை உணவு 1 வேளை ஆனது! இப்போது அம்மா துளவில்லை வறுமையோடு மோத துணிந்து முடிவு செய்தார்! தொழில் தெரிந்த அப்பாவிற்கே வேலை இல்லை என்ற காலத்தில் பள்ளிக்கே..
செல்லாத அம்மா என்ன சம்பாதித்துவிட முடியும் என்று கேலியாக அம்மாவை நோக்கி கூக்குரலிட்ட வறுமையை கூப்புக்குள் உட்கார வைத்தார்! வீட்டில் தினமும் எரிவது சிம்னி விளக்கு & திரி அடுப்பு! இரண்டிற்கும் மண்ணெண்ணெய் தேவை! அன்று வீட்டிற்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷனில் உண்டு! அம்மா விறகடுப்புக்கு மாறினார்! விறகு விலைக்கு வாங்கவில்லை! நம் நாட்டின்..
கடன் போல நம் ஊரெல்லாம் பெருகியிருக்கும் சீமைக் கருவேல மர முட்களை வெட்டி எடுத்து வந்தார்! மாட்டுச் சாணங்களை சேமித்து அதில் உமி சேர்த்து வறட்டி தட்டுவார்! வீட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் முட்புதர்களுக்கு நடுவில் கிரிக்கெட் பிட்ச் போன்ற இடத்தில் சென்று தட்டி வைத்து வருவார்! தங்கை உமாவும் உமியோடு அம்மாவுடன் செல்வார்! (உமாவை உமி என்றழைக்க இதுவும் ஒரு காரணம்)
மறுநாள் தட்டி வைத்த வறட்டி ஒரு புறம் காய்ந்ததும்! தோசையை திருப்புவது போல திருப்பிப் போடும் வேலையும் உமாவுடையது! வறட்டி இருபுறமும் நன்கு காய்ந்ததும் போய் எடுத்து வருவார்! அபூர்வமாக நானோ தம்பியோ போய் அதை எடுத்து வருவோம்! வீட்டு உபயோகத்திற்கு 4 லிட்டர் மண்ணெண்ணெய்யை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்பனை செய்தார் அம்மா! முள் விறகோடு..
வறட்டியும் எங்கள் வீட்டு அடுப்பில் எரிந்து எங்கள் வயிற்றில் எரிந்த பசியைப் போக்கியது! எரிந்த வறட்டியின் சாம்பலை மீந்த டிடர்ஜெண்ட் சோப்போடு சேர்த்து பாத்திரம் விளக்கும் டிஷ்வாஷை அம்மா கண்டுபிடித்தார்! முட்டை சாம்பல் என்னும் கட்டிச் சாம்பல் பொசு பொசுன்னு மென்மையான பவுடர் போல உதிரும் அதை பல் பொடியாக உபயோகிப்போம்! வீட்டில் இந்த செலவெல்லாம்..
மிச்சமானது! வறட்டி தட்ட சோம்பல் பட்ட அக்கம் பக்கத்தினர் சிலர் அம்மாவிடம் விலைக்கு வறட்டி கேட்டனர்! 5 வறட்டி ஒரு ரூபாய்னு விற்க ஆரம்பித்தார்! விரைவில் அது 4 வறட்டி ஒரு ரூபாய் ஆனது! விலையை உயர்த்தாமல் அளவை குறைக்கும் தரக்கோட்பாடு அது! இடையில் வெட்டி வந்த முள்ளும் விற்பனை செய்தார்! வீட்டில் தினமும் பணம் புழங்கியது! எங்கள் வீட்டு நட்சத்திர ஜன்னலில்..
வானம் எட்டிப்பார்க்கவில்லை என்றாலும் நல்ல சோறு கிடைத்தது! உனக்கெல்லாம் ஒரு வேளை உணவு தான் என்று சவால்விட்ட வறுமையை எதிர்த்து இரண்டு மாதங்களிலேயே அதை 3 வேளை உணவாக ஆக்கி.. கையில் தினமும் வருமானமும் கொண்டு வந்தார்! ஆம் வெறும் வரட்டியால் வறுமையை விரட்டினார் அம்மா! என் அம்மா மட்டும் நாட்டின் நிதியமைச்சராக இருந்திருந்தால் இன்றும்..
பெட்ரோல் ₹40க்கு கிடைத்திருக்கும் என்று எவர் மீதும் அடித்து சத்தியம் செய்வேன்! அந்த வறுமை தான் எங்களுக்கு வாழ்க்கையைச் சொல்லித் தந்திருக்கிறது! இந்தப் பதிவை எடிட் செய்து “மாட்டுச் சாணத்தின் மகத்துவங்கள் “சாணத்திலும் சாதிக்கலாம்” என்று பதிவுகள் வந்தாலும் வரலாம்! அதற்கு கம்பெனி பொறுப்பாகாது!
Tumblr media
1 note · View note
sharpvideo · 1 year ago
Video
youtube
காதில் செவிட்டு காது கேட்பதில் பிரச்சனை Hearing Aid தேவையில்லை! சித்த மர...
0 notes
sreepalanimuruganagency · 1 month ago
Text
Tumblr media
கல்யாண சீர்வரிசை காம்போ
சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் சிறந்த தரத்துடன் குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்கி மகிழுங்கள்…
→ 5 அடி மரக்கட்டில், மெத்தை
→ தலையணை-2, மெத்தைவிரிப்பு-1
→ 61/2 அடி மர பீரோ, குத்துவிளக்கு-1
அனைத்தும் சேர்த்து ரூ.24,000 மட்டுமே
ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சிஸ்! 📍 முகவரி : காமராஜ் பஜார், போடி 📲 தொடர்புக்கு : +91 98421 20320, +91 98421 20820
0 notes
karuppuezhutthu-blog · 6 months ago
Text
கோவில்பட்டியில் மர தடி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல் | Worker dies after Tree stump falls in Kovilpatti 
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குச்சி கம்பெனியில் மர தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (55). இவர் தனியார் குச்சி கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று (சனிக்கிழமை) கம்பெனியில் மாசிலாமணி பணியில் இருந்தார். அப்போது…
0 notes
hiikidstv · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மாம்பழ மர கதைகள் தொகுப்பு - Magical Golden Mango Tree Stories Collection | Maa Maa TV
0 notes
3dnurseryrhyme · 1 year ago
Video
youtube
மந்திர தங்க மாம்பழ மர கதைகள் தொகுப்பு - Magical Golden Mango Tree Stories Collection | Maa Maa TV
0 notes