Tumgik
#குழந்தை கனவில் வந்தால்
pudhuulagam · 11 months
Text
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்
Kulanthai Kanavil Vanthal Enna Artham..! What is the benefit of having a baby in a dream: An actionable view” குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் குழந்தைகள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா..! Kulanthai Kanavil Vanthal Enna Palan..! kulanthai kanavil vanthal palan /குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்: வணக்கம் நண்பர்களே..! இன்று பொதுநலம்.காம் பதிவில் குழந்தை உருவம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை…
Tumblr media
View On WordPress
0 notes
Tumblr media
இறந்தவர்கள் கனவில் வந்தால் அனாவசியமாக யாரும் பயந்து பதட்டப்பட வேண்டாம். இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு. நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி, இதனால் நம்முடைய குடும்பத்திற்கு பெரிய கஷ்டம் ஏதும் வந்து விடுமோ? என்று மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு, நம்முடைய மனதை அலைபாய விடுகின்றோம். இது மிகப் பெரிய தவறு. இறந்தவர்கள் கனவில் வந்தால் இனி யாரும் பயப்படாதீர்கள். இறந்தவர்கள் கனவில் வருவதற்கு சாஸ்திர ரீதியாக நிறைய காரணங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த மூன்று விஷயங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாமே. நேர்மறையாக நாம் எல்லாவற்றையும் நினைத்தால் நமக்கு நடப்பதும் நேர்மையாகவே நடக்கும். 'பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தால் அவர்கள் பசியாக உள்ளார்கள்; உங்களிடம் ஏதோ ஒன்றை கேட்பதற்காக வருகிறார்கள்' என்று சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். சரிதான், இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய சடங்குகளை நாம் சரியான முறையில் செய்யா விட்டால்தான், இதைக் கண்டு நாம் பயப்பட வேண்டும். இறந்தவர்களுக்கான திதி, தர்ப்பணங்களை சரியாக செய்து வந்தால், இறந்தவர்கள் கனவில் வந்தால் எந்த ஒரு பயமும் நமக்கு கிடையாது. எந்த ஒரு கெட்டதும் நம் குடும்பத்திற்கு நடக்காது. முதலாவதாக, இறந்தவர்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வாதம் செய்வதற்காக கனவில் வரலாம். இரண்டாவதாக நீங்கள் நன்றாக வாழ்வதை பார்ப்பதற்காகவும், அவர்களுடைய ஆத்மா உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சில பேர் வீட்டில், குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். ஆனால் அந்த வீட்டில் நடக்கக் கூடிய நல்ல காரியம் நடப்பதில் ஏதோ ஒரு தடை இருக்கும். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காமல் இருக்கும். பேரன் பேத்திகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். அல்லது வீட்டில் ஏதோ ஒரு சுப நிகழ்ச்சி நடப்பதில் தடை இருந்தால், அந்த சுப காரியத்தை நமக்கு நினைவு கூற, மூதாதையர்கள் நம் கனவில் வருவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய முன்னோர்கள், இறந்த ஆத்மாக்கள் உங்களுடைய கனவில் வந்தால் எந்த பயமும் இனி வேண்டாம். இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால், மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று! அதன் பின்பு உங்கள் கனவில் யார் வந்தார்களோ அந்த குறிப்பிட்ட இறந்த நபரை மனதார நினைத்து, பிரார்த்தனை செய்த (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/Cj_RcobN3s4/?igshid=NGJjMDIxMWI=
0 notes
upanishads-tamil · 3 years
Text
அஷ்டாவக்ரர் உபதேசம்
உருவத்தை வைத்து எடை போடாதே.....
ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு
துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.
கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார். இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.
"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
மந்திரி, ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
"நான் பிச்சைக்காரனா,
மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.
பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.
நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் த���்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை. "என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.
"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர். அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது. அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.
குள்ளமாக, கறுப்பாக, எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார். "என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.
"சொல்கிறேன். அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,
கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.
"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.
"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை. இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.
சபை முழுக்க கொதித்தெழுந்தது.
"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.
"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனை��ரும் கூச்சலிட்டனர்.
"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.
"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.
உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார். "ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.
ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா? நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை.
இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.
என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?
தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.
இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.
பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை? அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.
அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.
வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.
அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?
தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான் உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.
ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே. தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.
பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே. முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும். ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடவுளை தவிர..
Tumblr media
0 notes
pudhuulagam · 2 years
Text
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் - கனவு பலன்கள் தமிழ்
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் உறவினர்கள் உங்கள் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு கூடிய விரைவில் மனதிற்கு சந்தோசமான செய்தி ஒன்று வந்து சேரப் போகிறது என்று அர்த்தம் மேலும் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்பதை இன் மாதிரியான
கனவு பலன்கள் தமிழ் – உங்கள் கனவில் உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் மேலும் அதில் நல்ல பலனா இல்லை தீய பலனா என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் – கனவு பலன்கள் தமிழ் அனைவருக்கும் கனவுகள் வருவது ஒரு இயல்பான விஷயம் ஆனால் அது மாதிரியான கனவுகள் வரும்பொழுது சில கனவுகள் மட்டுமே அவற்றை உற்று நோக்க செய்யும் அம்மாதிரியான கனவுகள் நல்ல கனவாகவும் இருக்கலாம் அல்லது தீய…
Tumblr media
View On WordPress
1 note · View note
pudhuulagam · 11 months
Text
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் : ஒரு அதிரடி பார்வை"Kulanthai Kanavil Vanthal Enna Artham..! 2023 True
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் ஒரு அதிரடி பார்வை”Kulanthai Kanavil Vanthal Enna Artham..! What is the benefit of having a baby in a dream: An actionable view” குழந்தைகள் அவர்களின் கனவில் அனைத்து அனுபவங்களையும் அநுபவிக்கும் போது, அது அவர்களின் உறவை, அரசியல் மற்றும் மொழிபெயர்ப்பு நிலைகளை விளக்கும். இந்த கட்டுரையில், “குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்” என்ற…
Tumblr media
View On WordPress
0 notes