ஜனாதிபதி பிடன், பிரதமர் சுனக் உக்ரைன் நெருக்கடியில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றனர், ஆற்றல் மாற்றத்தில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதாக உறுதியளித்தனர் - தமிழ் பிக்ஸ்
ஓவல் அலுவலகத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, ”நாங்கள் எங்கள் மதிப்புகளை முன் மற்றும் மையமாக வைப்போம்” என்று பிடன் கூறினார்.
Source link
View On WordPress
0 notes
9 to 5 வேலைகளை விரும்பாத Gen Z தலைமுறையினர்; சுய தொழில் தொடங்குவதிலேயே ஆர்வம் - ஆய்வில் தகவல்! | 76 percent of Gen Z people are willing on entrepreneurship not regular 9 to 5 job, study reveals
எளிமையாக 2K கிட்ஸ் என்று அறியப்படும் Gen Z தலைமுறையினரில் முக்கால்வாசி பேர், மற்றவரின் கீழ் வேலை செய்வதை விடவும் தொழில்முனைவோராக, முதலாளியாக இருக்க விரும்புவதாக ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சான்டாண்டர் யு.கே (Santander UK) எனும் இங்கிலாந்து நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், Gen Z தலைமுறையினர் 76 சதவிகிதம் பேர் தங்களைத் தாங்களே நம்பி சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், 39…
0 notes
ENG vs SL - தொடரை வென்றது இங்கிலாந்து.. 190 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வி - myKhel Tamil
http://dlvr.it/TCgGcM
0 notes
#விளையாட்டுச்_செய்திகள்
தமிழ் நாளிதழ்களில் விளையாட்டுச் செய்திகள் படித்து இருக்கிங்களா? கோஹ்லி அபாரம் இந்தியா வெற்றி.. இந்தியா அபார பந்துவீச்சு.. சுருண்டது ஆப்கன்.. இந்தியா இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவ���க்கு கடின இலக்கு.. ரோகித் சாதனைச் சதம் இந்தியா வெற்றி! மார்க்ரம் சதம் வீண் தெ.ஆ படு தோல்வி..
இதெல்லாம் ஒரு ஸ்டைல்! இப்போ க்ரியேட்டிவ்னு நினைச்சு ஒரு ஸ்டைலில் எழுதறாங்க? நிலை குலைந்த நியூசி, மொகாலியில் இலங்கை காலி, டர்பனில் டார் டார் ஆனது இங்கிலாந்து ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா ஜோர்! செஞ்சுரியனில் இஞ்சுரி யாருக்கு? தூசியானது ஆஸி.. என்னய்யா கொடுமை இது!
நான் விளம்பரத் துறையில் அடியெடுத்து வைத்த காலங்களில் (சசி அட்வர்டைசிங்) தமிழ் காப்பி ரைட்டர் ராஜு என்பவர் அங்கு பணி புரிந்தார். தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் - அழகிய ஜவுளிகளின் ஆலயம்- போன்ற புகழ் பெற்ற வாக்கியங்களை எழுதியவர்! அவரிடம் தான் நான் காப்பிரைட்டிங் எழுதக் கற்றேன்.
நான் அக்கவுண்ட் ஹேண்டிலிங் எக்ஸிக்யூட்டிவாக இருந்தாலும் காப்பிரைட்டிங் கூடுதலாக கற்றுக் கொண்டேன் (டிரைவரே நல்ல சமையற்காரராக இருப்பது போல) அல்ட்ரா நிறுவனத்தில் மூன்று கல் டேபிள் டாப் கிரைண்டர் மார்க்கெட்டில் அறிமுகமான போது ராஜு அவர்கள் எழுதிய ஒரு கேப்ஷன் மிக மிகப் பிரபலம்.!
பழைய கிரைண்டரில் மாவை அரைக்கும் போது கல் சூடாகி மாவும் சூடாகிவிடும் சூடான மாவு சீக்கிரம் புளிக்காது இட்லி தோசையின் ருசி குறைந்துவிடும்! இதில் மூன்று கற்கள் இருப்பதால் சீரான வேகத்தில் 3 கற்களால் அரைபடுகிறது ஆகவே மாவு சுடாது இட்லி தோசை சுவையாக சாப்பிடலாம் இது தான் அவருக்கு ஃப்ரீஃபிங்.
அவர் எழுதினார் “இட்லி சுடலாம்.. மாவு சுடக் கூடாது” செம ரெஸ்பான்ஸ் அந்த விளம்பரத்திற்கு! ஆங்கிலத்தில் காப்பி எழுதுவது ஒரு கலை சில சமயம் அந்த மொழியின் அழகைப் பார்த்து எனக்கு பொறாமையாக கூட இருக்கும் என்பார். எனக்கு அதில் மட்டும் உடன் பாடில்லை! “நீ The Hindu வாங்கி ஸ்போர்ட்ஸ் செய்திகளைப் படி”
என்பார் ராஜு! நானும் படித்தேன்! ஆங்கிலமும் ரசனையாகத்தான் இருந்தது! சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலும் தேட வைத்தது! Kapil uprooted Rumesh Rathnayage’s leg stump என இந்துவில் கபில்தேவ் வீழ்த்திய 300 ஆவது விக்கெட் பற்றி எழுதி இருந்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது.!
கோஹ்லி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவில் 5-0 என்று கிடைத்த ODI தொடர் வெற்றிக்கு அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி இது.. KOHLI PUTS ICING ON THE CAKE எவ்வளவு அழகு! ஆனால் இதைவிட தமிழில் இன்னும் வார்த்தைகளால் விளையாடலாம்! இதற்கு நான் எழுதிய தமிழ் வாசகங்கள் கீழே..
“கோஹ்லியின் அஞ்சாத ஆட்டத்தால் ஐந்தாவது வெற்றி.. “தொடர் நம் வசம் ரசிகர்கள் பரவசம்..”தொடரைக் கைப்பற்றி தொடரும் வெற்றி.. “இருண்ட கண்டத்தில் இந்திய ஒளி..
இன்னும் பஞ்ச் டயலாக் பாணியில் “பஸ் டமாரு.. டிரைவர் பணாலு ஸ்டைலில் விளையாட்டுச் செய்திகளுக்கு எழுதாதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.!
0 notes
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 கால அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது
2024 மகளிர் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் நடைபெறும். ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களதேசம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
பங்களாதேஷில் குறித்த போட்டிகளை…
0 notes
சூலூரில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி வைத்த ஆளுநர்...
இந்திய விமானப்படை சார்பில், தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் முதல் கட்டம், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி, சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மற்றும் ஸ்பெயின் ஆகிய 5 நாடுகளிலிருந்து 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த…
0 notes
Study UK மாணவர் விருதுகளின் வெற்றியாளர்கள் இலங்கையில் அறிவிக்கப்பட்டனர்
Study UK மாணவர் விருதுகளின் வெற்றியாளர்கள் இலங்கையில் அறிவிக்கப்பட்டனர்
இவ்விழாவில் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து இலங்கையின் மாணவர்களின் சாதனைகள் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து இலங்கையின் மாணவர்களின் சாதனைகள் கொண்டாடப்படுகிறது.
இலங்கையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான Study UK மாணவர் விருதுகளின் வெற்றியாளர்கள் கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய விழாவில் அறிவிக்கப்பட்டனர். விழாவில் அரசு, தனியார் அமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் இங்கிலாந்து முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுக்காக நடுவர்கள் நான்கு…
View On WordPress
0 notes
எகிப்து - இஸ்ரேல் மோதல் ஆறு பேர் மரணம். செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் - ஹவுதி அறிவிப்பு..
கத்தார் எரிவாயு நிறுத்தம். ஐரோப்பாவில் சோகம். Bob-El-Mandeb வழியாகச் செல்ல US-UK கப்பல்களுக்கு நிரந்தரத்தடை, ஏமன் அதிகாரி அறிவிப்பு.
----
எகிப்து மற்றும் இஸ்ரேல் எல்லையில் நடந்த மோதலில், மூன்று இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஒரு எகிப்திய அதிகாரியும் பலி. ஏற்கெனவே, சமீபத்தில் நடந்த சண்டையில், நான்கு பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை தாண்டி, ராணுவ சாவடி மீது தாக்குதல் நடத்தியதி, எகிப்து அதிகாரி என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே, எகிப்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட, அரிய துப்பாக்கிச் சண்டையில், மூன்று இஸ்ரேலிய வீரர்கள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
ஒரு எல்லை இராணுவ சாவடியை பாதுகாத்து வந்த இரண்டு இஸ்ரேலிய துருப்புக்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், அதிகாலையில், நேரடி துப்பாக்கிச் சூட்டில் இறந்து கிடந்தனர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது..
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு எகிப்திய பாதுகாப்பு அதிகாரியும் மூன்றாவது இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம், எகிப்திய அதிகாரியை ஒரு "தாக்குதல்காரர்" என்றும், அவர் தனது துருப்புக்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தார் என்றும் விவரித்தது.
இஸ்ரேலில், அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை, எகிப்து ராணுவம் உறுதி செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை, போலீசார் துரத்தும் போது, அவர் எல்லை தாண்டியதாக அது கூறியது. பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார், அதில் அவரும் மூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
எகிப்திய இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
-----------
செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் என்று அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமனுக்கு எதிரான உங்கள் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும் என்றும், எங்கள் முழு பலத்துடன் உங்களை சந்திப்போம் என்றும் நாங்கள் அமெரிக்கர்களிடம் கூறுகிறோம் என்று அன்சருல்லா அதிகாரி கூறுகிறார்.
செங்கடல் அமெரிக்கர்களுக்கு ஒரு கல்லறையாக மாறும், அவர்கள் அவமானத்துடன் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்..
--------
காஸாவில், ஹமாஸிடம் உள்ள பினயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் போர் அமைச்சரவை உறுப்பினர் 'மாபெரும் ஒப்பந்தம்' செய்ய தயாராக வேண்டும் என்கிறார்.
இஸ்ரேலிய, போர் அமைச்சரவை பார்வையாளர், அமைச்சர் காடி ஐசென்கோட், நாட்டின் தலைவர்கள், "தங்களுக்குத் தாங்களே பொய் சொல்வதாக" குற்றம் சாட்டியுள்ளார், காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறினார்.
காசாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஐசென்கோட்டின் மகன் மற்றும் மருமகன் இருவரும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில், "நமக்கு நாமே பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், உண்மையை தைரியத்துடன் உரைக்க வேண்டும், பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர, ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்" என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
"உங்கள் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் கைதிகளின் உயிருக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது" என்று ஓய்வு பெற்ற ஜெனரல் கூறினார்..
-----------
ஏமன், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக, செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியது கத்தார்.
ஏமனில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய, பயனற்ற வான்வழித் தாக்குதல்களால், ஏமன் பாதிக்கப்படாத நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தை கத்தார் நிறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், மேற்கு ஐரோப்பா, அதன் இயற்கை எரிவாயு தேவைகளில், சுமார் பதிமூன்று சதவீதம் பூர்த்தி செய்ய, கத்தாரை நம்பியிருந்தது, இது பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய சப்ளையராக கத்தாரை நிறுவியது. கத்தாரில் இருந்து புறப்படும் 5 எல்.என்.ஜி கப்பல்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கே கவனிக்கவும். ஹௌத்திக்கல், இஸ்ரேலுக்குள் செல்லக்கூடிய கப்பல்களை மட்டுமே தடுத்து வந்தனர். ஆனால், கத்தார், ஐரோப���பாவுக்கு செல்லவேண்டிய கப்பல்களை நிறுத்தியதில் ஏதாவது பின்புலமுண்டா என்பதை. தயவு செய்து கமெண்டில் தெரிவியுங்கள்.
-==================-
0 notes
இங்கிலாந்து நகரம் பர்மிங்ஹாம் திவால் ஆனது.. அதிர வைத்த உண்மை !
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. திவால் நிலைக்கு சம ஊதிய திட்டமே முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.
பர்மிங்ஹாம் கவுன்சிலில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான போதுமான பணம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் நகரத்தின் கவுன்சில், கடந்த செப்டம்பர் 5 முதல் திவாலானதாக அறிவித்துள்ளது.
அத்தியாவசிய செலவுகளைத் தவிர அனைத்து செலவினங்களுக்கும் பணம் தற்காலிகமாக நிறுததப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பர்மிங்ஹாம் நகர கவுன்சில், கடந்த செவ்வாய்கிழமை அன்று 114 அறிவிப்பை (திவால் அறிவிப்பு) வெளியிட்டது.
0 notes
மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ நாணயம் வெளியீடு
இரண்டாம் எலிசபெத் ராணியில் இருந்து மூன்றாம் சார்ல்ஸ் மன்னராக வரலாற்று மாற்றத்தை குறிக்கும் வகையில் நாணயம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்சின் ��ுடிசூடலை குறிக்கும் வகையிலேயே இச்சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நாணயம்
இதுதொடர்பாக, இங்கிலாநது நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம் தெரிவிக்கையில்,நாடு முழுவதுமுள்ள தபால் அலுவலகம்…
View On WordPress
0 notes
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த ஜெர்மனி விமானப் படை தலைமை தளபதி | German Air Force Chief who traveled by Nilgiri Hill Train
கோவை: ஜெர்மனி விமானப்படை அதிகாரிகள் குழுவினர் நீலகிரி மலை ரயிலில்பயணம் செய்து, வெலிங்டன் ராணுவ மையத்துக்குச் சென்றனர். ‘தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப் படைகளுடன் இணைந்து, இந்திய விமானப்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
முதல்கட்டமாக இந்தியா-ஜெர்மனிநாடுகளுக்கு இடையே கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் 8 நாட்கள் கூட்டுப் போர்…
0 notes
#ஹிட்மேனின்_ப்ளானும்_ஹிட்
செமி ஃபைனலில் இரண்டாவதாக ஆடிய இங்கிலாந்துக்கு முதல் ஓவரை அர்ஷ்தீப் வீச 5 ரன்கள் வந்தது! 2வது ஓவர் பும்ரா வீச அதில் பட்லர் தடுமாறாமல் 8 ரன்கள் அடித்தார்! 3 வது ஓவரில் அர்ஷ்தீப்பின் பவுலிங்கில் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் அடிக்கப் பட்டது! 4 ஆவது ஓவரை மீண்டும் பும்ரா போடுவார் என்று நாம் எதிர்பார்த்த போது அக்ஸர் பட்டேல் கையில் பந்து தரப்பட்டது!
புதுப் பந்தில் பும்ரா வீசிய ஓவரில் வேரியேஷன் அவ்வளவாக கிடைக்கவில்லை என்பதை ரோகித் கணித்து இருந்ததாக பின்பு பேட்டியளித்தார்! அக்ஸர் தான் வீசிய முதல் பந்திலேயே ரோகித் தந்த வாய்ப்பை கனகச்சிதமாக கவ்விக்கொண்டார்! அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீச ரிவர்ஸ் ஸ்வீப் ஆட எத்தனித்த அபாயகரமான பட்லர் எட்ஜ் வாங்கி பரிதாபமாக அவுட்டானர்!
அந்த ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது! பந்தில் பளபளப்பு குறைந்ததும் 5 ஆவது ஓவரை மீண்டும் பும்ரா வீச வந்தார் 5வது ஓவரின் நான்காவது பந்தில் கோஹ்லி அவுட்டை ஆக்ஷன் ரீப்ளே செய்தது போலவே சால்ட் க்ளீன் போல்டானார்! 2 ரன்கள் மட்டுமே வந்து ஸ்கோர் 35/2 இரண்டாவது ஓவரை வீச வந்த அக்ஸர் இதிலும் தன் முதல் பந்தில் பேர்ஸ்டோவை போல்டாக்கினார்!
இந்த ஓவரில் 4 ரன்கள் வந்தது! 39/3 ஸ்கோர்! 7 வது ஓவரை குல்தீப் வசம் தரப்பட இதிலும் 7 ரன்கள் வந்தது! 8 ஆவது ஓவர் மீண்டும் அக்ஸர் இதிலும் முதல் பந்தில் மொயின் அலி ஸ்டம்பிங் 46/4 என இங்கிலாந்து தத்தளிக்க அடுத்த குல்தீப் ஓவரில் சாம்கரன் அவுட்டாக 49/5 என்று ஸ்கோர் வேகம் உறைந்தது! என்னய்யா நீ பால் பை பால் கமெண்ட்ரி சொல்லிகிட்டு இருக்கே?
விஷயத்துக்கு ��ா என்கிறீர்களா? முதல் மூன்று ஓவர் போட்டு மிகக் குறைந்த ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளும் எடுத்த அக்ஸருக்கு மீதம் ஒரு ஓவர் இருந்தது! மற்ற எந்த கேப்டனும் குல்தீப்பின் 2 வது ஓவர் முடிந்ததும் நியாயமாக அக்ஸருக்குதான் வாய்ப்பு தந்து இருப்பார்கள்! ஆனால் ஜடேஜாவை வரவழைத்தார் ரோகித்! சரி அக்ஸர் போல ஜடேஜாவும் எதாவது விந்தை தருவார்னு பார்த்தா..
அவர் எதிரணி பவுண்டரி நொறுக்க பந்தை தான் தந்தார்! முதல் ஓவரிலேயே 11 ரன்கள்! ஆனால் தொடர்ந்து அனுபவம் மிக்க ஜடேஜாவுக்கே ரோகித் வாய்ப்பு தந்தார்! அடுத்த 2 ஓவர்களில் ஜடேஜா 5 ரன்களே தந்தார்! ஆம் ரோகித்தின் நம்பிக்கை வீணாகவில்லை! 14 ஓவர்கள் முடிந்திருந்தது! 15 வது ஓவர் அக்ஸரின் கடைசி ஓவர்! அதிலும் 1 ரன் அவுட் ! ENG 88/8
16வது ஓவரில் முழுதாக 4 ஓவர்கள் போட வாய்ப்பிருக்கும் பாண்ட்யா வந்தார்! இந்த கேம் ப்ளானின் நோக்கம் மெயின் பவுலர்களான பும்ரா & அர்ஷ்தீப்பையும் ஓவர்கள் வீசாமல் அவர்களுக்கு ஓய்வளிப்பதே! ஃபைனலில் பந்துவீச அவர்களுக்கு புத்துணர்வாக இருக்கும் என்பதாலேயே! பாண்ட்யா ஓவரிலும் ஒரு ரன் அவுட் கிடைத்தது! ஆனால் ஆர்ச்சரின் அதிரடியால் மீண்டும்..
பும்ராவை வரவழைத்து வீசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! பும்ராவும் ஆர்ச்சரை வீழ்த்தி ரோகித்தின் நம்பிக்கையை காப்பாற்றினார்! செமியில் 6 பவுலர்களை ரோகித் பயன்படுத்திய விதம் இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த கேம் பிளானாக பேசப்படுகிறது! ஹிட்மேனினன் அனுபவம், துல்லியம், முக்கியமாக அவரது துணிச்சலான அணுகுமுறை சூப்பர் ஹிட் அடித்துள்ளது!
#T20WC2024
0 notes
இங்கிலாந்து விண்வெளி நிலையம் முதல் ராக்கெட் Uk space first rocket ஏவப்படுவதற்கு முன்னதாக வெண்கல யுக ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது ?
இங்கிலாந்து விண்வெளி நிலையம் முதல் ராக்கெட் ( UK space first rocket ) பளபளப்பான குவார்ட்ஸ், ராட்சத கிரானைட் கற்கள் மற்றும் சாத்தியமான தகனம் ஆகியவை தயாராகி வருகின்றன .
Know More: https://due.im/short/3pu9
#spacecentre #spaceagencyuk
0 notes
2019 உலகக்கோப்பை பைனல்.. ஸ்பிரிட் ஆப் தி கேம் பற்றி பென் ஸ்டோக்ஸ் பேசலாமா? பொளக்கும் ரசிகர்கள்! | What happened to the Spirit of the Game of England Captain Ben Stokes in the 2019 World cup Final against New Zealand
அதுமட்டுமல்லாமல் ஆட்டம் முடிவடைந்த பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், இதுபோன்ற வெற்றி எங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால், வேண்டாம் என்றே கூறுவேன் என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார். அ��ேபோல் இவருக்கு சாதகமாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட், ஆஸ்திரேலிய வீரர்கள் மனிதர்களாக இருந்தால், பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியதற்காக பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று…
View On WordPress
0 notes