#தேன்
Explore tagged Tumblr posts
southindianrecipes2023 · 1 year ago
Text
0 notes
tamiltypography · 8 months ago
Text
Tumblr media
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன் #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype⁠ ⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ .⁠ #365project #thariqueazeez #drawing #TYx https://www.pinterest.com/pin/119556565103745551/?utm_source=dlvr.it&utm_medium=tumblr
2 notes · View notes
yennamalli · 1 year ago
Text
காலம் நேரம் இனி நம்மோடு உறவு
உன் ஓசையில் என் மனதில் தேன் துளிகள்,உன் விழியில் என் ஜன்னலில் பொன் முத்துக்கள், உன் பார்வையில் மலர்ந்தேன் கொடியாய் பூத்த��ன்,உன் மௌனத்தில் என் ஓசையை நேசித்தேன், உன் இதழ்களின் ஓசையில் என் வண்ணங்கள் கலந்தேன்,உன் பெயர் சொல்லும் ஓசை இமை சிந்தும் பரிபாஷை, காலத்தில் நான் நீ வேர் அல்ல,வாழ்க்கையில் நீ நான் நம் பேர் சொல்ல, நாளை மீதி வாழ்க்கை உன்னோடு,நான் சேர வா? என் தோழி அன்று காதலி இன்று, இனி புது…
Tumblr media
View On WordPress
2 notes · View notes
sirukathaigal · 19 hours ago
Text
புதிய பயணம் - புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
கதையாசிரியர்: புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.
1. ஒரு விடியலுக்கு முன்…! 2. தேன் சிந்துமோ வானம்? 3. தப்புக் கணக்கு 4. அறிமுக விழா 5. பிறந்த நாள் 6. புதிய பயணம் 7. பாரதி 8. புத்துணர்ச்சி 9. மீறல்கள் 10. தானம் 11. எழுச்சி
Tumblr media
0 notes
venkatesharumugam · 25 days ago
Text
#ஆஹா_என்னப்_பொருத்தம்
வெளிநாட்டு ஆண் அல்லது பெண் நமது இந்தியர்களை திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடிகளை நாம் வியந்து பார்ப்போம் அல்லவா! அப்படி உணவுகளிலும் வித்யாச ஜோடிகளைப் பற்றித் தான் இந்தப் பதிவே! தமிழர்களின் உணவு ரசனை எத்தகைய சிறப்பானது என்பதற்கு ஒரு சோறு பதம் தான் இந்தப் பதிவு..!
☕️ டீ - மிக்ஸர் - முறுக்கு 🥨
தமிழ்நாட்டு டீக்கடைகளை வித்யாசமான உணவு ரசனைகளின் ஊற்று எனலாம்! இங்கு தான் பலப்பல புது காம்போக்கள் உருவாகின்றன! உணவுகள் பற்றிய விஞ்ஞானத்தில் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான எடிசன்கள் பிறந்து இருக்கின்றனர் என்றால் அது மிகையில்லாதது! நம்ம ஊரு டீக்கடை பலகார வகைகளே அதற்குச் சான்றாகும்!
டீக்கடை பலகாரங்கள் பற்றி வேறு பதிவில் பார்ப்போம்! இப்போ வித்யாச காம்போ! க்ளாஸில் சூடான டீ வாங்கி அதில் கைப்பிடி மிக்ஸரை அள்ளிப் போட்டு குடிக்கும் அந்த யோசனை முதலில் யாருக்கு வந்ததுனு சரித்திர சான்றுகள் ஏதுமில்லை! டீ&மிக்ஸரா கேட்க ஒரு மாதிரியா இருந்தாலும் நல்ல ருசியான காம்போ இது!
பொ��ி மிக்ஸரா இல்லாம கொஞ்சம் மோட்டாவான மிக்ஸர் அதில் உள்ள நிலக்கடலை பருப்பு, கடலை பருப்பு சகிதம் தேயிலையின் மணமும், இனிப்பும் மிக்ஸரின் காரமும் நமது நாவில் இணையும் போது அட! சொல்ல வைக்கும்! பின்னே மனைவி அமெரிக்காவா இருந்தாலும் அவளும் பெண் தானே! டீயில் மிக்ஸருக்கு பதில்..
காராபூந்தி, காராசேவு போட்டு ருசிப்பவர்களும் இருக்கிறார்கள்! மதுரையில் தேன் குழல் போல இருக்கும் அரிசி முறுக்கை ஒரு நொறுக் நொறுக்கி டீயில் போட்டு குடிப்பார்கள்.சுருள் சேவு, பட்டை சேவு போட்டுக் குடிக்கும் பழக்கமும் பாண்டிய நாட்டின் வழக்கமாகும்! அசட்டு இனிப்பான அச்சு முறுக்கு, இனிப்பு சேவு போட்டு..
டீ குடிப்பவர்களும் ஏராளம்! டீ மட்டுமின்றி பாலில் இதை போட்டுக் குடிப்பவர்களும் உண்டு! டீ க்ளாஸில் மேலாகப் போட்ட மிக்ஸரை முதலில் டீயோடு மொறு மொறுன்னே ருசிப்பார்கள்! டீ குடித்து முடிக்கும் போது மிக்ஸர் டீயில் நன்கு ஊறியிருக்கும். அதை லாவகமாக ஒரு ஆஃப்பாயிலை வாயில் கவிழ்ப்பது போல..
க்ளாசோடு வாயில் கவிழ்த்துவிட்டு பெருமிதத்துடன் தங்கள் உதடுகளை துடைக்கும் ஸ்டைல் தென் தமிழகத்திற்கே உரித்தான ஸ்டைலாகும்! இந்த டீ - மிக்ஸர் - முறுக்கு காம்போவை தென் தமிழ்நாட்டின் டீக்கடை மரபுன்னு கூட சொல்லலாம்!
🌮 பூரி - சாம்பார் - சட்னி 🥘
சேர்த்த ஜோடி சேட்டு வீட்டுப் பொண்ணா இருந்தாலும் எப்படி இரு மனங்கள் கலந்ததோ அப்படி வட இந்திய தென் இந்திய சமையல் கலையும் சங்கமித்த இடம் தான் இந்த பூரி - சாம்பார் - சட்னி! வட இந்தியாவிலேயே பூரி சப்பாத்திக்கு தால் செய்யும் பழக்கம் உண்டு இதனால் பூரி சாம்பார் காம்போவில் பெரிய வித்யாசம் இல்லை!
ஆனா பூரிக்கு சட்னி ஒரு வித்யாசமான இணை! பூரி, சப்பாத்தி, ஏன் புரோட்டாவுக்கு கூட சட்னி தொட்டுகிட்டது நாங்க தான்னு கோவை மக்கள் காலரை தூக்கிவிட்டுக்குறாங்க! ஆனா அந்தப் பெருமை நெல்லைக்கு தானாம்! அங்கு சைவப்பிள்ளை உணவு மெஸ்கள் அதிகம்! பொடி தோசை வகைகளின் தாய்வீடும் இதுவே!
இந்திய சுதந்திரத்திற்கு முன்பே பூரிக்கு கிழங்கு கிடையாது என கடை வாசலில் போர்டு தொங்குமாம். மேலும் நெல்லையில் வித விதமான அற்புத ருசியில் சொதிகள் கிடைக்கும்! அதுவே பூரி சப்பாத்திக்கு அல்டிமேட்டாக இருக்கும்! தேங்காய் பால் சொதி இல்லாத போது வந்த சப்ஸ்டிட்யூட் தான் தேங்காய் சட்னி!
மதுரை ஓட்டல்களில் பூரி மசாலா தீர்ந்துவிட்டால் பூரிக்கு மசால் இல்லிங்க சாம்பார் சட்னிதான்னு சொல்லியே பரிமாறுவார்கள்! பெரியார் பஸ் ��்டண்ட் அசோக், KBS & துளசிராம், ஜங்ஷன் கற்பகம், அரசரடி கெளரி கிருஷ்ணா, மனோரமா போன்றவை எல்லாம் பூரி சட்னி சாம்பாருக்காகவே புகழ் பெற்ற கடைகளாகும்!
🫕 ரவா உப்புமா - ரசம் 🍲
என்னங்க சொல்றிங்கன்னு சிலர் அதிர்ச்சியாகலாம்! சுடச்சுட குழைவா செய்த ரவா உப்புமாவை தட்டில் போட்டு நடுவே குழி பன்ணி 3 கரண்டி தக்காளி ரசத்தை ஊத்தி சாப்பிட்டா.. அடடா! தேவலோகத்தில் அதுதான் அமிர்தம்னு சொன்னா உடனே நம்பி விடுவிங்க! அதைச் சூடா சாப்பிடணும் என்பதுதான் முக்கிய விதி!
ரசம் அல்லது ரசமண்டி வைத்து சாப்பிடும் ரசிகர்களும் உண்டு! இதில் தக்காளி ரசம், பருப்பு ரசம் போன்றவை தான் உப்புமாவிற்கு நல்ல காம்போ! பூண்டு, மிளகு ரசம் அவ்வளவா செட்டாகாது இல்ல அதுக்கு தகுந்தாற் போல சேர்மானங்களை உப்புமாவில் குறைக்கணும்! மாயவரத்தில் காளியாகுடி ஓட்டல் அந்தக் காலத்தில் ஃபேமஸ்!
அங்கே மதிய உணவு தீர்ந்து போய் மாலை 4 மணிக்கு டிபன் ஆரம்பிக்கும் போது சூடான கிச்சடி செய்வார்கள்! கிச்சடி வேகமாக செய்துவிடலாம்! அன்று கிரைண்டர் இல்லாததால் சட்னி அரைக்கத் தான் சிறிது தாமதமாகும்! எனவே அவர்கள் கிச்சடிக்கு மதிய உணவில் மீதமான ரசத்தை ரவா கிச்சடியோடு பரிமாறுவார்கள்!
இந்த காம்போ படு ஹிட்டடிக்க கிச்சடி & ரசத்திற்கு ரசிகர்கள் பெருக கிச்சடிக்காகவே அண்டா அண்டாவாக ரசத்தை தயாரித்து பரிமாறினார்கள்! இதுவே ரவா உப்புமா & ரசம் காம்போ உருவான கதை! அளவான புளிப்புடன் இனிப்பான தக்காளியில் செய்த சூடான ரசமும் கொதிக்கும் உப்புமாவும் ஒரு ரசனையான காம்போ!
🍛 பிற வித்யாச காம்போக்கள்🧆
அடை தோசைக்கு அவியல், சொதி எல்லாம் பக்கா காம்போன்னா கூட மோர்க்குழம்பு இன்னும் பிரமாதமா இருக்கும்! அதே போல இடியாப்பம் & ஆப்பத்திற்கு பால் பாயாசம் செமையா இருக்கும்! இட்லி, தோசைக்கு குருமா, தோசை & தேங்காய் பால், பிரட் & வெஜிடபிள் குருமா இதெல்லாம் கூட சிறந்த காம்போக்கள் தான்!
குலாப் ஜாமூன் ஜீராவில் சப்பாத்தியை பிய்த்து போட்டு ஊற வைத்து சாப்பிட்டால் பிறகு அதற்கு மயங்கி விடுவீர்கள்! தயிர்சாதம் & வத்தக் குழம்பு போல, பருப்பு சாதம் & பூண்டுக் குழம்பும் ஒரு பிரமாதமான இணையாகும்! அட நாமெல்லாம் பாயாசத்தில் அப்பளத்தை போட்டு நொறுக்கி குழைத்து சாப்பிட்ட மறத்தமிழர் வம்சமல்லவா!
உங்களது வித்யாசமான உணவுக் காம்போவை கமெண்ட்டவும்💖
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
ra13sa · 29 days ago
Text
Smule இல் "🅒︎🅡︎ Kalyaana Then Nila / கல்யாண தேன் நிலா" பாருங்கள்
#Smule இல் இந்த அருமையான "🅒︎🅡︎ Kalyaana Then Nila / கல்யாண தேன் நிலா" ரெக்கார்டிங்கைப் பார்த்தேன்: https://www.smule.com/sing-recording/2654007336_5010774822
0 notes
guruji-dr-arun-raghavendars · 4 months ago
Text
தேன் தானம் ...
புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள்...
கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள்...
குரல்வளை தொடர்பான நோய் உள்ளவர்கள்...
தாரா பலம் உள்ள நட்சத்திர நாளில், வெண்கலப் பாத்திரத்தில், சுத்தமான தேனை தானம் செய்வது சிறந்த பரிகாரம்.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_01-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
freeinfluencerpuppy · 6 months ago
Text
அழும் குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக தேன் ரப்பர் சூப்பான் இவைகளைப் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் நிறையப் பெற்றோர்களுக்கு உள்ளது. வெளிநாட்டிலுள்ள மருத்துவச் சங்கங்கள் இவைகளைப் பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்கிறீர்கள் என உங்களுக்குச் சந்தேகம் வரலாம். இவைகளைப் பயன்படுத்தினால் ஏதாவது பிரச்சினைகள் வருமா? பயன்படுத்தலாமா? அழும் குழந்தையைச்…
youtube
View On WordPress
0 notes
karuppuezhutthu-blog · 8 months ago
Text
காதி ஷோ ரூம்களில் பட்டுச் சேலைகள், ஆடம்பர பொருட்களை விற்பதா?
எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோ- ரூம்களில், தற்போது பட்டுச் சேலைகள் உள்ளிட்ட ஆட���்பர பொருட்கள் விற்கப்படுகின்றன என, சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில் தச்சுதொழில் பிரிவில் உதவியாளர்களாக பணியாற்றிய தேவராஜ், சுரேஷ் ஆகியோரை காதியின் பட்டு சேலை, சோப்பு, தேன் விற்பனை பிரிவுக்கும், விற்பனை பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கும்…
0 notes
minnambalam · 10 months ago
Text
0 notes
madhansband · 11 months ago
Text
youtube
Song of the week from the previous show:
சின்ன சின்ன வண்ணக்குயில் | Chinna Chinna Vanna Kuyil | Madhan's Band | S Janaki Songs | Mouna Ragam
video link: https://youtu.be/i62uYozyAI4
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie: Mouna Ragam1986 Lyrics: Vaali Singer : S. Janaki Music by : Ilayaraja
லலல….லலல லலல….லலல லலலலலல… லலலலலல… லலலலலல… லலலலலல… லலலலலல…
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன் சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஸைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஒசைகள்
மாலை சூடி ம்ம்ம்… மஞ்சம் தேடி ம்ம்ம்…
மாலை சூடி ம்ம்ம்… மஞ்சம் தேடி ம்ம்ம்…
காதல் தேவன் சன்னிதி காண காண காண காண
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன் இன்பதின் எல்லையோ இல்லயே இல்லயே ஆந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே
காலம் தோறும் ம்ம்… கேட்க வேண்டும் ம்ம்…
காலம் தோறும் ம்ம்… கேட்க வேண்டும் ம்ம்…
பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட பாட
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா…
0 notes
drkgowthaman-blog · 1 year ago
Text
சீரணம் சீராக கஷாயம்! #wellnessgurujitips #Shreevarma
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, சர்க்கரை நோய், இதய நோய், கொழுப்பு நோய்ன்னு, ஏன் மூளையில் ஏற்படுகின்ற, Parkinson நோய் வரை, உடலில் ஏற்படுவதற்கு, உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு, அனைத்துக்குமே காரணம், ஜீரண மண்டல, ஒரு ஆரோக்கியம்தான். அவ்வாறு இருக்கக்கூடிய, ஜீரண மண்டலத்தை, ஆரோக்கியப்படுத்தக்கூடிய, ஜீரணம், சீராக கஷாயம், அப்படிங்கிற, ஒரு அருமருந்தை பற்றிதான், இன்றைக்கு, உங்களோடு, நான், பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இந்த ஜீரணம், சீராக கஷாயம், தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம். ஜீரணம், சீராக கஷாயம். செய்ய தேவையான பொருட்கள், #அமுக்கரா, #சுக்கு, #ஏலம், #கூகைநீர், #கிராம்பு, #சிறுநாகப்பூ, #திப்பிலி, #மிளகு, #தேன், #இஞ்சிசாறு, நம்மை நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ வைக்கக்கூடிய, நோயற்ற வாழ்க்கையை, வரமாக தரக்கூடிய, #ஜீரணம்சீராககஷாயம்.....
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
099526 66359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #wellbeing #Shreevarma #DrGowthaman #shreevarmaayurveda #Amruthuls #gidcid #Amruthulskit
0 notes
esamayal · 1 year ago
Text
இந்த வாழைப்பழத்தில் சத்து உள்ளதா? ஆண்மையை பறிக்கும் உண்மை !
மலிவு விலையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களாகவும் இவை இருக்கின்றன.நம் நாட்டில் மாம்பழத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் பயிராக வாழை இருக்கிறது.
தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வாழைப்பழங்களில் காணப்படும் வைட்டமின்கள், ப���ரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
0 notes
Text
0 notes
venkatesharumugam · 1 month ago
Text
#வேலண்டைன்_டே
சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வேழமலை என்ற மலை நாட்டில் ஒரு வேலவன் கோவில் அமைந்திருந்தது. அம்மலையின் அரசன் தான் சீர்வேலன்! கூர்வேல் கொண்டு பகையறுக்கும் சீர்வேலன் என்று அவனை கபிலர் மட்டுமல்ல வேம்புலியும் பாடிய பெருமையுடையவன்! ஒரு முறை காட்டுக்குள் அவன் வே��்டைக்கு சென்ற போது ஒரு இளம் ஜோடிகள் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்ததைப் பார்த்தான்!
உடனே அவர்களை மீட்டு விசாரிக்க அது மலைக்கு கீழே உள்ள தேசத்து மன்னனின் மகன் என்றும் அந்தப் பெண் அவனது காதலி ஆனால் ராஜ குலம் அல்ல என்பதும் தெரிந்தது! நாடாளும் மன்னர் மகன் என்று தெரிந்தும் அஞ்சாமல் சீர்வேலன் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து பகைவர்கள் எளிதில் நெருங்க முடியாத வேழமலையின் உச்சியில் அவர்களை குடியமர்த்தினான்!
மகனின் திருமணத்தைப் பற்றி அறிந்ததும் சினத்துடன் மலையை நோக்கி படையெடுத்து வந்த மன்னனின் படையை மலை மீதிருந்து சமயோஜிதமாக அம்புகள் எய்தி, மலைப் பாம்பு, உடும்புகளை வீசி, பெரிய பாறைகளை உருட்டி விட்டு கதறி சிதறி ஓடச் செய்தான் வேலன்! இந்தச் செய்தி உலகம் முழுவதும் அமெரிக்க காட்டுத்தீ போல பரவ காதலர்கள் எல்லாம் வேழமலை நோக்கி குவிந்தனர்!
வேலனும் வந்த ஜோடிகளை தீர விசாரித்து மெய்யான காதலர்களை மட்டும் அங்கே அனுமதிப்பான்! பின்னர் அவர்களுக்கு உடும்புக்கறி சமைத்து கறிக் களி உருண்டை செய்து (களிக்குள் கறி) விருந்து பரிமாறி அவர்களை வேழமலை உச்சிக்கு குடியேற அனுப்புவான்! அந்த வேழமலை முழுவதும் காதலர்களின் மலையானது! அங்கு காதலர்கள் பெருகியது போல வேலனுக்கு எதிரிகளும் பெருகினர்.
ஆனால் கீழிருந்து மலைமீது படையெடுத்து வேலனை வெல்வது மாமன்னர்களாலேயே முடியாமல் போன வரலாறு இருந்தது! வேலனை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்தனர்! அவர்களே முழு பயிற்சி தந்து ஒரு போலியான காதல் ஜோடியை அவனிடம் அனுப்ப வேலனும் அவர்களை வரவேற்று அவர்களுக்கு திருமணமும் நடத்தி மலை உச்சிக்கு அனுப்ப.. அந்தத் திருமணத்தின் மறுநாள் அந்த ஜோடி..
அண்ணே 8 வகையான காடை, போன்லெஸ் கவுதாரி, காட்டுக் கோழி வருவல், காட்டாற்று கெண்டை மீன் குழம்பு, திணை, தேன், எல்லாம் உங்களுக்காவே நாங்க சமைச்சிருக்கோம் என்று வேலனை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைத்தனர்! என்னடா இந்த ஆட்டம் புதுசா இருக்கேன்னு உணராது அந்த ஜோடியின் வீட்டுக்கு சென்ற வேலனை அந்த ஜோடி உணவில் நஞ்சை கலந்து கொடுத்து கொன்றனர்!
அங்கு குடியேறி இருந்த மற்ற ஜோடியினர் இதை கண்டறிந்ததும் துரோகம் செய்த இருவரையும் மலையில் இருந்து தள்ளி கொன்றனர்! காதலர்களை சேர்த்து வைக்க தன் வாழ்வையே தியாகம் செய்த வேலனின் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாட அங்கிருந்த அனைவரும் முடிவெடுத்து கொண்டாட ஆரம்பித்தனர்! இந்த நாளை அவர்கள் வேலன் டே என்று கொண்டாடி வந்தனர்! பின்னாளில்..
நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்தபிறகு அந்த வேலன் டே தான் வேலண்டைன் டே என்று மாறியது!
இதெல்லாம் நம்மில் எத்தினி பேருக்கு…
💖💖 வாழ்க காதல் 💚💚 வாழ்க தமிழ் மாமன்னன் சீர்வேலன் 💖💖
1 note · View note
ra13sa · 1 month ago
Text
Smule இல் "Chinna Chinna Kannile-சின்ன சின்ன கண்ணிலே" பாருங்கள்
#Smule இல் இந்த அருமையான "Chinna Chinna Kannile-சின்ன சின்ன கண்ணிலே" ரெக்கார்டிங்கைப் பார்த்தேன்: https://www.smule.com/sing-recording/1445594694_5007326091
0 notes