இன்றைய பரபரப்பு உலகச்செய்திகளின் தொகுப்பு.
செய்த்தித் தொகுப்புகளில் இன்னும் பல.. இஸ்ரேலைத்தாக்கிய ஹிஸ்பொல்லாஹ்
பணயக் கைதிகளுக்கு, மருந்து ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் தரையிறங்கியது; காசாவில், இரண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ், மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான, கத்தார் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பணயக்கைதிகள், மற்றும் காசா பொதுமக்களுக்கு, மருந்து மற்றும் உதவிகளை ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் உள்ள அரிஷ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. காசாவில் உள்ள பணயக் கைதிகளுக்கு மருந்துகள் அடையும்போது, மற்ற நோயாளிகளுக்கும் தேவைப்படும் மருந்துகளை அனுமதிக்கும் உடன்பாடு இஸ்ரேல் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொண்டு செல்லப்பட்ட மருந்துகளில், ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக நோய், இதய நோய் போன்றவற்றுக்கான மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் பிணைய கைதிகளுக்கு போய் சேருமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈராக்கில் தாக்குதல் நடத்திய, ஈரானின் 'அத்துமீறல்' குறித்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஈராக் புகார் அளித்துள்ளது இதுகுறித்து, ஈராக் வெளியுறவு அமைச்சகம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் "ஆக்கிரமிப்பு" தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக ஈராக் புகார் அளித்துள்ளது.
டெல் அவிவ் நகரில், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை, இஸ்ரேலிய போலீசார், வலுக்கட்டாயமாக கலைத்ததுடன், போராட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகளையும் பறிமுதல் செய்தனர்.
பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில், கத்தார் அதிகாரிகளுடன், அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
பல ஐரோப்பிய நாடுகள், "அக்கறை" கொண்ட அரபு நாடுகள், மற்றும் அமெரிக்கா ஆகியவை, பாலஸ்தீனத்திற்கு மறுசீரமைப்பு நிதியை ஈர்க்க க்கூடிய, ஒரு ஒருங்கிணைந்த, பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கான, ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்று வருகின்றன என்று, நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் டாவோஸில், ஒரு பேட்டியின்போது கூறினார்.
வாஷிங்டனின் முழு ஆதரவையும் அனுபவித்து வரும் இஸ்ரேல், காசாவில் போர் என்ற பெயரில், இனப்படுகொலைகளை செய்து வரும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைவிதியுடன் "தனது தலைவிதியை முடிச்சுப் போட" வேண்டாம் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஈரான் எச்சரித்துள்ளது.
செவ்வாயன்று, அமெரிக்க வணிக செய்தி சேனலான, சிஎன்பிசியிடம் பேசிய ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், மேற்கு ஆசியாவில், பாதுகாப்பின்மையின் வேராகத்திகழும் இஸ்ரேலின் படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை விவரித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த, உலகப் பொருளாதார மன்றத்தின் போது, அவர் அளித்த பேட்டியில், "அமெரிக்கா தங்கள் தலைவிதியை, நெதன்யாகுவின் தலைவிதியுடன் முடிச்சுப் போடக்கூடாது, திரு. ஜோ பைடன் அவ்வாறு செய்யக்கூடாது" என்று கூறினார்.
"இஸ்ரேலில், நெதன்யாகு போன்ற குண்டர்களுடன், பைடன் மற்றும் வெள்ளை மாளிகையின் முழு அளவிலான ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையின் வேராக மாறும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க செனட் கூட்டத்தில், பேர்ணி சாண்டர்ஸ் முன்வைத்த, முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில் நடக்கும் போரில், இஸ்ரேல் மனித உரிமை மீறல்களை செய்கிறதா என்பதை கண்டறிய , நிபந்தனையாக வைக்கும் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, அமெரிக்க செனட் பெரும்பான்மையாக நிராகரித்துள்ளது.
செனட்டர் தீர்மானம் இன்று புதன்கிழமை, பதினோரு வாக்குகள் ஆதரவாகவும், எதிராக எழுபத்திரண்டு வாக்குகளுடனும் நிறைவேறத் தவறியது, நடைமுறையளவில் தீர்மானத்தை தோல்வியடையச்செய்தது..
"மனித உரிமைகள் மற்றும் நமது சொந்த சட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்க உதவி பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று சாண்டர்ஸ் வாக்கெடுப்புக்கு முன்னர் ஒரு உரையில் கூறினார்.
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு "மனிதாபிமான பேரழிவு" என்று விவரித்த அவர், "காசாவில் ஏற்பட்டுள்ள அழிவின் அளவின் காரணமாக, இந்த வாக்கெடுப்பு அவசியமானது" என்று கூறும் அளவுக்குச் சென்றார்.
பிரச்சினை ஹமாஸிடம் இருக்கும்போது, முழு பாலஸ்தீனிய மக்களுக்கும் எதிராக போருக்குச் செல்ல, அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவியைப் பயன்படுத்த, இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என்றும், அவர் வலியுறுத்தினார்.
லெபனானின் எதிர்ப்புப் படைகள் ஷெபா பண்ணைகளில் உள்ள சியோனிச நிலைகளை குறி வைத்துத் தாக்கின.
அல் ஜசீராவின் புதன்கிழமை அறிக்கையின்படி, இஸ்ரேலிய ராணுவப் படைகள், ஹெஸ்பொல்லாவிடமிருந்து, புதிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், லெபனான் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, சியோனிச ஆட்சி கஃபர்கேலா மற்றும், டெய்ர் மிமாஸ் ஆடிய பகுதிகள் மீது மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது .
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வடக்கில், ஒரு சியோனிச குடியேற்றத்தைச் சுற்றியுள்ள, மூன்று இராணுவ தளங்களை, ஹெஸ்புல்லா குறி வைத்துத் தாக்கி உள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வடக்கில் உள்ள, அல்-நபி யுஷாவையும், ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணைகளால் தாக்கின.
இஸ்ரேலின் மீதான எதிர்ப்புப் படைகளின் தாக்குதல்கள், காசாவில், ஒரு பெரிய அளவிலான படுகொலையில், இஸ்ரேல் ஈடுபட்டுள்ள நிலையில் வந்துள்ளன, அங்கு, அது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குடிமக்களை கொன்று குவித்துள்ளது.
0 notes
எகிப்து - இஸ்ரேல் மோதல் ஆறு பேர் மரணம். செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் - ஹவுதி அறிவிப்பு..
கத்தார் எரிவாயு நிறுத்தம். ஐரோப்பாவில் சோகம். Bob-El-Mandeb வழியாகச் செல்ல US-UK கப்பல்களுக்கு நிரந்தரத்தடை, ஏமன் அதிகாரி அறிவிப்பு.
----
எகிப்து மற்றும் இஸ்ரேல் எல்லையில் நடந்த மோதலில், மூன்று இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஒரு எகிப்திய அதிகாரியும் பலி. ஏற்கெனவே, சமீபத்தில் நடந்த சண்டையில், நான்கு பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை தாண்டி, ராணுவ சாவடி மீது தாக்குதல் நடத்தியதி, எகிப்து அதிகாரி என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே, எகிப்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட, அரிய துப்பாக்கிச் சண்டையில், மூன்று இஸ்ரேலிய வீரர்கள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
ஒரு எல்லை இராணுவ சாவடியை பாதுகாத்து வந்த இரண்டு இஸ்ரேலிய துருப்புக்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், அதிகாலையில், நேரடி துப்பாக்கிச் சூட்டில் இறந்து கிடந்தனர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது..
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு எகிப்திய பாதுகாப்பு அதிகாரியும் மூன்றாவது இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம், எகிப்திய அதிகாரியை ஒரு "தாக்குதல்காரர்" என்றும், அவர் தனது துருப்புக்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தார் என்றும் விவரித்தது.
இஸ்ரேலில், அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை, எகிப்து ராணுவம் உறுதி செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை, போலீசார் துரத்தும் போது, அவர் எல்லை தாண்டியதாக அது கூறியது. பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார், அதில் அவரும் மூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
எகிப்திய இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
-----------
செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் என்று அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமனுக்கு எதிரான உங்கள் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும் என்றும், எங்கள் முழு பலத்துடன் உங்களை சந்திப்போம் என்றும் நாங்கள் அமெரிக்கர்களிடம் கூறுகிறோம் என்று அன்சருல்லா அதிகாரி கூறுகிறார்.
செங்கடல் அமெரிக்கர்களுக்கு ஒரு கல்லறையாக மாறும், அவர்கள் அவமானத்துடன் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்..
--------
காஸாவில், ஹமாஸிடம் உள்ள பினயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் போர் அமைச்சரவை உறுப்பினர் 'மாபெரும் ஒப்பந்தம்' செய்ய தயாராக வேண்டும் என்கிறார்.
இஸ்ரேலிய, போர் அமைச்சரவை பார்வையாளர், அமைச்சர் காடி ஐசென்கோட், நாட்டின் தலைவர்கள், "தங்களுக்குத் தாங்களே பொய் சொல்வதாக" குற்றம் சாட்டியுள்ளார், காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறினார்.
காசாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஐசென்கோட்டின் மகன் மற்றும் மருமகன் இருவரும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில், "நமக்கு நாமே பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், உண்மையை தைரியத்துடன் உரைக்க வேண்டும், பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர, ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்" என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
"உங்கள் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் கைதிகளின் உயிருக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது" என்று ஓய்வு பெற்ற ஜெனரல் கூறினார்..
-----------
ஏமன், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக, செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியது கத்தார்.
ஏமனில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய, பயனற்ற வான்வழித் தாக்குதல்களால், ஏமன் பாதிக்கப்படாத நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தை கத்தார் நிறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், மேற்கு ஐரோப்பா, அதன் இயற்கை எரிவாயு தேவைகளில், சுமார் பதிமூன்று சதவீதம் பூர்த்தி செய்ய, கத்தாரை நம்பியிருந்தது, இது பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய சப்ளையராக கத்தாரை நிறுவியது. கத்தாரில் இருந்து புறப்படும் 5 எல்.என்.ஜி கப்பல்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கே கவனிக்கவும். ஹௌத்திக்கல், இஸ்ரேலுக்குள் செல்லக்கூடிய கப்பல்களை மட்டுமே தடுத்து வந்தனர். ஆனால், கத்தார், ஐரோப்பாவுக்கு செல்லவேண்டிய கப்பல்களை நிறுத்தியதில் ஏதாவது பின்புலமுண்டா என்பதை. தயவு செய்து கமெண்டில் தெரிவியுங்கள்.
-==================-
0 notes